Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் தியாகம் ஐ.நாவில் காட்டிக்கொடுப்பு- இடைக்கால அறிக்கை ஆயுதமாக மாறியது

Featured Replies

பிரபாகரனின் தியாகம் ஐ.நாவில் காட்டிக்கொடுப்பு- இடைக்கால அறிக்கை ஆயுதமாக மாறியது

 

போர்க்குற்றம், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு ஆகிய விசாரணைகளில் இருந்து நல்லாட்சி அரசாங்கம், இலங்கை அரசு என்ற கட்டமைப்பை சாணக்கியமாக மீட்டுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிப்பதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் கூறினார்.

பிரபாகரனின் தியாகம் ஐ.நாவில் காட்டிக்கொடுப்பு- இடைக்கால அறிக்கை ஆயுதமாக மாறியது

சட்டத்தரணிகளான சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரை பயன்படுத்தி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாணக்கியமாக இலங்கை அரசு என்ற கட்டமைப்பில் இருந்த இரத்தக் கறையை நீக்கிவிட்டார் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் கூறினார்.

இலங்கை நாடாளுமன்றக் குழுவுடன் அமெரிக்காவுக்குச் சென்ற சட்டத்தரணி சுமந்திரன், ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் முன்னிலையில் புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கையில் முன்னேற்றம் இருப்பதாகவும் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என நம்பிக்கையும் வெளியிட்டுள்ளார். ஜெனீவா மனித உரிமைச் சபைக்கும் சுமந்திரன் விளக்கமளித்துள்ளார்.

ஆனால், இவ்வாறு ஐ.நாவில் நம்பிக்கை வெளியிட்டதை சுமந்திரன் ஒப்புக்கொள்ளப் போவதில்லை எனவும் கூறிய விமர்சகர்கள், வாக்குகளை பெறுவதற்காக மக்கள் முன்னிலையில் வீரவசனங்களையே, அவர் பேசுவார் எனவும் சுட்டிக்காட்டினர்.

ஆகவே இரட்டை முகம் கொண்ட தமிழ் பிரதிநிதிகளை வைத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வை அரசாங்கம் ஏற்படுத்தி விட்டதாக, சர்வதேச அரங்கில் அறிவித்துவிட்டார் என விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

1965ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்த சில தமிழ் தலைமைகளின் வழித்தோன்றல், 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் தமிழரசுக் கட்சி என்ற ஆதிக்க சக்தியாக உருவெடுத்து, 70 ஆண்டுகால அரசியல் போராட்டத்தையே சர்வதேச அரங்கில் காட்டிக் கொடுத்துள்ளதாகவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

30 ஆண்டுகால அஹிம்சைப் போராட்டத்தின் தோல்வி, ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது. அந்த 30 வருட ஆயுதப் போராட்டத்தில் சரிபிழை இருக்கலாம். ஆனாலும் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்கால் அழிவுடன், 70 ஆண்டுகால அரசியல் போராட்டத்தை சர்வதேச அரங்கில் நியாயப்படுத்தக்கூடிய ஆதாரங்கள் இருந்தும் தமிழ் பிரதிநிதிகளினால் காட்டிக் கொடுக்கப்பட்டமை கொடூரமானது எனவும் விமர்சகர்கள் கூறியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

குறிப்பாக புதிய யாப்புக்கான இடைக்கால அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் சுமந்திரன் நியாயப்படுத்தியமை முள்ளிவாய்க்கால் அழிவை விடக் கொடூரமான செயல் என்றும் விமர்சகர்கள் கவலை வெளியிட்டனர்.

ஸ்பெயினில் இருந்து கற்றலோனியா, ஈராக்கில் இருந்து குர்திஸ்த்தான் ஆகிய பிராந்தியங்களில், மக்கள் ஒர் அணியாக ஒன்று கூடி ஜனநாயக வழியில் சுதந்திர தாயகத்தை எவ்வாறு உருவாக்கினார்களோ, அதை விட இன்னும் சுலபமான முறையில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேசம் அங்கீகரிக்கக்கூடிய வழிவகைகள் இருந்தும் அது தவறவிடப்பட்டுள்ளது.

பிரபாகரனும் போராளிகளும் செய்த தியாகம் ஐக்கிய நாடுகள் சபையில், புதிய யாப்புக்கான இடைக்கால அறிக்கை என்ற ஆயுதத்தினால் குத்திக்குதறப்பட்டுள்ளது. அந்த ஆயுதத்தை இயக்கியவர் பிரதமர் ரணில். அவர் 2002ஆம் ஆண்டு அவ்வாறான ஆயுதத்தை இயக்க ஆரம்பித்து 2017இல் வெற்றி கண்டுள்ளார் என விமர்சகர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.

