Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சரண்

Featured Replies

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சரண்

 

 

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நிதிமன்றில் சரணடைந்தார்.

gnanasara_thero_court.jpg

http://www.virakesari.lk/article/21096

  • தொடங்கியவர்

நீதிமன்றில் சரணடைந்தார் ஞானசார தேரர்!!

 
 
நீதிமன்றில் சரணடைந்தார் ஞானசார தேரர்!!
 

கடந்த சில வாரங்களாக தலைமறைவாகியிருந்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கொழும்பு கோட்டை நீதவான் மன்றத்தில் இன்று காலை அவர் சரணடைந்தார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் முன்னிலையாகாததால் ஞானசார தேரருக்கு எதிராக கோட்டை நீதவான் மன்றம் 2 பிடியாணைகளைப் பிறப்பித்திருந்தது.

அதையடுத்து 4 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு கடந்த ஒருமாத காலமாக தேடப்பட்டுவந்த போதிலும் பொலிஸாரினால் ஞானசார தேரரை கைது செய்ய முடியாமற்போய்விட்டது.

இன்று காலை ஞானசார தேரர் தனது சட்டத்தரணியுடன் கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

http://uthayandaily.com/story/7499.html

  • தொடங்கியவர்

ஞானசார தேரருக்குப் பிணை: பிடியாணை உத்தரவுகளும் ரத்து!!

 
ஞானசார தேரருக்குப் பிணை: பிடியாணை உத்தரவுகளும் ரத்து!!
  •  

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞாசார தேரரை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய ஞானசார தேரருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவும் நீதிமன்றத்தினால் இன்று இரத்து செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகத் தவறியதால் அவருக்கு எதிராக 2 பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து 4 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு ஞானசார தேரரை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இறுதியில் பொதுபல சேனா அமைப்பின் ஆதரவாளர்கள் 14 பேர் மாத்திரமே வெவ்வேறு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட நிலையில் ஞானசார தேரர் கைது செய்யப்படவில்லை.

கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தனது சட்டத்தரணியுடன் ஞானசார தேரர் சரணடைந்தார்.

அவரை பிணையில் விடுதலை செய்வதற்கான அனுமதியை நீதிமன்றம் இன்று விடுத்துள்ளது. வழக்கு மீதான அடுத்த விசாரணைகளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

http://uthayandaily.com/story/7543.html

உலகுக்கு முன்மாதிரியாக திகழும் ஸ்ரீலங்கா நீதித்துறை!

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நவீனன் said:

இறுதியில் பொதுபல சேனா அமைப்பின் ஆதரவாளர்கள் 14 பேர் மாத்திரமே வெவ்வேறு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட நிலையில் ஞானசார தேரர் கைது செய்யப்படவில்லை.

எங்கயும் தல தப்பிடும் வால்கள் தான் மாட்டுப்பட்டு கம்பி எண்ணுரவையள்

அஸ்கிரி பீடத்தின் கடுமையான அறிக்கை குறித்து அரசாங்கம் ஆராய்கின்றது – சுகாதார அமைச்சர்

 

கண்டி அஸ்கிரி பீடத்தினால் வெளியிடப்பட்டுள்ள கடுமையான அறிக்கை குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

பௌத்த பிக்குகளை இழிவுபடுத்தக் கூடாது எனவும், ஞானசார தேரரின் நிலைப்பாட்டை மதிக்க வேண்டுமெனவும், சிங்கள பௌத்தர்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டு ரீதியாக சதித்திட்டம் மேற்கொள்ளப்படுவதாகவும் அஸ்கிரி பீடாதிபதி வராகொட ஞானரதன தேரர் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நாட்டை பாதுகாப்பதற்கே பௌத்த பிக்குகள் தொடர்ந்தும் போராடி வருகின்றார்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அறிக்கையை முழுமையாக ஆராய்ந்ததன் பின்னர் அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்படும் என அவர் குறிப்பட்டுள்ளார்.

