Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைத்தடி உதவியுடன் திருமணச் சந்தைக்கு வரும் அரேபிய ஷேக்குகள் #child-marriage

Featured Replies

கைத்தடி உதவியுடன் திருமணச் சந்தைக்கு வரும் அரேபிய ஷேக்குகள் #child-marriage

 

ரெஹானாவுக்கு 14 வயதே ஆகியிருந்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மகள். 2004-ம் ஆண்டு வளைகுடாவைச் சேர்ந்த 55 வயது ஷேக் ஒருவருக்கு சட்டவிரோதத் திருமணம் செய்துகொடுத்தனர். மும்பையில் வைத்துத் திருமணம் நடந்தது. பெற்றோர் ரெஹானாவைக் கணவரிடம் ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பினர். ஒரு மாத காலம்தான் ஆகியிருக்கும். மும்பை ரயில் நிலையத்தில் அனதாரவாகக் கிடந்தார் ரெஹானா. வயிற்றில் கரு உருவாகியிருந்தது. வீட்டுக்கு வந்த, ரெஹானாவின் கருவைப் பெற்றோர் கலைத்தனர். மீண்டும் விற்பனைக்குத் தயாரானார் ரெஹானா. 

ஹைதரபாத்தில் பிடிபட்ட ஷேக்குகள்

 

கத்தாரைச் சேர்ந்த 70 வயது ஷேக், இந்த முறை ரெஹானாவை வாங்கினார். கத்தாருக்குச் சென்ற ரெஹானாவை, சில காலம் தன்னுடன் வைத்துவிட்டு மற்றொருவருக்கு விற்பனை செய்தார் அவர். இப்படி 16 பேரிடம் கைமாறினார் 14 வயதே ஆகியிருந்த அந்தச் சிறுமி ரெஹானா அனுபவித்த ரணங்களை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது. 

ஹைதரபாத்தைப் பொறுத்தவரை சில குடும்பங்களில் மகள்கள் பணம் காய்ச்சி மரங்கள். இதற்கென்றே ஏஜென்டுகள் 50 பேர்  இருக்கிறார்கள். வளைகுடாவில் 15 பேரும் இங்கே 35 பேரும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். புரோக்கர்களில் 25 பேர் பெண்கள் என்பதும் கூடுதல் தகவல். ஏழ்மையான குடும்பத்தைக் கண்டறிந்து பணத்தாசைக் காட்டுவதில் பெண் புரோக்கர்கள்தான் கில்லாடிகளாம். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இந்தக் கொடுமை ஹைதரபாத்தில் நடந்து வருகிறது. சமீபத்தில்தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

புரோக்கர்கள் ஷேக்குகளை மூன்று விதமாகப் பிரித்துள்ளனர். ஆட்டோவில் செல்பவர் ஒரு பிரிவு. இவர்கள் சாதாரண லாட்ஜுகளில் தங்கிக் கொள்பவர்கள். அடுத்து காரில் செல்பவர்கள். இவர்கள் ஓரளவுக்குப் பணவசதி படைத்தவர்கள். அடுத்ததாக, இனோவா காரில் செல்பவர்கள். இவர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்குமளவுக்கு வசதியுள்ளவர்கள். ஷேக்குகளின் செல்வச் செழிப்பைப் பொறுத்து சிறுமிகளுக்கு ரேட் பேசப்படும். அதன்படி ரூ.50,000 முதல் 5 லட்சம் வரை சிறுமிகளுக்கு விலை பேசப்படுகிறது. முன்னதாக, சிறுமிகளை ஷேக்குகளிடம்  அழைத்துச் சென்று காட்டுவார்கள். என்ன ஏதுவென்றேத் தெரியாமல் சிறுமிகள் ஹோட்டல் அறைகளுக்குச் செல்வார்கள். ஷேக்குக்குப் பிடித்துப்போய்விட்டால், தாராளமாகப் பணத்தை வழங்குவார்களாம். அதில், குடும்பத்துக்கு ஒரு லட்சம் வழங்குவார்கள். மற்றவை, திருமணம் செய்து வைக்கும் மத குருக்கள், புரோக்கர்கள் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.

