Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓட் எமக்கு தேவை தானா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நானும் போன வருடம் 13 கிழமைகளுக்கு தினமும் 45 நிமிட வேகநடையுடன் அளவான உணவுடனும்  13 கிலோ குறைந்திருந்தேன். டிசம்பர் பார்ட்டி சீசனோடு கொஞ்சம் எடை கூடி விட்டதால் மீண்டும் வேகநடையை ஆரம்பித்துள்ளேன்.?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது ஊர்களிலெல்லாம்  ரெடிமேற் உணவுகளை சாப்பிடுபவர்களை சோம்பேறிக்கூட்டமென்று சொல்வார்கள். :grin:

(உதாரணத்திற்கு பாண்)

அவர்கள் சொன்னது போல்  கண்ட கண்ட சாப்பாடுகளை சாப்பிடுவதால் நோய்களுக்கும் பஞ்சமில்லை.


எம்மவர்கள் நடைப்பயிற்சியும் செய்யவில்லை...ஜிம்முக்கும் போகவில்லை.90 வயதிலும் நோய் நொடியின்றி தம் கடமைகளை செய்து நெஞ்சை நிமிர்த்தி நடந்தார்கள்.

தொப்பையை பற்றி கவலை கொள்ளவுமில்லை.

ஆனால் இன்றோ 16 வயது ஆண் பெண்ணினரும் உடற்பயிற்சி நிலையத்தில் குடிகொண்டுள்ளனர். ஏன்?????:cool:

9 hours ago, குமாரசாமி said:

 

ஆனால் இன்றோ 16 வயது ஆண் பெண்ணினரும் உடற்பயிற்சி நிலையத்தில் குடிகொண்டுள்ளனர். ஏன்?????:cool:

துரித உணவின்மீது அதிக விருப்பம், கார்போனேட் குளிர்பாணங்களின் (பெப்ஸி, கோக் ) அதிக பாவனை ஒழுங்கற்ற உணவு பழக்கவழக்கம் மற்றும் உடலை வருத்தி வேலை செய்யாமை என்பனவே வெயிட் கூட பிரதான காரணமாக இருக்குமென நான் நினைக்கிறன். 

17 hours ago, குமாரசாமி said:

எமது ஊர்களிலெல்லாம்  ரெடிமேற் உணவுகளை சாப்பிடுபவர்களை சோம்பேறிக்கூட்டமென்று சொல்வார்கள். :grin:

(உதாரணத்திற்கு பாண்)

அவர்கள் சொன்னது போல்  கண்ட கண்ட சாப்பாடுகளை சாப்பிடுவதால் நோய்களுக்கும் பஞ்சமில்லை.


எம்மவர்கள் நடைப்பயிற்சியும் செய்யவில்லை...ஜிம்முக்கும் போகவில்லை.90 வயதிலும் நோய் நொடியின்றி தம் கடமைகளை செய்து நெஞ்சை நிமிர்த்தி நடந்தார்கள்.

தொப்பையை பற்றி கவலை கொள்ளவுமில்லை.

ஆனால் இன்றோ 16 வயது ஆண் பெண்ணினரும் உடற்பயிற்சி நிலையத்தில் குடிகொண்டுள்ளனர். ஏன்?????:cool:

உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால், பிரச்சினை என்னவெனில் எமது முன்னோர்கள் (இனம் மொழி எல்லாம் கடந்து அனைவரது முன்னோர்களும்) உண்ட உணவுகள் பார்வைக்கு அவைபோல் இன்றைக்கு உள்ளபோதும், எமது முன்னோர்கள் உண்ட ஒரு உணவைத் தன்னும் இன்று எம்மால் கண்டு கொள்ள முடியாது. இயற்கை விவசாயம் ஏறத்தாளச் சாத்தியமில்லை என்றாகிவிட்டது. நீங்கள் எந்த மருந்தும் அடிக்காது எந்தச் செயற்கை உரமும் போடாது முதுகு முறியப் புல்லுப் புடுங்கி மரம் வளர்;த்தாலும், சூழல் உங்கள் கையில் இல்லை.

பக்கத்துக் கமக்காரன் இத்தனை ஏக்கர் தள்ளியிருந்தால் போதும் இயற்கை விவசயாயம் செய்துவிடலாம் என்பது மாறி, இயற்கை விதை சேர்த்துவைத்தால் போதும் என்பது மாறி, காற்றுத் தொட்டு நிலக்கீழ் அடி நீர் தொட்டு எம்மால் இன்றைக்கு ஒரு வட்டத்தைக் கட்டமுடியாதுள்ளது. பறந்து வாற பூச்சி மகரந்தத்தை மட்டும் பரப்பாமல் மருந்தையும் பரப்புகிறது. எல்லாத்துக்கும் மேலால், இந்தக் குட்டிப் புள்ளி பூமிக்குள் மட்டும் அல்லாது, மனிதன் அண்ட வெளியிலும் பல்ட்டி அடிக்கத் தொடங்கிவிட்டான். ஆக சூழல் என்பதை பக்கத்துக் கமக்காரன் எத்தனை ஏக்கர் தள்ளியுள்ளான் என்பதை வைத்து இனிமேலைக்கு ஆராய்வதில் பலனில்லை.


