Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸில் பயங்கரம்; ஈழத்தமிழ் அகதி பொலிஸாரினால் சுட்டுக்கொலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, tulpen said:

இலங்கையில் வாழும் சகல இன மக்களுக்கும் இலங்கை பொலிசாரின் வண்டவாளம் தெரியும்.சமீபததில் வித்தியா கொலையின் முக்கிய குற்றவாளியையே தப்ப வைக்க பொலிஸ் உத்தியோகததர் முயன்றதும் தெரியும்.லஞ்சததில் திளைபபதும் குறறவாளிகளுககு உறுதுணை புரிவதும் ஒன்றும் இரகசியம் அல்ல. ஆனால் எதிர்காலத்தில் இலங்கை பொலிசாரும் நேர்மையான காவல்துறையாக மாற வேண்டும் என்ற தங்களின் விருப்பததை பாராட்டுகிறேன். எனது விருபபும் அதுவே. எமது அடுத்த தலைமுறையிலாவது இலங்கை பொலிசார் நேர்மையான பொலிசாராக மாறுவார்கள் என்று நம்புவோம். (அதாவது எமது பாட்டனார் நம்பியது போல)

இருக்கலாம் ஒட்டு மொத்த பொலிசாரையும் எப்படி சொல்வது ஆரம்ப காலங்களில் எத்தனையோ தமிழ் பொலிசார்கள் இருந்தார்கள் அத்தனை பேரையும் விலகிவிட சொன்னார்கள் சிலர் விலகினார்கள் சிலர் சுடு பட்டு செத்து போனார்கள் அதன் பின் யாரும் பெரிதாக பொலிசில் சேரவில்லை தற்போது பல ஆயிரக்கணக்கானவர்கள் சேர்ந்து கொண்டுள்ளார்கள் காரணம் படித்து விட்டு தொழில் இல்லாத நிலை யாழ்ப்பாணத்திற்கு கூட நியமிக்க தமிழ் பொலிசார் இல்லாமல் சிங்கள பொலிசாருக்கு தமிழ் கற்பிக்கிறார்கள் தற்போதும் கூட பொலிஸ் சேவைக்கு தமிழ் இளைஞ்சர்களுக்கு பயிற்ச்சி பெற கடிதம் வந்துள்ளது அவர்கள் சேரவேண்டும் சேர்ந்து தமிழர் பகுதிகளில் சேவை செய்ய வெளிக்கிடும் போது சில பிரச்சினைகளை இலகுவாக கையாளலாம் 

இலங்கையில் அரசியல் தலையீடே எங்கும் அது காவல் துறைக்கும் உள்ளயும் உள்ளது ஆனால் அதையும் தாண்டி சில நல்லவ்ர்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்களையும் மக்கள் தவறுதலான சிந்தனையில் நோக்குவதால் அவர்களும் தப்பாக தவறு செய்பவராக தெரியலாம் நான் அவர்களுக்கு வக்காளத்து வாங்கவில்லை   தமிழ் பொலிசார் அதிகம் இருந்தால் ஒரு அவதானிப்பாக இருக்கலாம் பல் வேலைகளை இன்னும் இலகுவாக்கலாம் 10 பேரில் ஐந்து பேர் இருந்தால் தவறு செய்பவன் பயப்படலாம் சொல்லிவிடுவார்கள் என்று .

பொலிசாரை தவறாக பயன் படுத்த முனைவதில் மக்களும் சளைத்தவர்கள் அல்ல   தெரிந்தும் தவறு செய்து விட்டு தப்பித்து பிழைத்து கொள்ள அவருக்கு கையூட்டல்கள் இன்னும் இதர பல சொகுசுக்களை செய்வதால் அவர் கடமை செய்ய தவறுகிறார் ( ஆசை இல்லாத மனம் எது அது காக்கிசட்டைக்குள்ளும்  உண்டு )

எமது பாட்டனார்கள் பலரை நம்பினார்கள் அவர்கள் நம்க்கு தகடு தரவில்லையா இப்போது உள்ளவர்கள் ஏதோ பறிச்சு கொடுத்திருக்கிறார்கள்  போல் சொல்கிறீர்கள்  இவர்கள் இருக்கும் வரைக்கும்  நமக்கு நமது மக்களுக்கும் ????...................................

