Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடைந்த கூட்டணி: இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆபத்தா?

Featured Replies

உடைந்த கூட்டணி: இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆபத்தா?

இரா.சம்பந்தன்படத்தின் காப்புரிமைISHARA KODIKARA/GETTY IMAGES Image captionஇரா.சம்பந்தன்

தமிழர் விடுதலை கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தின் புதிய கூட்டணியொன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நாச்சியார்மடம் பகுதியிலுள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில், கூட்டணி உருவாக்கத்திற்கான உடன்படிக்கை இன்று கையொப்பமிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியுள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் விடுதலை கூட்டணி, ஜனநாயக தமிழரசு கட்சி, ஈழவர் ஜனநாயக முன்னணி, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் ஆகியன இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உதய சூரியன் சின்னத்தின் கீழ் இந்த கூட்டணி களமிறங்கவுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து டெலோ அமைப்பு நேற்றிரவு வெளியேறியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி கேள்விக்குறி?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயற்பட்டு வருகிறது.

இரா.சம்பந்தன்படத்தின் காப்புரிமைSERVER

இலங்கை நாடாளுமன்றத்தில் 16 ஆசனங்களை கொண்டுள்ள இந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டு வருகின்றார்.

இந்த நிலையில், கூட்டமைப்பிலிருந்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் டெலோ ஆகியன வெளியேறியுள்ள நிலையில், இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும் புளோட் அமைப்பு ஆகியனவே கூட்டமைப்பில் தற்போது அங்கம் வகிக்கின்றன.

இவ்வாறு கூட்டமைப்பை விட்டு வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்க முன்வரும் பட்சத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பதவி கேள்விக்குறியாகி விடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பிரதீபா மஹனாமஹேவா தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை தமிழரசுக் கட்சியிலுள்ள சிலர் கட்சித் தாவும் பட்சத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கேள்விக் குறியாகிவிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, மக்கள் விடுதலை முன்னணி, கூட்டு எதிரணி ஆகியவற்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி செல்வதற்கான வாய்ப்பு காணப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு இல்லையெனில், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பட்சத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி செல்வதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

புளோட் அமைப்பின் தீர்மானம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அங்கம் வகிக்கின்றமை தொடர்பில் விரைவில் தீர்மானம் எட்டப்படும் என புளோட் அமைப்பின் உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/sri-lanka-42254392

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா இனி ஆப்பம் சாப்பிடக் கஸ்௶அம்போலை.......அப்ப இனி திருமலைக்கும் போகப் பயமாத்தான் இருக்கும்.....சும்முக்கு எப்படியும் அமைச்சர் பதவி வந்திடும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நவீனன் said:

உடைந்த கூட்டணி: இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆபத்தா?

இரா.சம்பந்தன்

கூத்தமைப்பு(இது எக்ஸ்ரா வாலிக்காக) உடைஞ்சால் என்ன களண்டு கொட்டுப்பட்டால் என்ன கீறல் விழுந்தாலென்ன........ ரணில் நல்லாட்சியிலை இருக்கும் வரைக்கும் ஐயாவுக்குத்தான் அந்த கதிரை.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

கூத்தமைப்பு(இது எக்ஸ்ரா வாலிக்காக) உடைஞ்சால் என்ன களண்டு கொட்டுப்பட்டால் என்ன கீறல் விழுந்தாலென்ன........ ரணில் நல்லாட்சியிலை இருக்கும் வரைக்கும் ஐயாவுக்குத்தான் அந்த கதிரை.

சில சமயம் அவருக்கு பிரதமர் பதவி கொடுப்பினம்.....கட்சி உடைய உடைய ஐயாவுக்கு சந்தோசமாக இருக்கும்....தமிழர் ஒற்றுமையாக செயற்பாடாத படியால் தான் தீர்வு பெறமுடியவில்லை என்று சொல்லி தப்பலாம்....

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றமொன்றே மாறாதது. தமிழினம் சரியாகவும் நிதானமாகவும் சிந்திக்கவேண்டிய நெருக்கடியான கட்டத்துள் கொண்டே அனைவரும் சேரந்து  அடைத்துவிட்டார்கள்!

  • தொடங்கியவர்

எவர் போனாலும் நமக்கென்ன? களம் ஆடுவோம் – மன்னரும் நாமே குடிகளும் நாமே…

sumanthiran-sampanthan.jpgஎவர் பிரிந்து சென்றாலும் , எவர் தனித்து நின்று செயற்பட்டாலும் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு என ஆபத்தும் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில். நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போது , தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியேறிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்க முன்வரும் பட்சத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பதவி கேள்விக்குறியாகி விடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி பிரதீபா மஹனாமஹேவா ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்த கருத்து தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்

யார் பிரிந்து சென்று தனித்து நின்று செயற்பட்டாலும் , எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை. தமிழரசு கட்சியிடம் 11 ஆசனங்கள் உண்டு. எமக்கு அடுத்ததாக உள்ள மக்கள் விடுதலை முன்னணியிடம் 06 ஆசனங்களே உள்ளன. அதனால் எதிர்க்கட்சி தலைவர் பதவி எப்போதும் கேள்விக்குறி ஆகாது. என தெரிவித்தார்..

http://globaltamilnews.net/archives/53801

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.