Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல கோடி பரிசு மழையில் நனைந்த கனேடிய தமிழ் பெண்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பல கோடி பரிசு மழையில் நனைந்த கனேடிய தமிழ் பெண்!!

By
 nadunadapu
 -
June 24, 2017
0
21
canadaas.jpg

கனடாவில் முதன்முறையாக சூதாட்ட நிலையத்திற்கு(CASINO) சென்ற தமிழ் பெண்ணொருவருக்கு பாரிய தொகை பணம் கிடைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்ட பெண் ஒருவர் கனடாவில் Montreal சூதாட்ட நிலையத்திற்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்த பெண் முதல் முறையாக சூதாட்ட நிலையத்திற்கு சென்று முதல் பரிசை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

35 வது பிறந்த நாளை கொண்டாடிய பாலகௌரி குணசீலன் என்ற தமிழ் பெண்ணே பரிசு தொகையை பிறந்த நாள் பரிசாக வென்றுள்ளார்.

 

வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு வாரமும் 1,000 டொலர் அல்லது 675,000 டொலராக மொத்த தொகையை பெற்றுக் கொள்வதா என்பதை பாலகௌரியே தீர்மானிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கிட்டு பார்த்தால் 1000 டொலர் என்ற ரீதியில் 13 வருடங்களுக்கு அந்த பணம் செலுத்த நேரிடம்.

இதனால் தடவையில் முறையில் 675,000 டொலர் பணம் பாலகௌரிக்கு செலுத்தப்பட்டுள்ளதாக கனேடி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

99100-9

http://nadunadapu.com/?p=129605

  • கருத்துக்கள உறவுகள்

உந்த சூதாட்டத்தின் மூலம் வீதிக்கு வந்த தமிழர்களைப் பற்றியும் பேசலாமே. கிழக்கு லண்டனில்.. மேற்கு லண்டனில்.. இவர்களை மாலை நேரங்களில்.. பியர் கானும் கையுமாகக் காணலாம். :rolleyes:tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

உந்த சூதாட்டத்தின் மூலம் வீதிக்கு வந்த தமிழர்களைப் பற்றியும் பேசலாமே. கிழக்கு லண்டனில்.. மேற்கு லண்டனில்.. இவர்களை மாலை நேரங்களில்.. பியர் கானும் கையுமாகக் காணலாம். :rolleyes:tw_blush:

பேசுவதற்கும்  ஒரு  தொடக்கம் வேண்டுமல்லவா  ராசா....

  • கருத்துக்கள உறவுகள்

தொடக்கம் பணக்கவர்ச்சி ஆகி விடக் கூடாது என்பதில் எம் கவனம்.. அண்ணா. அதுவே பலரின் வாழ்க்கையை சீரச்சிருப்பதையும் காண்கிறோம்.

சூதாட்டம் என்பது ஒருவரின் மகிழ்ச்சிக்காக பலரின் மகிழ்ச்சியை பறித்து.. முதலீடு செய்வது. tw_blush:

(நாங்க எப்பவும் இந்த சூதாட்டங்களில் ஈடுபட்டதில்லை. ஆனால்.. இவற்றின் பின்னால் உள்ள கணிதத்தில் இருந்து பணப்பறிப்பு தந்திரம் ஊடாக.. இவற்றின் சமூகத் தாக்கங்களைப் பற்றி கொஞ்சம் அறிஞ்சிருக்கிறம்.)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nedukkalapoovan said:

தொடக்கம் பணக்கவர்ச்சி ஆகி விடக் கூடாது என்பதில் எம் கவனம்.. அண்ணா. அதுவே பலரின் வாழ்க்கையை சீரச்சிருப்பதையும் காண்கிறோம்.

சூதாட்டம் என்பது ஒருவரின் மகிழ்ச்சிக்காக பலரின் மகிழ்ச்சியை பறித்து.. முதலீடு செய்வது. tw_blush:

(நாங்க எப்பவும் இந்த சூதாட்டங்களில் ஈடுபட்டதில்லை. ஆனால்.. இவற்றின் பின்னால் உள்ள கணிதத்தில் இருந்து பணப்பறிப்பு தந்திரம் ஊடாக.. இவற்றின் சமூகத் தாக்கங்களைப் பற்றி கொஞ்சம் அறிஞ்சிருக்கிறம்.)

என்னிடமும்  இது சார்ந்து பாதிக்கப்பட்ட

அதிலிருந்து  மீளமுடியாது தள்ளாடும் நண்பர்களின்  கதைகளுண்டு

யாழில் கதையாக எழுதணும்

ஆனால் இனம்  கண்டுவிடக்கூடாது என்பதால் தாமதம்

இந்த வருடம் கூட 35 வருடங்களுக்கு  மேலாக பிரான்சில் பொது  நலத்தொண்டில் எல்லோராலும் அறியப்பட்டவரும்

நல்ல பெயரெடுத்தவருமான ஒருவர்

வேறு ஒருவருடைய  பணத்தில் விளையாடி நட்டமடைந்து

மானபங்கப்பட்டு  நாட்டைவிட்டே போகவேண்டி  வந்து

நாடு  மாறி  வாழ்கிறார்

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சு கொடுக்கும் என்பது.

பாலகவுரி  பிறந்த நாள் என்று சும்மா வேடிக்கை பார்க்க போயிருக்கிறார் 
சும்மா போட்டு தட்ட தெய்வம் கசினோ மிஷினை பிய்த்திருக்கு கவுரிக்கு கொடுக்க.