ஆகவே தமிழர்களை யுத்தத்தில் மஹிந்த ராஜபக்ச 2009இல் வெற்றிகொண்டார். அரசியல் ரீதியாக பிரதமர் ரணில் 2017இல் வெற்றி கொண்டார் என விமர்சகர்கள் எடுத்துக்கூறியுள்ளனர்

https://news.ibctamil.com/ta/politics/Tamil-political-struggle-betrayal

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் ரணில் ஒரு சாணக்கியர் என்பதை நம்ப முடியாது. சிங்களத் தலைவர்களைச் சாணக்கியர் என்று பெயரெடுக்க வைப்பவர்களே தமிழர்கள்தான்.

இன்றும் சிங்கள சனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும் சட்டத்தரணிகளில் ஒருவர்தான் சுமந்திரன் என்ற தமிழன். தலைவனாகத் தமிழர்களால் தேர்தெடுக்கப்பட்டவர்......

பாலுக்குப் பூனையைக் காவல்வைத்துவிட்டுப் புலம்புவதில் பயனில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Paanch said:

பிரதமர் ரணில் ஒரு சாணக்கியர் என்பதை நம்ப முடியாது. சிங்களத் தலைவர்களைச் சாணக்கியர் என்று பெயரெடுக்க வைப்பவர்களே தமிழர்கள்தான்.

இன்றும் சிங்கள சனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும் சட்டத்தரணிகளில் ஒருவர்தான் சுமந்திரன் என்ற தமிழன். தலைவனாகத் தமிழர்களால் தேர்தெடுக்கப்பட்டவர்......

பாலுக்குப் பூனையைக் காவல்வைத்துவிட்டுப் புலம்புவதில் பயனில்லை.

அப்போ வாக்கு போட்ட மக்கள் அனைவர்களும் முட்டாள்களா என்று முந்தியே ஒரு கூட்டம் கிளம்பினவை ....
பரிதாபம்  என்னவென்றால் அவர்களில் முக்கால்வாசி இப்போது யாழிலேயே இல்லை.
சுமந்திரனின் அதிரடி நடவடிக்கைகளை பார்த்து அவர்களே வியர்த்து விறுவிறுத்து போய் நிக்கினம் 

  • கருத்துக்கள உறவுகள்

இவரை தமிழர்கள் தெரிந்தெடுக்கவில்லை. தமிழரின் ஒற்றுமையை சீர்குலைக்க மஹிந்தவால் களமிறக்கப்பட்ட கறுப்பாடு, முகவர். இவரை ரணில் என்ற நரி சாமர்த்தியமாக பயன்படுத்திக்கொண்டது. இதற்கு சம்பந்தன் என்கின்ற தலையாட்டி துணை வேற. இப்ப தெரியுதா ஏன் இவர்கள் முதலமைச்சரை பதவியிலிருந்து விரட்டுகிறார்கள் என்று. காசுக்காக பெற்ற தாயையே கூட்டிக்குடுக்கிற நாசக்காரக்கூட்டம். கறையான் புத்தெடுக்க பாம்புகள் குடிகொண்டு இருக்குதுகள். செக்கு மாடு மாதிரி அறுபது வருடமாய் நிண்ட இடத்திலேயே நிண்டு சுத்திகொண்டு ஏதாவது அதிலிருந்து அரங்கி விடுமோ என்கின்ற பயத்தில் மற்றவையை குற்றம் சுமத்துவதே தொழில். இதுகளெல்லாம் தமிழனுக்கு கிடைத்த சாபக்கேடு. தமிழனை எழும்ப முடியாமல் விழுத்தின சந்தோஷத்தில  சம்பந்தனுக்கு இனி  நல்ல மரணம் வரும்.  இதெல்லாம் ராஜதந்திரமாம். சுமந்திரனை கட்சிக்குள்  இழுத்த  சம்பந்தனை விட வேறொரு   முட்டாள் இருக்க முடியாது. . மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் பிழை விட்டால்  அதை மக்களுக்கு தெரியப்படுத்துவதே முறை. அமெரிக்காவிற்கும், அவுஸ்ரேலியாவுக்கும் கப்பலேறிப்போய் விளக்குது. இதுக்கு குடுக்கிற விளக்கம் ராஜதந்திரம்.  அதுக்கு பூம் பூம் மாடுமாதிரி தலையாட்டுது. இது ஒரு தலைவர். வாக்குப்போட்ட மக்கள் தெருத்தெருவாய் அலைய மியன்மார் அகதிகளுக்காய் அழுகுது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.