Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலைகள் குறித்த எனது கருத்தின் மீதான உணர்ச்சிபொங்கும் கருத்தாடல்களால் உண்மையை மறைக்க முடியாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் காத்தான்குடி படுகொலைகள் குறித்து வடக்கு மாகாணசபை உறுப்பினர் அவர்கள் சமூகவலைத்தளமொன்றில் வெளியிட்ட கருத்துக்கள் மிகுந்த விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தன, இது குறித்து வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ. அய்யூப் அஸ்மின் அவர்களிடம் விளக்கம் கோரியபோது அவர் முன்வைத்த கருத்துக்களின் சுருக்கம் வருமாறு

1990ம் ஆண்டு காத்தான்குடியிலே மேற்கொள்ளப்பட்டிருந்த பள்ளிவாயல் படுகொலைகள் குறித்து “1990 ஆகஸ்ட் 3ம் நாள் காத்தான்குடியிலே பள்ளிவாயலில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட நாள்” என நான் ஒரு பதிவினையிட்டிருந்தேன். குறித்த பதிவிற்கு முகநூலிலும், ஏனைய இணைய ஊடகங்களிலும் பதில் பதிவுகள், விமர்சனங்கள் எழுந்திருந்தன. எனது கருத்திற்கான உரித்தினை நானே முழுமையாகக் கொண்டிருக்கின்றேன், அத்தோடு அதன் புரிதலிற்கும் நானே முழுமையான உரித்தாளியாகின்றேன், என் சார்பில் இதற்கு வேறு எவரும் பொறுப்பாளிகள் அல்ல. என்பதை இங்கு பகிரங்கமாகத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இவ்விடயத்தில் எழுகின்ற முதன்மையான விமர்சனம் குறித்த பதிவில் “புலிகளினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்கள்” என்பதற்குப் பதிலாக “ஆயுததாரிகளினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்கள்” என்ற சொற்பதமே சர்ச்சைக்குரியதாகும். இப்போதும் நான் “ஆயுததாரிகளினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்கள்” என்ற சொற்பதமே பொறுத்தமானது எனக் கருதுகின்றேன். இதற்குப் பின்னால் இருக்கின்ற நியாயத்தை நான் முன்வைக்கக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

இப்படுகொலைகளை புலிகளே மேற்கொண்டார்கள் என்பது நான் உட்பட எல்லோரும் தெரிந்த உண்மை; அதிலே எவ்விதமான மாற்றுக் கருத்தும் இருக்க நியாயமில்லை, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) முக்கிய உறுப்பினராகிய முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும், இந்நாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் இதுவிடயத்தை என்னிடம் குறிப்பிட்டிருந்தார்கள். எனவே இவ்விடயத்தை புலிகள் மேற்கொள்ளவில்லை என்று கருதுமளவிற்கு அல்லது கூறுமளவிற்கு நான் ஒன்றும் வரலாறும் வலியும் தெரியாதவன் அல்ல. இப்போது நாம் வேறு ஒரு சூழ்நிலையில் இருக்கின்றோம்.

புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டது. அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு எவரும் இல்லாத சூழ்நிலையிலேயே இப்போது நாம் இருக்கின்றோம். இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம் மக்கள் மீதான படுகொலைகள் குறித்து தமிழ் மக்களுக்கு மத்தியில் எடுத்துச் சொல்லப்பட வேண்டியிருக்கின்றது. தமிழ் மக்களில் பெரும்பாலனவர்கள் “புலிகளை புனிதர்களாகவே” கருதுகின்றார்கள், அவர்களுக்கு அதுவிடயத்தில் முழுமையான உரித்தும் நியாயப்பாடுகளும் இருக்கின்றன. எனவே புலிகள் என்ற சொற்பதத்தைப் பிரயோகிப்பதன் மூலம் தமிழ் மக்கள் குறித்த படுகொலைகளை “புலிகள் செய்திருந்தால் அது நியாயமானதாகவே இருக்கும்” என்ற கருத்தை இவ்விடயத்தில் ஏற்படுத்திக்கொள்வார்கள். எனவே ஆயுததாரிகள் என்ற சொற்பதம் குறித்த விடயத்தில் சரியான புரிதலை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தும். இதுவே எனது உண்மையான எண்ணமாகும். 

இதுவிடயத்தில் என்மீது குற்றம் சுமத்துகின்ற பலர் அவர்களுக்கு விருப்பமான வார்த்தைகளில் நான் பேசவில்லை என்பதாக குறைப்படுகின்றார்கள். அத்தோடு நிறுத்தாமல் அவர்களது எண்ணங்களில் உதிக்கின்ற எல்லாவற்றையும் இவ்விடயத்தை மையப்படுத்தி கொட்டித்தீர்த்திருக்கின்றார்கள். புலி ஆதரவாளான், புலிப் பாதுகாவலன், பதவி மோகம் கொண்டவன், துரோகி, இன்னும்பல வசைபாடல்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களுடைய கருத்துக்களுக்கு அவர்களே பொறுப்பாளர்கள்.  மேற்படி முட்டிமோதிய விமர்சன அலைகளுக்கு முன்னால் எனக்குள் எழுந்த எண்ணங்களையும் இங்கு பகிர்வது சிறப்பானது என்று எண்ணுகின்றேன்.

