Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணி விரைவில் இணைந்துகொள்ளும்

Featured Replies

தமிழரசு கட்சியுடன் சேர்ந்து இயங்க மாட்டோம். – ஈ.பி.ஆர்.எல்.எப். அறிவிப்பு:-

 

sures1_CI.jpg

புதிய அரசியல் சாசனம் தொடர்பில் தமிழரசு கட்சி எடுத்த முடிவுவானது , தமிழ் மக்களின் ஆணையை மீறிய செயலாகும். அதனால் இனியும் அவர்களுடன் சேர்ந்து இயங்க முடியாது. அவர்கள் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடவும் முடியாது என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.பொது நூலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

தமிழ் அரசுக் கட்சி மக்களின் ஆணையை முழுமையாக உதாசீனம் செய்துவிட்டது. அதனால் புதிய முன்னணியின் அவசியத்தை ஈ.பி.ஆர்.எல்.எப் கடந்த சில வருடங்களாக வலியுறுத்தி வருகின்றது. அதனை இன்று அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர்.

தமிழரசு கட்சி , வடக்கு கிழக்கு இணைப்பு , சமஸ்டி போன்ற விடயத்தையே கைவிட்டு விட்டது. அதனால் தமிழ் மக்களின் உரிமைகளை வென்று எடுக்க புதிய முன்னணியும், புதிய தலைமையும் தேவை எனும் விடயம் இன்று அனைவராலும் உணர்ந்து கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் வந்த அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டு உள்ளனர். தமிழரசு கட்சி இன்று நேற்று அல்ல நீண்ட காலமாக எதேசை காரணமாக முடிவெடுத்து வருகின்றார்கள்.

கூட்டமைப்புடன் இணைந்து முடிவெடுப்பதில்லை ஒரு சிலரே முடிவு எடுத்து விட்டு அதனை மற்றவர்களுக்கு திணிக்கின்றார்கள். ஒற்றையாட்சியை ஏற்றுகொள்ள கூடிய சம்பந்தன் மாதிரியான தலைவர் இனி தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வர மாட்டார் என சிங்கள தலைவர்கள் பாராட்டும் நிலையில் தான் சம்பந்தன் இருக்கின்றார். இந்த அரசியல் சாசனம் இன்னமும் மோசமாக பாதிக்கப்பட போகின்றது. தமிழ் மக்களின் உரிமை என்ன ஆக போகின்றது என தெரியவில்லை.

அந்த நிலையில் தமிழ் மக்கள் உரிமைகளை வென்று எடுக்க புதிய கூட்டணி உருவாக உள்ளது. அது பொது சின்னத்துடன் ,பொது பெயருடன் காலத்தின் தேவைக்காக உருவாகும். வடமாகாண முதலமைச்சருக்கு எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எனும் விருப்பம் ஆதங்கம் இருக்கலாம். அது தவறும் இல்லை. அது அவர் விருப்பம்.

ஈ.பி.ஆர்.எல்.எப்.இனியும் சேர்த்து தமிழரசு கட்சியுடன் இயங்க முடியாது. ஏனெனில் தமிழசு கட்சி இடைக்கால அறிக்கை , அரசியல் சாசனம் தொடர்பில் அவர்கள் எடுத்த முடிவு தமிழ் மக்கள் ஆணைக்கு எதிரானது. அதனாலையே அவர்களுடன் சேர்ந்து இயங்க முடியாது.

இனியும் தமிழரசு கட்சியுடன் சேர்ந்து இயங்கவும் முடியாது. அவர்கள் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடவும் முடியாது. என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/49510

  • தொடங்கியவர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணி விரைவில் இணைந்துகொள்ளும்

 