  • தொடங்கியவர்

சுவிஸில் கொல்லப்பட்டவருக்கு நீதி வேண்டும்- அனந்தி

 
சுவிஸில் கொல்லப்பட்டவருக்கு நீதி வேண்டும்- அனந்தி
 

சுவிட்­சர்­லாந்­தில் பொலி­ஸா­ரின் துப்­பாக்­கிச் சூட்­டுக்கு இலக்­காகி ஈழத்­த­மி­ழர் ஒரு­வர் உயி­ரி­ழந்­துள்­ளார். கடல்­க­டந்த நிலை­யி­லும் அநி­யா­ய­மான உயிர்ப்­ப­றிப்­பு­கள் தமி­ழர்­க­ளைத் துரத்­து­கின்­றன.

இது­தொ­டர்­பில் முழு­மை­யான விசா­ரணைகள் நடத்­தப்­ப­ட­வேண்­டும் என வடக்கு மாகாணசபை மக­ளிர் விவ­கார அமைச்­சர் அனந்தி சசி­த­ரன் தெரி­வித்­தார்.

இது­தொ­டர்­பாக அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

அடைக்கலம் கோரி சுவிட்­சர்­லாந்­தில் தஞ்சம் புகுந்­தோர் பிரி­சாகோ நக­ரில் உள்ள முகா­மில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­னர். அங்­குள்ள ஈழத்­த­மி­ழர்­க­ளி­டையே தக­ராறு ஏற்­பட்­டுள்­ளது. முறைப்­பாட்­டின் அடிப்­ப­டை­யில் விசா­ர­ணைக்­காக பொலி­ஸார் சென்­றுள்­ள­னர்.

அப்­போது பொலி­ஸா­ரு­டன் சென்ற சக ஈழத்­த­மி­ழர்­கள் இரு­வ­ரை­யும் கத்­தி­கொண்டு தாக்க முற்­பட்­டுள் ள­னர். அப்­போது பொலி­ஸார் துப்­பாக்­கிப் பிர­யோ­கம் செய்­த­னர்.

இதில், புதுக்­கு­டி­யி­ருப்பு 6 ஆம் வட்­டா­ரம், ஆனந்­த­ பு­ரம் பகு­தி­யைச் சேர்ந்த 38 வய­தான சுப்­பி­ர­ம­ணி­யம் ஹரன் என்­ப­வர் உயி­ரி­ழந்­துள்­ளார் என அந்­நாட்­டுப் பொலி­ஸா­ரால் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த சம்­ப­வத்­தின் பின்­னணி ஒரு­பக்­க­ மி­ருக்­கட்­டும். தாக்­கு­தல் நட­வ­டிக்­கைக்கு தற்­காப்பு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. நேர­டி­யா­கவே துப்­பாக்­கிப் பிர­யோ­கம் செய்­யப்­பட்­டுள்­ளது.

மனித உரி­மை­கள் பேர வைத் தலைமையகம் அமைந்­தி­ருக்­கும் சுவிட்­சர் லாந்து நாட்­டில் இவ்­வாறு நடந்­துள்­ளமை மிக­மோ­ச­மான முன்­னு­தா­ர­ண­ மாக அமைந்­துள்­ளது.

உயி­ரி­ழந்­த­வ­ரது தாக்­கு­தல் முயற்­சிக்கு இலக்­கா­ன­தாக கூறப்­பட்­ட­வர்­கள் காயப்­ப­ட­வில்லை. எனவே, இச்­சம்­ப­வம் தொடர்­பில் விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டும்.

அக­தி­க­ளாக தஞ்­ச­ம­டை­யும் ஈழத்­த­மி­ழர்­களை மனி­தா­பி­மா­னத்­து­டன் நடத்­த­வேண்­டும். கடல்­க­டந்த தேசங்­க­ளில் இவ்­வா­றான அநி­யாய உயி­ரி­ழப்­பு­கள் இனி­யும் நடக்­கக்­கூ­டாது – எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.

http://newuthayan.com/story/36706.html

  • கருத்துக்கள உறவுகள்

இதில துப்பாக்கி பாவிச்சது சந்தேகத்தை உண்டு பண்ணுது. கத்தியோட வாறவரை.. நிறுத்த.. மின் அழுத்த துப்பாக்கி பாவிச்சிருக்கலாம். அதுக்கான வசதி எல்லாம் சுவிஸ் பொலிஸிடம் உண்டு.

image.jpeg.03f25d0ff7de2dfa426197d79ba5c905.jpeg

எனவே.. இது ஒரு கொலை.

