Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாத நடவடிக்கைகளை கைவிடும் பட்சத்தில் புலிகள் தொடர்பான கொள்கையில் மாற்றத்தை கொண்டுவர முடியும் - அமெரிக்கா

Featured Replies

[Tuesday February 13 2007 09:28:58 PM GMT] [tharan]

20 வருடகால யுத்தத்தால் தமிழ் மக்கள் எந்தவிதமான முன்னேற்றத்தையும் காணவில்லை. அதேவேளை, விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்படவுமில்லை. புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளை சொல்லிலும் செயலிலும் கைவிடும் பட்சத்தில் புலிகள் தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றத்தைக்கொண்டுவருவது குறித்து பரிசீலிக்க முடியும். புலிகள் சிறுவர்களை படையில் இணைத்துக்கொள்ளுதல் நிறுத்தப்படவேண்டும். இலங்கை அரசாங்கம் நீதி நியாயம் என்பனவற்றை கடைப்பிடிக்கவேண்டும். இவ்வாறு இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பிரிவு அதிகாரி ஹெலனா ரற்றோர் தெரிவித்துள்ளார்.

அவர் இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது.

ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, அனைத்து இன மக்களினதும் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய நிரந்தர அரசியல் தீர்வையே அமெரிக்கா விரும்புகின்றது.

மனித உரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும்.

இது மிகவும் முக்கியமான விடயமாகும். அத்துடன் பாதுகாப்புப் படைகள் தமது நன்னடத்தையை வெளிக்காட்டுவதுடன் அதனை உறுதிப்படுத்தவும் வேண்டும். இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு 5 வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஒரு தரப்பாவது உடன்படிக்கையிலிருந்து விலகுகின்றோம் என்று கூறும்வரை உடன்படிக்கை அமுலில் இருக்கும். ஆனால் புரிந்துணர்வு உடன்படிக்கையில் திருத்தங்களை கொண்டுவரலாம்.

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு இந்த நாட்டின் அரசியலமைப்பு தடையாக இருக்காது என்று அமெரிக்கா கருதுகின்றது. நடைமுறையில் இருக்கின்ற மோதல்களை முடிவுக்கு கொண்டுவர இரண்டு தரப்புக்களும் சில கடினமான விருப்பு வெறுப்புகளுக்கு முகம்கொடுத்தால் மட்டுமே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான அடித்தளத்தை இடமுடியும். நோர்வேயின் சமாதான பங்களிப்பை அமெரிக்கா ஆதரிக்கின்றது. இரு தரப்பினரும் மோதல்களை நிறுத்தவேண்டும்.

நன்றி : Tamilwin.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களப் பயங்கரவாதத்தின் காலடியில் எமது போராட்டத்தை சரணாகதி விலை கொடுத்து அமரிக்காவிடம் வாங்குகிறதுக்கு என்னவாம் இருக்கு?

தமிழன் இரத்தத்தையும், சிங்களவன் இரத்தத்தையும் இரு வேறு, வேறு தராசில் நெறுக்கும் அமரிக்க தர்மத்திடம், தமிழன் துன்பத்துக்கு நீதி வேறு கிடைக்குமா?

சொல்ல வேண்டியதைச் சொல்லிவிடுங்கோ. முடிவு என்பது விடுதலைப்புலிகள்தான்

எடுக்கவேண்டும். அதை நீங்கள் எடுக்க முடியாது. மகிந்த தமிழர் பிரதேசத்தை

ஆக்கிரமித்து மக்களை விரட்டி அடித்ததைத் தட்டிக்கேட்கவோ தப்பென்று

சொல்லவோ யாருக்கும் துணிவில்லை என்று சொல்லவில்லை. துப்பில்லை.

இப்போ புலி அடிக்கப்போகிறதென்ற கிலியால் வார்தைகள் எல்லாம் ஜாலம்

செய்கிறது. அண்ணே காலம் பிந்திப்போச்சுது.

பயங்கரவாதத்துக்கு வரவிலக்கணம் தாங்கோ முதலில் அதுக்கு பிறகு யோசிப்பம்

ஆனால் புரிந்துணர்வு உடன்படிக்கையில் திருத்தங்களை கொண்டுவரலாம்

இல்லை புலிகள் அமெரிக்க இராணுவத்திற்கு எதிரா அல்லது அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிரா போராடவில்லையே.

