Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிறிஸ் கெய்ல் தனது ஆணுறுப்பை காண்பித்ததால் குழந்தை போன்று கதறி அழுதேன் – மேற்கிந்திய அணியின் முன்னாள் மசாஜ் ஊழியர் நீதிமன்றில் சாட்சியம்

Featured Replies

கிறிஸ் கெய்ல் தனது ஆணுறுப்பை காண்பித்ததால் குழந்தை போன்று கதறி அழுதேன் – மேற்கிந்திய அணியின் முன்னாள் மசாஜ் ஊழியர் நீதிமன்றில் சாட்சியம்

Chris-keil.jpgமேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் தனது ஆணுறுப்பை தன்னிடம் காண்பித்தபோது தான் குழந்தை போன்று கதறி அழுததாக அவ்வணியின் பெண் மசாஜ் ஊழியராக பணியாற்றிய யுவதி ஒருவர் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

லியனே ரஸல் எனும் இந்த யுவதி, அவுஸ்திரேலிய நீதிமன்றமொன்றில் நடைபெறும் வழக்கு விசாரணையில் சாட்சிமளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் ஒருநாள் சர்வதேச உலக கிண்ணப் போட்டிகள் நடை பெற்றபோது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினருக்கான மசாஜ் ஊழியராக பணி யாற்றியவர் லியனே ரஸல்.

அப்போது ஒருநாள் மேற்கிந்திய அணியினரின் அறைக்கு தான் சென்றபோது, தனக்கு கிறிஸ் கெய்ல் ஆணுறுப்பைக் காட்டினார் என லியனே ரஸல் தெரிவித்திருந்தார்.

அவுஸ்திரேலியாவின் தி ஏஜ் மற்றும் கென்பரா டைம்ஸ் பத்திரிகைகள் இது தொடர்பான செய்தி களை வெளியிட்டிருந்தன.

மேற்படி குற்றச்சாட்டை நிராகரித்த கிறிஸ் கெய்ல், அச் செய்திகளை வெளியிட்ட பத்திரிகை களுக்கு எதிராக மானநஷ்ட வழக்குத் தொடுத்தார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள நீதிமன்றமொன்றில் இவ் வழக்கு விசாரணை நேற்று முன்தினம் ஆரம்பமாகியது.

இவ் விசாரணையின்போது, லியனே ரஸல் சாட்சியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘துவாய் (டவல்) ஒன்றைத் தேடி நான் சென்றபோது கிறிஸ் கெய்லை நான் எதிர்கொண்டேன். அப்போது ‘என்ன தேடுகிறீர்கள்’ என கிறிஸ் கெய்ல் கேட்டார். நான் ‘ஒரு டவல்’ என பதிலளித்தேன்.

அதையடுத்து, கிறிஸ் கெய்ல் தனது இடுப்பிலிருந்த டவலை கழற்றி கீழிறக்கினார். அவரின் ஆணுறுப்பின் மேல் அரைப்பகுதி எனக்குத் தெரிந்தது.

இதனால் நான் மிகவும் வேதனையடைந்தேன். ஒரு குழந்தை போன்று கதறி அழுதேன்’ எனத் தெரிவித்தார்.

பிக் பாஷ் கிரிக்கெட் போட்டியொன்றின் பின்னர் தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவரை மதுபானம் அருந்த அழைத்ததுடன், வெட்கப்பட வேண்டாம் பேபி எனக் கூறியமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அதன் பின்னரே மசாஜ் ஊழியர் லியனே ரஸல் ஊடகங்களிடம் தொடர்புகொண்டு தனக்கு ஏற்பட்ட அவலத்தைத் தெரிவித்தார்.

இதையடுத்தே பத்திரிகைகளுக்கு எதிராக கிறிஸ் கெய்ல் வழக்குத் தொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
கிறிஸ் கெய்ல் தொடர்பான தாம் வெளியிட்ட செய்திகள் உண்மையானவை எனவும் பொது மக்களின் கரிசனையை கருத்திற்கொண்டு இச் செய்திகளை வெளியிட்டதாகவும் தி ஏஜ் மற்றும் கென்பரா டைம்ஸ் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

கிறிஸ் கெய்ல் தொடுத்த மானநஷ்ட வழக்கு விசாரணை தொடர்கிறது.

