Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

வான் வெளியில்

வண்ண நிலா

பொட்டு வைத்த

வட்ட நிலா

சேயைத்தாலாட்டும்

தங்கத்தாய் அவளா

கார் இருளில்

விண் தாரகையா

கண் சிமிட்டும்

பெண் காரிகையா

காதலன் விழிகளில்

காதல் பைங்கிளியா

வான வில்லின்

வர்ண ஜாலங்களா

கண்களில் அவள்

காமா பாணங்களா

மேகத்தில் தீட்டிய

மேனகைதான் அவளா

பொறுமையில் அவள்

பெண் பெட்டகமா

உயிர் கொடுத்த

உன்னத சித்திரமா

சுமைதாங்கும்-அந்த

தூண்கள் அவள்தானா

கவிதைகளில் அவள்

காதல்க் கற்பனையா

இனிக்கின்ற தமிழ்

தேன் சுவை உச்சமமா

பேசும் மொழிகளின்

தாயும் அவள்தானா

அவள் என்கின்ற தலைப்பில் முத்தமிழ்மன்றத்துக்காக புனைந்த கவி இது

உங்கள் கவிதை அவளுக்கு மட்டுமல்ல..

எல்லோருக்கும் இனிக்கும் கற்கண்டு..நன்றி..

ரொம்ப நாளா இலக்கியனைக் காணவில்லை ஏனோ... ஏதும் காதலன் job கிடைத்துவிட்டதா :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உங்க கவிதை அழகு.

ஓரே காதல் கவிதையா எழுதுறிங்க காதல் வலையில் விழுந்துட்டிங்களா?

கவி அருமை இலக்கியன் :lol:

உங்க காதல் கவிதை அழகு.

  • கருத்துக்கள உறவுகள்

வான் வெளியில்

வண்ண நிலா

பொட்டு வைத்த

வட்ட நிலா

சேயைத்தாலாட்டும்

தங்கத்தாய் அவளா

இன்னும் இந்த 5ம் நூற்றாண்டி லிறிக்ஸைக் கைவிடுறதா இல்லைப் போல. பெண்கள் எல்லாம் இப்ப Facial செய்து கரடு முரடான மூஞ்சியையே சிமூத் ஆக்கிறாங்க. அதுக்குப் போய் கரடுமுரடான வட்ட நிலாவை உவமைப்படுத்திறது ரெம்ப ரெம்ப ஓல்ட். :D

பெண்கள் எல்லாம் இப்ப தாலாட்டுறதே இல்ல. பிள்ளைகளா எல்லோ தள்ளு வண்டிகளுக்குள்ள தள்ளாடுதுகள். எந்த உலகில இருக்கிறீங்கள்... சார்...??! :D:D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு உங்களுக்கு கலியாணம் ஆயிட்டுதா

இலக்கியன் கவிதை நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கியன் கவிதை தேன்.......

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு உங்களுக்கு கலியாணம் ஆயிட்டுதா

ஏன் கலியாணம் கட்டிக்கனும். உலகில் முத்தி நிலைக்கு வந்த மனிதர்கள் எவருமே கட்டிக்கல்ல. கட்டின்னா கரைச்சல் என்பதால் போல. புத்தர் கூட கட்டினதோட இருக்கேக்க வராத புத்தியை அப்புறமாத்தான் கண்டவர்.

ஆனால் ஒன்று தமிழ் பையங்களுக்குப் பொண்ணுகளுக்கும் வாழ்க்கையின் ஒரே இலட்சியம் கலியாணம் கட்டிக்கிறதுதான். அதுகாக்கவே டாக்டருக்கு இஞ்சினியருக்கு எக்கவுண்டனுக்குப் படிப்பாங்க. அதாலதான் தமிழனில ஒருத்தன் என்றாலும் விஞ்ஞானியா இல்ல.

அப்படி விஞ்ஞானியா இருக்கவங்க கட்டிக்கவும் இல்ல. பாருங்க நம்ம அப்துள் கலாம கட்டவே இல்லை. மனிசன் உலகம் போற்றும் அணு விஞ்ஞானியா இருக்கிறார். ஒன்றுக்கு மூன்று கட்டினவன் எல்லாம் அரசியல் வாதியாத்தான் இருக்கான். பெரியார் தொடங்கி.. கருணா... தி வரை..! :D:D

ஏன் கலியாணம் கட்டிக்கனும். உலகில் முத்தி நிலைக்கு வந்த மனிதர்கள் எவருமே கட்டிக்கல்ல. கட்டின்னா கரைச்சல் என்பதால் போல. புத்தர் கூட கட்டினதோட இருக்கேக்க வராத புத்தியை அப்புறமாத்தான் கண்டவர்.