 

http://globaltamilnews.net/archives/30557

 

  • தொடங்கியவர்

பிணையில் விடுவிக்கப்பட்ட ஞானசார தேரர் மீண்டும் கைது

ganasara-thero.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர்   காவல்துறை  புலானாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகடை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் அவர் மீளவும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்  குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள தேரரை புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் காவல்துறையினர்  குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக இன்று காலை சரணடைந்தநிலையில் தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/30553

மீண்டும் பிணையில் விடுவிக்கப்பட்டார் ஞானசார தேரர்..!

 

 

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் இன்று இரண்டவாது தடவையாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ganasara.jpg

இரு வழக்குகளுக்காக ஞானசார தேரர் இன்று முற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், முன்பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, மேலும் ஒரு முறைப்பாட்டுக்கு அமைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் ஊடாக அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரரை குற்றத்தடுப்புப் பிரிவினர் புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

இதையடுத்து, புதுக்கடை நீதிவான் நீதிமன்றம்; அவரை பிணையில் விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/21107

  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸ் தன்ட கடமையை செய்யுதாம்....கைது
நீதிமன்றம் தன்ட கடமையை செய்யுதாம்....விடுதலை.

அரசும் தன்ட கடமையை செய்யுதாம்...இன ஐக்கியத்தை கடைபிடிக்குதாம்

  • தொடங்கியவர்
நீதிமன்றத்தில் தேரர்…
 

image_e94c0360fe.jpg

நீண்ட நாட்களாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (21) ஆஜரான போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

(படப்பிடிப்பு: நிஷால் பதுகே)

image_c19f79492e.jpgimage_c19f79492e.jpgimage_82d1e91f44.jpgimage_f16f5d3a76.jpgimage_2c7ed574a3.jpg

  •  

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/நீதிமன்றத்தில்-தேரர்/46-199121

  • தொடங்கியவர்

மூன்று நீதி­மன்­றங்­க­ளாலும் ஞான­சார தேர­ருக்கு பிணை

p16-f125927583e1a2de0e144d1c6d2a25f277c0711e.jpg

 

கைதானவருக்கு பிணை வழங்குவதை எதிர்க்காத பொலிஸார் 
(எம்.எப்.எம்.பஸீர்)

பொது­பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நேற்று மூன்று நீதி­மன்­றங்­க­ளி னால் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ளார். இவ­ருக்கு எதி­ராக கோட்டை நீதிவான் நீதி­மன்­றினால் விடுக்­கப்­பட்ட பிடி­யாணை, அவர் அங்கு சர­ண­டைந்ததை தொடர்ந்து மீளப்­பெ­றப்­பட்டு பிணை வழங்­கப்­பட்­டது.  

அத்­துடன் திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரி­வினால் புதுக்­க­டையில் உள்ள கொழும்பு பிர­தான நீதி வான் நீதி­மன்றம், 4 ஆம் இலக்க மேல­திக நீதிவான் நீதி ­மன்றம் ஆகி­ய­வற்றில் தாக்கல் செய்­யப்­பட்ட

 வழக்­குகள் தொடர்பில் ஞான­சார தேரர் கைது செய்­யப்­பட்டு ஆஜர்­செய்­யப்­பட்ட நிலையில் அந்த நீதி­மன்­றங்­க­ளாலும் அவர் பிணையில் செல்ல அனு­ம­திக்­கப்­பட்டார்.