1990 ஆகஸ்ட் 03 நாள் நிகழ்ந்த குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் ஷஹீதாக்கப்பட்டவர்களின் ஒரு உறவினர் தன்னும் ஏதாவது ஒரு நீதிமன்றில் மேற்படி படுகொலைகளைச் செய்த புலிகள் மீது எவ்விதமான வழக்குகளையும் பதிவு செய்யவில்லை; அரசாங்கமும் அவ்வாறு எவ்வித வழக்குகளையும் பதிவுசெய்யவில்லை; அப்போதைய காலசூழ்நிலைகள் சாதகமாக இல்லாத நிலையில் வழக்குகளைப் பதிவு செய்வதற்கு நாம் பின்னின்றமை நியாயமானதுவே. ஆனால் இப்போது அதற்கான சூழ்நிலை இருக்கின்றது. முன்னர் நிகழ்ந்த பல்வேறு அநீதிகளுக்கு மக்கள் நீதி வேண்டி நீதிமன்றங்களை நாடி போராடத் தொடங்கியிருக்கின்றார்கள்.

இப்போது தன்னும் ஒரு முஸ்லிம் அரசியல் தலைவருக்கோ; அல்லது சமூகத் தலைவர்களுக்கோ; அல்லது முஸ்லிம் பொதுமகன் ஒருவருக்கோ; குறித்த விடயத்தில் நீதிவேண்டி வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்ய முடியும். ஆனால் அவ்வாறு வழக்குத்தாக்கல் செய்வதற்கு எவரும் முன்வருவதில்லை. அதுமாத்திரமின்றி இதுவரை கண்கண்டதாகவும், வாய்ப்பேச்சுக்களிலும், பொதுவழக்கிலும் புலிகளே மேற்படி படுகொலைகளைச் செய்தார்கள் என்று சொல்லப்படுகின்றது; இது ஒருவேளை உண்மையாக இருக்கும். ஆனால் அவை சமூகத்தளத்திற்கு வெளியில் நிரூபனம் செய்யப்படவில்லை என்கின்ற உண்மையையும் நாம் உணர்ந்துகொள்தல் அவசியம். புலிகளே செய்தார்கள் என்று சொல்லப்படுவதோடு இணைத்து இதிலே வேறு சக்திகள் தொடர்புற்றிருக்கின்றார்களாக என்பதையும் அறியவேண்டியுள்ளது. 

1990 காலப்பகுதியில் கருணா போன்றவர்களே புலிகள் இயக்கத்தின் கிழக்கிற்கான பொறுப்பாளர்களாக இருந்தார்கள், இப்போதும் உயிரோடிருக்கின்ற கருணா போன்றவர்களுக்கு எதிராகவும் வழக்குகளைத் தொடுக்கமுடியும். அப்போது உண்மை கண்டறியப்படும். புலிகள்தான் இதனைச் செய்தார்கள் என்று உறுதிபடக் கூறமுடியும். இவ்வாறெல்லாம மேற்கொள்ளவேண்டிய காத்திரமான பணிகள் நிறையவே இருக்கின்றபோதும்; வெறும் உணர்ச்சிப் பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் காலத்தையோட்டுகின்ற ஒரு கூட்டம் தம்முடைய கூக்குரல்களினால் யதார்த்தங்களை அழித்துவிடப் பார்க்கின்றது. இதனைப் புரிந்துகொள்கின்ற அளவிற்க்கு முஸ்லிம் இளைஞர்களுக்கும், தலைவர்களுக்கும் பக்குவம் இருக்கின்றதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது, ஆனாலும் சொல்லப்படவேண்டியவற்றை சொல்லியேதீரவேண்டும் என்பது எனது நிலைப்பாடாகும். எதையும் நேர்படவே நான் பேசுவேன். என்றும் தெரிவித்தார்.

தகவல் எம்.எல்.லாபிர்

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=152495 .