சவுதி, கத்தார், ஏமன், அமீரகம், சூடான், சோமாலியா நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாக ஹைதரபாத் வந்து சிறுமிகளை சட்டவிரோதமாகத் திருமணம் செய்கின்றனர். செப்டம்பர் 10-ம் தேதி போலீஸ் நடத்திய வேட்டையில் 11 ஷேக்குகள் பிடிபட்டனர். அதில், இருவர் நடக்கக்கூட முடியாமல் கைத்தடி உதவியுடன் நடந்தனர் என்பதுதான் காலக்கொடுமை!

சிறுமிகள் வளைகுடா நாட்டுக்குக் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக 'ஷாகீன்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் போராடி வருகிறது. இந்த அமைப்பின் தலைவர் ஜமீலா நிஷாத் கூறுகையில், ''கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்று 500-க்கும் மேற்பட்டச் சிறுமிகள் சட்டவிரோதமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இது கணக்கில் வந்தவை. 2016-ம் ஆண்டில் 100 சிறுமிகளுக்குச் சட்டவிரோதத் திருமணம் நடந்திருக்கிறது. கணக்கில் வராதது இதைவிட 10 மடங்கு அதிகமாக இருக்கும்'' எனச் சந்தேகிக்கிறார். 

 

பழம்பெருமை வாய்ந்த ஹைதராபாத் நகரம் அரேபிய ஷேக்குகளின் திருமணச் சந்தையாக மாறி வருவதுதான் வேதனை!

http://www.vikatan.com/news/tamilnadu/103828-hyderabad-becomes-bride-bazaar-for-rich-sheikhs.html

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

பணத்திற்காக 'நிக்கா' என்ற பெயரில் விற்கப்படும் பெண்களின் சோகக் கதை!

 
பணத்திற்காக அரபு ஆண்களுக்கு திருமண முடிக்கப்படும் முஸ்லிம் பெண்களின் சோகக் கதை!

வெளிநாட்டில் வசிக்கக்கூடிய அரபு ஆண்கள் ஹைதராபாத்தில் உள்ள ஏழை முஸ்லீம் குடும்பங்களை சேர்ந்த பெண்களை பணத்திற்காக திருமணம் செய்து பின்னர் மணமகளை நிற்கதியாக தவிக்கவிட்டுவிடுகின்றனர்.

பிபிசி தெலுங்கு பிரிவின் செய்தியாளர் தீப்தி பத்தினி இம்மாதிரியான திருமணங்களால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களை சிலரை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

செவிலியராக வேண்டும் என்பதே ஃபர்ஹீனுக்கு பெருங்கனவாக இருந்தது. ஆனால், ஜோர்டானை சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவருக்கு அவர் திருமணம் முடிக்கப்பட்ட போது, ஃபர்ஹீனுக்கு வெறும் 13 வயதே ஆனது.

''எனக்கு திருமணம் வேண்டாம் நான் படிக்க வேண்டும் என்று அப்போது கத்தினேன், கதறினேன், கெஞ்சினேன். ஆனால், எனது அழுகையை யாரும் பொருட்படுத்தவேயில்லை,'' என்கிறார் அவர்.

மணமகள் உடையில் ஃபர்ஹீனை அவரது தயார் அலங்காரப்படுத்தினார். திருமணத்திற்காக 25,000 ரூபாயும், அதன்பிறகு மாதம் 5,000 ரூபாயும் அவர்கள் வழங்குவார்கள் என்று ஃபர்ஹீனிடம் தாயார் கூறியுள்ளார்.

முஸ்லிம் மதகுரு ஒருவர் சடங்குகளை செய்துவைக்க ஜோர்டான் நபருடன் ஃபர்ஹீனுக்கு திருமணம் நடைபெற்றது.

