Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'' புலிகளின் வான் தாக்குதலால் உடைந்த இராணுவ சமநிலை''

Featured Replies

'' புலிகளின் வான் தாக்குதலால் உடைந்த இராணுவ சமநிலை''

விடுதலைப் புலிகளிடம் வான் கலங்கள் உள்ளதென்பதை அறிந்த அரச படைகள்

தமது விமான தளங்களில் அதி உச்ச பாதுகாப்பு நிலையில் வைத்திருந்தார்கள்.

அதனை அடுத்து பல நாடுகளிடம் கையேந்தி விமான எதிர்;ப்பு ஏவுகணைகளை வாங்கி குவித்து

தீவிர கண்காணிப்பில் வைத்திருந்த அந்த வான்

தளத்தில் எப்படி புலிகளின் கலங்கள் வந்து தாக்குதலை நடாத்தி

தப்பிச் சென்றதென்பது.

அரச மட்டத்திலும் படையினர் மத்தியிலும் பலத்த கேள்வியையும் பீதியையும் உண்டாக்கியுள்ளது

இதனை அடுத்து வடக்கில் உள்ள படையினரின் இருப்புக்கு அச்சுறுத்தல் உண்டாகியுள்ளது.

அதற்க்கு மேலாக படைகளினுடைய மனோ நிலையிலும் பாரிய உளவியல் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது.

பலிகளுனுடைய ஆழுகைக்குள் இருந்த நிலங்களை தமது கட்டுப்பாட்டின் கொண்டு வந்து

சிங்கள மக்கள் மத்தயில் நன் மதிப்பை பெற்று தனது அரசை காத்து வந்த மகிந்தாவுக்கு

தற்போது புலிகள் கொடுத்த இந்த அதிரடி வைத்தியம் தலையிடியை கொடுத்துள்ளது.

அது மட்டுமல்லாது எதிர் கட்சிக்கு இது நல்லதொரு வாய்ப்பாகவும்

அதே வேளை தாமே இராணுவ சம நிலையில் மேலோங்கி இருப்பதாகவும்

காட்டி வந்த அரசு தற்போது மூக்குடை பட்டு முதுகு முறிந்து கிடக்கிறது.

பல மையில் நீளமானதொரு சிங்கள படைகளின் கட்டுப்பாட்டு மையங்களை தாண்டி எவ்வாறு

துணிகர தாக்குதலை நடாத்தி விட்டு

தப்பி போக முடிந்தது என்பது படை தரப்பை ஆட்டம் காண வைத்துள்ளது.

இது வரை காலமும் புலிகள் சும்மா விளையாட்டு விமானங்களை வைத்து படம் காட்டுகிறார்கள்

என கூறிய அரசுக்கு தற்போது பீதி பிடித்துள்ளது.

அடுத்த கட்ட புலிகளின் தாக்குதல் வியுயுகம் எவ்வாறு அமையும் அது எத்தகையை

தாக்கத்தை உண்டாக்கும் என அரச படைகளை அங்கலாய்க்க வைத்துள்ளது.

தற்போது நடந்த இந்த அதிரடி தாக்குதலில் பல விமானங்கள் அழிக்கப் பட்டுள்ளதாகவும்

பர சூட் மூலம் தரையிறங்கிய கரும் புலிகள் தமது தாக்குதலை தமது இலக்குகள் நோக்கி

நகர்ந்து தாக்கியழித்து தம்மையும் அழித்ததாகவும்..

அவ்வாறான நிகழ்விலேயே வான் தளத்தில் நேரடி சமர் நடை பெற்றதாகவும்..

வான் தாக்குதலை நடத்தி படைகளை அதிர்ச்சியில் உறையை வைத்து அவர்கள் தெளிய முன் தமது

கை வரிசையை களமிறங்கிய புலியணிகள் கன கச்சிதமாக தமது தாக்குதலை நடாத்தியுள்ளதாகவே

அங்கு நடைபெற்ற விமான அழிவுகளை பார்க்கும் போது அல்லது வரும் செய்திகளை ஆராயும்

போது தெரிவதாக பலர் கூறினர்.

தமது ராடர் கருவிகளில் இவ்வகையான விமானத்தை அவதானித்தாக கூறிய

விமானப் படைகளால் ஏன் அதை தாக்கி அழிக்க முடியவில்லை என்றதொரு கேள்வி எழுகிறது.

தமது இழப்பை மூடி மறைத்க்க முனைந்த அரசிற்கு இது ஒரு பெரிய சங்கடத்தை

தோற்றுவித்துள்ளது.

