Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“கர்நாடக மக்களை புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்” - சத்யராஜ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
``கர்நாடக மக்களை புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்`` - சத்யராஜ்

தன்னுடைய வார்த்தைகள் கர்நாடக மக்களை புண்படுத்தி இருந்தால், அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக தமிழ் நாட்டின் திரை நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் சத்யராஜ் தெரிவித்திருக்கிறார்.

சத்யராஜ்படத்தின் காப்புரிமை facebook

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால், காவிரி நதிநீர் பிரச்சனையின்போது, நடிகர் சத்யராஜ் பேசியபோது சில வார்த்தைகள் கர்நாடக மக்களின் மனங்களை புண்படுத்தின என்பதால், அவர் மன்னிப்பு கேட்கும்வரை சத்யராஜூம் நடித்துள்ள பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று கர்நாடக அமைப்புகள் சில கூறிவந்தன.

இந்நிலையில், பகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளதால், சத்யராஜ் இந்த வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

ஆனால், தான் கர்நாடக மக்களுக்கு எதிரானவன் அல்ல என்று தெரிவித்திருக்கும் சத்யராஜ், அதற்கு எடுத்துக்காட்டாக தன்னிடம் உதவியாளராக 35 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்ற திரு.சேகர் அவர்களின் தாய்மொழி கன்னடம் என்று கூறியிருக்கிறார்.

பாகுபலி இரண்டாம் பாகம் திரைப்படத்தில் நடித்துள்ள அவர், அத்திரைப்படத்தின் சிறியதொரு பகுதிதான் என்றும், தன்னால் பல ஆயிரம் பேரின் உழைப்பும், பணமும் விரயமாவதை விரும்பவில்லை என்றும், இந்த திரைப்படத்தை வாங்கியுள்ள கர்நாடக விநியோகஸ்தர்களும், திரையங்கு உரிமையாளர்களும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கத்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்றும் சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், "தமிழீழ பிரச்சனை, காவிரி நதிநீர் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, தமிழக மக்களின் நலன் சார்ந்த அனைத்து நியாயமான பிரச்சனைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருப்பேன்" என்று சத்யராஜ் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு உறுதிபட தெரிவிப்பதால், எதிர்காலத்தில் சத்யராஜை வைத்து படம் எடுத்தால் பிரச்சனைகள் வரும் என்று எண்ணும் தயாரிப்பாளர்கள், தன்னை தங்களின் படங்களில் ஒப்பந்தம் செய்ய வேண்டாம், தன்னால் நஷ்டம் அடைய வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்வதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

"ஒரு நடிகனாக இருப்பதைவிட, இறப்பதைவிட, எந்தவிதமான மூட நம்பிக்கையும் இல்லாத ஒரு தமிழனாக இருப்பதும், இறப்பதும்தான் எனக்கு பெருமை, மகிழ்ச்சி" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால், காவிரி நதிநீர் பிரச்சனையின்போது, கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டனர்.

அதனை எதித்து நடைபெற்ற கூட்டத்தில், பல தமிழ் நடிகர்கள் ஆவேசமாக பேசினர். அப்போது நடிகர் சத்யராஜ் பேசிய சில வார்த்தைகள் கர்நாடக மக்களின் மனதை புண்படுத்தியதற்குதான் சத்தியராஜ் இப்போது வருத்தத்தை தெரிவித்திருக்கிறார்.

ஆனால், அப்போது அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நடிகர் சத்யராஜின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil/arts-and-culture-39667249

சத்யராஜ் பெரியமனுஷன்! கமல்ஹாசன் பாராட்டு!

 

சிக்கலான சூழலில் பகுத்தறிவுடன் நடந்து கொண்டதாக நடிகர் சத்யராஜை வாழ்த்தி கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

Kamal Haasan
 

2008-ம் ஆண்டில் நடந்த காவிரிப் பிரச்னை போராட்டத்தின்போது, வாட்டாள் நாகராஜ் மற்றும் கன்னட அமைப்புகளை நடிகர் சத்யராஜ் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இந்த நிலையில், 'சத்யராஜ் நடித்த திரைப்படங்களை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம்' என கன்னட அமைப்புகள் கூறியுள்ளன.