VRA-20171025-m06-MED.jpg

http://metronews.lk/?p=16336

  • தொடங்கியவர்

ஆஸி. பெண்ணிடம் ஆபாசமாக நடந்த வழக்கு.. ஸ்மித் சாட்சியத்தால், கிறிஸ் கெயில் வெற்றி!

 

சிட்னி : 2015ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது தன்னைப்பற்றிய அவதூறு செய்தி வெளியிட்டதற்காக ஆஸ்திரேலிய பத்திரிகை நிறுவனத்திற்கு எதிரான தெற்கு வேல்ஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தார் மேற்க்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெய்ல்.

இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில், அந்த நிறுவனம் போதிய ஆதாரங்களை அளிக்கத்தவறிவிட்டது என்று நீதிபதி குறிப்பிட்டார்.

இனிமேலும் இதுபோன்ற செய்திகள் வெளியிட்டால் பத்திரிகையின் நம்பகத்தன்மை குறித்த கேள்வி எழுப்பபடும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.

பெண் புகார் குறித்து செய்தி

 

பெண் புகார்

குறித்து செய்தி 2015ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்தது. அப்போது அங்கு தங்கியிருந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் தனக்கு மசாஜ் செய்ய வந்த ரஸ்ஸல் என்கிற பெண்ணிடம், அவரது விருப்பமின்றி நிர்வாணமாக உடலைக் காட்டினார் என்று செய்தி வெளியானது.

மசாஜ் பெண் அளித்த புகார்

மசாஜ் பெண் அளித்த புகார்

மேலும் தனக்கு சில கிரிக்கெட் வீரர்கள் தொல்லை கொடுத்ததாகவும், அதனால் மன உளைச்சல் அடைந்த அவர் பத்திரிகை நிறுவனத்தை தொடர்பு கொண்டு இந்த புகாரை அளித்தார். அவர்கள் வெளியிட்ட செய்திக்கு அப்போதே மறுப்பு தெரிவித்தார் கிறிஸ் கெய்ல்.

நான் நல்லவன் - கெய்ல் மகிழ்ச்சி

நான் நல்லவன் - கெய்ல் மகிழ்ச்சி

இதுகுறித்து கிறிஸ் கெய்ல் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, ‘ இந்த வழக்கில் என்னுடைய வாதத்தை நிறைவு செய்வதற்காகவே ஜமைக்காவில் இருந்து வந்து இருக்கிறேன். என்னைப் பற்றி அந்த நிறுவனம் வெளியிட்ட செய்தி என்னை நிலைகுலையவைத்துவிட்டது. இன்று அதற்கான நீதி எனக்குக் கிடைத்துள்ளது. அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்று அவர் குறிப்பிட்டார்.

அபராதத் தொகை அறிவிப்பு


அபராதத் தொகை அறிவிப்பு

வழக்கில் கிறிஸ் கெய்லுக்கு ஆதரவாக தீர்ப்பு மட்டுமே வெளியாகி இருக்கிறது. இன்னும் அபராதத்தொகை அறிவிக்கப்படவில்லை. அது நாளை அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்த கருத்து தெரிவித்த பேர்பேக்ஸ் நிறுவன அதிகாரிகள் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்றும், மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

Read more at: https://tamil.oneindia.com/news/sports/cricket/chris-gayle-wins-defamation-case-against-australian-media-publication-300096.html

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா கண்டவுடன் வேதனைப்பட்டு அழுதிட்டாள் என்றாள்?
என்னப்பா இது.

அழுதபிள்ள பால்குடிக்கும் என பெரியவர்கள் கூறுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பாலுக்கு பாலகன் 
வேண்டி அழுதிட ........

பால்கடலை ஈராமால் 
இருந்துள்ளார் பிரான்.

அப்பிடி என்றுதான் கொழும்பான் ...
சொல்ல வருகிறார் என்று நினைக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Maruthankerny said:

பாலுக்கு பாலகன் 
வேண்டி அழுதிட ........

பால்கடலை ஈராமால் 
இருந்துள்ளார் பிரான்.

அப்பிடி என்றுதான் கொழும்பான் ...
சொல்ல வருகிறார் என்று நினைக்கிறேன் 

என்ன கண்டு பிடிப்பு  மருதர் tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.