Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே.பி.யின் கப்பல், முன்னாள் ஜனாதிபதிகளின் குண்டு துளைக்காத வாகனங்கள் ஆழ்கடலில் மூழ்கடித்து அழிப்பு

Featured Replies

குண்டு துளைக்காத கார்கள் ஆழ்கடலில் மூழ்கடிக்கப்பட்டன
 
 

கடந்த யுத்தகாலத்தின் போது ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக கொள்வனவு செய்யப்பட்டிருந்த, குண்டு துளைக்காத அதிசொகுசு கார்கள் மற்றும் ஜீப்கள் என்பன இன்று (26) ஆழ்கடலில் மூழ்கடிக்கப்பட்டன.

8 கார்கள் மேற்கு கடலின் மிக ஆழமான பகுதியில் தள்ளி மூழ்கடிக்கப்பட்டதாக கடல் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த தொலைத்தொடர்பு கருவிகள் மற்றும் பெறுமதியான பாகங்கள் அனைத்தும் அகற்றப்பட்ட பின்னரே இவற்றை ஆழ்கடலில் மூழ்கடித்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும் முன்னாள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு பயன்படுத்திய “வெலின்” என்ற கப்பலும் எதிர்வரும் நாட்களில் அழிக்கப்படவுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். குறித்த கப்பல் ஏலத்தில் விடப்பட்டிருந்த நிலையில், குறைந்த பெறுமதியையே கொண்டிருந்ததால், அதனையும் ஆழ்கடலில் அழிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/குண்டு-துளைக்காத-கார்கள்-ஆழ்கடலில்-மூழ்கடிக்கப்பட்டன/175-213327

Edited by நவீனன்

2 hours ago, நவீனன் said:

கடந்த யுத்தகாலத்தின் போது ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக கொள்வனவு செய்யப்பட்டிருந்த, குண்டு துளைக்காத அதிசொகுசு கார்கள் மற்றும் ஜீப்கள் என்பன இன்று (26) ஆழ்கடலில் மூழ்கடிக்கப்பட்டன.

8 கார்கள் மேற்கு கடலின் மிக ஆழமான பகுதியில் தள்ளி மூழ்கடிக்கப்பட்டதாக கடல் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அடித்த கொள்ளைகள், ஊழல்களை மறைக்க இதைவிட வேறு வழியில்லை!

உண்மைகளை மறைப்பதற்கு ரணில்-மைத்திரியின் நல்லாட்சி மற்றும் முன்னைய மகிந்த அரச பயங்கரவாதக் கும்பல்களின் கூட்டு சதி முயற்சிகளில் இதுவும் ஓன்று!

  • தொடங்கியவர்

கே.பி.யின் கப்பல், முன்னாள் ஜனாதிபதிகளின் குண்டு துளைக்காத வாகனங்கள் ஆழ்கடலில் மூழ்கடித்து அழிப்பு

 

(எம்.எப்.எம்.பஸீர்)

 

யுத்த காலப்பகுதியில் நாட்டில் ஆட்சி செய்த ஜனாதிகள் பயன்படுத்திய அதிக விலைக் கொண்ட குண்டு துளைக்காத சொகுசு கார்கள் மற்றும் 8 ஜீப் வண்டிகள்,  விடுதலை புலிகளுக்கு சொந்தமான பின்னர் கடற்படையினரால் பயன்படுத்தப்பட்ட வெலின்  அல்லது ஏ 522 எனும் கப்பல் ஆகியன இன்று நீர்கொழும்புக்கு அண்மித்த மேற்குக் ஆழ் கடலில் மூழ்கடித்து அழிக்கப்பட்டன.

1.JPG

கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்றினூடாக ஆட்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டு குறித்த வெலின் கப்பலும் வாகனங்களும் மூழ்கடிக்கப்பட்டதாக பதில் கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் கே.கே.பி.உதயங்க தெரிவித்தார்.

