Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமஷ்டி நாட்டை பிள­வு­ப­டுத்­தாது என்­பதில் எமக்கு நம்­பிக்­கை­யில்லை

Featured Replies

சமஷ்டி நாட்டை பிள­வு­ப­டுத்­தாது என்­பதில் எமக்கு நம்­பிக்­கை­யில்லை

p21-e6e64f380b4395b787067c08a39bc5648dae29ff.jpg

 

வடக்­கிற்­கான சிறப்பு அதி­கா­ரங்கள் மலை­ய­கத்தை போர்க்­க­ள­மாக்கும் என்­கி­றது அஸ்­கி­ரிய பீடம்

(லியோ நிரோஷ தர்ஷன்)

சமஷ்டி முறைமை நாட்டை பிள­வு­ப­டுத்தி பிரி­வி­னை­வா­தத்தை தோற்­று­விக்­காது என்­பதில் நம்­பிக்­கை­யில்லை. ஒற்­றை­யாட்­சிக்கு ஆபத்து ஏற்­ப­டுத்த கூடிய எந்­த­வொரு அர­சியல் அதி­கார கோரிக்­கைக்கும் அங்­கீ காரம் வழங்க முடி­யாது. வடக்கு மாகா­ணத்­திற்கு  கூடுதல் அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்டால் மலை­யகம்  அடுத்­தப்­ப­டி­யாக போர் கொடி தூக்கும் என அஸ்­கி­ரிய பீடத்தின் தலைமைச் செய­லாளர் மெத­கம தம்­மா­னந்த அநு­நா­யக்க தேரர் தெரி­வித்தார்.  

அர­சியல் அதி­கா­ரங்­களை பெற்­றக்­கொள்­வதில் காட்டும் ஆர்வம் மக்­களின் அடிப்­படை குறை­களை தீர்ப்­பத்தில் காட்­டப்­பட வில்லை என்­பதை வடக்கு விஜ­யத்தில் உணர்ந்தோம். எனவே வடக்கு மக்­களின் வாழ்­வா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு தேவை­யான மேல­திக நிதி ஒதுக்­கீடு குறித்து மஹா சங்­கத்­தினர் அர­சாங்­கத்தின் கவ­னத்­திற்கு கொண்டு வரு­வார்கள் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­ணேஷ்­வரன் மல்­வத்து மற்றும் அஸ்­கிரி மாநா­யக்க சங்­கத்­தி­னரை சந்­தித்­தமை குறித்து தெளி­வுப்­ப­டுத்­து­கை­யி­லேயே அஸ்­கி­ரிய பீடத்தின் மெத­கம தம்­மா­னந்த அநு­நா­யக்க தேரர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறு­கையில் ,

வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­ணேஷ்­வ­ரனை சிறப்­புடன் வர­வேற்றோம். கடந்த நான்கு வரு­டங்­க­ளாக அவர் எம்மை சந்­திக்க வர­வில்லை. காலம் கடந்­தேனும் வந்து எம்மை சந்­தித்து கருத்­துக்­களை பகிர்ந்துக் கொண்­டமை மகிழ்ச்­சி­ய­ளிக்­கின்­றது. அர­சி­யல்­வா­தி­யாக அல்­லாது விக்­ணேஷ்­வ­ரனை சிறந்த நீதி­ய­ர­ச­ரா­கவே எம்­போதும் காண்­கின்றோம். எனவே மக்­களின் நல்­வாழ்வு குறித்து அவர் கூடிய கவனம் செலுத்தி செயற்­பட வேண்டும்.

அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து பீடங்கள் கடந்த வாரத்தில் வடக்­கிற்கு விஜயம் செய்­தி­ருந்­தன. வடக்கில் சில பகு­தி­களில் மக்­களின் வாழ்வு மிகவும் மோச­மான நிலையில் காணப்­ப­டு­கின்­றது. அதனை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. போர் முடிந்த பின்னர் அந்த மக்கள் அனைத்து வகை­யிலும் சிறப்­பு­டனும் பாது­காப்­பு­டனும் வாழ வேண்டும் என்­பதே மஹா­சங்­கத்­தி­னரின் எதிர்­பார்ப்பு . அந்த வகையில் வடக்கு மக்­களின் வாழ்­வ­தார விட­யங்­களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்ற வலி­யு­றுத்­தலை அர­சாங்­கத்­திற்கு வழங்க உள்ளோம்.

அதே­போன்று அர­சாங்­கத்தின் நிதி உரிய வகையில் வடக்கு மாகா­ணத்­திற்கு கிடைப்­ப­தில்லை என்று முத­ல­மைச்சர் விக்­ணேஷ்­வரன் குறிப்­பிட்டார். அந்த விடயம் குறித்து அர­சாங்­கத்­திற்கு விஷே­ட­மாக தெரி­யப்­ப­டுத்த உள்ளோம். ஒரே நாட்டில் வாழ்­கின்ற மக்கள் அரசின் திட்­டங்­களில் சரி­நி­க­ராக பயன்­பெற வேண்டும். அவற்றில் வேறு­பா­டுகள் ஏற்­படும் போது தான் அநா­வ­சி­ய­மான பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­கின்­றன. எனவே மக்­களின் நலன்கள் விட­யத்தில் அர­சாங்கம் முன்­னு­ரி­மை­யுடன் சிந்­திக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் மாற்­ற­மில்லை.

அதே போன்று அர­சியல் அதி­கார விட­யங்­களில் எப்­போதும் நாட்டில் இது­வ­ரைக்­கா­லமும் காணப்­பட்ட ஒற்­றை­யாட்­சிக்கு பாதிப்பு ஏற்­ப­டாத வகையில் செயற்­பட வேண்டும். சமஷ்டி முறை­மை­யினால் இலங்கை பிள­வு­ப­டாது என்று முத­ல­மைச்சர் விக்­ணேஷ்­வரன் உள்­ளிட்ட சில அர­சி­யல்­வா­திகள் கூறு­கின்­றனர். மாகாண சபை­க­ளுக்கு ஏற்­க­னவே அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. ஆகவே சமஷ்டி முறை­மையை நாட்­டிற்குள் கொண்டு வந்து மேலும் அதி­கா­ரத்­திற்குள் முரண்­பட்டு அமை­தி­யின்­மையை உருவாக் முயற்­சிக்க கூடாது.

ஏனைய மாகா­ணங்­களை போன்று வடக்கு மாகா­ணமும் அர­சாங்­கத்­துடன் ஒரு­மித்து பய­ணிக்க வேண்டும். சமஷ்டி முறைமை நாட்டை பிள­வுப்­ப­டுத்தி பிரி­வி­னை­வா­தத்தை தோற்­று­விக்­காது என்­பதில் நம்­பிக்கை வைக்க முடி­யாது. எனவே உலக நாடு­களின் ஆட்சி முறை­மையை இலங்­கை­யுடன் ஒப்­பிட்டு கூறு­வதும் ஏற்­பு­டை­ய­தல்ல. வடக்­கிற்கு அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்டால் மலை­ய­கமும் போர் கொடி தூக்கும். எனவே அநா­வ­சி­ய­மான பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சி­யல்­வா­திகள் கார­ண­மாகி விட­கூ­டாது.

நாட்டின் நிலை­யான அமைதி மற்றும் அனைத்து மக்­க­ளி­னதும் நல்­லி­ணக்கம் என்­பதே முக்­கி­ய­மான விடயமாகும். பொது மக்களின் அடிப்படை விடயங்களில் கூடிய கவனம் செலுத்தி செயற்பட வேண்டும். அரசியல் அதிகாரங்களை பெற்றுக்கொள்வதில் காட்டப்படும் ஆர்வம் மக்களின் அடிப்படை குறைகளை தீர்ப்பதில் காட்டப்படவில்லை என்பதை வடக்கு விஜயத்தில் எம்மால்உணர கூடியதாக இருந்தது.