கோட்டை நீதி­மன்றில் சர­ண­டைந்த ஞான­சாரர்

முஸ்­லிம்­களின் புனித வேத நூலான அல் குர்­ஆனை அவ­ம­தித்து கருத்து வெளி­யிட்­டமை, ஜாதிக பல சேனாவின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பினுள் அத்து மீறி கலகம் விளை­வித்­தமை தொடர்பில் கோட்டை நீதி­மன்றில் இடம்­பெற்று வரும் வழக்கில் ஆஜ­ரா­காத பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை உட­ன­டி­யாக கைது செய்து மன்றில் ஆஜர்­செய்­யு­மாறு கோட்டை நீதி­மன்றம் கடந்த 15 ஆம் திகதி உத்­த­ரவு பிறப்­பித்­தது. 770/14, 758/14 ஆகிய வழக்­கெண்­களைக் கொண்ட இரு வழக்­குகள் தொடர்­பி­லேயே கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன இந்த உத்­த­ரவைப் பிறப்­பித்தார். அதன்­படி ஞான­சார தேரரைக் கைது செய்ய இரு வழக்­குகள் தொடர்­பிலும் தலா ஒவ்­வொரு பிடி­யாணை வீதம் இரு பிடி­யா­ணைகள் பிறப்­பிக்­கப்­பட்­டன.

2014.04.09 ஆம் திகதி கொம்­பனி வீதி நிப்பொன் ஹோட்­டலில் நடைப் பெற்ற ஜாதிக பல சேனாவின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பினுள் அத்­து­மீறி, அதனை குழப்­பி­யமை, திட்­ட­மிட்ட அத்­து­மீறல் மற்றும் தாக்­குதல் உள்­ளிட்ட 8 குற்­றச்­சாட்­டுக்கள் ஞான­சார தேர­ருக்கும் மேலும் 6 சந்­தே­க­ந­பர்­க­ளுக்கும் எதி­ராக சுமத்­தப்­பட்­டுள்­ளது. இதனை விட 2014.04.12 அன்று கொம்­பனி வீதி பொலிஸ் நிலை­யத்­துக்கு முன்­பாக ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இஸ்­லாத்­தையும் குர் ஆனையும் அவ­ம­திக்கும் வித­மா­கவும் நிந்­திக்கும் வித­மா­கவும் கருத்­துக்­களை வெளி­யிட்­டமை தொடர்பில் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக மட்டும் பிறி­தொரு வழக்கும் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

 இந்த இரு வழக்­கு­க­ளிலும் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்ட நிலையில், நேற்று காலை 10.18 மணிக்கு கல­கொட அத்தே ஞான­சார தேரர் கோட்டை நீதிவான் நீதி­மன்றில் சர­ண­டைந்தார். கல­கொட அத்தே ஞான­சார தேரர் அங்கு சர­ண­டையும் போது சுமார் நூற்­றுக்கும் அதி­க­மான தேரர்கள் நீதி­மன்ற வளா­கத்தில் ஒன்று கூடி­யி­ருந்­தனர்.

 இந் நிலையில் சட்­டத்­த­ரணி சுதர்­ஷனி குண­ரத்­னவின் இடை­யீட்டு மனு­வுக்கு அமைய ஞான­சார தேரரின் விவ­கா­ரத்தை கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொண்டார்.

இதன்­போது ஞான­சார தேரர் சார்பில் மன்றில் முன்­னி­லை­யான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி டிரந்த வல­லி­யத்த, உயிர் அச்­சு­றுத்தல் கார­ண­மாக ஞான­சார தேரர் மன்றில் ஆஜ­ரா­க­வில்லை எனவும் உரிய தவ­ணையில் ஆஜ­ரா­காமை தொடர்பில் பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள பிடி­யா­ணையை மீளப் பெறு­மாறும் நீதி­மன்றைக் கோரினார்.