2.JPG

வாகங்களிலும் கப்பலிலும் இருந்த பெறுமதி வாய்ந்த தொலைத் தொடர்புகள்  சாதனங்கள், பெறுமதி மிக்க பாகங்கள் அகற்றப்பட்ட பின்னர் அவை இவ்வாறு ஆழ்கடலில் மூழ்கடிக்க செய்யப்பட்டு அழிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

3.JPG

 யுத்த காலத்தின்  போது முன்னாள் ஜனாதிகதிகளான ஜே.ஆர். ஜயவர்தன,  ஆர். பிரேமதாச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ, அவரது மனைவி, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்  உள்ளிட்டோர் பயன்படுத்திய 25 வாகனங்கள் இவ்வாறு கடலில் மூழ்கடித்து அழிக்கப்படவுள்ள நிலையில் இன்று அதில் 8 வாகனங்கள் மட்டுமே அழிக்கப்பட்டன.

4.JPG

 இந்த குண்டு துளைக்காத வாகனங்கள் அனைத்தும் பழுதடைந்துள்ள நிலையில் அவற்றை மீளத் திருத்த அவ்வாகனத்தின் உண்மை விலையை விட அதிக செலவு ஏற்படும் என்பதால் இவ்வாறு அழிக்க தீர்மனைக்கப்பட்டது. சூழல் மாசுபடாமல் அழிக்கும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமையின் அடிப்படையிலேயே இந்த வாகனங்கள் இவ்வாறு கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

5.JPG

இந்த குண்டு துளைக்காத வாகனங்கள்  ஜனாதிபதி செயலகம் ஊடாக அழிப்பதற்காக கடற்படையினரிடம் கையளிக்கப்பட்ட நிலையில், கடற்படையின் பொருட்களை சுமக்கும் சிறப்பு கப்பல் ஊடாக அவை  கொழும்பு துறை முகத்தில் இருந்து ஆழ் கடலுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அதன் பின்னரே உரிய முறைமைகளைப் பின் பற்றி அவை அழிக்கப்பட்டன.

6.JPG

 இந்த வாகனங்களை ஏலத்தில் விட்டால், அவை பாதாள உலகக்குழு உள்ளிட்ட குற்றம் புரிவோரின் கைகளுக்கு கைமாறும் பட்சத்தில் அது நாட்டுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் இவ்வாறு மூழ்கடித்து அழிக்கும் முறைமையைக் கையாண்டதாக  அழிக்கும் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்த உயர் கடற்படை அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

8.JPG 

இதனைவிட  இந்த 8 வாகனங்களுக்கு மேலதிகமாக விடுதலை புலிகளுக்கு ஆயுதம் கடத்திய வெலின் எனும் கப்பலும் இன்று மூழ்கடிக்கப்பட்டது.  இந்த கப்பலானது புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்த அதன் சர்வதேச தலைவராக செயற்பட்ட கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு சொந்தமானது என கூறப்படும் நிலையில், கே.பி. கைதான பின்னர் அக்கப்பலானது இந்தோனேஷியாவில் இருந்து  கடற்படையினரால் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. 

11__1_.JPG

அதனை தொடர்ந்து வெலின் கப்பல் ஏ 522  எனும் பெயரிலும் கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டது. பல வருடங்கள் கடற்படையினரால் பயன்படுத்தப்பட்ட குறித்த கப்பல், பயன்படுத்த முடியாத நிலைமையை அடைந்துள்ள நிலையில் அக்கப்பலை ஏலத்தில் விட தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

12.JPG

எனினும் அக்கப்பலை கொள்வனவு செய்ய குறைந்த பட்ச ஏலத்தொகைக்கு கூட எவரும் கோராத நிலையில் கப்பலை அழிக்க தீர்மானிக்கப்பட்டு, அதுவும் ஆழ் கடலுக்கு இரு விஷேட கப்பல்களின் உதவியுடன் இழுத்து செல்லப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது. பயன்பாட்டு நிலைமையால் இல்லாத இந்த கப்பலானது ரங்கல கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று இவ்வாறு ஆழ் கடலுக்கு இழுத்து செல்லப்பட்டு அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

14.JPG

http://www.virakesari.lk/article/31974

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்களை ஏற்றிவரும் கப்பல் ஒன்று மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய குண்டு துளைக்காத 8 வாகனங்கள் ஆகியவற்றை தாம் கடலில் மூழ்கடித்து ஜலசமாதி செய்ததாக இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை படையினர் அறிவித்துள்ளனர்.