ஒரு மனிதன் கழிவே அகற்றத் தேவையற்று, அவனிற்கு ஒரு நாளைக்குத் தேவையான சத்துக்களையும் சக்தியினையும் துல்லியமாக அளந்து குளிகைக்குள் அடக்கி விஞ்ஞானம் என்றோ கடந்து போய்வி;;ட்டது. இப்படியான குளிகைகளை மட்டும் சாப்பிட்டால் உயிர் வாழலாம். ஆனால் மனிதன் ஐம்புலன்களாலும் உண்பவன். இங்கு தான் நிழலி இன்னுமொரு திரியில் கேட்ட மனிதனிற்குத் தேடல் அவசியம் தானா என்பது வருகிறது. நாயிற்குக் கிபிள் குடுத்தால் உண்கிறது. ஒரு நாளைக்கு இறைச்சியோ முட்டையோ ஈரலோ கொடுத்தால் அடுத்தநாள் கிபிளைப் பார்த்து முரண்டு பிடிக்கிறது. மனிதனின் முரண்டுபிடிப்பு நாயோடு ஒப்பிடுகையில் பலமடங்கு அதிகம். எனவே குளிசை உண்டு வாழ்வது இப்போதைக்கு விண்வெளிக்கு மட்டும் என்று மட்டும் இருக்கலாம்.


இந்தப் பிரச்சினை கைகடந்து சென்று விட்டது. மனிதன் மட்டுமே மனிதனிற்கு முரணான அனைத்தையும் உருவாக்கும் ஒற்றைச் சக்த்தி. இதை நினைத்து மன உழைச்சல் அடைவதில் எந்தப் பலனுமில்லை. எமது வாழ்வு மிகவிரைவில் 200 ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அந்த 200 ஆண்டுகள் நம் மூதாதை வாழ்ந்த வாழ்வாக இருக்காது. சந்தையினை எம்மால் வெல்ல முடியாது. ஆனால் நாம் செய்யக் கூடியது என்னவென்றால், எது முடிந்தமுடிபான உண்மை என்பதை என்னால் அறியமுடியாது. எது நன்மை எது தீமை என்பதை என்னால் முடிந்தமுடிபாக அறிவித்து விடமுடியாது. கொஞ்சம் உள்ளுணர்வு, கொஞ்சம் அறிவு, கொஞ்சம் ஆசாபாசங்கள், கொஞ்சம் எனது உடலின் பிரதிபலிப்புக்களை உற்றுநொக்கல் என்பதாக மாறிக்கொண்டிருக்கும் உலகில் நான் இசைவாகிக் கொள்ள முயல்கிறேன் என்ற ஒரு மனநிலை மட்டுமே இன்றைக்குச் சாத்தியம்.


இன்றைக்கு உள்ள உலகு தான் உன்னதம் இதைத் தக்கவைத்துவிடவேண்டும் என்று நினைப்பது அசாத்தியம். 19ம் நூற்றாண்டில் பென்ஸ் வந்ததை விட்டுவிடுவோம் 1908ம் ஆண்டில் போர்ட் வந்த போது உலகத்தில் பலர் பயந்திருப்பார்கள். தம் மூதாதை உலகு அழிந்ததாய் உணர்ந்திருப்பர். இன்றைக்கு நாம் நேற்றையினை நினைத்து வருந்துவதும் அவர்கள் அன்றைக்கு வருந்தியதிலும் பெரு வித்தியாசமில்லை. ஆனால் அவர்களது நேற்றைக்கும் எமது நேற்றைக்கும் பாரிய வேறுபாடு. நாளைகள் முன்னர் எமது கற்பனைக்குச் சாத்தியப்பட்டிரா வேகத்தில் வந்து கொண்டிருக்கின்றன.  இந்நிலையில் எமக்கு இருக்கின்ற ஒரே தெரிவு, தெரிவுகள் இன்று வாறதை ரசித்திருத்தல் மட்டுமே. இதையிட்டு நாம் மன உழைச்சலோ வருத்தமோ அடையத் தேவையில்லை. காரணம் முடிந்த முடிபான விருப்பு வெறுப்புக்கள் அகலும் போது மனம் விரிவதோடு வருத்தத்திற்கான அடிப்படை மறைந்துபோகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

ஓட்ஸ் சாப்பிடலாமா,வேண்டாமா கெதியாய் ஒரு முடிவிற்கு வாங்கப்பா 
 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎5‎/‎2‎/‎2018 at 8:22 AM, கிருபன் said:

நானும் போன வருடம் 13 கிழமைகளுக்கு தினமும் 45 நிமிட வேகநடையுடன் அளவான உணவுடனும்  13 கிலோ குறைந்திருந்தேன். டிசம்பர் பார்ட்டி சீசனோடு கொஞ்சம் எடை கூடி விட்டதால் மீண்டும் வேகநடையை ஆரம்பித்துள்ளேன்.?

யாராவது தடி மாடு என்று உங்களை நக்கலடிச்சவையளோ.☺️...இத்தோட இரண்டாவது தடவை நீங்கள் இதை எழுதி விட்டிர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

யாராவது தடி மாடு என்று உங்களை நக்கலடிச்சவையளோ.☺️...இத்தோட இரண்டாவது தடவை நீங்கள் இதை எழுதி விட்டிர்கள்

அப்படி எல்லாம் இல்லை. முகநூலில் நிறைய நண்பிகள் விசிறிகளாக இருக்கின்றார்கள்.?

வாட்டசாட்டமாக இருந்தால்தானே ஒரு கெத்து இருக்கும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.