Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்னுடைய போர் இல்லை மாறாக அது இந்தியாவின் போர்” மஹிந்த:-

Featured Replies

“விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்னுடைய போர் இல்லை மாறாக அது இந்தியாவின் போர்” மஹிந்த:-

 

Mahi-Sonia.jpg
“விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்தியாவே செய்தது, அது எனக்கும் மட்டுமான யுத்தத்தை அல்ல மாறாக இந்தியாவிற்கும் இதில் பாரிய பங்குள்ளது” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு நான் இந்தியாவை உதவி செய்யச் சொல்லிக் கேட்கவில்லை மாறாக இந்தியா தானே முன்னவந்து பல்வேறு உதவிகளை செய்திருந்தது. சாதகமான வழிகள் ஊடாக பல உதவிகளை வழங்கியிருந்தனர். உண்மையில் அது என்னுடைய போர் இல்லை மாறாக இந்தியாவின் போர் என்று தான் சொல்ல வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை உட்பட பலரது கொலைகளின் பின்னணியில் அவர்கள் இருந்ததன் விளைவாகவே இந்தியா இந்த யுத்தத்தை முன்னின்று செய்தது.

இது என்னுடைய போர் மட்டுமல்ல இந்தியாவினுடையதும் தான். மனிதாபிமான போர். இந்த தகவலை ஊடகங்களுக்குச் சொல்லி பரப்புரை செய்யவில்லை. போரில் சீனா மட்டுமல்ல பாகிஸ்தான், பிரித்தானியா, அமெரிக்க போன்ற நாடுகளும் உதவி புரிந்திருந்தன.’ என தெரிவித்துள்ளார்.

https://globaltamilnews.net/archives/24316

  • தொடங்கியவர்

கோதபாயவுடன் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது – மஹிந்த

gotapaya-mahintha.jpg
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவுடன் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமக்கும் தமது சகோதரரான கோதபாய ராபஜக்ஸவிற்கும் இடையில் முரண்பாடு நிலவி வருவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என குறிப்பிட்டுள்ள அவர் கடந்த காலத்திலோ நிகழ் காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ முரண்பாடுகள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். கோதபாய ராஜபக்ஸவுடனான உறவு அன்பினாலானது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சீனா, பாகிஸ்தான், அமெரிக்க மற்றும் பிரி;த்தானியா போன்ற நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க ஒத்துழைப்பு வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். நாட்டையும் நாட்டு மக்களையும் தொடர்ந்தும் பாதுகாக்க தாம் முனைப்பு காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்

http://globaltamilnews.net/archives/24356

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா என்ற நாடு இருக்கும் வரைக்கும் ஈழ தமிழர்களுக்கு விடிவு என்பது இல்லை தங்களின் சுய பாதுகாப்புக்காகவும்  என்னவும் செய்யும் அண்மையில் கஷ்மீரில் தனது சொந்த நாட்டு பிரஜையை ஜீப்பில் கட்டிவைத்து கல்லெறிபடாமல் ராணுவம் சுற்றி வந்தது யாவரும் அறிந்திருப்பீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, முனிவர் ஜீ said:

இந்தியா என்ற நாடு இருக்கும் வரைக்கும் ஈழ தமிழர்களுக்கு விடிவு என்பது இல்லை தங்களின் சுய பாதுகாப்புக்காகவும்  என்னவும் செய்யும் அண்மையில் கஷ்மீரில் தனது சொந்த நாட்டு பிரஜையை ஜீப்பில் கட்டிவைத்து கல்லெறிபடாமல் ராணுவம் சுற்றி வந்தது யாவரும் அறிந்திருப்பீர்கள் 

இந்தியா என்ற நாடு  பலமாக

ஒன்றாக  இருக்கும் வரைக்கும்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 17.4.2017 at 5:01 PM, நவீனன் said:

 

“விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்னுடைய போர் இல்லை மாறாக அது இந்தியாவின் போர்” மஹிந்த:-

 

ஊர், குட்டை, குளம்,குப்பமெல்லாம் தெரிஞ்ச விசயத்தை சும்மா திருப்பி திருப்பி கதைச்சுக்கொண்டு..... tw_rage:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் 30 வருடமா நாங்களும் பார்த்தனாங்க தானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.