Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"இரட்டை இலை சின்னம் யாருக்கும் இல்லை" - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முடக்கப்பட்டது இரட்டையிலை.

இந்திய தேர்தல் வரலாறில் ஜானகி, ஜெயலலிதா இமுபறியால் முடக்கப்பட்டு, மீண்டும் ஒரே ஒரு நிகழ்வாக வழங்கப்பட்ட இரட்டையிலை இன்று முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் கிடைப்பதற்கான சாத்தியம் இல்லை.

இத்துடன் பட்டி தொட்டி எங்கும் அறிமுகமான ஒரு புகழ்மிக்க தேர்தல் சின்னத்தின் கதை முடிவுக்கு வருகிறது.

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்பே சொன்னது போல "வாழை இலை" தான் கரெக்ட்டு ...!  tw_blush:

"இரட்டை இலை சின்னம் யாருக்கும் இல்லை" - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

 

images_23327.jpg

 

ரட்டை இலை சின்னத்துக்காக ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கும், சசிகலா அணியினருக்கும் இடையே பெரும் போராட்டம் நடந்து வந்தது. இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் வாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், 'இரட்டை இலை' சின்னம் யாருக்கும் கிடையாது என தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அ.தி.மு.க.வின் சட்ட விதிகளின் படி, தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது. சசிகலா குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு, அதற்கான தண்டனையையும் பெற்று வருபவர். எனவே நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்று வரும் ஒருவர், அரசியல் நடவடிக்கைகளில் எப்படி ஈடுபட முடியும்? இதுகுறித்து சட்ட ஆணையம் ஏற்கனவே, தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்து வந்தது. தேர்தலில் போட்டியிடக்கூட தகுதியில்லாத சசிகலா, எப்படி தேர்தல் வேட்பாளரை அறிவிக்க முடியும்? என்று பன்னீர்செல்வம் தரப்பினர் வாதத்தை முன் வைத்தனர். அதற்கு சசிகலா தரப்பினரோ 'எங்கள் வேட்பாளரை சசிகலா தேர்வு செய்யவில்லை. அ.தி.மு.க.வின் ஆட்சிமன்றக் குழுதான் தேர்வு செய்தது.' என்று மறுவாதம் செய்தனர். 

இந்த நிலையில், தேர்தல் ஆணையம் ஆர்.கே நகர் தேர்தலில் 'இரட்டை இலை' சின்னம் யாருக்கும் கிடையாது என்றும், கட்சியின் பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவுக்குப்பின், இரண்டாவது முறையாக 'இரட்டை இலை சின்னம்' முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/politics/84357-no-one-has-the-right-for-admk-logo-and-name.html

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான செய்தி.. tw_smiley: இப்பிடியே அண்ணன் அழகிரி உதய சூரியன் சின்னத்தை முடக்க வழி செய்தால் நல்லா இருக்கும்.. tw_blush:

இரட்டை இலை சின்னம் முடக்கம் என்பது இடைக்கால உத்தரவே! - தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

3_23307.jpg

ஆர்.கே நகர் தேர்தலில் எங்களுக்கு தான் 'இரட்டை இலை' சின்னம் வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும், சசிகலா தரப்பினரும் போட்டிப் போட்டு வந்தனர். இந்த நிலையில் 'இரட்டை இலை' சின்னம் முடக்கம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கட்சியின் சின்னத்தையோ, கட்சியின் பெயரையோ எங்கும் பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இரட்டை இலை சின்னம் முடக்கம் என்பது இடைக்கால உத்தரவு தான். மேலும் இருத்தரப்பினருக்கும் நியாயமாக நடந்துக் கொள்ளதான் இப்படி உத்தரவை பிறப்பித்தோம்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/84358-ban-on-admk-logo-is-a-temporary-order-says-election-commission.html

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, இசைக்கலைஞன் said:

அருமையான செய்தி.. tw_smiley: இப்பிடியே அண்ணன் அழகிரி உதய சூரியன் சின்னத்தை முடக்க வழி செய்தால் நல்லா இருக்கும்.. tw_blush:

தமிழகத்துக்கான முதலாவது விடுதலை

சூரியனும் போகும் காலம் வெகுதூரமில்லை

அதன்  பின்  தேவைக்கேற்ப  நாங்க ஏற்றிக்கொள்வோம்...

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, இசைக்கலைஞன் said:

அருமையான செய்தி.. tw_smiley: இப்பிடியே அண்ணன் அழகிரி உதய சூரியன் சின்னத்தை முடக்க வழி செய்தால் நல்லா இருக்கும்.. tw_blush:

திறமை இருந்தால்.....

தமிழ் மக்களின் நலன் மனதில் இருந்தால்.....

சொல்லில் வாய்மை இருந்தால்.....

யாராவது வந்து பார்க்கட்டுமே....tw_blush:

அடுத்த திட்டம் என்ன? பன்னீர் ஆலோசனை
 
 
 

அ.தி.மு.க, பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம், நேற்று முடக்கியதை அடுத்து, பன்னீர் அணியினர், தங்களது அடுத்த கட்ட ஆலோசனையை மேற் கொண்டுள்ளனர்; சசிகலா தரப்பும், உச்சநீதி மன்றத்தில், முறையீடு செய்யபோவதாக கூறியுள்ளது.

 

Tamil_News_large_1736128_318_219.jpg

ஜெ., மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிளவு பட்டது. கட்சியின் பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி, பன்னீர் அணி சார்பில், தேர்தல் கமிஷனில் மனு கொடுக்கப்பட்டது.

