Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போராட்டம் நடத்த வந்த இடத்தில் மோதிக் கொண்ட கட்சிகளின் உறுப்பினர்கள்!!

Featured Replies

போராட்டம் நடத்த வந்த இடத்தில் மோதிக் கொண்ட கட்சிகளின் உறுப்பினர்கள்!!

கடலட்டை தொழிலை தடை செய்யக் கோரி யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அலுவலகம் இன்று (08.06.2018) முற்றுகையிடப்பட்டது.

media-share-0-02-03-2177d20f0015e2a5bf65
 
 
 

அதில் ஊடங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், கொழும்பில் அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு இங்கு வந்து போராட்டம் நடத்துகின்றனர் என்று குறிப்பிட்டார்.

அதைக் கேட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொந்தளித்தனர்.

 

கூட்டமைப்பின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினராக பன்னீர்ச் செல்வம் “2010ஆம் ஆண்டுக்கு முன்னர் நீங்கள் அதைத்தானே செய்தீர்கள்” என்று கஜேந்திரனுடன் தர்க்கப்பட்டார். அதையடுத்து குழப்ப நிலை ஏற்பட்டுப் பின்னர் தணிந்தது.

http://newuthayan.com/story/16/போராட்டம்-நடத்த-வந்த-இடத்தில்-மோதிக்-கொண்ட-கட்சிகளின்-உறுப்பினர்கள்.html

 

இந்த ஒற்றுமையின்மையால் தான் அவங்களே வந்து உங்கட இடத்திலே கடலட்டை பிடிக்கிறாங்கள்.

யார் யாரைப்பற்றி கதைப்பது என்றே விவஸ்தை இல்லாமல் போய்விட்டது. மக்கள் போராட்டம் வெல்லவேண்டும் அதற்கு உங்களால் உங்கள் கட்சிகளால் என்ன என்ன சட்ட/ஒழுங்கு அரசியல் நடவடிக்கைகள் எடுக்கமுடியுமோ அதை செய்யுங்கள். மக்கள் தங்களின் போராட்டங்களை செய்வார்கள்.

வீரங்களை காட்ட வேண்டிய இடங்களில் ஓடி ஒழிந்துவிட்டு இப்போ வந்து காட்டுறார்கள்.

ஒரு கடலட்டை விடயத்தில் கூட ஒரு ....... கூட பிடுங்க முடியவில்லை இதற்குள் சமஷ்டி அரசியல் பரவலாக்கம் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் வேற.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகலவன் said:

வீரங்களை காட்ட வேண்டிய இடங்களில் ஓடி ஒழிந்துவிட்டு இப்போ வந்து காட்டுறார்கள்.

ஒரு கடலட்டை விடயத்தில் கூட ஒரு ....... கூட பிடுங்க முடியவில்லை இதற்குள் சமஷ்டி அரசியல் பரவலாக்கம் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் வேற.

பொதுமக்களுக்கான தேவைகள் பற்றி அரசியலுக்கு அப்பாற்பட்டு செயற்படுவதற்கு அரசியல் உறவுகளை எந்த வகையிலும் கொண்டிராத ஒரு அமைப்பு தேவை. வெளிநாட்டு நிதியுடன் இயங்க கூடிய அமைப்பாக அது இருந்தால் தான் அரசியல் மயப்படுத்த விரும்பும் சக்திகளுக்கு ஈடுகொடுத்து அது நிற்க முடியும். இலங்கை அரசின் சட்ட விதிகளுக்குள் பதியப்பட்ட அமைப்பாக இயங்கினாலே அந்த அமைப்பு வெளிநாட்டு நிதி உதவியை பெற முடியும்.

இவ்வாறன அமைப்பின் கட்டமைப்புக்கு சர்வதேச செஞ்சிலுவை/செம்பிறை சங்கத்தை உதாரணமாக கொள்ளலாம். இந்த அமைப்பில் உள்ளவர்கள் சமய சார்பற்றவர்கள். இவ்வமைப்பின் ஐரோப்பிய தோன்றல் உறுப்பினர்களிடம் அவர்களின் மத நம்பிக்கைகள் பற்றி யாழ் கத்தோலிக்க துறவியர் கேட்டபோது அவர்கள் தாம் மத சார்பற்றவர்கள் என்று சொல்லியதை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். அவர்களின் தோற்றத்தில் கிறீஸ்தவ சமயத்தின் உறுதியான பின்னணி இருப்பதை உலகம் அறியும். ஆனால் அவர்கள் அதனிலும் உறுதியாக மத்ச்சர்ப்பின்மையை பின்பற்ற விளைகிறார்கள். அதனாலேயே அவர்களால் உலகெங்கும் பணியாற்ற முடிகிறது. முள்ளிவாய்க்காலில் இறுதிநாட்களில் மக்கள் இறைஞ்சும் போதும் கூட அவர்கள் முற்றாக வெளியேறியதை நான் அறிவேன். அது பற்றிய விவாதமும் அதற்க்கு பின்னணியான அரசியல் முடிவுகளும்  இந்த திரிக்கு அப்பாற்பட்டது. 

இந்த சர்வதேச செஞ்சிலுவை/செம்பிறை சங்கத்தின் மத சார்பின்மையை  உதாரணமாக கொண்டு, முற்றிலும் அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பு ஒன்றே எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இவ்வாறான அமைப்பு ஸ்ரீ லங்கா அரசுடனும் உறவாடி மக்களின் நலன்களை பெற்று கொடுக்க தக்க அளவு அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பு என்ற மதிப்பை பெற வேண்டும்.

மக்களின் நலன்களை பெற்றுக்கொள்ள போராட்டம் தான் ஒரே வழி அல்ல. போராட்டம் இல்லாவிட்டால் பேச்சுவார்த்தை - அது தோற்றுபோன வழி என்று பலரும் சொல்லலாம். பேச்சுவார்த்தையிலும் பார்க்க மோசமான விளைவுகளுடன் தோற்று போன வழி போராட்டம் . ஆனால் போராட்டம், பேச்சுவார்த்தை இவை இரெண்டுக்கும் அப்பாற்பட்டு பொது நன்மைகளை அடையாளம் கண்டு, அவற்றின் அடிப்படையில் தீர்வுகளை உருவாக்கி,  அவற்றை நடைமுறை படுத்த கூடியவர்களை அணுகி, அவர்கள் மூலம் தீர்வுகளை நிறைவேற்றும் அமைப்பாக இந்த அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பு இயங்க வேண்டும். ஒரு காலத்தில் தமிழர் புனர்வாழ்வு கழகம் இலங்கை அரசின் அனுமதியுடன் இவ்வாறு இயங்கியதை இங்கு நாம் அவதானிக்கலாம். அது ராஜபக்ஷ காலத்துக்கு முற்பட்ட காலம். இலங்கை பிரதமராக இருந்த ரணிலை தமிழர் புனர்வாழ்வு கழகத்தை சேர்ந்தவர்கள் பகிரங்கமாகவே சந்தித்த படங்கள் பிரச்சினையை ஏற்படுத்தாத காலம் அது. இவ்வாறன, அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பு மீண்டும் தேவை. 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

4577_E276-0_D9_A-4_D75-99_CD-4_D5_B88_B6

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

படம் சாலப்பொருந்துது இவனுகள் ஆளாளுக்குள் அடிபட்டு சாவானுகளே தவிர மக்களுக்கு ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.