Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“12 ஆயிரம் புலிகளை கைதுசெய்து தண்டிக்க வேண்டும்” நீங்கள் தயாரா.? நாம் தயார்

Featured Replies

“12 ஆயிரம் புலிகளை கைதுசெய்து தண்டிக்க வேண்டும்” நீங்கள் தயாரா.? நாம் தயார்

 

Patali-Champika-Ranawaka.jpg

சர்வதேச விசாரணைகள் தான் தமிழர் தரப்பினருக்கு அவசியம் என்றால் கடந்த காலத்தில் விடுவிக்கப்பட்ட 12 ஆயிரம் புலிகளை கைதுசெய்துதண்டிக்க வேண்டும். இதற்கு தமிழர் தரப்பு தயார் என்றால் நாமும் விசாரணைகளை முன்னெடுக்க தயார். பக்கசார்பான எந்தவொரு விசாரணையும் அரசாங்கம் ஏற்காது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

சர்வதேச விசாரணைகள் மற்றும் புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் தமது நிலைப்பட்டை தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/18617

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

“12 ஆயிரம் புலிகளை கைதுசெய்து தண்டிக்க வேண்டும்” நீங்கள் தயாரா.? நாம் தயார்

 

அதுதான் 12 ஆயிரம் புலிகளையும் புனர்வாழ்வு என்ற பெயரில் தண்டித்து நடைப்பிணமாக உலாவ விட்டுள்ளீர்களே! நீங்கள் தயாரானால் என்ன தயாராகாவிட்டால் என்ன? தண்டனை உங்களுக்கோ உங்கள் அடுத்த தலைமுறைகளுக்கோ நிச்சயம் உண்டு. அதற்கு நீங்கள் தயாராகுங்கள் சம்பிக்க ரணவக்கரே! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, நவீனன் said:

“12 ஆயிரம் புலிகளை கைதுசெய்து தண்டிக்க வேண்டும்” நீங்கள் தயாரா.? நாம் தயார்

சம்பந்தனை மாதிரியும் சுமந்திரனை மாதிரியும் கூட்டிக்குடுக்கிற தமிழ் அரசியல்  தலைமைகள் இருக்கும் வரைக்கும் சிங்களவன் எதுக்குமே கவலைப்படத்தேவையில்லை. எதை வேண்டுமானாலும் பேசலாம்...செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சொல்லக்கூடாது..குமாரசாமியர்....எங்கள் தெய்வங்களை அப்படிச் சொல்லலாமோ.....போங்கண்ணா.....

 

  • தொடங்கியவர்

12 ஆயிரம் புலி­களை மீண்டும் கைது­செய்­து தண்டிக்க ­வேண்டும்

champika2-d04f9bec2187911c3a846ac93e4e05e181a1700e.jpg

 

(ஆர்.யசி)

சர்வதேச விசாரணையை கோரும் தமிழர் தரப்பு இதற்கு தயாரா?
சர்­வ­தேச விசா­ர­ணைகள் தான் தமிழர் தரப்­பி­ன­ருக்கு அவ­சியம் என்றால் கடந்த காலத்தில் விடு­விக்­கப்­பட்ட 12 ஆயிரம் புலி­களை கைது­செய்து தண்­டிக்க வேண்டும். இதற்கு தமிழர் தரப்பு தயார் என்றால் நாமும் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க தயார். பக்­க­ச்சார்­பான எந்­த­வொரு விசா­ர­ணை யையும் அர­சாங்கம் ஏற்­காது என்று ஜாதிக ஹெல உறு­ம­யவின் பிர­தி­நி­தியும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.  

புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்கும் நகர்வில் பிரி­வி­னை­வாத செயற்­பா­டுகள் அதி­க­மாக முன்­வந்­து­கொண்­டுள்­ளன. அன்று யுத்­தத்தை முன்­னெ­டுக்­காது தடுக்க முன்­வந்த நபர்கள் தான் இன்றும் அர­சியல் அமைப்பு உரு­வாக்­கத்­திலும் தலை­யிட முன்­வந்­துள்­ளனர் எனவும் அவர் குறிப்­பிட்டார்.  

