Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணிகளை விடுவிப்பது தொடர்பில் இராணுவத்துடன் பேசுவதில் அர்த்தமில்லை முல்லைத்தீவு கலந்துரையாடலின் பின்னர் சுமந்திரன் அதிருப்தி

Featured Replies

காணிகளை விடுவிப்பது தொடர்பில் இராணுவத்துடன் பேசுவதில் அர்த்தமில்லை

p30-9f1986c06e363fe67080475d156d6deda12f1ba3.jpg

 

முல்லைத்தீவு கலந்துரையாடலின் பின்னர் சுமந்திரன் அதிருப்தி
(கே.குமணன்)

கேப்­பாப்­பு­லவு மக்­களின் பூர்­வீக நிலங்­களை விடு­விப்­பது தொடர்பில் இரா­ணுவ தரப்­புடன் பேச்­சு­வா­ர்த்தை நடத்­து­வதில் எந்­தப்­ப­யனும் இல்லை. ஜனா­தி­பதி, பிர­தமர் உள்­ளிட்ட அரச உயர்­மட்ட பேச்­சு­வார்த்­தை­களை

முன்­னெ­டுத்து காணி­களை விடு­விக்க முயற்­சிப்­ப­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பார­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எ. சுமந்­திரன் தெரி­வித்தார். மக்கள் மாற்றுக் காணி­களை எடுக்­கப்­போ­வ­தில்லை என்­பதை உறு­தி­யாக தெரி­வித்து வரு­கின்­றனர். ஆகவே அதே நிலைப்­பாட்டில் இருந்து மக்­களின் சொந்த நிலங்­களை மீண்டும் பெறு­வதில் உறு­தி­யாக செயற்­பட்டு வரு­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

கேப்­பாப்­பு­லவு பூர்­வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்­களை கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள இரா­ணு­வத்­தினர் அவற்றை விடு­வித்து சொந்த நிலங்­களில் தாம் வாழ அனும­திக்க வேண்டும் என கூறி தொடர்ந்து 50 நாட்­க­ளாக போராட்டம் நடத்தி வரு­கின்ற நிலையில் மக்­களின் சொந்த நிலங்­களை அடை­யாளம் காணும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களுக்கும் படைத்தரப்பினருக்குமிடையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்ற பின்னர் மக்­கள் சில­ருடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்­களான சுமந்­திரன் எம்.பி, சிவ­சக்தி ஆனந்தன் எம்.பி, சிவ­மோகன் எம்.பி ஆகியோர் கேப்பாப்புலவு இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்­றி­ருந்­தனர். இதன் பின்னர் மக்­க­ளிடம் கருத்து தெரி­விக்கும் போதே சுமந்­திரன் எம்.பி. இவ்வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்,

பாது­காப்பு அமைச்சின் கூட்­டத்தின் தொடர்ச்­சி­யாக ஒவ்­வொரு மாவட்­டத்­திலும் இரா­ணுவம் கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள பொது மக்­களின் நிலங்­களை நேர­டி­யாக பார்­வை­யி­டவும் மக்கள் குடி­யி­ருந்த நிலங்­களை அடை­யா­ளங்­கா­ணவும் இந்த விஜயம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. அதன் முதல் கட்­ட­மாக முல்­லைத்­தீவு கேப்­பாப்­பு­லவு பூர்­வீகக் கிரா­மத்தில் இரா­ணுவ முகாம் இருக்கும் தளத்தின் உள்தான் மக்கள் அதி­க­ளவில் குடி­யி­ருந்­துள்­ளனர். ஆகவே காணி அதி­கா­ரிக்கும் இந்த இடங்­களை சரி­யாக இனங்­கா­ண­மு­டி­யாத நிலை­மையில் நாம் இந்த ஏற்­பா­டு­களை செய்­தி­ருந்தோம். மக்­களின் பிர­தி­நி­க­ளாக நாம் உள்ளே சென்று மக்­களின் நிலங்­களை அடை­யாளம் காணும் முயற்­சி­களை மேற்­கொண்­டுள்ளோம். ஆகவே எமது பிர­தி­நி­திகள் எமது மக்­களின் காணிகள்,

வீடுகள், ஆலயங்கள் உள்­ளிட்ட பகு­தி­களை அடை­யாளம் காட்­டி­யுள்­ளனர். அதேபோல் தென்மேல் பக்­க­மாக இருக்கும் 111 ஏக்கர் காணி­களை விடு­விக்க இரா­ணுவம் தெரி­வித்­துள்­ளது. அதற்க்கு கால அவ­காசம் அவ­சியம் எனினும் விரைவில் விடு­விக்­கப்­படும் என இரா­ணுவம் வாக்­கு­றுதி வழங்­கி­யுள்­ளது. அதேபோல் இரா­ணுவ முகா­முக்கு உள்ளே உள்ள வீதியும் திறக்­கப்­படும். கடந்த திங்­கட்­கி­ழமை பாது­காப்பு அமைச்­சுடன் கலந்­து­ரை­யா­டிய போது சிவில் அதி­கா­ரிகள், பாது­காப்பு செய­லாளர் விடுக்கும் கட்­ட­ளைக்கு அமைய இரா­ணுவம் செயற்­படும், அதை மீறி அதையும் இரா­ணுவம் எதையும் மேற்­கொள்­ளாது என இரா­ணுவ தள­பதி தெரி­வித்தார்.

