Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

511z452da6L._SX355_.jpg

தமிழைக் கட்டாயப் பாடமாக எப்போது அறிவிக்கும் தமிழக அரசு?

தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்று அம்மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். தெலுங்கு கற்பிக்காமல் எந்த ஒரு பள்ளிக்கூடமும் தெலுங்கானாவில் இயங்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். அடிப்படைக் கல்வியில் தாய்மொழியைத் தவிர்க்கக் கூடாது என்ற கல்வித் துறை சார்ந்த காரணங்களைத் தாண்டி, பிராந்திய மொழிகளைப் பாதுகாக்க வேண்டிய அரசியல் முக்கியத்துவமும் இந்த உத்தரவில் அடங்கியிருக்கிறது.

ஏற்கெனவே, ஏப்ரல் மாதத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் 10-ம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மலையாளம் ஒரு பாடமாக இருக்க வேண்டும், மலையாளத்தைக் கற்றுக்கொடுக்காத பள்ளிகளின் அனுமதி ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். மேற்கு வங்கப் பள்ளிகளிலும் வங்க மொழியைச் சமீபத்தில் கட்டாயமாக்கியிருக்கிறார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. பள்ளிகளில் வேறு எந்த மொழியை யும் கற்றுக்கொடுப்பதைத் தடுப்பதல்ல இந்த உத்தரவுகளின் நோக்கம். தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதே. மத்திய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகள் கொடுக்கும் பதிலடியாகவும் இந்த உத்தரவுகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

பள்ளியில் படிக்கும் ஒரு மாணவர் அவர் விரும்பும் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், அடிப்படைக் கல்வி தாய்மொழியில்தான் கற்பிக்கப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகிறார்கள். என்றாலும், கல்வி என்பது வேலைவாய்ப்புக்கான தகுதி மட்டுமே என்று பெற்றோர் கள் கருதும் வரையிலும் தாய்மொழிக் கல்வியை மாணவர்களுக்குக் கட்டாயமாக்க முடியாது. இந்நிலையில், குறைந்தபட்சம் தாய்மொழி ஒரு பாடமாகவேனும் கட்டாயமாகப் பள்ளிக் கூடங்களில் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

மொழியுரிமை குறித்து கர்நாடகம், கேரளம், தெலுங்கானா என்று நமது பக்கத்து மாநிலங்கள் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. ஆனால், மொழியுரிமைப் போராட்டத்தில் இந்தியாவிலேயே முன்னோடி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கும் தமிழகம், இந்த உரிமைப் போராட்டத்தில் பின்தங்கியிருக்கிறது என்பதுதான் உண்மை. காரணம், மொழியுரிமை என்பது மாநில உரிமையின் அடையாளம் என்கிற புரிதலும் அக்கறையும் தமிழக ஆட்சியாளர்களுக்கு அறவே இல்லை என்பதுதான். தாய்மொழியைக் கல்வியின் மொழியாக நிலை நிறுத்தவில்லையென்றால், அதன் எதிர்காலம் அஞ்சத்தக்கதாகிவிடும் என்பது கல்வியாளர்களின் கருத்து.

கேரளம், மேற்கு வங்கம், தெலங்கானா அரசுகள் விழித்துக்கொண்டுவிட்டன.

என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

 

இந்து

வன்னியன் சார்,

தமிழ அரசு ஒன்று ஏற்கனவே  சில ஆண்டுகளுக்கு முன்னர்,  இவ்வாறு தமிழ் மொழிக் கல்வியை கட்டாயம் ஆக்கி உத்தரவிட, பின் அதனை எதிர்த்து ஒருவ, நீதிமன்றம் செல்ல, நீதிமன்றமும் அவ் உத்தரவை தடை செய்தது என்று எப்பவோ வாசித்த மாதிரி ஒரு நினைவு. அப்படி நடந்ததா?

  • கருத்துக்கள உறவுகள்

வரும் ஆனால் வராது.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, நிழலி said:

வன்னியன் சார்,

தமிழ அரசு ஒன்று ஏற்கனவே  சில ஆண்டுகளுக்கு முன்னர்,  இவ்வாறு தமிழ் மொழிக் கல்வியை கட்டாயம் ஆக்கி உத்தரவிட, பின் அதனை எதிர்த்து ஒருவ, நீதிமன்றம் செல்ல, நீதிமன்றமும் அவ் உத்தரவை தடை செய்தது என்று எப்பவோ வாசித்த மாதிரி ஒரு நினைவு. அப்படி நடந்ததா?