நெடுக்கு சொல்வதுபோல் ...
அங்கு பணம் எடுக்கலாம் என்று போனவர்கள் 
வீதிக்கு வந்ததுதான் நிஜம். 

நானும் கவுரி போல இரண்டு மூன்று தடவை $50- $100 விட்டு பார்த்திருக்கிறேன் 
தெய்வம் நித்தாவாக இருந்திருக்கும் என்று நினைக்கிறன். 
எதோ போட்டமாம் ..... கலர் காலரா பத்தும் லைட்டுகள் ம்யூஸிக்குகளை 
ரசிச்சோமாம் .......... வந்தோமாம் என்று இருக்கவேண்டும்.

நெடுக்கர் இங்கு .... யுனியில் 
ப்ரோபாபிலிட்டி  கணக்கு படிச்சிருப்பார் 
இந்த 80/20 சூதில் கசினோ வெல்லும் என்பதில் சந்தேகம் இல்லாமல் வாழ்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
கனடாவில் தமிழ்ப் பெண்ணுக்கு அடித்த அதிஷ்டம்! - ஆறு இலட்சத்து 75 ஆயிரம் டொலரை வென்றார் Top News 
[Saturday 2017-06-24 18:00]
கனடாவில் கசினோ எனப்படும் சூதாட்ட நிலையத்திற்கு முதன்முறையாக சென்ற தமிழ் பெண்ணொருவருக்கு ஆறு இலட்சத்து 75 ஆயிரம் டொலர் அதிஷ்டம் கிடைத்துள்ளதாக கனடிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கனடாவில் கசினோ எனப்படும் சூதாட்ட நிலையத்திற்கு முதன்முறையாக சென்ற தமிழ் பெண்ணொருவருக்கு ஆறு இலட்சத்து 75 ஆயிரம் டொலர் அதிஷ்டம் கிடைத்துள்ளதாக கனடிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.   

தனது 35 வது பிறந்த நாளை கொண்டாடிய பாலகௌரி குணசீலன் என்ற பெண் மொன்ட்றியலில் உள்ள சூதாட்ட நிலையத்திற்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட போது இந்தப் பெரும் பரிசு தொகையை வென்றுள்ளார். முதல் முறையாக சூதாட்ட நிலையத்திற்கு சென்று முதல் பரிசை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு வாரமும் 1,000 டொலர் அல்லது 675,000 டொலராக மொத்த தொகையை பெற்றுக் கொள்வதா என்பதை பாலகௌரியே தீர்மானிக்குமாறு அறிவிக்கப்பட்டது. கணக்கிட்டு பார்த்தால் 1000 டொலர் என்ற ரீதியில் 13 வருடங்களுக்கு அந்த பணம் செலுத்த நேரிடம். இதனால் ஒரே தடவையில் 675,000 டொலர் பணம் பாலகௌரிக்கு செலுத்தப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.balagowry-winner-240617-seithy.jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=185095&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமாய் தமிழ் கப் டிரைவர்கள் முதலில் இப்படியான சூதாட்ட நிலையம்களுக்கு வாடிக்கையாளரை ஏற்றி செல்லும் இவர்கள் நாளடைவில் அதில் என்ன இருக்கிறது என்பதை அறிய சிறிதாக இறங்கி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை அறியாமலே அடிமையாகி கப் மூலம் வரும் அதிக வருமானம் (இங்கு அநேகர் புறசெல்வுகளை விட்டு வாகனத்தேய்மானம் என்பவற்றை கணக்கில் எடுப்பதில்லை ) என்று அவர்களா நினைத்து தினமும் விளையாடிவிட்டு காசை துலைத்து விட்டு கடைசியில் வீட்டு சிலவுகளுக்கு பணமில்லாமல் கடன் வாங்கி இப்படியே சரிவை நோக்கி பயணித்து கடைசியில் குடுபத்துக்குள் பிரச்சினை வந்து கவுன்சில் வந்து பிள்ளைகளை கொண்டு போய் வளர்க்கிறது . மனுசிகாரிக்கு ஓவர் டீப்ப்ரசென்ட் எண்டு மனநல வைத்தியத்துக்கு கொண்டு போனவங்கள் திரும்பி வரும்போது பிள்ளைகளை கவன்சில் தரமறுத்துவிட்டது உயிர் இருந்தும் நடைபின வாழ்க்கை இது தேவையா ?

அழகு பூங்காவாக சிரித்து குலுங்கிய அந்த குடும்பம் சூதாட்டம் என்னும் கொடிய அரக்கன் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகியது (இங்கு படிப்பிக்கும் போதே அவைகளின் தீமைகளை பற்றி சொல்லிகொடுப்பதால் பெரும்பாலான வெள்ளை கருப்புகள் எது எல்லை என்று விளங்கும் நம்மவர்க்கு படிக்கும் காலம் பூரா அகதியா ஓடிய ஆட்களின் நிலை இரண்டும் கெட்டான் நிலை ஆனால் இங்கு பிறந்த சந்ததியில் தான் நம்பிக்கை வெளிச்சம் முக்கியமாய் அவர்களின் எதிர்காலத்துக்கு ஆவது பெற்றோர் அமைதியாக வாழ்வது அவசியம் இன்றும் பள்ளிக்கு வரும் அந்த குழந்தைகளை எதோச்சையாக காணும் நேரம் மனது இயலாமையின் குற்ற உணர்வில் தவிப்பது தவிர்க்க முடியாது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.