சர்­வ­தேச விசா­ர­ணைகள் மற்றும் புதிய அர­சியல் அமைப்பு தொடர்பில் தமது நிலைப்­பாட்டை தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

அர­சியல் அமைப்பு தொடர்பில் வெவ்­வேறு கார­ணி­களை பலர் தெரி­வித்து வரு­கின்­றனர். ஒரு சிலர் தம்மை வீரர்­க­ளாக கூறிக்­கொண்டும் இந்த நாட்டை தாம் கட்­டிக்­காத்­த­தா­கவும் இப்­போது அர­சாங்கம் நாட்டை பிரிக்கும் வகையில் அர­சியல் அமைப்பை உரு­வாக்கி வரு­வ­தா­கவும் கூறு­கின்­றனர். ஆனால் இன்று இவ்­வாறு கூறும் நபர்கள் அன்று யுத்தம் நடை­பெற்ற காலத்தில் மத­வாச்­சியை கூட தாண்டி செல்ல பயந்­த­வர்கள் என்­பதை நினைவு படுத்த வேண்டும்.

மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தில் இருந்­து­கொண்டு நாங்­களே இந்த நாட்டில் பிரி­வி­னைய தடுக்க சகல விதத்­திலும் போரா­டினோம். வடக்கு தேர்­தலை நடத்தி நாட்டின் புதிய பிரி­வி­னையை உரு­வாக்கும் அதி­கா­ரங்கள் கொடுக்க வேண்டாம் என நாம் அப்­போதில் இருந்து போராடி வந்தோம். ஆனால் அதி­கா­ரங்கள் மற்றும் சுதந்­திரம் சகல தரப்பின் பக்­கமும் சென்­ற­டைய வேண்டும் என்­பதில் நாம் விரோ­த­மாக செயற்­ப­ட­வில்லை.

மேலும் புதிய அர­சியல் அமைப்பு ஒன்று நாட்­டிற்கு அவ­சி­ய­மாகும். நாட்டில் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண புதிய அர­சியல் அமைப்பு தேவை­யா­னது என நாமும் கரு­து­கின்றோம். ஆனால் அதே நிலையில் சிலரின் தனிப்­பட்ட தேவை­க­ளுக்­காக அர­சியல் அமைப்பை உரு­வாக்­கு­வதை எம்மால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அதற்கு இட­ம­ளிக்­கவும் முடி­யாது. இலங்­கையில் ஏற்­க­னவே மூன்று சந்­தர்ப்­பங்­களில் அர­சியல் அமைப்­புகள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. அந்த மூன்று சந்­தர்ப்­பங்­க­ளிலும் தனி நபர்­களின் அர­சியல் கொள்­கை­யிலும் தனி அர­சியல் கட்­சியின் கொள்­கை­யிலும் அவை உரு­வாக்­கப்­பட்­டன. எனினும் இம்­முறை உரு­வாக்­கப்­பட உள்ள அர­சியல் அமைப்பு எவ­ரதும் தனி கொள்­கையில் அமை­யாது சக­ல­ரதும் ஒத்­து­ழைப்­புடன் உரு­வாக்­கப்­பட வேண்டும். இதில் பிர­தான இரண்டு கட்­சி­களின் கொள்கை மாத்­திரம் அல்­லாது ஜாதிக ஹெல உறு­மய, மக்கள் விடு­தலை முன்­னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆகிய அனை­வ­ரதும் ஒத்­து­ழைப்பு அவ­சி­ய­மா­னது. அதேபோல் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு மிகவும் அவ­சி­ய­மா­னது. அவ்­வாறு அமைந்தால் மாத்­தி­ரமே ஜன­நா­யக ரீதி­யி­லான ஒரு அர­சியல் அமைப்பு உரு­வாக்கப் படும்.

அதேபோல் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­து­வதன் மூலம் வடக்கில் ஒரு கருத்தும் தெற்கில் வேறு கருத்தும் வரு­மாயின் அதோடு நாடு இரண்­டாக பிரி­படும் நிலைமை ஏற்­படும். இன்று பிரித்­தா­னி­யாவின் நிலைமை எமக்கு நல்ல எடுத்துக் காட்­டாகும். இங்­கி­லாந்தும் ஸ்கொட்­லாந்தும் மோதிக்­கொண்டு உள்­ளன . இந்த நிலை­மைதான் வடக்­கிற்கும் தெற்­கிக்கும் ஏற்­படும். அவ்­வா­றான ஒரு நிலை­மையை எம்மால் ஏற்­ப­டுத்த முடி­யாது. எனினும் புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்கும் நகர்வில் பிரி­வி­னை­வாத செயற்­பா­டுகள் அதி­க­மாக முன்­வந்­து­கொண்­டுள்­ளன. அன்று யுத்­தத்தை தடுக்க முன்­வந்த நபர்கள் தான் தான் இன்றும் அர­சியல் அமைப்பு உரு­வாக்­கத்­திலும் தலை­யிட முன்­வந்­துள்­ளனர். ஐக்­கிய தேசிய கட்­சியும் , ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் நாட்டின் ஐக்­கியம் என்ற கொள்­கையில் உள்­ளன. ஒன்­றி­ணைந்த நாடு என்ற கொள்­கையில் இருந்து பிர­தான கட்­சிகள் மாற முடி­யாது. எனினும் இரண்டு கட்­சி­க­ளுக்­குள்ளும் நாட்டை பிரிக்கும் நபர்கள் உள்­ளனர். பெரும்­பான்­மை­யினர் ஒற்­றை­யாட்சி இலங்கை என்ற நிலைப்­பாட்டில் தான் உள்­ளனர்.