இந்த நிலையில் இரு வழக்கு தொடர்­பி­லான முன்­னைய ஆவ­ணங்­களை பரி­சீ­லனை செய்த கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன, ஒரு வழக்கில் இது­வரை ஞான­சார தேரர் தவ­றா­னது மன்றில் ஆஜ­ரா­கி­யுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டினார். மற்­றைய வழக்கில் ஒரு தவ­ணை­யி­லேயே மன்றில் ஆஜ­ராக தவ­றி­யுள்­ள­தா­கவும் அந்த வழக்கில் மறு­நாளே அவர் ஆஜ­ராகி ஆஜ­ரா­கா­மைக்­கான கார­ணத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார். இந்த நிலை­மையை அவ­தா­னத்தில் கொண்டு குறித்த இரு வழக்­கு­க­ளிலும் ஞான­சார தேர­ருக்கு ஏற்­க­னவே வழங்­கப்­பட்­டி­ருந்த பிணை நிபந்­த­னை­களின் அடிப்­ப­டை­யி­லேயே செல்ல நீதிவான் லங்கா ஜய­ரத்ன அனு­ம­தி­ய­ளித்தார். அத்­துடன் அவ்­விரு வழக்­கு­க­ளிலும் விதிக்­கப்­பட்ட பிடி­யா­ணையை மீளப்­பெற்ற நீதிவான் வழக்கின் தவ­ணை­களில் தவ­றாது ஆஜ­ராக வேண்டும் ஞான­சார தேர­ருக்கு எச்­ச­ரிக்கை விடுத்து வழக்கை எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்தார்.

ஓ.சி.பி.டி. யில் முன்­னி­லை­யான ஞான­சார தேரர்:

 கோட்டை நீதி­மன்றில் பிணை பெற்ற பின்னர் ஞான­சார தேரர் நேராக புறக்­கோட்டை மிஹிந்து மாவத்­தையில் உள்ள ஓ.சி.பி.டி. எனப்­படும் திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரி­வுக்கு வாக்கு மூலம் அளிக்க சென்றார். இதன்­போது அங்கு ஞான­சார தேரரை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­திய பொலிஸார் அவரை இரு வழக்­குகள் தொடர்பில் கைது­செய்­தனர். 73854, 73465 ஆகிய இலக்­கங்­களைக் கொண்ட புதுக்­கடை 4 ஆம் இலக்க நீதிவான் நீதி­மன்றம் மற்றும் கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றம் ஆகி­ய­வற்றில் உள்ள வழக்­குகள் தொடர்­பி­லேயே அவர் இவ்­வாறு கைது செய்­யப்­பட்டார்.

 குற்றம் தொடர்­பி­லான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்­டத்­த­ரணி கமல் சில்­வாவின் கீழ் செயற்­பட்ட திட்­ட­மிட்ட குற்­றங்கள் தொடர்­பி­லான பொலிஸ் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் பிரி­யந்த லிய­னகே, பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஜனக குமார ஆகியோர் அடங்­கிய குழு­வினர் ஞான­சார தேரரைக் கைது­செய்­தனர்.

 நீதி­மன்றில் ஆஜர்

 கைது செய்­யப்­பட்ட ஞான­சார தேரர் பொலிஸார் ஊடாக புதுக் கடையில் அமைந்­துள்ள நீதி­மன்ற வளா­கத்­துக்கு அழைத்து வரப்­பட்டார். இதன்­போதும் பெரு­ம­ள­வான பெளத்த தேரர்கள் நீதி­மன்ற வளா­கத்தில் ஒன்று கூடி­னர்இ

மேல­திக நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்

 இவ்­வாறு நீதி­மன்­றுக்கு அழைத்­து­வ­ரப்­பட்ட கல­கொட அத்தே ஞான­சாரர் கொழும்பு மேல­திக நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகல முன்­னி­லையில் ஆஜர்­செய்­யப்­பட்டார். முன்­ன­தாக ஐ.சி.சி.பி.ஆர். எனப்­படும் சர்­வ­தேச சிவில், அர­சியல் இணக்­கப்­பட்டு சட்­டத்தின் விதி விதா­னக்­களின் பிர­காரம் இர­க­சிய, பாது­காக்­கப்­பட்ட பீ அறிக்கை ஒன்­றூ­டாக இவ்­வ­ழக்கில் அறிக்கை சமர்­பித்­தி­ருந்த பொலிஸார் நேற்று அந்த குற்­றச்­சாட்­டுக்­களை இடை­யீட்டு மனு­வொன்­றி­னூ­டாக தாக்கல் செய்த மேல­திக அறிக்கை ஊடாக மாற்­றி­ய­மைத்­தனர். அதன்­படி நேற்று பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரின் கட­மைக்கு இடை­யூறு விளை­வித்து அச்­சு­றுத்­தி­யமை தொடர்பில் மட்டும் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக இலங்கை தண்­டனை சட்டக் கோவையின் 140,183,186,344 ஆகிய அத்­தி­யா­யங்­களின் கீழ் குற்றச் சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­வ­தாக நீதி­மன்றில் முன்­னி­லை­யான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா நீதி­வா­னுக்கு அறி­வித்தார்.