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணி விரைவில் இணைந்துகொள்ளும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ரெலோ கட்சியின் செயலாளர்நாயகம் என்.சிறிகாந்தா தெரிவித்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பானத்திலும் புலம்பெயர்ந்த தமிழர் மத்தியிலும் முனைப்புப் பெறுகிற  அழுத்த அரசியல் அவசியமில்லையென்று சொல்லமாட்டேன். ஆனால் அழுத்த அரசியல் வாதிகளை எதிரிகள் சாதகமாகப் பயன்படுத்த முயல்வது வரலாறு. தமிழர்மீது அக்கறையிருந்தால்  வடக்கில் மட்டும் உங்கள் அழுத்த அரசியலை செய்யுங்கள். சிங்கள இனவாத சக்திகள் விரும்புவதுபோல சம்பந்தருக்கு எதிராக போட்டிபோட்டு தமிழர் வாக்குகளை பிரித்து திருமலையில் தமிழர் பிரதிநிர்கித்துவத்தை குறைத்ததுபோன்ற காரியங்களில் ஈடுபடாதீர்கள். தயவு செய்து கிழக்கு மாகாணத்தைப் பிழவு படுத்தாதீங்க.  அழுத்த அரசியல் வடமாகாணத்துக்குள் வைத்துக்கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, poet said:

யாழ்ப்பானத்திலும் புலம்பெயர்ந்த தமிழர் மத்தியிலும் முனைப்புப் பெறுகிற  அழுத்த அரசியல் அவசியமில்லையென்று சொல்லமாட்டேன். ஆனால் அழுத்த அரசியல் வாதிகளை எதிரிகள் சாதகமாகப் பயன்படுத்த முயல்வது வரலாறு. தமிழர்மீது அக்கறையிருந்தால்  வடக்கில் மட்டும் உங்கள் அழுத்த அரசியலை செய்யுங்கள். சிங்கள இனவாத சக்திகள் விரும்புவதுபோல சம்பந்தருக்கு எதிராக போட்டிபோட்டு தமிழர் வாக்குகளை பிரித்து திருமலையில் தமிழர் பிரதிநிர்கித்துவத்தை குறைத்ததுபோன்ற காரியங்களில் ஈடுபடாதீர்கள். தயவு செய்து கிழக்கு மாகாணத்தைப் பிழவு படுத்தாதீங்க.  அழுத்த அரசியல் வடமாகாணத்துக்குள் வைத்துக்கொள்ளுங்கள்.

திருகோணமலையின் பாராளுமன்ற உறுப்பினர்கள்

சம்பந்தன் வயது 84

துரைரத்தினசிங்கம் வயது 76

இவர்கள் இருவரும் திருகோணமலைக்கு இதுவரை செய்தது என்ன?? உங்களால் பட்டியல் இட முடியுமா? 

தமிழர் பிரநிதித்துவம் குறைந்து விடும் என்று தயவு செய்து பீலா காட்டாதீர்கள்.

 

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்

தண்டாயுதபாணி வயது 67

நாகேஸ்வரன் வயது 50 ற்கு மேல்

ஜெனார்த்தனன் இவர் ஒருவர் தான் இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு சாக்கடையாகின்றது,

கூட்டமைப்பில் வேற்றுமையில் ஒற்றுமை காண புறப்படும் சிறீகாந்தாவால் (டொலோ வில்) உதயராசா தலைமையிலான சிறி டொலோவுடன் ஒற்றுமை காண முடியவில்லை.

On 11/12/2017 at 5:06 PM, நவீனன் said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ரெலோ கட்சியின் செயலாளர்நாயகம் என்.சிறிகாந்தா தெரிவித்திருக்கிறார்.

சிறிகாந்தா முழுமையான சுயநல அரசியலில் இறங்கியுள்ளதாக தெரிகிறது, இவர் அடுத்த தேர்தலில் வட்டுக்கோட்டை தொகுதியில் தேர்தலில் போட்டியிட தமிழரசுக்கட்சியின் கயவர் கும்பலுடன் ஓர் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக செய்திகள் கசிகின்றன.

தமிழர் உரிமையை விற்று சுயநல அரசியல் செய்யும் முயற்சியில் சிறிகாந்தா ஒருபக்கமாகவும், சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்னொரு பக்கமாகவும், கஜேந்திரகுமார் பிறிதொரு பக்கமாகவும் முயன்று வருகின்றனர்.

விக்னேஸ்வரன் அய்யாவின் பெயரை பயன்படுத்தி வோட்டுக்களைக் குவிக்க சுரேஷ் பிரேமச்சந்திரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் போட்ட சதித்திட்டம் சறுக்கிறமாதிரி தெரியுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.