Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிசில் ஈழத்து மாணவி ஒருவர் கடத்தல்: தாயாரின் உருக்கமான கோரிக்கை

Featured Replies

பாரிசில் ஈழத்து மாணவி ஒருவர் கடத்தல்: தாயாரின் உருக்கமான கோரிக்கை

 

 

பிரான்ஸ் - பாரிஸ் புறநகர் பகுதியான குசன்வீல் பகுதியில் வைத்து ஈழத்து தமிழ் மாணவி ஒருவர் திட்டமிட்ட வகையில் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 20ம் திகதி இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாணவியின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கடத்தப்பட்ட மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த போராட்டமானது, Lycée Romain Rolland, 21 Av de Montmorency, 95190 Goussainville என்ற இடத்தில் நாளை மறுதினம் மாலை ஐந்து மணிக்கு (உள்ளூர் நேரம்) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸாரின் பாதுகாப்பு மற்றும் அனுமதியுடன் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கடத்தப்பட்ட மாணவியின் தாயார் கருத்து தெரிவிக்கையில்,

“கடந்த 20ம் திகதி பாடசாலைக்குச் செல்லும் போது கால் மற்றும் கைகளை கட்டியவாறு எனது மகள் கடத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன்.

மகள் கடத்தப்பட்டு ஐந்து நாட்கள் ஆகிவிட்டன. என் மகள் இதுவரையிலும் என் கைகளில் கிடைக்கவில்லை. இந்நிலையில், அனைவரும் ஒன்று சேர்ந்து எனது மகளை மீட்டுதர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன.

இது போன்ற சம்பவம் வேறு எந்த பிள்ளைக்கும் வரக்கூடாது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக நாட்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.

இந்நிலையில், நாளை மறுதினம் பொலிஸாரின் அனுமதியுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைவரும் கலந்துகொண்டு தமக்கு ஒத்துழைக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள போதிலும், இதுவரையில் மாணவி குறித்து தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

 

http://www.tamilwin.com/france/01/178034?ref=home-imp-parsely

  • தொடங்கியவர்

பிரான்ஸ்சில் ஈழத்து தமிழ் மாணவி கடத்தப்படவில்லை :வெளிவந்திருக்கும் புதிய காணொளி

 

பிரான்ஸ்சில் ஈழத்து தமிழ் மாணவி கடத்தப்படவில்லை :வெளிவந்திருக்கும் புதிய காணொளி

பிரான்ஸ்சில் ஈழத்து தமிழ் மாணவி ஒருவர் திட்டமிட்ட வகையில் கடத்தப்பட்டுள்ளதாக அவருடைய தாயாா் தெரிவித்திருந்த நிலையில் அவா் கடத்தப்படவில்லை தான் காதலித்த நபருடன் விரும்பியே சென்று திருமணம் செய்துள்ளதாக குறித்த பெண்ணும் அவருடைய காதலனும் சோ்ந்து தெரிவித்திருக்கும் காணொளி தற்போது வெளிவந்திருக்கின்றது.

கடந்த 20-ம் திகதி பாடசாலைக்குச் செல்லும் போது கால் மற்றும் கைகளை கட்டியவாறு எனது மகள் கடத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன். மகள் கடத்தப்பட்டு ஐந்து நாட்கள் ஆகிவிட்டன. என் மகள் இதுவரையிலும் எனக்கு கிடைக்கவில்லை.இந்நிலையில், அனைவரும் ஒன்று சேர்ந்து எனது மகளை மீட்டுதர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

பிரான்ஸ்சில் ஈழத்து தமிழ் மாணவி கடத்தப்படவில்லை :வெளிவந்திருக்கும் புதிய காணொளி

இது போன்ற சம்பவம் வேறு எந்த பிள்ளைக்கும் வரக்கூடாது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக நாங்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என ஈழத்து மாணவியின் தாயார் கருத்து தெரிவித்திருந்த நிலையில் இந்த கருத்தை முற்றாக மறுக்கும் வகையில் தற்போது சமூக வலைத்தளங்களில் குறித்த பெண்ணுடன் ஒரு இளைஞனும் இணைந்து ஒரு காணொளியை வெளியிட்டுள்ளனா்.

அந்த காணொளியில் உள்ள இளைஞன் தானும் கடத்தப்பட்டதாக கூறப்படும் குறித்த பெண்ணும் ஒருவரை ஒருவா் காதலிப்பதாகவும்,வீட்டில் காதலை ஏற்க மறுத்ததால் இருவரும் திருமணம் செய்வதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும் அந்த காணொளியில் தெரிவித்துள்ளாா்.

அத்துடன் அந்த காணொளியில் கடத்தப்பட்டதாக கூறப்படும் அந்த பெண்ணும் அருகில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ்சில் ஈழத்து தமிழ் மாணவி கடத்தப்படவில்லை :வெளிவந்திருக்கும் புதிய காணொளி

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/Tamil-student-is-not-kidnapped-in-France

இந்த பிரச்சனையை காவல்துறையின்  கையில் விடவேண்டியதுதான். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உந்த வெட்டி ரேஸ் எல்லாம்..இப்ப எங்கட ஊடகங்களின் பிரேக்கிங் நியூஸ். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

காணால் போன தமிழர்கள்பற்றி அறிக்கை வெளியிட்டுத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள,சிறீலங்கா சிங்கள அரசுக்கு இப்படியான நிகழ்வுகளும் துணை நிற்கும். :shocked: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.