Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’என்னாது... 3 ஆயிரம் ரூபாய்தானா...!’ தினகரனுக்கு அதிர்ச்சியளித்த ஆர்.கே.நகர்

Featured Replies

’என்னாது... 3 ஆயிரம் ரூபாய்தானா...!’ தினகரனுக்கு அதிர்ச்சியளித்த ஆர்.கே.நகர்

 டி.டி.வி.தினகரன்

ஆர்.கே.நகர்த் தொகுதி வாக்காளர்களுக்கு மூவாயிரம் ரூபாய் சசிகலா அணியினர் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. பணம் கொடுக்கச் சென்றவர்களிடம் இவ்வளவுதானா என்று சலிப்புடன் சிலர் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. 

 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர்கள் படுபிஸியாக உள்ளனர். தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வேட்பாளர்களும், அவர்களுடைய ஆதரவாளர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்துக்கு ஓட்டு கேட்டுவருகின்றனர். வாக்காளர்களுக்கு வாக்குறுதியோடு அன்பளிப்பும் சில வேட்பாளர்கள் தரப்பிலிருந்து அள்ளி வீசப்படுகின்றன. சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் கருணாமூர்த்தி, வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த போது கையும் களவுமாக சிக்கினார். அடுத்து, குத்துவிளக்கு கொடுத்ததாக நளினி என்ற பெண்ணை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்தனர். 


தேர்தல் ஆணையத்தின் கட்டுபாடுகளை மீறி சில வேட்பாளர்கள் தரப்பில் பணப்பட்டுவாடா, அன்பளிப்பு ஆகியவை வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டு வருவதாக உள்வட்டாரங்கள் தெரிவித்தன. டி.டி.வி.தினகரன் தரப்பில் சில நாட்களுக்கு முன்பு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. அவர்கள், வாக்காளர்களுக்கு தலா மூவாயிரம் ரூபாயை விநியோகித்ததாகச் சொல்லப்படுகிறது. அப்போது, பணம் பெற்ற வாக்காளர்களில் சிலர், இவ்வளவுதானா... என்று சலிப்போடு தெரிவித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தனர். அவர்களிடம் பணம் கொடுத்தவர்கள் இது, முதல்தடவை. அடுத்து, இதைவிட கூடுதல் தொகை கொடுக்கப்படும் என்று சொல்லியதோடு மறக்காமல் நம்முடைய சின்னத்துக்கு ஓட்டுப்போட்டுவிடுங்கள் என்ற தெரிவித்தாகக் கூறப்படுகிறது. 

டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி


 இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், "தொகுதியில் குறிப்பிட்ட சில இடங்களில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மூவாயிரம் ரூபாய் பணம் வாங்கியவர்கள் கூடுதல் தொகை கேட்டுள்ளனர். சில கட்சி வேட்பாளர்கள் தரப்பில் தங்கநாணயம், பிரிட்ஜ், ஏ.சி., ஓட்டுக்கு 15,000 என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனால் மூவாயிரம் கொடுத்தவர்களிடம் சில வாக்காளர்கள் கூடுதல் தொகை கேட்டுள்ளனர். அப்போது, பணம் கொடுத்தவர்கள், இது முதல்தடவை என்று சொல்லிவிட்டுச் சென்றுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை மீறி சர்வசாதாரணமாக பணப்பட்டுவாடா நடக்கிறது" என்றனர்.

இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், "பணப்பட்டுவாடா, அன்பளிப்பு கொடுக்கப்படுவதைத் தடுக்க 24 மணி நேரமும் பறக்கும்படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தொகுதிக்குள் வரும் அனைவரின் வாகனங்களும் சோதனை செய்யப்படுகின்றது. பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிலருக்கு சாதகமாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்ட உதவி போலீஸ் கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டனர். குற்றம்சாட்டப்பட்ட தேர்தல் அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர். ஜனநாயகப்படி தேர்தலை நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். தேர்தல் விதிமுறைகள் மீறியதாக வரும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தொடர்ந்து வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் தேர்தலை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். 