பணத்திற்காக அரபு ஆண்களுக்கு திருமண முடிக்கப்படும் முஸ்லிம் பெண்களின் சோகக் கதை!

திருமணத்துக்கு பிறகு ஜோடிகள் தனிமையில் இருந்தபோதுதான், மணமகனின் முகத்தை ஃபர்ஹீன் முதல்முறையாக நேரில் பார்த்துள்ளார்.

தன்னைவிட 40 வயது மூத்தவர் என்பதை ஃபர்ஹீன் அப்போதுதான் உணர்ந்தார்.

''அன்றைய இரவு, நான் அழுது கொண்டேயிருக்கே அவன் என்னுடன் கட்டாயமாக பாலுறவு கொண்டான். அதன்பிறகு, மூன்று வாரங்கள் என்னை பாலியல் வல்லுறவு செய்தான்,'' என்று அந்த கொடிய நிமிடங்களை மீண்டும் நினைவுக்கூர்ந்தார் ஃபர்ஹீன்.

தன்னுடன் ஜோர்டானுக்கு வந்தது தனது மனைவிகள் மற்றும் பிள்ளைகளை பார்த்துகொள்ளமாறு ஃபர்ஹீன் கணவர் தெரிவித்துள்ளார். ஆனால், ஃபர்ஹீன் மறுத்துள்ளார்.

அதன்பிறகு, இருதரப்பிடையே ஒரு சமரசம் செய்யப்பட்டது. முதலில் தான் ஜோர்டானுக்கு சென்று அதன்பிறகு ஃபர்ஹீனுக்கு விசா அனுப்புவதாக ஃபர்ஹீன் கணவர் தெரிவித்துள்ளார்.

காலங்கள் உருண்டோடின ஃபர்ஹீனுக்கு விசா மட்டும் வரவில்லை. ஃபர்ஹீன் இன்னும் திருமணமானவர்தான் ஆனால் தன் கணவர் எங்கு இருக்கிறார் என்பது அவருக்கு தெரியாது.

''என்னுடைய பெற்றோராலே நான் ஏமாற்றப்பட்டேன். இந்த திருமண பந்தத்தை முடித்துகொள்ள கூட நான் எண்ணினேன் என்கிறார் ஃப்ர்ஹீன்.

''வயது மூத்த ஆணை திருமணம் செய்ததற்காக எனது உறவினர்கள் என்னை கேலி செய்தார்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று, கணவனின் ஆசைகளை திருப்திபடுத்த முடியாதததால்தால் அவர் என்னைவிட்டு சென்றுவிட்டதாகவும் வசைப்பாடினார்கள் '' என்கிறார் ஃபர்ஹீன்.

இந்த மோசடி திருமணம் குறித்து, கடந்த மூன்று ஆண்டுகளில் தெலங்கானா காவல் துறையிடம் பதியப்பட்ட 48 வழக்குகளில் ஃபர்ஹீன் வழக்கும் ஒன்று.

ஃபர்ஹீன் காவல்துறையில் புகார் ஒன்றை பதிவு செய்தார். ஆனால், கைதானது வெறும் தரகர் மட்டுமே. காரணம், ஷேக்குகள் இந்திய பிரஜைகளல்ல.

பணத்திற்காக அரபு ஆண்களுக்கு திருமண முடிக்கப்படும் முஸ்லிம் பெண்களின் சோகக் கதை!

ஹைதராபாத் காவல்துறையின் தெற்கு பகுதியின் துணை ஆணையராக இருக்கிறார் வி சத்தியநாராயணா.