மல்வத்து மற்றும் அஸ்கிரிய உள்ளிட்ட மஹா சங்கத்தினர் அனைத்து இன மக்களுக்கும் சமமான நிலையிலேயே நோக்குகின்றனர் என தெரிவித்தார். 

 

Vireakesari

  • தொடங்கியவர்

கூட்­டாட்சி என்­பது பிரி­வி­னையே முகத்­தி­ல­டித்­தால்­போல் அஸ்­கி­ரி­ய­பீ­டம் தெரி­விப்பு

விக்­கி­யின் முயற்சி சறுக்கல்

 
 
  •  

அஸ்­கி­ரிய மகா­நா­யக்க தேரர்­க­ளைச் சந்­தித்து கூட்­டாட்சி என்­பது நாட்டை ஒரு­மைப்­ப­டுத்­து­வது என்­ப­தைக் கூறிப் புரிய வைக்க முயற்­சித்த முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னி­டம், கூட்­டாட்சிப் பிரி­வி­னை­தான் என்று அழுத்­த­மாக அஸ்­கி­ரிய பீடத்­தி­னர் எடுத்­து­ரைத்­துள்­ள­ னர்.

முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் கூறு­வதை ஏற்­றுக் கொள்­ளாத மன­நி­லை­ யி­லி­ருந்தே, சந்­திப்பை அவர்­கள் அணு­கி­ய­தா­க­வும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

மல்­வத்­து­பீட மகா­நா­ய­கர்­க­ளது சந்­திப்பை விட அஸ்­கி­ரிய பீடத்­தி­ன­ரு­டனான சந்­திப்பு சங்­க­ட­மாக அமைந்­த­தாக, வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ் வரன் சந்­திப்­பின் முடி­வில் ஊட­கங்­க­ளுக்­குத் தெரி­வித்­துள்­ளார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
அஸ்­கி­ரிய பீடத்­தி­னரை நல்­லெண்ண அடிப்­ப­டை­யில் சந்­தித்­தோம். மல்­வத்­து­பீட மகா­நா­யக்க தேர­ரு­டன் சந்­தித்­த­போது அவர் என்­னு­டன் தனிப்­பட்ட பேச்சு நடத்­தி­யி­ருந்­தார்.

மிக­வும் புரிந்­து­ ணர்வு அடிப்­ப­டை­யில் அது அமைந்­தி­ருந்­தது. அஸ்­கி­ரிய பீடத்­தி­ன­ரு­ட­னான சந்­திப்பு அவ்­வாறு அமை­ய­வில்லை. அஸ்­கி­ரிய பீடத்­தி­ன­ரு­டன் தனிப்­ப­டவே பேச விரும்­பி­னேன். ஆனால் அவ­ரு­டன் 12 தேரர்­கள் இருந்­தார்­கள். அவர்­கள் பிரித் வழி­பா­டு­க­ளின் பின்­னரே பேச்சு நடத்­தி­னர்.

அவர்­கள் தாம் ஏற்­க­னவே இருந்த நிலைப்­பாட்­டி­லி­ ருந்தே என்­னு­டன் பேச்­சுக்கு வந்­தார்­கள். எனது நிலைப்­பாட்டைக் கேட்­கும் எண்­ணம் அவர்­க­ளுக்கு இருக்­க­வில்லை. இதனை நான் உணர்ந்­தேன்.

நாம் உரி­மை­க­ளைப் பெற்­றுக் கொள்­ளவே போரா­டு­கின்­றோம் என்­ப­தை­யும், நாங்­கள் பிரி­வி­னை­வா­தி­கள் இல்லை என்­ப­தை­யும் கூறி­னேன். கூட்­டாட்சி அடிப்­ப­டை­யி­லான தீர்வே எமக்­குச் சாத­க­மா­னது என்­ப­தை­யும் எடுத்­து­ரைத்­தேன்.

