Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராஜீவ் கொலை – முக்கிய குற்றவாளி இத்தாலியில் – 7 தமிழர் விடுதலை மறுப்பு சுப்பர் வரவேற்பு….

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலை – முக்கிய குற்றவாளி இத்தாலியில் – 7 தமிழர் விடுதலை மறுப்பு சுப்பர் வரவேற்பு….

June 15, 2018

subramanian-swamy.jpg?resize=600%2C450

ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக, 7 தமிழர் விடுதலை கோரிய மனு ஜனாதிபதியால் நிராகரிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், அதனை பாஜக சிரேஸ்ட்ட தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வரவேற்றுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பேரறிவாளன் உள்பட 7 பேர் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலேயே இருப்பதால், அவர்களைக் கருணை அடிப்படையில், விடுதலை செய்ய வேண்டும் என, தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தது. தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு இந்தக் கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைப்படி இந்த நிராகரிப்பு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது

இதுகுறித்து ருவிட்டரில் சு.சாமி கூறுகையில், தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றியது சட்ட விரோத தீர்மானம். அதனை ஜனாதிபதி நேரடியாகவே தள்ளுபடி செய்துள்ளார். தூக்கில் இருந்து தப்பியுள்ள கொலையாளிகள் அதிருஷ்டசாலிகள். இத்தாலியில், முக்கிய குற்றவாளி வசித்து வருகிறார். அவர் தீவிர உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என சு.சாமி தெரிவித்துள்ளார்.

tw.png?resize=502%2C247

 

http://globaltamilnews.net/2018/83733/

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர் விடயத்தில், இந்தியாவின் எந்த அரசாக இருந்தாலும்... 
நீதி  கிடைக்கப் போவதில்லை என்பது... மீண்டும் நிரூபிக்கப் பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

 முக்கிய குற்றவாளிகள் இந்த சுப்புவும், அன்றய கூட்டத்தில் கலந்து கொள்ளாத மற்றய காங்கிரஸ் பிரதிநிதிகளுமே !!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின விரோதிகளின் தலைவரே இந்த சுப்பிரமணிய சுவாமிதான். இம்மை , மறுமை என்பது உண்மையென வைத்துக் கொண்டால், உறுதியாய்ச் சொல்லலாம் -  முற்பிறவியில் ஆரிய இன வெறியனான ஹிட்லரின் கோயபல்ஸ் இந்த சு.சுவாமிதான் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

D93_C80_F6-5_D10-43_C8-9999-5_CB47_DDD51

ராஜீவ் கொலையில் சம்பநதம் இல்லாமல் கைதாகி இருக்கும் அந்த அப்பாவிகள் விடுதலை பற்றி கதைக்கும்போது எல்லாம் செயற்கையாக உயிர் கொடுக்கப்படுகிறது பொட்டுவுக்கும் ,பிராபகரனுக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

பேரறிவாளன், நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்ய இந்திய மத்திய அரசு விரும்பவில்லை

தமிழக அரசின் மனுவை ஏற்க மறுத்தார் இந்திய ஜனாதிபதி
 
பதிப்பு: 2018 ஜூன் 17 04:01
புலம்: சென்னை, தமிழ்நாடு
புதுப்பிப்பு: ஜூன் 17 15:59
main photomain photomain photo
  •  
இந்தியாவி்ன் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டு கடந்த 27 வருடங்களாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்டோரை கருணை அடிப்படையில் விடுதலை செய்யக் கோரி தமிழக மாநில அரசு அனுப்பிய மனுவை இந்திய ஒன்றிய அரசின் ஜனாதிபதி நிராகரித்துள்ளார். இந்திய மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் முடிவின் அடிப்படையிலேயே ஜனாதிபதி இம்முடிவை எடுத்தாக புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாளில், 10 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ளோரை கருணை அடிப்படையில் விடுவித்து வருகின்றது.

 

 

தமிழக அரசாங்கம் ஏழுபோ் விடுதலை தொடர்பாக தொடர்ந்து தனது முயற்சிகளை எடுத்து வருகின்றது. ஆனால் இந்திய மத்திய அரசு தொடர்ந்து நிராகரிக்கின்றது.