பாகுபலியின் இரண்டாம் பாகம், ஏப்ரல் 28-ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்த நிலையில், கர்நாடகாவில் அந்தப் படத்தை வெளியிட எதிர்ப்பு வலுத்துவந்தது. இந்த நிலையில், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு வாட்டாள் நாகராஜையும், கன்னடர்களைப் பற்றியும் தான் பேசியதற்கு, மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்து, நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

Congrats Mr. Sathyaraj for maintaining rationality in a troubled environement. Quoting VirumaaNdi மன்னிப்புக் கேக்கறவன் பெரியமனுசன். Bravo


இந்நிலையில், சத்யராஜ் மன்னிப்பு கேட்டதை பற்றி கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், “ஒரு சிக்கலான சூழலில் சத்யராஜ் பகுத்தறிவுடன் நடந்து கொண்டுள்ளார். விருமாண்டி பாணியில் சொல்ல வேண்டுமென்றால் ‘மன்னிப்புக் கேக்கறவன் பெரியமனுசன்’ ” என்று பாராட்டியுள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/87221-actor-kamal-haasan-tweet-about-sathyaraj.html

கவனமாக பேச வேண்டும்! சத்யராஜை எச்சரிக்கும் வாட்டாள் நாகராஜ்

 
 

நடிகர் சத்யராஜ் இனிமேல் கவனமாக பேச வேண்டும் என்று கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். 

_12508.jpg


2008-ம் ஆண்டு காவிரி பிரச்னை தொடர்பாகவும் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதற்கு எதிராகவும் நடிகர் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது நடிகர் சத்யராஜ், கன்னடர்களை அவமானப்படுத்தும்படி பேசினார் என்று தற்போது கன்னட அமைப்புகள் போர்கொடி தூக்கியுள்ளனர்.

 

_12102.jpg

அதனால் சத்யராஜ் நடித்த பாகுபலி-2 படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம். பாகுபலி-2 வெளியாகும் ஏப்ரல் 28-ம் தேதி கடை அடைப்பு நடத்தப்படும் என்று கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்திருந்தார். மேலும் சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார். இதனையடுத்து, 'என்னுடைய பேச்சு கன்னடர்களை புண்படுத்தியிருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று சத்யராஜ் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கன்னட அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வாட்டாள் நாகராஜ், 'சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது. இனிமேல் சத்யராஜ் கவனமாக பேச வேண்டும்' என்று தெரிவித்தார்.

http://www.vikatan.com/news/tamilnadu/87230-sathyaraj-should-be-careful-during-his-speech-says-vattal-nagaraj.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 21.4.2017 at 8:25 PM, பிழம்பு said:
``கர்நாடக மக்களை புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்`` - சத்யராஜ்

தன்னுடைய வார்த்தைகள் கர்நாடக மக்களை புண்படுத்தி இருந்தால், அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக தமிழ் நாட்டின் திரை நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் சத்யராஜ் தெரிவித்திருக்கிறார்.

சத்யராஜ்படத்தின் காப்புரிமை facebook
 

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால், காவிரி நதிநீர் பிரச்சனையின்போது, நடிகர் சத்யராஜ் பேசியபோது சில வார்த்தைகள் கர்நாடக மக்களின் மனங்களை புண்படுத்தின என்பதால், அவர் மன்னிப்பு கேட்கும்வரை சத்யராஜூம் நடித்துள்ள பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று கர்நாடக அமைப்புகள் சில கூறிவந்தன.

இந்நிலையில், பகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளதால், சத்யராஜ் இந்த வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

 

ஆனால், தான் கர்நாடக மக்களுக்கு எதிரானவன் அல்ல என்று தெரிவித்திருக்கும் சத்யராஜ், அதற்கு எடுத்துக்காட்டாக தன்னிடம் உதவியாளராக 35 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்ற திரு.சேகர் அவர்களின் தாய்மொழி கன்னடம் என்று கூறியிருக்கிறார்.

பாகுபலி இரண்டாம் பாகம் திரைப்படத்தில் நடித்துள்ள அவர், அத்திரைப்படத்தின் சிறியதொரு பகுதிதான் என்றும், தன்னால் பல ஆயிரம் பேரின் உழைப்பும், பணமும் விரயமாவதை விரும்பவில்லை என்றும், இந்த திரைப்படத்தை வாங்கியுள்ள கர்நாடக விநியோகஸ்தர்களும், திரையங்கு உரிமையாளர்களும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கத்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்றும் சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், "தமிழீழ பிரச்சனை, காவிரி நதிநீர் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, தமிழக மக்களின் நலன் சார்ந்த அனைத்து நியாயமான பிரச்சனைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருப்பேன்" என்று சத்யராஜ் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு உறுதிபட தெரிவிப்பதால், எதிர்காலத்தில் சத்யராஜை வைத்து படம் எடுத்தால் பிரச்சனைகள் வரும் என்று எண்ணும் தயாரிப்பாளர்கள், தன்னை தங்களின் படங்களில் ஒப்பந்தம் செய்ய வேண்டாம், தன்னால் நஷ்டம் அடைய வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்வதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