மேலும் பகுதி பகு­தி­யாக நிலங்­களை விடு­விக்க முடியும் என தெரி­வித்­துள்ள நிலையில் முதலில் பொது­மக்கள் வசிக்­கக்­கூ­டிய நிலங்­களை விடு­விக்க வேண்டும் என கேட்­டுள்ளோம். இது­வரை விடு­விக்­கப்­பட்ட நிலங்­களில் மக்கள் குடி­யி­ருந்த நிலங்கள் மிகக் குறை­வாகும். ஆகவே இனி விடு­விக்கும் பகு­திகள் மக்கள் குடி­யி­ருந்த பகு­தி­யாக இருக்க வேண்டும் என உறு­தி­யாக தெரி­வித்­துள்ளோம். அதற்­க­மைய இப்போது அடை­யாளம் காணும் வேலைத் திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.மீண்டும் கொழும்பில் பாது­காப்பு தரப்­புடன் விரைவில் பேச்­சு­வார்த்தை நடத்­துவோம். அதில் இந்த தர­வு­களை வைத்து தீர்க்­க­மான முடி­வு­களை எடுப்போம். எனினும் இரா­ணுவ தரப்பு கொள்கை அடி­ப்ப­டையில் இந்த காணி­களை விடு­விப்­ப­தாக தொடர்ச்­சி­யாக தெரி­வித்து வரு­கின்­றனர்.

எனினும் அவர்கள் பேச்­ச­ளவில் அவ்­வாறு கூறி­னாலும் நிலைமை அதற்கு மாறா­கவே உள்­ளது. நிரந்­தர கட்­ட­டங்­களை அமைத்து இவற்றை நீண்­ட­கால இரா­ணுவ முகா­மாக பயன்­ப­டுத்தும் திட்­டங்­களை கொண்­டுள்­ளனர் என தோன்­று­கி­றது. ஆகவே நாங்­களும் நேர­டி­யாக சென்று பார்­வை­யிட்­டது உத­வி­யாக உள்­ளது. அடுத்த தடவை ஜனா­தி­பதி மற்றும் உயர் அதி­கா­ரி­க­ளுடன் பேச்­சு­வா­ர்த்தை நடத்தும் போது இவற்றை முன்­வைப்போம்.விடு­விப்போம் என அவர்கள் தெரி­வித்தால் அதற்­கான நிகழ்ச்சி நிரல் என்ன, செயற்­திட்டம் என்ன என்­பது குறித்து பேசி அதன் மூலம் விரை­வாக மக்கள் தமது நிலங்­களில் குடி­ய­மரும் வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுப்போம்.

மக்கள் மாற்றுக் காணி­களை எடுக்­கப்­போ­வ­தில்லை என்­பதை உறு­தி­யாக தெரி­வித்து வரு­கின்­றனர். ஆகவே அதே நிலைப்­பாட்டில் இருந்து அரச அதி­ப­ரு­ட­னான சந்­திப்பின் போதும் அரச பிர­தி­நி­தி­களின் சந்­திப்பின் போதும் தெரி­வித்­துள்ளோம். மாற்றுக் காணிகள் அல்­லாது சொந்த பிர­தே­சங்கள் கொடுக்­கப்­பட வேண்டும் என தெரி­வித்­துள்ளோம். இது ஒரு மெது­வான நகர்­வாக இருந்­தாலும் முதற்­கட்­ட­மாக அவை விடு­விக்­கப்­படும். இரா­ணு­வத்­துடன் இவை தொடர்பில் பேசி அர்த்தம் இல்லை. ஜனா­தி­ப­தி­யுடன் நேர­டி­யாக பேசி இந்த விட­யங்கள் கையா­ளப்­பட வேண்டும் . மேலும் காணிகள் விடு­விக்­கப்­படும் என்ற தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது ஆனால் திகதி காலம் சரி­யாக தெரி­விக்­க­வில்லை என அவர் குறிப்­பிட்டார்.