 டி.டி.வி.தினகரன் தரப்பில் பேசியவர்கள், "பிரசாரத்தில் மட்டும் நாங்கள் ஈடுபட்டுவருகிறோம். எங்கள் தரப்பிலிருந்து யாருக்கும் பணப்பட்டுவாடா செய்யவில்லை" என்றனர். அவர்களிடம் உங்களின் ஆதரவாளர்கள் போலீஸிடம் பிடிப்பட்டுள்ளார்களே என்று கேட்டதற்கு, அதுதொடர்பாக கட்சித்தலைமை விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்குப்பிறகே பதில் சொல்ல முடியும் என்றனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/85389-this-amount-is-not-enough-as-per-few-rk-nagar-people.html

  • கருத்துக்கள உறவுகள்

இம்மாதிரி வியாதியுடைய மக்கள் இருக்கும் வரை அரசியல்வியாதிகளை குற்றம் சொல்லி என்ன பயன்..?

திருந்தாத சென்மங்கள்..! vil-triste.gif

39 minutes ago, ராசவன்னியன் said:

இம்மாதிரி வியாதியுடைய மக்கள் இருக்கும் வரை அரசியல்வியாதிகளை குற்றம் சொல்லி என்ன பயன்..?

திருந்தாத சென்மங்கள்..! vil-triste.gif

ஆமா மக்கள் பணத்தையும் பரிசு பொருட்களையும் வாங்கிவிட்டு ஏன் தமக்கு பிடித்தவர்களுக்கு வாக்களிக்கிறார்கள் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஜீவன் சிவா said:

ஆமா மக்கள் பணத்தையும் பரிசு பொருட்களையும் வாங்கிவிட்டு ஏன் தமக்கு பிடித்தவர்களுக்கு வாக்களிக்கிறார்கள் இல்லை 

அந்தளவிற்கு சிந்திக்கும் திறன்/விவரம் இருந்தால் ஏன் கூத்தாடிகளை தெரிவு செய்கிறார்கள்..? வருத்தப்பட வேண்டிய விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ஜீவன் சிவா said:

ஆமா மக்கள் பணத்தையும் பரிசு பொருட்களையும் வாங்கிவிட்டு ஏன் தமக்கு பிடித்தவர்களுக்கு வாக்களிக்கிறார்கள் இல்லை 

பாலிலும் கற்பூரத்திலும் சத்தியம் செய்வதாலேயே

5 minutes ago, MEERA said:

பாலிலும் கற்பூரத்திலும் சத்தியம் செய்வதாலேயே

சத்தியமாவது கத்தரிக்காயாவது

சமாதியில் குத்தி கோமளவல்லியை எழுப்பி சத்தியம் பண்ணியவரே கூண்டுக்குள்ள.

இது மக்கள் பணம் // வாங்குறதை வாங்கிற்று கமுக்கமா வோட்டைப் போடுவீங்களா.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

சாத்தியமாவது கத்தரிக்காயாவது

சமாதியில் குத்தி கோமளவல்லியை எழுப்பி சத்தியம் பண்ணியவரே கூண்டுக்குள்ள.

இது மக்கள் பணம் // வாங்குறதை வாங்கிற்று கமுக்கமா வோட்டைப் போடுவீங்களா.

இதற்கு வன்னியரின் பதில்தான் 

44 minutes ago, ராசவன்னியன் said:

அந்தளவிற்கு சிந்திக்கும் திறன்/விவரம் இருந்தால் ஏன் கூத்தாடிகளை தெரிவு செய்கிறார்கள்..? வருத்தப்பட வேண்டிய விடயம்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நவீனன் said:

என்னாது... 3 ஆயிரம் ரூபாய்தானா...!’

 அடி ஆத்தி குடுத்தவன் குடுக்காட்டி வெட்டுப்பகை குத்துப்பகையாமெல்லே :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.