 

இந்த ஆண்டும் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நினைவு கூரலைத் தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அனுவித்து வரும் கைதிகளை விடுவிக்க முயன்றது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட எழுவரை விடுவிக்கும் முடிவு தொடர்பான மனுவை இந்திய மத்திய அரசாங்கத்தின் உள் துறை அமைச்சரகத்திற்கு அனுப்பியதும், ஏழுபேரின் விடுதலை தொடர்பான நம்பிக்கை துளிர்க்கத் தொடங்கியது.

ஆனால், மத்திய அரசாங்கத்தின் முடிவின்படி இந்திய ஜனாதிபதி, தமிழக அரசின் மனுவை நிராகரித்துள்ளார்.

1991 ஆம் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது தமிழகத்தின் சிறிபெரும்புத்தூரில் நடந்த குண்டுவெடிப்பில், இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையுண்டதைத் தொடர்ந்து, 27 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணையின் பின்னர் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதன் பின்னர் 1999ஆம் ஆண்டில், 19 பேர் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டு, ஏழு பேருக்கு மாத்திரமே தூக்குத் தண்டனை உறுதிசெய்யப்பட்டது.

அதன்பின்னர், பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டோருக்கு தூக்குத் தண்டனையும், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனையாக தீர்ப்பு மாறியது.

2011ஆம் ஆண்டு மூவருக்கான தூக்குத் தண்டனையும் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு, ஏழுபேர் விடுதலை தொடர்பான வழக்கு பல்வேறு நிலைகளில் தொடர்ந்து நடத்தப்பட்டும் வருகிறது.

1991லிருந்து விசாரணையில் ஈடுபட்டு வந்த காவல் அதிகாரி தியாகராசன், “பேரறிவாளன் தான் வாங்கிக்கொடுத்த மின்கலன் (Battery) எதற்கானது என்பதை தான் அறிந்திருக்கவில்லை” என சொன்ன முக்கியப் பகுதியை தான் பதிவு செய்யவில்லை என்றும், ஒருவேளை பதிவு செய்திருந்தால், பேரறிவாளனுக்கு விடுதலை என்றோ கிடைத்திருக்கும் என்று 2013இல் கூறியிருந்தார்.

இதனையடுத்து, 2018 ஜனவரி மாத விசாரணையின்போது, பேரறிவாளன் இக்கருத்தை முன்னிறுத்தி, தனக்கான விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என கோரியிருந்தார். உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, சிபஐ விளக்கம் கேட்டது. சி.பி.ஐ யிடம் இதற்கான விளக்கத்தை உச்சநீதிமன்றம் கோரியபோதும், மத்திய அரசாங்கத்தின் சார்பில், இம்மனு மீதான கடும் எதிர்ப்போக்கே கடைப்பிடிக்கப் பட்டது.

2017 இறுதிக் காலக்கட்டத்தில் பேரறிவாளனும் ரவிச்சந்திரனும் 26 ஆண்டுகளுக்கு பிறகு, கடும் விதிமுறைகளுடன், 60 நாட்கள் அவரவர் வீட்டிற்கு பிணையில் விடுக்கப்பட்டிருந்தனர். ஏனையோருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும், இன்றைய ஆளும் தமிழக அரசாங்கம் ஏழுபோ் விடுதலை தொடர்பாக தொடர்ந்து தனது முயற்சிகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=98

  • கருத்துக்கள உறவுகள்

இது சுப்பிரமணிய சுவாமியின் கருத்து மட்டுமல்ல. தமிழ் நாட்டில் பல பிஜேபி, காங்கிரஸ் ஆதரவாளர்களின் கருத்துக்களும் இதுபோலவே இருப்பதை பலதடவைகள் விகடனில் கருத்தாடும்போதும் நான் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு நினைப்பு எதோ ராஜீவ் காந்தி மிகச்சிறந்த  தலைவர் என்று.  JR க்கு மட்டுமே தெரிந்திருந்தது ராஜீவ் அரசியலில் ஒரு கத்துக் குட்டி என்று..

Edited by Eppothum Thamizhan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.