Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூளப் போகுது உலகப் போர்... சிவன் மலை ஆண்டவன் உத்தரவால் பரபரப்பு!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூளப் போகுது உலகப் போர்... சிவன் மலை ஆண்டவன் உத்தரவால் பரபரப்பு!!

திருப்பூர் : திருப்பூரை அடுத்த சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் உலக உருண்டை வைத்து பூஜை செய்யப்படுவதால் உலகப் போர் மூளலாம் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ளது பழமைவாய்ந்த சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில். எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக ஆண்டவர் உத்தரவு பெட்டி இங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பெட்டியில் பக்தர் கனவில் தோன்றி ஆண்டவர் குறிப்பிடும் பொருள் வைத்து பூஜிக்கப்படும். உலகநிகழ்வை குறிப்பால் உணர்த்துவதற்காக ஆண்டவன் இடும் கட்டளையே இந்த பொருட்களை வைத்து வழிபடுவதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.

god2.jpg

ஐதீகம்

பக்தரின் கனவில் தோன்றும் பொருள் குறித்து குருக்கள்கள், சாமி சன்னிதியில் வைத்து குறி கேட்டு சுவாமி உத்தரவு அளிக்கும் பட்சத்தில் அந்தப் பொருள் கண்ணாடி பேழையில் வைக்கப்படும். அப்படி வைக்கப்பட்ட அந்த பொருள் பல்வேறு வடிவங்களில் ஆக்கமும், அழிவும் நிகழ்த்தியுள்ளதாக பக்தர்களின் ஐதீகம்.ஆண்டவன் உத்தரவு பெட்டியில், இதற்கு முன்பு தங்கம், ரூபாய் நோட்டு, ஆற்று மணல், தண்ணீர், உப்பு, ஏர்கலப்பை, துப்பாக்கி, இரும்பு சங்கிலி உள்பட 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவுப் பெட்டியில் வைக்கும் பொருள்களுக்கு ஏற்ப தமிழக அரசியல் நடவடிக்கைகளும் அரங்கேறி வருவதால் ஒவ்வொரு முறையும் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள் அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது.

வில்வ இலையால் வந்த திருப்பம்

ஏப்ரல் மாத தொடக்கத்தில் வில்வ இலையுடன் 108 ருத்ராட்சம் வைத்து கட்டி ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது, ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ருத்ராட்சம் வைத்ததால் பல்வேறு அரசியல் மாற்றங்கள் வரும் என சொல்லப்பட்டது அதேபோலவே அதிமுக பல திருப்பங்களை சந்தித்ததை நினைவுகூர்கின்றனர்.

இரும்பு சங்கிலியால் சசி சிறைவாசம்

god1.jpg

ஆண்டவர் உத்தரவு பெட்டி

அரிசி வைத்த போது அரிசி விலை கடுமையாக உயர்ந்ததாகவும், தண்ணீர் வைத்தபோது சுனாமி வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கிலி வைத்ததால் சசிகலா உள்ளிட்டோர் சிறைக்கு சென்றதாகவும் பல்வேறு சம்பவங்களை பக்தர்களும் பொதுமக்களும் அதிர்ச்சியோடு பார்க்கின்றனர்.

உத்தரவு பெட்டியில் உலக உருண்டை

கடந்த ஏப்ரல் 21ந்தேதி வலம்புரி சங்கு வைத்து வழிபட்ட நிலையில் நேற்று ஆண்டவர் உத்தரவு பெட்டியில் உலக உருண்டை வைக்கப்பட்டுள்ளது. இதனால் உலகத்திற்கு பேரழிவு ஏற்படுவதற்கான அபாயம் ஏற்படுமாம்.இதனால் உள்நாட்டு சண்டை, அண்டைநாடுகளிடையே போர் மூலம் உலகின் பல பகுதிகள் அழியும் சூழல் உருவாகும் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

நன்றி :தட்ஸ்தமிழ்

டிஸ்கி :
நம்பிக்கை இருக்கோ இல்லையோ !! ஆனால் உலக அளவில் பலரின்ட அலப்பறைகளை காணும் போது பூமி பாரம் குறைவது உறுதி போல கிடக்கு !! :cool:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உலகப்போர் வந்தால் மகிழ்ச்சிதான்.. அப்போதுதான் புதிய நாடுகள் பிறக்கும்.. tw_glasses:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகிற்கும் எனக்கும் நியாயமானதை.....

கதையோடு கதையாய் சொல்லியும் கிடைக்கவில்லை..
காதோரம் சொல்லியும் கிடைக்கவில்லை...
கத்திச் சொல்லியும் கிடைக்கவில்லை...
கல்லெறிந்தும் கிடைக்கவில்லை...
கட்டுப்பாடுடன் இருந்தும் கிடக்கவில்லை...
இருந்தும்....
உன்னை அழிக்க..
நான் சிந்திக்கவில்லை.

உலகமே நீ அழிந்து போ..
அப்போதாவது...
எனக்கு..
விடியல்..
வரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, இசைக்கலைஞன் said:

உலகப்போர் வந்தால் மகிழ்ச்சிதான்.. அப்போதுதான் புதிய நாடுகள் பிறக்கும்.. tw_glasses:

அட்ரா..... சக்கை.....  
அம்மன்,  கோயில்.... புக்கை. எண்டானாம். :grin: :D: 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

உலகிற்கும் எனக்கும் நியாயமானதை.....

கதையோடு கதையாய் சொல்லியும் கிடைக்கவில்லை..
காதோரம் சொல்லியும் கிடைக்கவில்லை...
கத்திச் சொல்லியும் கிடைக்கவில்லை...
கல்லெறிந்தும் கிடைக்கவில்லை...
கட்டுப்பாடுடன் இருந்தும் கிடக்கவில்லை...
இருந்தும்....
உன்னை அழிக்க..
நான் சிந்திக்கவில்லை.

உலகமே நீ அழிந்து போ..
அப்போதாவது...
எனக்கு..
விடியல்..
வரட்டும்.

 

உண்மையின்... வலியான எழுத்து.
எந்த.... இடத்தில், அவனின்... நியாயம் மறுக்கப் படுகின்றதோ...
அந்த இடத்தில், ஒரு... கண் கலங்கும். 
tw_cold_sweat:

  • கருத்துக்கள உறவுகள்

கெதியா ஆரம்பியுங்கோ நானும் சண்டையை ப்பார்த்து கன காலம் ஆச்சு 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.