Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தாயக பிரதேசங்களில் அதிகரிக்கும் சிங்களக் குடியேற்றங்கள்- வடமாகாண சபை தீவிர ஆலோசனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயக பிரதேசங்களில் அதிகரிக்கும் சிங்களக் குடியேற்றங்கள்- வடமாகாண சபை தீவிர ஆலோசனை

 
main photomain photomain photo
  •  
 
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஈழத் தமிழர்களிடையே பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டு வருவதாக வடமாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மைத்திரிபால சிறிசேனவும் ரணிலும் வெவ்வேறு நிகழ்ச்சி நிரல்களில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து, அபிவிருத்தி என்ற பெயரில் கூட்டங்களை நடத்துவதாகவும், ஆனால் வடமாகாண சபையுடன் கலந்துரையாடுவதில்லை என்றும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அதேவேளை முதலமைச்சர் விக்னேஸ்வரன் உட்பட யாரும் தமிழ் இனவாதத்தை பேசுவதில்லை என்றும் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பற்றியே சுட்டிக்காட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
சிங்களக் குடியேற்றங்களை தமிழர் தாயக பிரதேசங்களில் செய்து முடிப்பதே ஜனாதிபதி பிரதமர் ஆகியோரின் முக்கிய நோக்கம் என்றும் கூறியுள்ளனர். அவைத் தலைவர் சிவஞானம், உறுப்பினர்களான கலாநிதி சர்வேஸ்வரன், சிவாஜிலிங்கம். பரஞ்சோதி ஆகியோர் இவ்வாறு கூறியுள்ளனர்.

 

 

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் இனவாதத்தை பேசுவதில்லை. ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பற்றிக் கூறுவது இனவாதம் அல்ல- கலாநிதி சர்வேஸ்வரன்.

 

வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் காணி ஆக்கிரமிப்புக்கள் என்பன தொடர்பாக வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட செயலணி நடவடிக்கை எடுப்பது குறித்தும், இந்த விவகாரங்கள் பற்றி அதிகாரபூர்வமாக ஜனாதிபதி பிரதமர் ஆகியோருக்கு அறிவிப்பது எனவும் அவைத் தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் பக்கபலத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர்கள் பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர். முல்லைத்தீவுக்கும் சென்று சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக ஆராய்ந்துமுள்ளனர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடல் இடம்பெற்றது. கூடிய விரைவில் சிங்களக் குடியேற்றங்களை தடுப்பதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ள்ப்படும் என சந்திப்பில் பேசப்பட்டதாக உறுப்பினர் ஒருவர் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

தமிழர் தயாகப் பிரதேசங்களில் குறிப்பாக வடமாகாணத்தில், மக்களின் காணிகள் ஆக்கிரிக்கப்பட்டு வளங்கள் சுரண்டப்பட்டு வருகின்றது. அதேநேரம் தமிழர் தாயக பிரதேசங்களைச் சேராத, இலங்கையின் தென்பகுதியில் உள்ள சிங்கள மக்களை அழைத்து வந்து, இலங்கைப் படையின் ஒத்துழைப்புடன் குடியேற்றம் இடம்பெறுவதாக சிவாஜிலிங்கம் கூறினார்.

வடக்கு மாகாணத்தில், கொழும்பு அரசாங்கம் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்கின்றது. குறிப்பாக மாகாண சபையை புறந்தள்ளி தன்னுடைய திட்டமிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ள எத்தனிப்பதாக வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் உட்பட யாரும் தமிழ் இனவாதத்தை பேசுவதில்லை என்றும் அவர்கள் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பற்றியே கூறுவதாகவும் கலாநிதி சர்வேஸ்வரன் கூறியுள்ளார்.

இதேவேளை கொழும்பு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் தங்களுக்கிடையேயான அரசியல் போட்டி காரணமாகவே வடமாகாண சபையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் உடைத்து வருவதாக உறுப்பினர் ஆ.பரஞ்சோதி குற்றம் சுமத்தியுள்ளார்.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=92

  • கருத்துக்கள உறவுகள்

முதலில்  தமிழர்களை 

ஏதாவது ஒரு  தொழில் செய்யும் அளவுக்கு பக்குவப்படுத்தங்கள்

அதுவே 99வீதமான மற்றவர் வருகையை நிறுத்திவிடும்

எல்லாத்துக்கும்  ஆட்கள் வெளியிலிருந்து தேவை

ஆனால் அவர்கள்  கால்  வைக்கப்படாது என்பது எந்தவகையில் நடைமுறைக்கு வரும்???