ஆனால் ஒன்று தமிழ் பையங்களுக்குப் பொண்ணுகளுக்கும் வாழ்க்கையின் ஒரே இலட்சியம் கலியாணம் கட்டிக்கிறதுதான். அதுகாக்கவே டாக்டருக்கு இஞ்சினியருக்கு எக்கவுண்டனுக்குப் படிப்பாங்க. அதாலதான் தமிழனில ஒருத்தன் என்றாலும் விஞ்ஞானியா இல்ல.

அப்படி விஞ்ஞானியா இருக்கவங்க கட்டிக்கவும் இல்ல. பாருங்க நம்ம அப்துள் கலாம கட்டவே இல்லை. மனிசன் உலகம் போற்றும் அணு விஞ்ஞானியா இருக்கிறார். ஒன்றுக்கு மூன்று கட்டினவன் எல்லாம் அரசியல் வாதியாத்தான் இருக்கான். பெரியார் தொடங்கி.. கருணா... தி வரை..! :D:D

அப்ப நீங்க என்ன விஞ்சானியாகவோ இருக்கிறிங்க? ..இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல?..நீரே எனக்கு கலியாணம் வேணுமென்டு ஒற்றை காலில் நிண்டாலும், எந்த பொண்ணு உம்மை கட்டிக்குவா, யார் தான் உமக்கு பெண் கொடுப்பினம்?..ஆக எட்டா பழம் புழிக்கும்! :D :P

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நீங்க என்ன விஞ்சானியாகவோ இருக்கிறிங்க? ..இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல?..நீரே எனக்கு கலியாணம் வேணுமென்டு ஒற்றை காலில் நிண்டாலும், எந்த பொண்ணு உம்மை கட்டிக்குவா, யார் தான் உமக்கு பெண் கொடுப்பினம்?..ஆக எட்டா பழம் புழிக்கும்! :D :P

விஞ்ஞானியாக இல்லாட்டிலும் பறுவாயில்லை பெண்களைக் கட்டி அஞ்ஞானியாக இருக்காமல் இருந்தால் சரி என்பது பொலிசி. :D

நாங்க கேட்கவும் போறதில்ல நீங்கள் தரவும் வேணாம். நமக்கு எது புளிக்கு எது புழிக்கும் என்று வித்தியாசம் தெரியுமுங்கோ..! :D:D

Edited by nedukkalapoovan

தயவுசெய்து இப்படியே இருங்கோ...மனதை எக்காலத்திலும் மாத்த வேண்டாம்..ஒரு பெண்ணின் வாழ்க்கை தப்பித்துவிட்டது..

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து இப்படியே இருங்கோ...மனதை எக்காலத்திலும் மாத்த வேண்டாம்..ஒரு பெண்ணின் வாழ்க்கை தப்பித்துவிட்டது..

பெண்களைத் தப்ப விடக்கூடாது. சோ கட்டிட்டு கைய விடுறதுதான் நல்லது. ம்ம் யோசனைக்கு நன்றி. :D:D

அதுசரி அதெப்படித் தெரியும் உங்களுக்கு ஒரு பெண்ணைத்தான் கட்டுவம் என்று...! பல பெண்களையும் கட்டி கைவிட்டால்.. சமூக சேவைதானே..! :D:D

Edited by nedukkalapoovan

ஓமோம்..ஜெயில் இருந்து சமூகசேவை செய்வீர்.பெண்கள் படு உஷார் தெரியுமோ??.. Polygamy என்டு உள்ளே தூக்கி போட்டிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம்..ஜெயில் இருந்து சமூகசேவை செய்வீர்.பெண்கள் படு உஷார் தெரியுமோ??.. Polygamy என்டு உள்ளே தூக்கி போட்டிடுவார்கள்.

ஜெயில் எமக்கு ஓய்வெடுக்கும் இடம். இந்த வெருட்டலுக்கு எல்லாம் பயப்படும் ஆக்களில்ல நாங்கள். பெண்களுக்கான சமூக சேவை தொடங்கப் போறம். சேவையின் தலைப்பே Monogamy to polygamy. :P :D

இஞ்ஞா பாருங்கடா! ஐயா நெடுக்கும், அம்மா மூக்கியும் கவிதை பாடுற இடத்திலையும் வந்து பிடிபடுறாங்கள்! இவங்களை கவியரங்கு நடக்கும் இடத்திற்கும் கூட்டிக்கொண்டு போகேலாது போல இருக்கு! இங்கு கவிதை படைப்புக்களத்தில் பிடிபடும் போது, இருவரும் கவிதைகளாலேயே மோதினால் சண்டையைப் பார்ப்பதற்கு இன்னும் உற்சாகமாக இருக்கும். ஐயா நெடுக்கு, மற்றும் அம்மா மூக்கிக்கு கவிதை எழுத வருமா? நீங்கள் இருவரும் கவிதைகள் கொண்டு மோதுவதைப் பார்க்க ஆசையாக உள்ளது! :D:D:D