இந்த எட்டு வாகனங்களும், புலிகளின் கப்பலும் இலங்கைக்கு மேற்குப் புற கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக கடற்படையின் பதில் பேச்சாளர் கே. கே. சி. உதயங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதங்களை ஏற்றி வந்த இந்த "வெலின்" என்ற கப்பல் அந்த அமைப்பின் சர்வதேச நடவடிக்கைகளுக்கான பொறுப்பாளராக இருந்த கே.பி. என்று அழைக்கப்பட்ட குமரன் பத்மநாதன் என்பவர் இலங்கை அரசாங்க படையினரால் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்தோனேசியாவில் இருந்து கைப்பற்றப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

கொஞ்சக் காலம் அதனை இலங்கை கடற்படையினர் பயன்படுத்தி வந்தனர். ஆனால், அது பழுதடையவே அதனை பயன்படுத்துவது கைவிடப்பட்டது.

அது செயற்பட முடியாத நிலையை எட்டவே, தற்போது அதனை ஜலசமாதி செய்வது என்று இலங்கை அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

மூழ்கும் கப்பல்

இலங்கையில் கப்பல்களை உடைக்கும் தொழில்துறை வளர்ச்சியடையாததும் அதற்கான காரணமாக கூறப்படுகின்றது.

பழைய இரும்புகளை இந்தியா போன்ற நாடுகளுக்கு இலங்கை ஏற்றி வருகின்ற போதிலும், கப்பல்களை உடைக்கும் தொழில் போன்றவை இங்கு வளர்ச்சியடையவில்லை.

அதேவேளை, இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான 12 கப்பல்களை தாம் அழித்ததாக இலங்கை அரசாங்கம் அவ்வப்போது அறிவித்திருந்தது.

ஆனால், போர் முடிந்த பிறகு அந்த அமைப்பின் எஞ்சியிருந்த தலைவர்களில் ஒருவரான கே.பி. அவர்கள் தென்கிழக்காசிய நாடு ஒன்றில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பிறகே, இந்தோனேசியாவில் இருந்து இந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

மூழ்கும் கப்பல்

இந்தியாவை பொறுத்தவரை விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான கிட்டு என்பவர் பயணித்த எம். வி. அகத் என்ற கப்பலை மட்டுமே தாம் அழித்ததாக இதுவரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தக் கப்பலுடன் சேர்த்து 8 குண்டு துளைக்காத வாகனங்களும் கடலில் மூழ்கடிக்கப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதிகளான ஜே. ஆர். ஜயவர்த்தன, ஆர். பிரேமதாஸ, சந்திரிகா பண்டாரநாயக்க மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் பயன்படுத்திய வாகனங்களே இவையாகும்.

இவர்கள் உட்பட இன்னும் பலர் பயன்படுத்திய பழுதடைந்த சுமார் 25 வாகனங்கள் இவ்வாறு நிர்மூலம் செய்யப்படுவதற்கு காத்திருக்கின்றன.

இந்த வாகனங்களை பழுதுபார்த்து ஏலத்தில் விற்றால் அவை சட்டவிரோத குழுக்களின் பாவனைக்கு சென்று விடலாம் என்ற அச்சம் காரணமாகவே இவை கடலில் மூழ்கடிக்கப்பட்டன என்றும் அவை மிகவும் கடினமாக உருவாக்கப்பட்டுள்ளதால், அவற்றை உடைப்பதும் முடியாததாக இருந்ததாகவும் கடற்படை பேச்சாளர் கூறியுள்ளார்.

ஆழ்கடலில் இந்த கப்பல் மற்றும் வாகனங்கள் மூழ்கடிக்கப்பட்ட பகுதியில் அவை, சிப்பிகள் உட்பட கடல் வாழ் உயிரினங்களை ஈர்க்கும் என்றும் விரைவில் அந்தப் பகுதியை ஒரு சுற்றுலாப் பயணத்துக்கான இடமாக மாற்ற முடியும் என்றும் படையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

http://www.bbc.com/tamil/sri-lanka-43555676

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.