Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

30ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யான உணவை தான­மாக வழங்­கிய யாசகர் அப்­பு­ஹாமி

Featured Replies

30ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யான உணவை தான­மாக வழங்­கிய யாசகர் அப்­பு­ஹாமி

01pro30062018Page1Image0009-e4d1396674746d5ad9b724a0ab8b7639c62ef567.jpg

 

இலங்­கையில் வெசாக் மற்றும் பொசன் காலங்­களில் பர­வ­லாக நடத்­தப்­படும் தான­சா­லை­களில் யாச­கர்­களும் உணவு மற்றும் பான­வ­கை­களை அருந்­து­வது பொது­வான செய்தி. ஆனால், யாசகர் ஒருவர் நடத்­திய தான­சா­லையில் பொது­மக்கள் கலந்­து­கொண்ட செய்­தி­யொன்று மாத்­த­றை­யி­லி­ருந்து கிடைக்கப் பெற்­றுள்­ளது. கடந்த பொசன் போயா தினத்தை முன்­னிட்டு, 28ஆம் திகதி மாத்­தறை மாந­கர சபை முன்­றலில் இத்­தா­ன­சாலை நடை­பெற்­றது. இது­பற்றித் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, மாத்­தறை மாந­கர சபைக்கு முன்னால் யாசகம் பெற்று வரு­பவர் யாசகர் அப்­பு­ஹாமி. இவரை அப்­பு­ஹாமி மாமா என அங்­குள்ளோர்

அழைத்து வரு­கின்­றனர். இவ­ருக்கு ஒரு அபூர்­வ­மான சிந்­தனை தோன்­றி­யது. மக்கள் எந்­நாளும் எனக்கு யாச­க­ம­ளித்து வரு­கின்­றார்கள். அவர்­க­ளுக்­காக நான் ஏதா­வது செய்­யக்­கூ­டாதா என நினைத்தார். அவர் பொசன் போயா தினத்­தன்று தான­சாலை ஒன்றை நடத்தத் தீர்­மா­னித்தார்.

உடனே செயலில் இறங்­கினார். தான் சேர்த்து வைத்­தி­ருந்த பணத்­தி­லி­ருந்து ரோஸ்பாண், வடை, வாழைப்­பழம் ஆகி­ய­வற்றைத் தலா 2000 வீதம் 30ஆயிரம் ரூபா­வுக்கு வாங்கி மாந­கர சபையின் முன்­னா­லேயே ஒரு தான­சா­லையை ஒழுங்கு செய்தார். மற்­ற­வர்கள் நடத்தும் தான­சா­லை­களைப் போன்றே பொது­மக்கள் இங்கும் வந்து உணவுப் பொருட்­களை பெற்றுச் சென்­றார்கள். அப்­பு­ஹாமி மாமா உணவுப் பொருட்­களை தன் கைக­ளா­லேயே எடுத்துக் கொடுத்தார். பக்­கத்து வர்த்­தக நிறு­வ­னங்­களில் பணி­பு­ரியும் இளை­ஞர்கள் வந்து அவ­ருக்கு உத­வி­னார்கள். அப்­பு­ஹாமி மாமா­வுக்கு பெரும் மகிழ்ச்சி. சோறு சமைத்துப் பரி­மா­று­வ­தற்கு வசதி இல்­லையே என்று தன் மனக்­கு­றையைத் தெரி­வித்துக் கொண்டார் அப்­பு­ஹாமி மாமா.

மத்­து­கம வாசி­யான அப்­பு­ஹாமி தன் மனைவி கால­மான பின் யாசகம் பெற்­றுத்தான் வாழ்ந்து வரு­கிறார். கொழும்பில் பன்­னி­ரெண்டு வரு­டங்கள் யாச­க­ராக காலம் கழித்தார். பின்னர் மாத்­த­றைக்குச் சென்றார்.

தன்னைச் சூழ­வுள்ள நாய்­க­ளுக்கும், பூனை­க­ளுக்கும் தின­சரி உண­வ­ளிக்கும் ஜீவ­கா­ருண்யம் மிக்­க­வ­ராகத் திகழ்­கின்றார் அப்­பு­ஹாமி.

அப்­பு­ஹா­மிக்கு இந்தக் கைங்­க­ரி­யத்­திற்­காக முப்­ப­தா­யிரம் ரூபா வரை செல­வா­யிற்று எனத் தெரி­ய­வ­ரு­கின்­றது. தனக்கு யாச­க­மாகக் கிடைக்கும் பணத்தை வீண்­செ­லவு செய்­யாது சேமித்­து­வரும் அவர் அரு­கி­லுள்ள வர்த்­த­க­ரொ­ரு­வ­ரிடம் சுமார் ஒன்­றரை இலட்சம் ரூபா வரை கொடுத்து சேமித்து வைத்­தி­ருக்­கின்றார்.

தான் செய்த காரியம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், “இந்த காரியத்தினால் பொதுமக்கள் பிச்சை போடுவது குறைந்து விடக்கூடும் என்று சில யாசகர்கள் என்மீது கோபம் கொள்ளக்கூடும். ஆனால் நான் செய்ய வேண்டிய கடமையைத் தான் செய்தேன்" எனக் குறிப்பிட்டார்.  

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-07-01#page-1

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மனம் கொண்ட மனிதர்கள் பிச்சை எடுப்பதினால் மட்டும் குறைந்து போய் விடுவதில்லை.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, suvy said:

நல்ல மனம் கொண்ட மனிதர்கள் பிச்சை எடுப்பதினால் மட்டும் குறைந்து போய் விடுவதில்லை.....!  tw_blush:

பல வருட கதிர்காம யாத்திரையின் போது இந்த வருடமும் இருப்பார் என நினைக்கிறேன் தன் வீட்டுக்கு முன்னால் சக்கர கட்டியும் , சீனியும் வில்வம்பூ தேநீரும் சுடச்சுட எந்த பிரதி பலனையும் எதிர்பாராது போகும் அத்தனை பேருக்கும் இந்த மனிதன் கொடுப்பார்  தனியே நின்று  படத்தில் இருப்பது ஈக்கள் அல்ல அத்தனையும் தேனிக்கள் பாராட்ட வேண்டும் போல் இருந்திச்சு 

20170728_095513.jpg

Edited by தனிக்காட்டு ராஜா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.