ஆம்... நடந்தது,  நிழலி.
அண்ணளவாக.. பத்து வருடங்களுக்கு முன்பு நடந்தது  என நினைக்கின்றேன்.
அந்த நேரம், முதல்வராக இருந்தவர்... கறுப்புக்  கண்ணாடி  அணிந்த படி, 
உலகில் உள்ள...  எட்டுக்  கோடி  தமிழரையும்  காக்க, புறப்பட்ட கட்டு மரம்  என  நினைக்கின்றேன்.

இதில்.. உள்ள  அரசியல் வித்தை என்னவென்றால்.... 
அப்படி ஒரு அறிவித்தலை, வெளியிட்டால்... தமிழ் மக்கள் குளிர்வார்கள். 
தனியார்  ஆங்கில  பள்ளிகள் எல்லாம்.. சம்பந்தப் பட்ட  அரசியல் கட்சிக்கு....
கோடிக் கணக்கான....  பணத்தை, வாரி இறைப்பார்கள். 
பணத்தை.... வாரி, சுருட்டிய பின்....

அந்த முதல்வரின் கட்சியிலிருந்தே... ஒருவன், நீதிமன்றத்துக்கு  போவான்.
இந்திய  நீதி மன்றம்....  கண்ணை மூடிய படி...  அரசியல் வாதி எதிர்பார்த்த  சாதகமான  தீர்ப்பை வழங்கும்.

இப்போ..... மக்களின் வாக்குகளையும், பாடசாலை நிறுவனங்களின்  பணத்தையும்..... அள்ளிய பின்.
தண்ட வாளத்தில் தலை வைத்து படுப்பேன், தமிழுக்காக..... உயிரையும் கொடுப்பேன்....
என்று... சொல்லி,  "பீலா..."  விட்டுக்  கொண்டிருப்பதை... கேட்க வேண்டியதும்....
முட்டாள்....  மக்களின் கடமை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, ராசவன்னியன் said:

511z452da6L._SX355_.jpg

தமிழைக் கட்டாயப் பாடமாக எப்போது அறிவிக்கும் தமிழக அரசு?

தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்று அம்மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். தெலுங்கு கற்பிக்காமல் எந்த ஒரு பள்ளிக்கூடமும் தெலுங்கானாவில் இயங்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். அடிப்படைக் கல்வியில் தாய்மொழியைத் தவிர்க்கக் கூடாது என்ற கல்வித் துறை சார்ந்த காரணங்களைத் தாண்டி, பிராந்திய மொழிகளைப் பாதுகாக்க வேண்டிய அரசியல் முக்கியத்துவமும் இந்த உத்தரவில் அடங்கியிருக்கிறது.

ஏற்கெனவே, ஏப்ரல் மாதத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் 10-ம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மலையாளம் ஒரு பாடமாக இருக்க வேண்டும், மலையாளத்தைக் கற்றுக்கொடுக்காத பள்ளிகளின் அனுமதி ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். மேற்கு வங்கப் பள்ளிகளிலும் வங்க மொழியைச் சமீபத்தில் கட்டாயமாக்கியிருக்கிறார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. பள்ளிகளில் வேறு எந்த மொழியை யும் கற்றுக்கொடுப்பதைத் தடுப்பதல்ல இந்த உத்தரவுகளின் நோக்கம். தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதே. மத்திய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகள் கொடுக்கும் பதிலடியாகவும் இந்த உத்தரவுகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

பள்ளியில் படிக்கும் ஒரு மாணவர் அவர் விரும்பும் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், அடிப்படைக் கல்வி தாய்மொழியில்தான் கற்பிக்கப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகிறார்கள். என்றாலும், கல்வி என்பது வேலைவாய்ப்புக்கான தகுதி மட்டுமே என்று பெற்றோர் கள் கருதும் வரையிலும் தாய்மொழிக் கல்வியை மாணவர்களுக்குக் கட்டாயமாக்க முடியாது. இந்நிலையில், குறைந்தபட்சம் தாய்மொழி ஒரு பாடமாகவேனும் கட்டாயமாகப் பள்ளிக் கூடங்களில் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

மொழியுரிமை குறித்து கர்நாடகம், கேரளம், தெலுங்கானா என்று நமது பக்கத்து மாநிலங்கள் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. ஆனால், மொழியுரிமைப் போராட்டத்தில் இந்தியாவிலேயே முன்னோடி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கும் தமிழகம், இந்த உரிமைப் போராட்டத்தில் பின்தங்கியிருக்கிறது என்பதுதான் உண்மை. காரணம், மொழியுரிமை என்பது மாநில உரிமையின் அடையாளம் என்கிற புரிதலும் அக்கறையும் தமிழக ஆட்சியாளர்களுக்கு அறவே இல்லை என்பதுதான். தாய்மொழியைக் கல்வியின் மொழியாக நிலை நிறுத்தவில்லையென்றால், அதன் எதிர்காலம் அஞ்சத்தக்கதாகிவிடும் என்பது கல்வியாளர்களின் கருத்து.

