Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜி.ஜி.பொன்னம்பலத்தின் சைக்கிளையா ஓடுகிறார்கள் - கூட்டாட்சியை எதிர்ப்பபவர்களைப் பார்த்து சம்மந்தன் கேள்வி

Featured Replies

ஜி.ஜி.பொன்னம்பலத்தின் சைக்கிளையா ஓடுகிறார்கள் - கூட்டாட்சியை எதிர்ப்பபவர்களைப் பார்த்து சம்மந்தன் கேள்வி
ஜி.ஜி.பொன்னம்பலத்தின் சைக்கிளையா ஓடுகிறார்கள் - கூட்டாட்சியை எதிர்ப்பபவர்களைப் பார்த்து சம்மந்தன் கேள்வி
“கூட்­டாட்சி (சமஷ்டி) கோரிக்­கையை செல்வா  முன்­வைத்தபோது, அதனை ஜி.ஜி.பொன்­னம்­ப­லம் எதிர்த்­தார். தொடர்ச்­சி­யாக பொன்­னம்­ப­லம் எதிர்த்­துக்கொண்­டி­ருந்­தார். நாம் தந்தை செல்­வா­வின் தடத்­தில் தற்­போது பய­ணித்­துக் கொண்­டி­ருக்­கும் நிலை­யில், அத­னை­யும் எதிர்ப் பவர்­கள் இருக்­கின்­றார்­கள். இப்­ப­டிப்­பட்­ட­வர்­கள் அம­ரர் பொன்­னம்­ப­லத்­தின் வாரி­சு­களா? பொன்­னம்­ப­லத்தின் சைக்­கிள்­க­ளில் ஓடிக்­கொண்டிருப்­ப­வர்­களா ?” இவ்­வாறு கேள்வி எழுப்­பி­யுள்­ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். 
 
மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற தந்தை செல்வா நினைவுப் பேருரையில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
 
பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வா ஒப்பந்தம் இவற்றை ஜீ.ஜீ.பொன்னம்பலம் எதிர்த்தார். தந்தை செல்வாவின் கூட்டாட்சிக் கோரிக்கையையும் எதிர்த்தார். இந்த எதிர்ப்புக்களினால் தன்னுடைய இலக்கை தந்தை செல்வாவால் அடைய முடியாமல் இருந்தது. இவர்கள் இருவரும் தமிழ்த் தலைவர்கள். ஒரு தலைவரின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் தொடர்ச்சியாக பொன்னம்பலம் எதிர்த்துக் கொண்டிருந்தார். 
 
அப்போதிருந்த தந்தை செல்வாவின் தடத்தில் தற்போது பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதனையும் எதிர்த்து செயற்படுகின்றவர்கள் இருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் அமரர் பொன்னம்பலத்தின் வாரிசுகளா? பொன்னம்பலத்தின் சைக்கிள்களில் ஓடிக்கொண்டிருப்பவர்களா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் கொடுக்க வேண்டிது மிகவும் முக்கியமாகும்.
 
பண்டா - செல்வா உடன்படிக்கையின் மூலம் நிலத்தைப் பாதுகாக்கும் பொருட்டு பிராந்தியங்கள் இணைக்கப்பட்டு பிராந்திய சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டு மக்கள் வாழ வேண்டும் என்று சொல்லப்பட்டது.
 
கூட்டாட்சிக் கோரிக்கையை முன் வைத்து நாட்டில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும், போதிய சுயாட்சி வடக்கு - கிழக்கில் செயற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தந்தை செல்வா முன் வைத்தார். மாவட்ட சபைகளை உருவாக்கி காணி அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றி வட - கிழக்கை தமிழ் பேசும் மக்களுடைய பிராந்தியமாக செயற்படுத்த வேண்டும் எனவும் அவர் கொண்டிருந்தார். இவற்றையும் அமரர் பொன்னம்பலம் எதிர்த்தார். 
 
தற்போதும் பொன்னம்பலத்தைப் பின்பற்றி அரசியலில் ஈடுபடுகின்றவர்கள் ஒவ்வொரு விடயத்தையும் எதிர்த்துக் கொண்டு வருகின்றார்கள். நாங்கள் பேச்சுக்களில் ஈடுபடுவதை இவ்வாறானவர்கள் விரும்பவில்லை - என்றார். 

http://onlineuthayan.com/news/25927

12 hours ago, நவீனன் said:

நாம் தந்தை செல்­வா­வின் தடத்­தில் தற்­போது பய­ணித்­துக் கொண்­டி­ருக்­கும் நிலை­யில், அத­னை­யும் எதிர்ப் பவர்­கள் இருக்­கின்­றார்­கள்.

சம்பந்தனுக்கு தந்தை செல்வா என்றால் யார் என்று தெரியாது.
தந்தை செல்வா என்றால் ஹிந்திய பயங்கரவாதிகள் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, நவீனன் said:

 

ஜி.ஜி.பொன்னம்பலத்தின் சைக்கிளையா ஓடுகிறார்கள் - கூட்டாட்சியை எதிர்ப்பபவர்களைப் பார்த்து சம்மந்தன் கேள்வி
ஜி.ஜி.பொன்னம்பலத்தின் சைக்கிளையா ஓடுகிறார்கள் - கூட்டாட்சியை எதிர்ப்பபவர்களைப் பார்த்து சம்மந்தன் கேள்வி

கனக்க வேண்டாம் சம்பந்தம்!
தந்தை செல்வாவும் ஜீ.ஜீ பொன்னரும் போய் கனகாலமாச்சு.....

அதுக்கு  பிறகு உங்கடை கும்பல் வந்து இண்டுவரைக்கும் என்னத்தை வெட்டி புடுங்கியிருக்கு எண்டதுதான் இண்டையான் கேள்வி????
அப்ப வண்டிக்கு கீழை கட்டின வேட்டியை இப்ப வண்டிக்கு மேலை கட்டிக்கொண்டு திரியுறியள் அவ்வளவுதான் :cool:

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை செல்வா தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து தமிழ்க்காங்கிரஸ் உட்பட அனைத்து தமிழ்க்கட்சிகளையும் இணைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கினார்.1977 ஆம் ஆண்டுத்தேர்தலில் தமிழீழக் கோரிக்கைய முன்வைத்து முதன் முதல் பாராளுமன்றம் சென்றவர் தான் இந்தச் சம்பந்தன்.இப்ப பிளவுபடாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி கேட்கிறார்.ஆக தந்தை செல்வாவின் இலட்சிய்தைக்காலில் போட்டு மிதித்து விட்டு தந்தை செல்வாவின் வீட்டுக்குள் படுத்துக்கிடப்பது சம்பந்தன்தான்.இதைத்தான் சாத்தான் வேதம் ஓடுகின்றது என்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.