இதில் சிவ­சக்தி ஆனந்தன் எம்.பி தெரி­விக்­கையில்.  கேப்­பாப்­பு­லவு மக்­களின் காணி மீட்பு போராட்டம் 50 நாளாக தொடர்ந்து இடம்­பெற்று வரு­கின்­றது. இதன் போது மாற்றுக் காணிகள் மக்­க­ளுக்கு வழங்­கப்­படும் என முதல் கூட்­டத்தில் தெரி­விக்­கப்­பட்ட நிலையில் அதை மக்கள் ஏற்­று­கொள்ள மறுத்து போராடி வரு­கின்­றனர். மக்­களின் பூர்­வீக நிலங்கள் விடு­விக்­கப்­பட வேண்டும் என உறு­தி­யாக மக்கள் உள்­ளனர். இந்­நி­லையில் மக்­களும் நாமும் இந்த கிரா­மத்தை பார்­வை­யிட்டோம். அதன் அடிப்­ப­டையில் கேப்­பாப்­பு­லவு நந்­திக்­கடல் பகுதி இரா­ணு­வத்தின் பிர­தான முகாம் இருக்கும் கார­ணத்­தினால் அதை விட முடி­யாது என தெரி­வித்­த­தோடு ஏனைய பகு­தியை விட முடியும் என தெரி­வித்­துள்­ளனர். ஆகவே அரை­வாசி காணி விடு­விக்­கப்­பட முடியும் ஏனை­யவை விடு­விக்­கப்­பட முடி­யாது என்ற நிலைப்பாட்டில் இராணுவம் உள்ளது என்பதை எம்மால் இந்த கலந்துரையாடலின் போது அவதானிக்க முடிந்துள்ளது.
ஆகவே இந்த விவகாரம் தொடர்பில் வெறுமனே நாம் இராணுவ தரப்புடன் கலந்துரையாடி இந்த விடயத்திற்கு ஒரு தீர்வு காண முடியாது. ஆகவே அரச உயர் மட்டத்துடன் பேச்சுவாரத்தை நடத்துவதன் மூலம் மாத்திரமே ஒரு தீர்வு காண முடியும். உயர்மட்ட பேச்சின் மூலமே மக்களின் காணிகளை விடுவிக்க முடியும். ஆகவே நாமும் இந்த மக்களுடன் இணைந்து இந்த கிராமத்தை விடுவிக்கும் முழுமையான முயற்சிகளை எடுப்போம் என தெரிவித்தார்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-20#page-1

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு இப்படிச் சொல்லுங்கோ, அன்று இராணுவம் ஜனாதிபதிக்கு ஒரு வருட காலத்திற்கு மேலாக பதிலளிக்கவில்லை என்றீர்கள்.

மக்கள் பாவம்,

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுதலாக நிதானமாக பேசிப்பாருங்கள் ...காணி கிடைக்கும்.....இராணுவத்திற்கு இன்னும் பல வருட அவகாசம் தேவை.....எடுத்தமா கவுத்தமா என்றிருக்க கூடாது...:10_wink:

11 minutes ago, MEERA said:

இன்றைக்கு இப்படிச் சொல்லுங்கோ, அன்று இராணுவம் ஜனாதிபதிக்கு ஒரு வருட காலத்திற்கு மேலாக பதிலளிக்கவில்லை என்றீர்கள்.

மக்கள் பாவம்,

அவருக்குத்தான் அரசியல் தெரியும் ....மக்களுக்கு அரசியல் தெரியாது...

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, putthan said:

ஆறுதலாக நிதானமாக பேசிப்பாருங்கள் ...காணி கிடைக்கும்.....இராணுவத்திற்கு இன்னும் பல வருட அவகாசம் தேவை.....எடுத்தமா கவுத்தமா என்றிருக்க கூடாது...:10_wink:

என்றும் ஒரே மன நிலையில்  இருக்க போவதில்லை ஆகையால் இன்னும் கொஞ்ச காலம் போகலாம்  ஏற்கனவே விடுவிக்கவே முடியாது என்ற இடங்கள் எல்லாம் சிறுக சிறுக விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்  :104_point_left:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, முனிவர் ஜீ said:

என்றும் ஒரே மன நிலையில்  இருக்க போவதில்லை ஆகையால் இன்னும் கொஞ்ச காலம் போகலாம்  ஏற்கனவே விடுவிக்கவே முடியாது என்ற இடங்கள் எல்லாம் சிறுக சிறுக விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்  :104_point_left:

எதோ நல்லது நடந்தால் சரி.நீங்கள் கூறுவதில் உண்மை உண்டு நேரில் பார்த்தனான்.

அரச காணிகளில் பாரிய முகாங்கள் உண்டு அந்த முகாங்கள் எந்த காரணத்திற்காகவும் அகற்றப்படாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.