பின்லாடனுக்கு சொல்றதை இங்க மாறி சொல்லிப்போட்டினமோ.

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத்துக்கு வரவிலக்கணம் தாங்கோ முதலில் அதுக்கு பிறகு யோசிப்பம் !!!

சொல்ல வேண்டியதைச் சொல்லிவிடுங்கோ. முடிவு என்பது விடுதலைப்புலிகள்தான்

எடுக்கவேண்டும். அதை நீங்கள் எடுக்க முடியாது. மகிந்த தமிழர் பிரதேசத்தை

ஆக்கிரமித்து மக்களை விரட்டி அடித்ததைத் தட்டிக்கேட்கவோ தப்பென்று

சொல்லவோ யாருக்கும் துணிவில்லை என்று சொல்லவில்லை. துப்பில்லை.

இப்போ புலி அடிக்கப்போகிறதென்ற கிலியால் வார்தைகள் எல்லாம் ஜாலம்

செய்கிறது. அண்ணே காலம் பிந்திப்போச்சுது.

அது, அப்புடி போடுங்க

  • தொடங்கியவர்

ஜனநாயகத்தின் பெயரால் நடைபெறும் அரச பயங்கரவாதத்தை முதலில் அமெரிக்கன் சொல்லி நிறுத்தினால், வல்லரசுகளால் பயங்கரவாதமாகச் சித்தரிக்கப்படும் போராட்டங்கள் இங்கு நடப்பதற்கு அவசியமில்லாமல் போய்விடும். ஹெலனா ரற்றொர் இன்று காலை சூரியன் செய்திகளில் வெகு அழகான தமிழில் தமது அறிக்கையின் சாராத்தைச் சொல்லியிருந்தார். இவர் அரசபயங்கரவாதத்தை நிறுத்தச் சொல்லி சிங்களத்திலும் சொல்லியிருக்கலாமே?

ஈழத்திலிருந்து

ஜானா

அப்படிக்கேளுங்க நோர்வேர்ஜியன். உவன் அமெரிக்கன் எண்டா என்ன கொம்பா முளச்சிருக்கு ஆக அடிக்க வரேக்க மொச்சுக்கொண்டு வருவீனம். பின்பு ரெஸ்ட் எடுக்கேக்க அடிச்சா ஒவ்வொரு ஒவ்வொரு பெட்டியா திரும்பி போகவேண்டும் தானே. உலகத்தில சக்திக்காப்புத்தத்துவத்தின

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயங்கரவாதத்துக்கு வரவிலக்கணம் தாங்கோ முதலில் அதுக்கு பிறகு யோசிப்பம்

அவையைப் பற்றி அவையே சுயசரிதை படிச்ச மாதிரியெல்லே இருக்கும்!!...

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அமெரிக்கன் உலக பயங்கரவாதத்தை நிறுத்தட்டும். அதாவது சொல்லிலும் செயலிலும் காட்ட வேண்டும். இதனை உலக மக்கள் உறுதி செய்ய வேண்டும். அதற்கு பின்னர் தான் தமிழ் மக்களும், வி.புலிகளும் அமெரிக்காவின் கருத்தினை விவாதத்துக்கு (பரிசீலனைக்கு) எடுப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கா இப்பொழுது எந்த நூற்றாண்டில் இருக்கிறது

முதலில் அமெரிக்கன் உலக பயங்கரவாதத்தை நிறுத்தட்டும். அதாவது சொல்லிலும் செயலிலும் காட்ட வேண்டும். இதனை உலக மக்கள் உறுதி செய்ய வேண்டும். அதற்கு பின்னர் தான் தமிழ் மக்களும், வி.புலிகளும் அமெரிக்காவின் கருத்தினை விவாதத்துக்கு (பரிசீலனைக்கு) எடுப்போம்.

சொல்ல வேண்டியவன் சொன்னால் தான் இவன் கேட்பான் அதுவரை இவன் காதிலும் கேட்காது காரணம் தாங்கள் அறிவீர்கள்

பின்லாடனுக்கு சொல்றதை இங்க மாறி சொல்லிப்போட்டினமோ.

பின்லாடனும் அமெரிக்க அரசும் ஒன்றைத்தான் செய்கின்றன ஆதலால் யார் யாருக்கு சொன்னாலும் மண்டையில் ஏறாது அதனால் இரண்டும் சாக்கடைகள் தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.