கேரளம், மேற்கு வங்கம், தெலங்கானா அரசுகள் விழித்துக்கொண்டுவிட்டன.

என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

 

இந்து

கேள்விக்கு மன்னிக்கவும். தமிழ்நாட்டில் அரசு ஒன்று இருக்கின்றதா?

வருவார் போவார் எல்லோரும் வாய்க்குவந்தபடி கதைத்துக்கொண்டு போகின்றார்கள்... அதுதான் கேட்டேன்.
ஒருவர் ஊழலை காரணம் காட்டி அரசியலுக்கு சுழி போடுகின்றார்.

அவரின் வயதை விட பழமை வாய்ந்தது இந்திய ஊழல் அரசியலும் வாழ்க்கையும் என்பது வேறு விடயம்.


இன்னொருத்தர்  இதுவரை காலமும் கோமாவில் இருந்து விழித்தவர் போல் சிஸ்டம் சரியில்லையென சொல்லி பரிகாசம் செய்கின்றார்.

அந்த இருவரும் தமிழினத்தை பற்றி நியாயபூர்வமாக வாய்திறந்ததாக தெரியவில்லை.

அல்லது....
திரைக்கதைகளுக்கு பஞ்சம் வந்துவிட்டதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

வன்னியன் சார்,

தமிழ அரசு ஒன்று ஏற்கனவே  சில ஆண்டுகளுக்கு முன்னர்,  இவ்வாறு தமிழ் மொழிக் கல்வியை கட்டாயம் ஆக்கி உத்தரவிட, பின் அதனை எதிர்த்து ஒருவ, நீதிமன்றம் செல்ல, நீதிமன்றமும் அவ் உத்தரவை தடை செய்தது என்று எப்பவோ வாசித்த மாதிரி ஒரு நினைவு. அப்படி நடந்ததா?

நீங்கள் சொல்வது சரிதான்..நிழலி தமிழக அரசின் உத்தரவிற்கு தனியார் பள்ளிகளின் உரிமையாளரகள், தனிநபர்கள் சேர்ந்து பொதுநல வழக்கு மூலம் உயர்நீதி மனறத்தில் தடை வாங்கியுள்ளனர். முதுகெலும்பு இல்லாத தமிழக அரசியல்வியாதிகள் அதன்பின் இதுபற்றி பேசுவதே இல்லை.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

சரி.... அதை, விட்டுத் தள்ளுங்க......
குஷ்பூ....  இட்டலி, என்ன விலை விக்குது?  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

குஷ்பூ....  இட்டலி, என்ன விலை விக்குது?  

தமிழைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நீங்கள் கேட்பது புரியவில்லை தமிழ்சிறி, இரண்டுக்கும் என்ன சம்மந்தம்..?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ராசவன்னியன் said:

தமிழைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நீங்கள் கேட்பது புரியவில்லை தமிழ்சிறி, இரண்டுக்கும் என்ன சம்மந்தம்..?

சினிமா...  அரசியல்  வாதிகள், அற்ற   தமிழ்நாடு. 
கடந்த... 50 வருடத்தில்  இல்லை.  வன்னியன்.

நாங்கள்... முயற்சித்தோம்..... 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சினிமா...  அரசியல்  வாதிகள், அற்ற   தமிழ்நாடு. 
கடந்த... 50 வருடத்தில்  இல்லை.  வன்னியன்.

நாங்கள்... முயற்சித்தோம்..... 

'தமிழகத்தில் அதிசயம் ஏதாவது நடந்துவிடாதா..?' என்ற நம்பிக்கை இன்னமும் உள்ளது..

ஈழத்தில் கிட்டிய அரிய சந்தர்ப்பத்தை ஒற்றுமையின்றி தவறவிட்டதுபோல் இங்கே நடக்காது என நம்புகிறேன். :unsure:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.