மேலும் யுத்த குற்றம் என் ற விட­யத்தில் நாடு அழுத்­தங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­படும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. யுத்­தத்தை வெற்றி கொள்ள முன்­வந்த அனை­வ­ருக்கும் நாம் எமது மதிப்­பையும் நன்­றி­க­ளையும் தெரி­விக்­கின்றோம். அதில் மஹிந்த ராஜபக் ஷவும் ,கோத்­த­பாய ராஜபக் ஷவும் உள்­ள­டங்­கு­கின்­றனர். எனினும் இன்று மஹிந்த ராஜபக் ஷ தெரி­விக்கும் கருத்­துக்கள் அனைத்தும் பொய்­யான கருத்­துக்கள். நாட்டில் மீண்டும் பயங்­க­ர­வாதம் தலை­தூக்­கி­யுள்­ள­தாக அவர் கூறும் கருத்­துக்கள் உண்­மை­யெனின் அதற்­கான பொறுப்­பையும் அவரே ஏற்­றுக்­கொள்ள வேண்டும். அன்று நாம் முரண்­பட்டு எச்­ச­ரித்த போதும் 12ஆயிரம் புலி­களை விடு­தலை செய்து தனது அர­சியல் இருப்பை தக்­க­வைக்க முயற்சி செய்தார். அதில் மிகவும் முக்­கி­ய­மான குற்­ற­வா­ளிகள் அனை­வரும் விடு­விக்­கப்­பட்­டனர்.

மேலும் யுத்தம் முடிந்த பின்னர் உள்­ளக விசா­ர­ணைகள் ஏதேனும் ஒன்றை முன்­னெ­டுத்­தி­ருந்தால் இன்று நாம் சர்­வ­தேச அழுத்­தங்­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டி­ருக்­காது. ஆனால் அதை தவிர்த்து சுய­நல அர­சியல் செய்ய முன்­வந்­த­மையே இந்த பிரச்­சி­னைகள் அனைத்­திற்கும் கார­ண­மாகும். ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் மூலம் இலங்­கைக்கு பல்­வேறு கோரிக்­கைகள் முன்­வைக்க முடியும். ஆனால் எந்த நகர்வு எடுத்­தாலும் அது இலங்­கையின் நல்­லி­ணக்­கத்தை பாதிக்­காத வகையில் அமைய வேண்டும். எமது சட்­டத்­திற்கும், அர­சியல் அமைப்­பிற்கும் அமை­வா­கவே நாம் அனைத்­தையும் மேற்­கொள்ள வேண்டும். அதேபோல் சர்­வ­தேச நீதி­ப­திகள் உள்­ள­டக்­கப்­பட்ட விசா­ர­ணைக்கு ஒரு­போதும் நாம் இட­ம­ளிக்க முடி­யாது. அதில் அர­சாங்கம் உறுதியாக உள்ளது. முள்மேல் விழுந்த சேலைபோன்று எமது யுத்த வெற்றி அமைந்துள்ளது. மிகவும் அவதானமாக நாம் அழுத்தங்களில் இருந்து வெற்றிகொள்ள வேண்டும்.

 அதேபோல் சர்வதேச விசாரணை வேண்டும் என தமிழ் அரசியல் தரப்பு தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றது. அவ்வாறு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் முதலில் கடந்த காலத்தில் விடுவிக்கப்பட்ட 12ஆயிரம் புலிகளை கைதுசெய்து தண்டிக்க வேண்டும். இதற்கு தமிழர் தரப்பு தயார் என்றால் நாமும் விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என்றார்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-03#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.