''பாதிப்புகளுக்கு உள்ளாகும் பெண்கள் நேரடியாக எங்களை அணுகுவதில்லை. ஆனால், அவர்களை திருமணம் முடித்த ஷேக் மணமகளை தவிக்கவிட்டு சொந்த நாட்டிற்கு தப்பிச்சென்றவிட்ட பிறகுதான் பாதிக்கப்பட்ட பெண்கள் எங்களிடம் வருகிறார்கள். இது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாகும். பிறகு நாங்கள் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்புகொள்வோம். அப்படிப்பட்ட சூழலில் கூட தப்பிச்சென்ற ஷேக்குகளை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான சாத்தியம் என்பது மிகவும் குறைவு'' என்கிறார் அவர்.

அவர்கள் அவ்வாறு வரும்போது, அவர்களை திருமணம் முடித்த ஷேக் நாட்டில் இருப்பதில்லை.

கடந்த செப்டம்பர் மாதம், எட்டு ஷேக்குகளை கொண்ட குழு ஒன்றையும், 35 இடைத்தரகர்களையும் தெலங்கானா காவல்துறை கைது செய்துள்ளது.

80வயதுடைய முதியவர்கள் ஷேக்குகள் குழுவிலிருந்து குறிப்பிடத்தக்கது.

ஆனால், இதுபோன்ற திருமணம் மோசடிகள் பெரும்பாலானாவை காவல்நிலையத்திற்கு வருவதில்லை. காரணம், 12 முதல் 17 வயதுவரை உள்ள இளம் பெண்கள் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தபாஸம் திருமணம் முடித்த போது அவளுக்கு வயது 12 தான். ஆனால், 70 வயதுடைய முதியவருக்கு தபாஸம் திருமணம் முடிக்கப்பட்டார். திருமணத்திற்கு பிறகு ஹோட்டல் ஒன்றுக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட தபாஸம் ஒரு வாக்குறுதியுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதாவது, அவரது கணவர் விரைவில் விஸா அனுப்பி வைப்பார் என்பதே ஆகும்.

அடுத்த ஆண்டே தபாஸம் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால், வெளியுலகத்திற்கு பொறுத்தவரை அவர் தபாஸத்தின் தங்கை.

''ஒவ்வொரு முறையும் நான் பெற்றெடுத்த பிள்ளை என்னை அக்கா என்று கூப்பிடும்போது எனது இதயம் நொறுங்குகிறது, என்னுடைய மகள் என்னை அம்மா என்று கூப்பிடுவதற்காக ஏங்கிக் காத்துகிடக்கிறேன்,'' என்கிறார் தபாஸம்.

பெரும்பாலான ஷேக்குகள் ஓமன், கத்தார், செளதி அரேபியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளிலிருந்து வருகின்றனர்.

சில திருமணங்களில் சம்பந்தப்பட்ட ஆண் இந்தியாவுக்கு பயணப்பட வேண்டும் என்று அவசியமில்லை. 15 வயதுடைய ஸெஹரா விஷயத்தில் இப்படிதான் நடத்தது. ஆதரவற்றிருந்த ஸெஹரா தனது பாட்டியுடன் வளர்ந்து வந்தார்.

ஸெஹராவுக்கு தெரியாமலே அவளது புகைப்படத்தை உறவினர் ஒருவர் சமூக ஊடக தளம் ஒன்றில் விற்கும் நோக்கில் பயன்படுத்தியுள்ளார்.

''அன்றைய இரவே முஸ்லிம் மதகுரு ஒருவர் வீட்டிற்கு வந்து தொலைப்பேசி மூலம் திருமணத்தை நடத்தி வைத்தார். நான் யாருக்கு திருமணம் முடிக்கப்படுகிறேன் என்பது கூட எனக்கு தெரியாது,'' என்கிறார் ஸெஹரா.

விரைவில் ஸெஹராவுக்கு ஏமனிலிருந்து விசா வருகிறது. அங்கு, 65 வயதுடைய நபர் ஒருவர் ஸெஹராவின் கணவர் என்று அறிமுகப்படுத்தப்படுகிறார். பின்னர், ஸெஹராவை ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்து செல்கிறார்.