இதனை சட்ட ரீதியில் எதிர்கொண்டு மரணமானவரின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க உதவ வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nedukkalapoovan said:

இதில துப்பாக்கி பாவிச்சது சந்தேகத்தை உண்டு பண்ணுது. கத்தியோட வாறவரை.. நிறுத்த.. மின் அழுத்த துப்பாக்கி பாவிச்சிருக்கலாம். அதுக்கான வசதி எல்லாம் சுவிஸ் பொலிஸிடம் உண்டு.

image.jpeg.03f25d0ff7de2dfa426197d79ba5c905.jpeg

எனவே.. இது ஒரு கொலை.

இதனை சட்ட ரீதியில் எதிர்கொண்டு மரணமானவரின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க உதவ வேண்டும்.

 நெடுக்கு ஷ்யாவில் எனக்கு தெரிந்த ஒருவர் சொன்னார் சில நேரம் தோட்டாக்களுக்கு பதிலாக வலை போல் ஆள்மீது விழுந்து ஒட்டிக்கொள்ளும் துப்பாக்கிகளும் உள்ளதாக அது சுவிசில் இல்லையா ?? :rolleyes::unsure:

  • தொடங்கியவர்

புதுக்­கு­டி­யி­ருப்பு இளை­ஞ­னின் குடும்­பத்­தி­னர் சுவிற்­ச­ர்லாந்­தில்

 
புதுக்­கு­டி­யி­ருப்பு  இளை­ஞ­னின் குடும்­பத்­தி­னர்  சுவிற்­ச­ர்லாந்­தில்
 

சுவிற்­ச­ர்லாந்­தில் சுட்­டுக்கொல்­லப்­பட்ட புதுக்­கு­டி­யி­ருப்பு இளை­ஞ­னின் குடும்­பத்­தி­னர் நேற்று முன்­தி­னம் சுவிற்­ச­லாந்­துக்­குச் சென்­றுள்­ளனர்.

சுவிற்­ச­ர்லாந்­தில் வன்­மு­றை­யில் ஈடு­பட முயன்ற குற்­றச்­சாட்­டில், சுவிஸ் பொலி­ஸா­ரி­னால் அண்­மை­யில் இளை­ஞர் ஒரு­வர் சுட்­டுக் கொல்­லப்­பட்­டி­ருந்­தார்.

சுட்­டுக் கொல்­லப்­பட்­ட­வர் முல்­லைத்­தீ­வுப் புதுக்­கு­டி­யி­ருப்­பைச் சேர்ந்த சுப்­ர­ம­ணியம் கரன் என அடை­யா­ளம் காணப்­பட்­டார்.

இந்த நிலை­யில் அவ­ரது இறு­திக்­கி­ரி­யை­ மற்­றும் விசா­ர­ணை­கள் நேற்று அங்கு இடம்­பெற்­றன.

இதில் பங்கு கொள்­வ­தற்கே உயி­ரி­ழந்த இளை­ஞ­னின் குடும்­பத்­தி­னர் அங்கு சென்­றுள்­ளனர். அவர்­கள் நேற்று முன்­தி­னம் மாலை கட்­டு­நா­யக்க விமா­ன­ நி­லை­யத்­தி­லி­ருந்து சுவிஸ் தூத­ரக அதி­கா­ரி­க­ளு­டன் இணைந்து சுவிற்­ச­ர்லாந்­துக்கு பய­ண­மா­கி­னர்.

அங்­குள்ள தமிழ்­மக்­கள் சிலர் இவர்­களை வர­வேற்று ஆறு­தல்­ப­டுத்தி உள்­ள­னர். சுட்டுக்கொல்­ல­பட்ட கர­னின் இறு­தி­கி­ரி­யை­கள் நேற்று சுவிற்சர்லாந்து லுனாகோ ரிகினோ ( LUGANO, TICINO) எனும் பகு­தி­யில் நடை­பெற்­றது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

http://newuthayan.com/story/38959.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.