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடி பள்ளிவாசல் சம்பவத்திற்கு முன்னர்.. கிழக்கில் தமிழ் மக்கள் மீது இஸ்லாமிய தீவிர மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் நடத்திய படுகொலையும்... தாரைப் படுகொலையும்.. அதில் சம்பந்தப்பட்ட இஸ்லாமிய தீவிர மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகள்.. அதே பள்ளிவாசலுக்குள் ஆயுதங்களோடு பதுங்கி இருந்ததும்.. அவர்களை சரணடையச் சொல்லி கோரப்பட்டதும்.. அவர்களை சரணடையச் செய்யாமல்.. பள்ளி நிர்வாகமும் சமூகமும் தமிழ் மக்கள் மீதான படுகொலைக்குத் துணை போனதும்.. இந்த வழக்குகளோடு சேர்த்து விசாரிக்கப்பட வேண்டும். எனவே தாரையில் இஸ்லாமிய தீவிர மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகளால் மற்றும் இவர்களினதும் சிங்கள அதிரடிப்படை மற்றும் இராணுவத்தின் கூட்டுப் படுகொலைகளுக்கும் இலக்கான தமிழ் மக்கள் சார்பிலும் வழக்குகள் பதிவு செய்யப்படுவதோடு சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்றங்களுக்கு அவை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

குறிப்பாக.. கல்முனைப்படுகொலைகள்.. 1990 இல் தமிழ் மக்கள் மீது மூதூரில் நிகழ்த்தப்பட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள்..  திருமலையில் நிகழ்த்தப்பட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள்.. தற்போது நிகழும் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் எல்லாம்.. நீதி விசாரணைக்கு உட்பட வேண்டும்.

அதேபோல்... 1990 இல் வடக்கில் பள்ளிவாசல்களுக்குள் இனங்களுக்கிடையே மோதலை தூண்டும் வகையில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலும் நீதியான விசாரணைக்கு பள்ளிவாசல்களும் அப்போது பள்ளிவாசல் நிர்வாகங்களில் இருந்தோரும் தூய மனதோடு ஒத்துழைக்க முன்வர வேண்டும்.

செய்வார்களா.. இந்த முஸ்லீம்கள்..?! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

காத்தான்குடி பள்ளிவாசல் சம்பவத்திற்கு முன்னர்.. கிழக்கில் தமிழ் மக்கள் மீது இஸ்லாமிய தீவிர மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் நடத்திய படுகொலையும்... தாரைப் படுகொலையும்.. அதில் சம்பந்தப்பட்ட இஸ்லாமிய தீவிர மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகள்.. அதே பள்ளிவாசலுக்குள் ஆயுதங்களோடு பதுங்கி இருந்ததும்.. அவர்களை சரணடையச் சொல்லி கோரப்பட்டதும்.. அவர்களை சரணடையச் செய்யாமல்.. பள்ளி நிர்வாகமும் சமூகமும் தமிழ் மக்கள் மீதான படுகொலைக்குத் துணை போனதும்.. இந்த வழக்குகளோடு சேர்த்து விசாரிக்கப்பட வேண்டும். எனவே தாரையில் இஸ்லாமிய தீவிர மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகளால் மற்றும் இவர்களினதும் சிங்கள அதிரடிப்படை மற்றும் இராணுவத்தின் கூட்டுப் படுகொலைகளுக்கும் இலக்கான தமிழ் மக்கள் சார்பிலும் வழக்குகள் பதிவு செய்யப்படுவதோடு சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்றங்களுக்கு அவை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

குறிப்பாக.. கல்முனைப்படுகொலைகள்.. 1990 இல் தமிழ் மக்கள் மீது மூதூரில் நிகழ்த்தப்பட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள்..  திருமலையில் நிகழ்த்தப்பட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள்.. தற்போது நிகழும் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் எல்லாம்.. நீதி விசாரணைக்கு உட்பட வேண்டும்.

அதேபோல்... 1990 இல் வடக்கில் பள்ளிவாசல்களுக்குள் இனங்களுக்கிடையே மோதலை தூண்டும் வகையில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலும் நீதியான விசாரணைக்கு பள்ளிவாசல்களும் அப்போது பள்ளிவாசல் நிர்வாகங்களில் இருந்தோரும் தூய மனதோடு ஒத்துழைக்க முன்வர வேண்டும்.

செய்வார்களா.. இந்த முஸ்லீம்கள்..?! :rolleyes:

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல, தமிழரும், சிங்களவரும் மோதிக் கொண்ட போது.... தம்மை மிக நன்கு வளப் படுத்திக் கொண்டவர்கள் முஸ்லிம்கள்.

இரு பகுதி இளைஞர்களும், சண்டை என்று கிளம்பிப் போக, இவர்கள் தான் பெரும்பாலான வியாபாரங்களை, அரச உத்தியோகங்களை வசப் படுத்திக் கொண்டனர்.

ராணுவத்தில் இருந்து தப்பி ஓடிய சிங்களவர்கள், யுத்தத்தில் இருந்து தப்பி ஓடிய தமிழர்கள்  வெளிநாடு  செல்லவும், அவசரமாக காணிகளை வித்த போது, அறா விலைக்கு அமத்தியவர்கள்.

இன்று சிங்களவர்கள் முழித்துக் கொண்டார்கள்.

முல்லைத்தீவு, மன்னார் உடன் தமிழர்களும் முழித்துக் கொண்டார்கள்.

உடனே தமக்கு மட்டும் நடந்த பாதிப்புகள் குறித்து சொல்லி, எழுதி அனுதாபம் தேடுகினறனர். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.