"ஒரு நடிகனாக இருப்பதைவிட, இறப்பதைவிட, எந்தவிதமான மூட நம்பிக்கையும் இல்லாத ஒரு தமிழனாக இருப்பதும், இறப்பதும்தான் எனக்கு பெருமை, மகிழ்ச்சி" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால், காவிரி நதிநீர் பிரச்சனையின்போது, கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டனர்.

அதனை எதித்து நடைபெற்ற கூட்டத்தில், பல தமிழ் நடிகர்கள் ஆவேசமாக பேசினர். அப்போது நடிகர் சத்யராஜ் பேசிய சில வார்த்தைகள் கர்நாடக மக்களின் மனதை புண்படுத்தியதற்குதான் சத்தியராஜ் இப்போது வருத்தத்தை தெரிவித்திருக்கிறார்.

ஆனால், அப்போது அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நடிகர் சத்யராஜின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil/arts-and-culture-39667249

 

15 hours ago, நவீனன் said:

கவனமாக பேச வேண்டும்! சத்யராஜை எச்சரிக்கும் வாட்டாள் நாகராஜ்

 

தமிழன் கன்னடன் என்று பிரித்து பார்க்கையில்....:cool:

இங்கு யார் என்ற பிரச்சனையே இல்லையே!

தமிழன் சத்தியராஜ் நடித்த பாகுபலிக்கு தடை விதித்தால் கன்னடன் ரஜினி நடிச்ச எந்திரன் -2 படத்தை தமிழகத்தில் திரையிட விடமாட்டோம் என்று தமிழக உறவுகள் சொன்னால்??????
 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

 

தமிழன் கன்னடன் என்று பிரித்து பார்க்கையில்....:cool:

இங்கு யார் என்ற பிரச்சனையே இல்லையே!

தமிழன் சத்தியராஜ் நடித்த பாகுபலிக்கு தடை விதித்தால் கன்னடன் ரஜினி நடிச்ச எந்திரன் -2 படத்தை தமிழகத்தில் திரையிட விடமாட்டோம் என்று தமிழக உறவுகள் சொன்னால்??????
 

சொல்லிப்புட்டு .........போக  வேண்டியதுதான்.
பார்த்துதான் ஆவேன் .. பால் ஊத்தி அபிஷேகம் பண்ணியே தீருவேன் 
என்று முதல் வரிசையில் போய்  உக்கார கோடி கணக்கில் தமிழர் உண்டு.

அவன் கர்னடன் மானஸ்தன் ... 
சொன்னா செய்வான். 

நாமதான் தமிழன் ஆச்சே.?? 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Maruthankerny said:

சொல்லிப்புட்டு .........போக  வேண்டியதுதான்.
பார்த்துதான் ஆவேன் .. பால் ஊத்தி அபிஷேகம் பண்ணியே தீருவேன் 
என்று முதல் வரிசையில் போய்  உக்கார கோடி கணக்கில் தமிழர் உண்டு.

அவன் கர்னடன் மானஸ்தன் ... 
சொன்னா செய்வான். 

நாமதான் தமிழன் ஆச்சே.?? 

தோழர் நீங்க வேற நேரம் காலம் தெரியாம ..

 

image.jpg

வருங்கால கிந்திய ஜனாதிபதி முருகேசன் வாழ்க!!  வருங்கால கிந்திய ஜனாதிபதி முருகேசன் வாழ்க !!


டிஸ்கி:

சூப்பர் ஸ்ரார் அவர்களின் மூதாதையர் கிருட்ணகிரி பக்கம் உள்ள கொட்டாம்பட்டியில் வசித்துள்ளார்கள் அவர்கள் காலம் சென்ற முருகேசன் பரம்பரை என்பதை நாசா அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது ..!!  :cool:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மே17

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நன்றி மே17

திருமுருகன் காந்தி! நல்ல கருத்துக்களை சொல்லியிருக்கின்றீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.