14 hours ago, விசுகு said:

முதலில்  தமிழர்களை 

ஏதாவது ஒரு  தொழில் செய்யும் அளவுக்கு பக்குவப்படுத்தங்கள்

அதுவே 99வீதமான மற்றவர் வருகையை நிறுத்திவிடும்

எல்லாத்துக்கும்  ஆட்கள் வெளியிலிருந்து தேவை

ஆனால் அவர்கள்  கால்  வைக்கப்படாது என்பது எந்தவகையில் நடைமுறைக்கு வரும்???

தமிழ் மக்கள் சொந்த கால்களில் நிற்பது தமிழ் அரசியல்வாதிகளுக்கு பல நஷ்ட்டங்களை உண்டு பண்ணும் அதனால் தமிழ் மக்களின் வளர்ச்சியை தடுப்பார்கள்.

 

சிங்களவனுக்கு இப்பொழுது தமிழர் தாயகத்தில் குடியேற வேண்டிய அவசியம் இல்லை, தென் இலங்கை அதி வேகமாக வளர்ச்சி அடைகிறது...!!!!

அண்மையில் கூட 130 மேற்பட்ட விகாரைகள் கட்டபட்டுள்ளதாக ஒரு உறுப்பினர் கூறினார், ஆனால் நான்  வட மாகாணம் சென்ற போது அங்கே அவ்வளவாக காண முடியவில்லை, புதிய விகாரைகள் கட்டபடுவது உண்மை தான் ஆனால் அவர் குறிப்பிட்டதை போல் அல்ல ....!!!

 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் குடியேறினால் அவர்களை வைத்தாவது  ஊர்களை அபிவிருத்தி காணச்செய்யலாம் மற்றது இன்னொருத்தனையும்  அமுக்கி வைக்கலாம் அடாத்தாக பிடிக்கும் காணிகளையும் நிலங்களையும் :34_rolling_eyes:

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சிங்களவர்கள் குடியேறினால் அவர்களை வைத்தாவது  ஊர்களை அபிவிருத்தி காணச்செய்யலாம் மற்றது இன்னொருத்தனையும்  அமுக்கி வைக்கலாம் அடாத்தாக பிடிக்கும் காணிகளையும் நிலங்களையும் :34_rolling_eyes:

அடாத்தாக பிடிப்பவனை பாதுகாக்க தான் இந்த சிங்களவன் பிடிக்கிறான் என்ற திசை திருப்பல்.

யதார்த்தமாக யோசித்து பாருங்கள், சிங்களவனுக்கு தமிழர் தாயகத்தில் காணி பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

சிங்களவனும் தமிழனும் சண்டை பிடிக்காமல் இருப்பது கள்ள காணி கும்பலுக்கு பிரச்சனை....!!!!!

அதனால் இப்பொழுது சில நாட்களாக தமிழனையும் சிங்களவனையும் சிண்டு முடிந்து விடும் வேலை நடக்குது .....!!!

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் அறிந்த அளவில் பொதுமக்களுக்கு உதவிய அரசியல்வாதி மனித உரிமை அமைப்புகளாலும் அமரிக்க அரசாலும்  மோசமான குற்றவாளியாக தெரிவிக்க பட்ட டக்லஸ் தேவானந்தாவே.தமிழ் தேசிய கூட்டமைப்பு,  தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ் மக்கள் பேரவை, தமிழ் காங்கிரஸ் போன்ற "தமிழ்" அமைப்புகள் அனைத்தையும் அடுத்த தேர்தலில்  ஈழத் தமிழ் மக்கள்  நிராகரித்து, மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை பெற்று கொடுக்கும் இராணுவ அதிகாரிகளை தாமாகவே கேட்டு தேர்தலில் நிற்க வைத்து அவர்களை தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களாக்கி இந்த "தமிழ் மக்கள் தலைவர்கள்" என்ற வேடத்தில் நடமாடும் மக்கள் துரோகிகளை அரசியலை  விட்டு ஓரம் கட்ட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.