மறு புறத்தே தமிழ் மக்களிற்கு அளவில்லா ஆனந்தத்தையும் அவர்களது மனோ நிலையில்

தோச்சியையும் கொடுத்துள்ளது. இந்த அதர்வில் இருந்து அந்த படைகள் தெளிய முன்

புலிகள் அடுத் தொரு பாரிய தாக்குதலை நடாத்தி படைகளின் உளவியல் கட்டு மானத்தையும் அவர்களது

படைவலு சமநிலையையும் புலிகள் உடைக்க முனைவர்.

இவ்வாறான தொரு தாக்குதல்கள் கடலிலும். தரையிலும் முன்னர் சில மாதங்களிற்கு

முன்னர் நடத்தி காட்டியமை இங்கு நினைவு கூறத்தக்கது.

அதற்கானதொரு திசை திருப்பு தாக்கலாகவும் அத்தோடு தம்மால்

எங்கும் எப்பொழுதும் தாக்குதலை தொடுக்க முடியும் என்ற தமது

கொள்ளை நிலைப்பாட்டை அரச படைகளிற்கும் அரசிற்கும் அடித்து சொல்லியுள்ளார்கள் புலிகள்.

ஏன் புலிகள் இன்னும் மௌனம் காக்கிறார்கள் என ஒலக தமிழ் மக்கள் கேட்ட கேள்விக்கு

நாசுக்காக தமது அதிரடித் தாக்குதல் ஊடாக அந்த மக்களிற்கு புத்துணர்வை ஊhட்டியுள்ளார்கள்.

இந்த தாக்குதலை அரசு புலிகளிற்கெதிராக பாரிய பிரச்சார போரை நடாத்தி அயுதங்களை வாங்கி குவிக்க முனையும்.

அடுத்து வரும் மணி துளிகளில் சில நாடுகளிடம் இருந்து புலிகளிற்கு கண்டனமும் வரலாம்.

அதை உணர்ந்த அவர்கள் அடுத்த தொரு பாய்சலக்கு தயராக கூடும்.

அவலத்தை தந்தவனுக்கு அவலத்தை கொடு என்ற விடுதலைப் புலிகளின் தாரக

மந்திரத்திற்கு ஏற்றவாறு அடுத்த களமுனை நகரும்.

இன்று நடந்த இந்த அதிரடி தாக்குதலின் ஊடாக புலிகள் இராணுவ சம நிலையில் படைகளை விட

உயர்ந்துள்ளார்கள் என்பதையே கோடிட்டு காட்டுகிறது.

இந்த தாக்குதலை மூடி மறைக்க புலிகளின் பிரதேசங்கள் மீது ஒரு வலிந்து தாக்குதலை

படைகள் நடத்தலாம் அவ்வாறான ஒரு நிகழ்வில் மீண்டும் இராணுவம் பலத்த அடி வேண்டும் மென்பதே புலனாகிறது.

ஆக மொத்தம் புலிகளின் கைகளே தற்போது ஓங்கியுள்ளது.

இந்த அதிரடி தாக்குதலினால் அரச படைகளினது பிரச்சார போரும்

இராணு சமநிலையும் தகர்ந்துள்ளது... மொத்த இராணுவ நிலைகளும் தற்போது

பீதியல் உள்ளது!

- வன்னி மைந்தன் -

உங்களது எதிபார்ப்புகள் சிலவேளைகளில் நடந்தேறலாம். நிச்சயமாக அரசியல் இராணுவ சாதாரண

சிங்கள மக்களிடையே ஒரு அச்ச நிலை தோன்றியிருக்கும். வெளியாரின் கண்டனங்கள் வெளிவரு

வதற்கு சரியான காரணங்களேதும் இல்லை. அவ்வாறின்றி வெளிவரும் கண்டனங்களும் இனிப்

பயன்படாதென்பதும் இலங்கைக்குப் புரியும். ஒருவேளை இலங்கையரசை தமது வழிக்குக் கொண்

டுவருவதற்கான ஒரு வாய்ப்பாக சர்வதேசம் இச் செயலைப் பயன்படுத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது எதிபார்ப்புகள் சிலவேளைகளில் நடந்தேறலாம். நிச்சயமாக அரசியல் இராணுவ சாதாரண

சிங்கள மக்களிடையே ஒரு அச்ச நிலை தோன்றியிருக்கும். வெளியாரின் கண்டனங்கள் வெளிவரு

வதற்கு சரியான காரணங்களேதும் இல்லை. அவ்வாறின்றி வெளிவரும் கண்டனங்களும் இனிப்

பயன்படாதென்பதும் இலங்கைக்குப் புரியும். ஒருவேளை இலங்கையரசை தமது வழிக்குக் கொண்

டுவருவதற்கான ஒரு வாய்ப்பாக சர்வதேசம் இச் செயலைப் பயன்படுத்தலாம்.