இத­னை­ய­டுத்து நீதி­மன்றை விளித்த மேல­திக நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகல, ஞான­சார தேர­ருக்கு எதி­ராக முதலில் தாக்கல் செய்­யப்­பட்ட சிவில், அர­சியல் சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழான குற்­றச்­சாட்­டுக்­களை பொலிஸார் விலக்­கிக்­கொண்டு தற்­போது தண்­டனை சட்டக் கோவையின் கீழ் சில குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­துள்­ளனர். பிணையை மறுக்க பிணைச் சட்­டத்தின் 14 ஆவது அத்­தி­யா­யத்தில் கூறப்­பட்­டுள்ள எந்த விட­யத்­தையும் பொலிஸார் முன்­வைக்­க­வில்லை. குற்­றச்­சாட்­டுக்­களும் பிணை வழங்­கத்­தக்­கதே. பிணை வழங்க பொலிஸார் எந்த எதிர்ப்பும் இல்லை என்­கின்­றனர்.

எனவே ஒரு இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான சொந்தப் பிணை­யிலும் ஒரு இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணை­க­ளிலும் செல்ல ஞான­சார தேரரை அனு­ம­திக்­குறேன் என நீதிவான் அறி­வித்து வழக்கை எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்தார்.

பிர­தான நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்

இத­னை­ய­டுத்து ஞான­சார தேரர் பொலன்­ன­று­வையில் வைத்து மத முரண்­பாட்டை தோற்­று­விக்கும் கருத்­துக்­களை வெளி­யிட்டார் என்ற குற்­றச்­சாட்டின் கீழ் 73465 எனும் வழக்கில் ஆஜர்­செய்­யப்­பட்டார்.

இதன்­போது ஞான­சார தேர­ருக்கு எதி­ராக தண்­டனை சட்டக் கோவையின் 291 (அ), (ஆ) அத்­தி­யா­யங்­களின் கீழ் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் 120 ஆவது அத்­தி­யா­யத்தின் கீழும் விசா­ரணை இடம்­பெ­று­வ­தா­கவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா நீதி­மன்­றுக்கு அறி­வித்தார்.

இத­னை­ய­டுத்து 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை­யிலும் 5 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணை­க­ளிலும் செல்ல கலகொட அத்தே ஞானசார தேரரை பிரதான நீதிவான் லால் ரணசிங்க பண்டார அனுமதித்தார்.

அத்துடன் ஞானசார தேரருக்கோ அவர் சார்ந்த பொது பல சேனா அமைப்புக்கோ வேறு இன, மதங்களை துற்றும் வகையில், வெறுப்பூட்டும் வகையில் கருத்து வெளியிடுவதில் இருந்து தவிர்ந்து இருக்குமாறு கடுமையாக எச்சரித்தார். சமாதானத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டால் அது தொடர்பில் உடனடியாக பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிவான் அவ்வாறு அறிக்கை கிடைத்தால் பிணை இரத்தாகும் என தெரிவித்ததுடன் வழக்கை ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இதனையடுத்து பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த ஞானசார தேரர் நேற்று மாலை 4.15 மணியளவில் நீதிமன்றில் இருந்து வெளியேறிச் சென்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-22#page-1

  • தொடங்கியவர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.