ஜெயில் எமக்கு ஓய்வெடுக்கும் இடம். இந்த வெருட்டலுக்கு எல்லாம் பயப்படும் ஆக்களில்ல நாங்கள். பெண்களுக்கான சமூக சேவை தொடங்கப் போறம். சேவையின் தலைப்பே Monogamy to polygamy. :P :D

திரு நெடுக்கு அவர்களே..ஆசை படுவதில் தப்பில்லை..ஆனால் பேராசை படலாமோ..உமக்கு ஒரு ஆள் கிடைகிறதே கல்லில நார் உறிகிறது போல...இந்த லட்சணத்தில..உமக்கு நிறைய கேக்குதோ?..ஐயோ..ஐயோ..உங்கள் கனவு மெய்பட வாழ்த்துக்கள்!

Edited by mooki

  • கருத்துக்கள உறவுகள்

திரு நெடுக்கு அவர்களே..ஆசை படுவதில் தப்பில்லை..ஆனால் பேராசை படலாமோ..உமக்கு ஒரு ஆள் கிடைகிறதே கல்லில நார் உறிகிறது போல...இந்த லட்சணத்தில..உமக்கு நிறைய கேக்குதோ?..ஐயோ..ஐயோ..உங்கள் கனவு மெய்பட வாழ்த்துக்கள்!

ஏன் சிம்புட அப்பா விஜய டி ராஜேந்தருக்கே மும்தாஜ் சோடியாக் கிடைக்கேக்க நமக்கு polygamy கிடைக்காதோ. உங்களுக்குப் பொறாமை. வேணும் என்றால் மற்ற சைட்டால நீங்களும் ஆரம்பியுங்கள். ஆண்களுக்கான சமூக சேவையை. :D:D

இஞ்ஞா பாருங்கடா! ஐயா நெடுக்கும், அம்மா மூக்கியும் கவிதை பாடுற இடத்திலையும் வந்து பிடிபடுறாங்கள்! இவங்களை கவியரங்கு நடக்கும் இடத்திற்கும் கூட்டிக்கொண்டு போகேலாது போல இருக்கு! இங்கு கவிதை படைப்புக்களத்தில் பிடிபடும் போது, இருவரும் கவிதைகளாலேயே மோதினால் சண்டையைப் பார்ப்பதற்கு இன்னும் உற்சாகமாக இருக்கும். ஐயா நெடுக்கு, மற்றும் அம்மா மூக்கிக்கு கவிதை எழுத வருமா? நீங்கள் இருவரும் கவிதைகள் கொண்டு மோதுவதைப் பார்க்க ஆசையாக உள்ளது! :D:D:D

அந்தளவுக்கு நமக்கு தமிழ் அறிவு இல்லைங்கோ..கவிதை வாசிக்க பிடிக்கும்..ஆனால் எழுத வராது..

ஏன் சிம்புட அப்பா விஜய டி ராஜேந்தருக்கே மும்தாஜ் சோடியாக் கிடைக்கேக்க நமக்கு polygamy கிடைக்காதோ. உங்களுக்குப் பொறாமை. வேணும் என்றால் மற்ற சைட்டால நீங்களும் ஆரம்பியுங்கள். ஆண்களுக்கான சமூக சேவையை. :D:D

உமக்கு தான் பைத்தியம் முத்திட்டுது என்டால் எனக்குமா?..

  • கருத்துக்கள உறவுகள்

உமக்கு தான் பைத்தியம் முத்திட்டுது என்டால் எனக்குமா?..

பைத்தியமில்லைன்னா எதுக்கு எகிறிக்குதிக்கிறீர்கள். கம்மென்று இருக்க வேண்டியதுதானே. :D:D

இனிக்கும் தமிழில் உங்கள் கவிதை அழகு. பாராட்டுக்கள் இலக்கியன்

  • தொடங்கியவர்

கருத்துக்கள் தந்த விகடகவி கறுப்பி மாப்பிளை கெளரிபாலன் வன்னிமைந்தன் நெடுக்காலபோனவன் தமிழ்வானம் புத்தன் முக்கி இரசிகை அணைவருக்கும் நன்றி

அவள் என்கின்ற தலைப்பில் முத்தமிழ்மன்றத்துக்காக புனைந்த கவி இது

பாராட்டுக்கள் இலக்கியன்!!!!

இப்படிக்கு இனியவள்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.