மனுவை ஏற்றுள்ள தேர்தல் கமிஷன், விளக்கம் கேட்டு, சசிகலாவுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியது. இரு தரப்பினரும், பல்வேறு ஆதாரங்களை சமர்ப்பித்தனர். இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளி யானது. அதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும்,

அ.தி.மு.க., சின்னமான இரட்டை இலையை, தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், இன்று மாலை, 3:00 மணியுடன், வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது; நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்கள் வாபஸ் பெற, 27ம்தேதி கடைசி நாள். அன்று மாலை, 3:00 மணிக்கு பின், வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படும்.

இந்நிலையில், 'அ.தி.மு.க., பெயரும், இரட்டை இலை சின்னமும் இரு அணிகளுக்கும் இல்லை' என, தேர்தல் கமிஷன் நேற்று இரவு, அதிரடியாக அறிவித்தது. பன்னீர் அணியினர், தங்களது அடுத்த கட்ட ஆலோசனையை மேற்கொண்டுள்ளனர்; சசிகலா தரப்பும், உச்சநீதிமன்றத்தில், முறையீடு செய்யபோவதாக கூறியுள்ளது.
 

பிரமாண பத்திரம் உண்மையானதா?


தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்ட, பிரமாண பத்திரங்களில், கூறப்பட்டிருந்த பெயர்கள் உண்மை யானவையா என்பதை கண்டறிய, சசி மற்றும் பன்னீர் அணியைச் சேர்ந்த, பொதுக்குழு உறுப்பினர் களிடம், மொபைல் போனில், தேர்தல் கமிஷன் அதிகாரிகள், விசாரணை நடத்தி உள்ளனர்.

தேர்தல் கமிஷனில், பன்னீர் அணி சார்பில், 10 ஆயிரம் பேர் கையெழுத்திட்ட, பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், 12 எம்.பி.க்கள்,

 

12 எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் என, பல தரப்பினரும் கையெழுத்திட்டிருந்தனர்.

சசி அணி சார்பில், 122 எம்.எல்.ஏ,க்கள், 37 எம்.பி.,க்கள், மாவட்டச் செயலர்கள், நகரச் செயலர்கள், ஒன்றியச் செயலர்கள், பொதுக் குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட, பிரமாண பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இரு தரப்பினரின் பிரமாண பத்திரங்களில் உள்ள, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகளின் பெயர், பதவி பெயர் உண்மையா, போலியா என்பதை கண்டறிய, சம்பந்தப்பட்டவர்களின் மொபைல் போன் எண்களுக்கு, தேர்தல் கமிஷன் அதிகாரிகள்,
2 நாட்களாக விசாரணை நடத்தியுள்ளனர். - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1736128

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேர்தல் வரலாற்றில் முடக்கப் பட்ட சின்னம் மீண்டும் வழங்கப்பட்டதில்லை. 

ஜானகி அரசியலை விட்டு ஒதுக்கியதால், அவருடன் இருந்தவர்கள் அனைவரும் ஜெயலலிதா பின்னல் போக, எல்லோரும் சேர்ந்து கேட்டுக் கொண்டதால் மீண்டும் கிடைத்தது. அதுவே ஒரே ஒரு முறை தான் நடந்ததாக சொல்கின்றனர். 

ஆனால், இப்போது, இரு பகுதியும் இணைய சந்தர்ப்பம் இல்லாததும், மோடியின் நோக்கம், இந்த கட்சியை கவிழ்ப்பதுமாக இருப்பதால், இனி கிடைக்க சந்தர்ப்பம் இல்லை. 

2 hours ago, இசைக்கலைஞன் said:

அருமையான செய்தி.. tw_smiley: இப்பிடியே அண்ணன் அழகிரி உதய சூரியன் சின்னத்தை முடக்க வழி செய்தால் நல்லா இருக்கும்.. tw_blush:

 

2 hours ago, விசுகு said:

தமிழகத்துக்கான முதலாவது விடுதலை

சூரியனும் போகும் காலம் வெகுதூரமில்லை

அதன்  பின்  தேவைக்கேற்ப  நாங்க ஏற்றிக்கொள்வோம்...

 

 

உதயசூரியன் இப்போ, வைக்கோல் போர் ஆகி,  காவல் இருக்கிறவர், அண்ணை, தங்கை ஒருவரையும் கிட்ட விடுவதில்லை. அவருக்கு இருக்கும் திறமையில் 'நம்பிக்கை' வைத்து, கட்டுமரம் கம்முன்னு இருந்து பார்க்குறாரு.

அண்ணன், தங்கச்சி, சின்னம்மா (அட, ராசாத்தி ) எல்லோரும் 'நேரம்' பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

ஆக... "உங்களுக்கு ..நீங்களே ... பயணம்"  ஓவர்.. !! சைக்கிள் ரெடி .. ! புல்லட் ரெடி .. ! ஆட்டோ ரெடி !! பஜ்ஜி.... போண்டா.. வடையும்.. ரெடி !!

டிஸ்கி :

அடபோங்கப்பா.. சினிமா கூத்தாடிகளே ..தேவலாம் போல கிடக்கு..!   :cool:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஆக... "உங்களுக்கு ..நீங்களே ... பயணம்"  ஓவர்.. !! சைக்கிள் ரெடி .. ! புல்லட் ரெடி .. ! ஆட்டோ ரெடி !! பஜ்ஜி.... போண்டா.. வடையும்.. ரெடி !!

டிஸ்கி :

அடபோங்கப்பா.. சினிமா கூத்தாடிகளே ..தேவலாம் போல கிடக்கு..!   :cool:

 

நீங்க கமலகாசனைத்தானே சொல்கிறீர்கள்....கங்கை அமரனை இல்லையே tw_tounge_xd:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.