Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இளைஞர் படுகொலை : நெல்லியடி முதல் கொடிகாமம்வரை பலத்த பாதுகாப்பு

Featured Replies

இளைஞர் படுகொலை : நெல்லியடி முதல் கொடிகாமம்வரை பலத்த பாதுகாப்பு

 
 
இளைஞர் படுகொலை : நெல்லியடி முதல் கொடிகாமம்வரை பலத்த பாதுகாப்பு
 

யாழ் – வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகிய துன்னாலையைச் சேர்ந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள், இன்று காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில், நெல்லியடி முதல் கொடிகாமம் அரசடி வீதிவரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் உயிரிழந்து, பின்னர் பதற்றம் நிலவியபோதும், எந்தவோர் அரசியல்வாதிகளும் தமது பகுதிக்குள் வரவில்லை என்று தெரிவித்த, இறுதிக் கிரியைகள் நடைபெறும் இடத்தில் உள்ள இளைஞர்கள், வரும் தேர்தல் காலத்தில், எந்தவோர் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பகுதியில் காலடி எடுத்து வைக்கமுடியாதென்று கூறியுள்ளனர்.

இதேவேளை, வட மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே சிவாஜிலிங்கம், க. தர்மலிங்கம் ஆகியோர் உயிரிழந்த இளைஞனின் வீட்டுக்கு நேற்றுச் சென்றிருந்த நிலையில், இன்னொரு வட மாகாண சபை உறுப்பினரான சிவயோகன், அப்பகுதிக்குச் சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

6ஆம் கட்டை மணற்காட்டுப் பகுதியில், அனுமதியற்ற முறையில், மணலை கன்ரர் ரக வாகனத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்றிச் சென்றபோது, பொலிஸாரினால் வழிமறிக்கப்பட்ட நிலையில், மீறிச் சென்றபோது, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே, 24 வயதான யோகரசா தினேஸ் என்ற துன்னாலையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்திருந்தார்.

http://uthayandaily.com/story/10815.html

  • தொடங்கியவர்

யாழில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனின் இறுதிக் கிரியைகள் இன்று – பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

pointpetro.jpg

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காட்டில் இளைஞர் ஒருவர் மீது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட துன்னாலையைச் சேர்ந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள், இன்று காலை   இடம்பெறவுள்ள நிலையில்,  நெல்லியடி காவல் நிலையத்தில் இருந்து கொடிகாமம் செல்லும் அரசடி வீதிவரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, துன்னாலைப் பகுதியில், ஓரளவு அமைதியான நிலை காணப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை  அனுமதியற்ற முறையில், மணலை  ஏற்றிச் சென்றபோது, காவற்துறையினர்  தடுத்த போதும் அதனை  மீறிச் சென்றதாக தெரிவித்து  காவல்துறையினர் மேற்கொண்ட  துப்பாக்கிப் பிரயோகத்தில் 24 வயதான யோகரசா தினேஸ் என்ற துன்னாலையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உயிரிழந்த இளைஞனின் இறுதிக் கிரியைக்குக் கடும் பாதுகாப்பு!

 
உயிரிழந்த இளைஞனின் இறுதிக் கிரியைக்குக் கடும் பாதுகாப்பு!
 

வடமராட்சி கிழக்கில் பொலிஸாரின் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் இறுதிக் கிரியைகள் இன்று மதியம் 11 மணியளவில் நடைபெற்று உடல் புதைக்கப்பட்டது..

நெல்லியடி முதல் கொடிகாமம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

thines-750x400.jpg

உடற்கூற்றுப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு சடலம் உறவினர்களிடம் இன்று காலை கையளிக்கப்பட்டிருந்தது.

இறுதிக் கிரியைகள் நடத்தப்பட்டு வேடுண்டை மயானத்தில் சடலம் நீதிமன்ற உத்தரவின்படி புதைக்கப்பட்டது.

இறுதிக் கிரியைகளில் எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்பாடாத வண்ணம் பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

http://uthayandaily.com/story/10957.html

பொலிசாரே உடனடியாக தீர்ப்பையும் தண்டனையும் வழங்கினால் எதற்கு நீதிமன்றமும் சட்டங்களும்? அண்மையில் தெற்கில் கடற்படை தளபதி பொதுமகன் ஒருவரை தாக்கிய சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி அரசாங்கம் பதில் சொல்ல வேண்டி வந்தது. ஆனால் இங்கு ஒரு இளைஞன் பொலிசாரால் துடிக்க துடிக்க கொல்லப்பட்டு இருக்கின்றார். தமிழ் அரசியல்வாதிகள் பொது அமைப்புகள் எல்லாம் ஒன்று திரண்டு போராடி இருக்க வேண்டாமா? மாணவர் அமைப்புகள் தம் எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டாமா?

மாட்டை களவு எடுக்க போய் மாட்டுப்பட்ட இளைஞனுக்கு மக்கள் கொடுத்த தண்டனையை எதிர்த்து குரல் கொடுத்து சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்தவர்கள் எல்லாம் இந்த இளைஞனின் மரணத்தில் கடும் கள்ள மவுனம் சாதிக்கின்றனர்...

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தமிழ் பொலீஸ் வேற எதோ சொந்தக் காரணங்களுக்காக அந்த இளைஞனை சுட்டுக் கொண்டு இருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இந்த தமிழ் பொலீஸ் வேற எதோ சொந்தக் காரணங்களுக்காக அந்த இளைஞனை சுட்டுக் கொண்டு இருக்கிறார்

தமிழ் பொலிசா சுட்டது.tw_angry:அப்படி என்டால் நல்லா முன்நேறிடுவம்.ஏன்தான் இந்த வெள்ளைக்காரன் நாட்டை விட்டு போனான்.:rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.