*******************************************************

எமது மக்கள் எவ்வனவு தான் சித்திரைவதைகளை அனுபவித்தாலும் சிங்கள மக்களும் மனிதர்கள் என்ற பெரிய மனப்பான்மையுடன் புலிகள் தங்களது திட்டங்களை நகர்த்துகிறார்கள். அதாவது உங்களால் கூறப்படும் இந்த உலக தறுதலைகளை இயன்றளவு வாய் திறக்க சந்தர்ப்பம் குடுக்கவே இல்லை. இதைவிட அவங்கள் ஏதாவது சொல்ல நினைத்தாங்கள் என்றால் ஒரு மனநோயாளி என்று தான் சொல்ல முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே, போராட்டத்தில் சமநிலை, ஏற்றம் தாழ்வு என்று எல்லாம் தேவையில்லை. நாம் வென்றாக வேண்டும். அது மட்டும் தான் முக்கியம். அதற்குப் பங்களிப்போம்.

சமநிலை பற்றி எப்ப கதைக்க வேண்டுமென்றால், பேச்சுவார்த்தை நேரத்தில் தான். மற்றய சந்தர்ப்பம் நாங்கள் வெல்வது மட்டும் தான் இலக்கு.

வன்னி மைந்தன் நீர் கூறியது போல நடந்தால் நமக்குத்தான் நன்மை

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது நடந்த இந்த அதிரடி தாக்குதலில் பல விமானங்கள் அழிக்கப் பட்டுள்ளதாகவும்

பர சூட் மூலம் தரையிறங்கிய கரும் புலிகள் தமது தாக்குதலை தமது இலக்குகள் நோக்கி

நகர்ந்து தாக்கியழித்து தம்மையும் அழித்ததாகவும்..

அவ்வாறான நிகழ்விலேயே வான் தளத்தில் நேரடி சமர் நடை பெற்றதாகவும்..

வான் தாக்குதலை நடத்தி படைகளை அதிர்ச்சியில் உறையை வைத்து அவர்கள் தெளிய முன் தமது

கை வரிசையை களமிறங்கிய புலியணிகள் கன கச்சிதமாக தமது தாக்குதலை நடாத்தியுள்ளதாகவே

அங்கு நடைபெற்ற விமான அழிவுகளை பார்க்கும் போது அல்லது வரும் செய்திகளை ஆராயும்

போது தெரிவதாக பலர் கூறினர்

ஆதாரமில்லாத செய்திகளை/வதந்திகளை ஆர்வக் கோளாறினால் பரப்புவதினால் ஒரு நன்மையும் வரப்போவதில்லை.. உண்மையான செய்திகளைத் தருவதே நல்லது!

இந்த ஒரு தாக்குதல் மூலம் சிங்களப் படைகள் சிதறிப்போய்விட்டார்கள் என்று நம்பினால் நாம்தான் முட்டாள்கள்! இதைப்போல பலமடங்கு தாக்குதல்கள் நடைபெறக்கூடிய வலிமையைத் தமிழர் படைகள் கொள்ள எங்கள் கடைமைகளைச் செய்யவேண்டும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதாரமில்லாத செய்திகளை/வதந்திகளை ஆர்வக் கோளாறினால் பரப்புவதினால் ஒரு நன்மையும் வரப்போவதில்லை.. உண்மையான செய்திகளைத் தருவதே நல்லது!

இந்த ஒரு தாக்குதல் மூலம் சிங்களப் படைகள் சிதறிப்போய்விட்டார்கள் என்று நம்பினால் நாம்தான் முட்டாள்கள்! இதைப்போல பலமடங்கு தாக்குதல்கள் நடைபெறக்கூடிய வலிமையைத் தமிழர் படைகள் கொள்ள எங்கள் கடைமைகளைச் செய்யவேண்டும்..

கிருபன் சொல்வதைத்தான் நானும் சொல்லுவென். நிச்சயமாக வாயில் விரலை வைக்கும் செயல் தான் புலிகளின் வான் தாக்குதல். ஆனல் இங்கு பலர் அளப்பது போல் உண்மயில் பெரிய அழிவுகளை உண்டுபன்னினார்களா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்கவேன்டும் இங்கு கரும்புலிகளின் இழப்பு நிச்சயமாக இரண்டு உலங்கு வான் ஊர்திகளின் சேததுக்கும் இரன்டு கடற்படையினரின் இழப்பயும் தான் (சிங்கல செஇதிகல் சொல்ல்வது போல்) கன்டோம் என்றால்....இது சிங்கள வெறியர்களை ஆட்டம் காண வைக்கும் என்றால் நிச்சயமாக இல்லை. இனிமேலும் தொடர்ந்து எப்பேற்பட்ட தாகுதல்களை புலிகள் நடத்தபொகின்றார்கள் எந்த அளவில் இங்கு அவர்களுடைய விமானத்தாகுதல் அமையப்போகின்றது என்பதை பொறுத்தே சமநிலையைப்பற்றி பேசமுடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.