''வலுக்கட்டாயமாக என்னுடன் உடலுறவு கொண்டார்,'' என்கிறார் ஸெஹரா. பின்னர், மீண்டும் அழைத்து கொள்கிறேன் என்ற பொய்யான வாக்குறுதியுடன் ஹைதராபாத்துக்கே திருப்பியனுப்பப்பட்டார் அவர்.

பணத்திற்காக அரபு ஆண்களுக்கு திருமண முடிக்கப்படும் முஸ்லிம் பெண்களின் சோகக் கதை!

மோசடி திருமணங்களால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு உதவ ஷஹீன் என்ற அரசு சாரா நிறுவனத்தை தொடங்கினார் ஜமீலா நிஷாத்.

மூன்றில் ஒரு பகுதி குடும்பங்களில், வெறும் பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த பெண் வேலை செய்யும் முஸ்லீம் சுற்றுப்புறத்திலே திருமணம் முடிக்கப்படுவதாக கூறுகிறார்.

''இதுபோன்ற நிறைய குடும்பங்கள் கடும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவை நம்பியே குடும்பத்திலுள்ள பிள்ளைகள் இருக்கின்றனர்.'' என்கிறார் அவர்.

இதுபோன்ற மோசடி திருமணங்கள் பாலியல் தொழில் செய்வதற்கு சமம் என்கிரார் இஸ்லாமிய முனைவர் முஃப்தி ஹஃபீஸ் அப்ரார்.

''இளம் பெண்களை வெளிநாட்டிருந்து வரும் ஆண்களுக்கு திருமணம் முடிக்க பணம் வாங்கும் முஸ்லிம் மதகுருக்களால் இஸ்லாமிய சமூகத்துக்கு அவப்பெயர்'' என்கிறார் அவர்.

மோசடி திருமணங்களை நிறுத்துவதற்கு மசூதிகள் மூலம் உதவிப்பெற திட்டமிட்டு வருகிறார் தெலங்கானாவின் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அதிகாரியான இம்தியாஸ் அலி கான்.

தனது வாழ்க்கை பயணம் கடுமையானதாக இருந்தாலும், பெண்களுக்கான கல்வி உரிமை குறித்த முக்கியத்துவத்தை ஒருநாள் சமூகம் கொடுக்கும் என்பதை ஃபர்ஹீன் நம்புகிறார்.

''எனக்கு திருமணம் நடத்தியது பற்றி இப்போது எனது பெற்றோர் மிகுந்த வேதனையடைகின்றனர். இந்த புரிதல் பிறருக்கும் பரவினால் மற்ற பெற்றோர்களும் தங்கள் பெண் பிள்ளைகளை பணத்திற்காக திருமணம் முடிப்பதற்கு பதிலாக படிக்க வைப்பார்கள்'' என்கிறார் ஃபர்ஹீன்.

*கட்டுரையில் இடம்பெற்றுள்ள பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

http://www.bbc.com/tamil/41795882

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு கை குடுக்க அரபுலகம் இருக்கு எனும் கனவில் இருக்கும் முஸ்லிம்களுக்கு இந்த செய்தி தெரியாது போல் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, பெருமாள் said:

எங்களுக்கு கை குடுக்க அரபுலகம் இருக்கு எனும் கனவில் இருக்கும் முஸ்லிம்களுக்கு இந்த செய்தி தெரியாது போல் உள்ளது.

தெரிந்தால் என்ன? அவர்கள் மார்க்கத்தில் இதுவும் ஒன்றல்லவா.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

தெரிந்தால் என்ன? அவர்கள் மார்க்கத்தில் இதுவும் ஒன்றல்லவா.

அவங்க ஒரு மார்க்கமா.. பெண்களை நடத்திறதுக்கு மார்க்கத்தை துணைக்கு வைச்சிருக்கினம். ஆனால் அடிப்படையில்.. அதுங்க மனிதர்கள் என்பதை அடிக்கடி மறந்திடுதுங்க. tw_blush::rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.