கூட்­டாட்சி என்­பது நாட்டை ஒற்­று­மைப்­ப­டுத்­து­வது. 1926ஆம் ஆண்­டில் பண்­டா­ர­நா­யக்­காவே கூட்­டாட்­சித் தீர்வை முத­லில் முன்­வைத்­தார். 1930ஆம் ஆண்­டு­க­ளில் உட­ரட்ட சிங்­கள மக்­க­ளும் அத­னைத் தீர்­வாக முன்­மொ­ழிந்­தி­ருந்­த­னர்.

கூட்­டாட்சித் தீர்வை முத­லில் முன்­வைத்­த­வர்­கள் சிங்­க­ள­வர்­களே. நாம் கூட்­டாட்­சித் தீர்­வைக் கோரு­வ­தால் பிரி­வி­னை­வா­தி­கள் என்று எண்ண வேண்­டாம்.

உயர்­நீ­தி­மன்­றம் கூட கூட்­டாட்சிப் பிரி­வினை அல்ல என்று அண்­மை­யில் தீர்ப்பு வழங்­கி­யுள்­ளது. இத­னை­யும் அவர்­க­ளுக்­குச் சுட்­டிக்­காட்­டி­னேன். வடக்கு மாகா­ணத்­திற்கு மாத்­தி­ரம் கூட்­டாட்­சித் தீர்­வைக் கோர­வில்லை. நாட்­டில் உள்ள 9 மாகா­ணங்­க­ளுக்­கு­மா­கவே அத­னைக் கோரு­கின்­றோம். சிங்­கள மேலா­திக்­கம் எங்­கள் மீது திணிக்­கப் படக் கூடாது – என்­றார்.

ஆனால் அஸ்­கி­ரிய பீடத்­தி­னர், கூட்­டாட்சி என்­பது பிரி­வி­னை­தான் என்­பதை அழுத்­தம் திருத்­த­மா­கவே முத­ல­மைச்­ச­ரி­டம் திருப்­பிக் கூறி­யுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

http://newuthayan.com/story/28115.html

  • கருத்துக்கள உறவுகள்

 தர்மத்தை போதிக்க வேண்டியவர்கள் அரசியல் செய்ய வெளிக்கிட்டால் இவர்களிடம் சமதர்மத்தை எதிர்பார்க்கலாமா? பாவம் விக்கியர். இவர்களை மதித்து பேச போனது நேர விரையம்.

ஏன் புலிகள் ஆயுதம் தூக்கினார்கள் என்பதை சர்வதேசமும் விரைவில் புரிந்து கொள்ளும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
41 minutes ago, satan said:

 தர்மத்தை போதிக்க வேண்டியவர்கள் அரசியல் செய்ய வெளிக்கிட்டால் இவர்களிடம் சமதர்மத்தை எதிர்பார்க்கலாமா? பாவம் விக்கியர். இவர்களை மதித்து பேச போனது நேர விரையம்.

ஏன் புலிகள் ஆயுதம் தூக்கினார்கள் என்பதை சர்வதேசமும் விரைவில் புரிந்து கொள்ளும்.

சர்வதேசத்துக்கு எல்லாம் தெரியும்.

ஆனால் நாங்கள் பிறக்கேக்கை ஒரு நாதாரிக்கு பக்கத்திலையெல்லோ பிறந்திட்டம்.....:(

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணும் வேணாம்! பெண்ணும் வேணாம் என்று அரண்மனையை விட்டு....நள்ளிரவில் வெளியேறியவன் புத்தன்!

அவனுக்கு சீடராக வந்து வாய்ச்சதுகளுக்கு...எல்லாமே வேணும்!

விக்கியருக்குத் தேவையில்லாத வேலை  இது என்று நினைக்கிறேன்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.