Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“எனக்கு நம்பிக்கை இருக்கின்றது சமஷ்டி தீர்வு கிடைக்கும் என்று.”

Featured Replies

“எனக்கு நம்பிக்கை இருக்கின்றது சமஷ்டி தீர்வு கிடைக்கும் என்று.”

 

sumanthiran-mp.jpg?resize=640%2C480

“இடைக்கால அறிக்கையில் நாங்கள் அரைவாசி வெற்றியை பெற்றுள்ளோம்” என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடு, சகல அதிகாரங்களும் மத்தியிலேயே இருக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி, ஆட்சியதிகாரங்கள் மத்தியிலும் மாகாணங்களிலும் இருக்கும் எனச் சொல்லுகின்ற அடிப்படை மாற்றமே இடைக்கால அறிக்கையின் முதல் இரண்டு பக்கங்களிலும் இருக்கிறது என,  பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முறைகள் பற்றி வேட்பாளர்களை தெளிவுபடுத்தும் சந்திப்பு ஒன்று நேற்று நல்லூர் இளம்கலைஞர் மண்டபத்தில், யாழ் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான சோ.மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்,  “உத்தேச அரசியல் அமைப்பு இந்த நாட்டை இரண்டு துண்டாக பிரிக்கும் எனவும்,  சமஸ்டி ஆட்சியை கொண்டு வருகின்றனர் எனவும், இந்த சமஸ்டி ஒரு பிரிவினைக்கு முதற்படியாக இருக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறுகின்றார்.  அதேபோல்  உத்தேச அரசியல் அமைப்பில் சமஸ்டியே இல்லை என நம்மவர்கள் சிலர் கூறுகின்றனர்.

ஆனால் நாங்கள் மக்களுக்கு கொடுத்த ஆணையினையே அரசியல் தீர்வில் நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் பெற்றுக்கொண்ட மக்கள் ஆணையின்படியே சயற்படுகின்றோம். எனக்கு நம்பிக்கை இருக்கின்றது சமஷ்டி தீர்வு கிடைக்கும் என்று.  இலங்கைக்கு ஒற்றையாட்சி பொருத்தமற்றது என்று அந்த இடைக்கால அறிக்கையின் இரண்டாம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.  இடைக்கால அறிக்கையில் சமஷ்டி என்ற சொல் குறிப்பிடப்படவில்லை. அனால் சமஷ்டி கட்டமைப்பிலான ஆட்சி முறையே இந்த அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ளது.  அடிப்படையிலேயே ஒற்றையாட்சியிலிருந்து சமஷ்டிக்கான மாற்றத்தை காண்பிக்கின்ற அறிக்கையாகவே இந்த இடைக்கால அறிக்கை இருக்கின்றது.” என தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2017/58409/

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் வரும் நேரம் என்ன பொய்யையும் சொல்லி வெல்லனும் தமிழ் ஈழத்துக்கு தான் கதைக்கிறம் என்று சொன்னாலும் சொல்லுவார்கள் சிங்களமும் தலயை ஆட்டி உண்மை தான் என்று நம்ப சொல்லும் எல்லாம் வெல்லும் மட்டும் தான் .

சிங்களத்தின் ராஜ விசுவாசிகள் சம்பந்தன் சுமத்திரன் டமில் அரசு கூட்டம் .எல்லாம் முடிந்த பின் சிங்களம் ஒரு அடி பாய்ந்து காட்ட இவையள் 100 அடி பாய்வினம் என்பது சிங்களத்துக்கு தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஐநா மனித உரிமைகள்  பேரவை என்று ஒன்றில்லையென்றால் தெரியும் தமிழரசுக்கட்சியின் அரசியல் பம்மாத்து. அனைத்துலகினது நெருக்குவாரங்களில் இருந்து தப்பவும் தமது படையினரை பாதுகாக்கவும் சட்டச்சிக்கல்களில் இருந்து மீட்கவும் தமிழரருக்கு குறைந்தபட்சம்எதையாவது  செய்யவேண்டிய யதார்த்தமுமே அரசியலமைப்புச் சபை தீர்வு என்று சிங்களம் கூறுகின்றது. அதனை ஏதோ இவர்களது இடையறாத முயற்சியால்த்தான் இந்த எதுவுமேயற்ற தீர்வு தொடர்பில் உழறுகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அவர் என்ன செய்வார்?  கதிரை ஆசை வந்து துலைக்குதே. எதையாவது சொல்லி வென்றாகவேணும். பிறகு பாஜ்க்குப் பக்கத்தில வக்காலத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.