Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் அதிகரிக்கும் வன்முறைக் கலாச்சாரத்தை கட்டுப்படுத்துவது பெரிய விடயமல்ல: முதலமைச்சர்

Featured Replies

On 7/29/2018 at 9:48 AM, ரதி said:

இங்கே லண்டனிலேயே  எனக்கு தெரிஞ்சு பிராமணர் அல்லாத மச்சம் சாப்பிட்டு வளர்ந்த இருவர் கோயில் திறந்து இருக்கிறார்கள்...ஆட்களும் போயினம்...உங்களுக்கு வேண்டுமானால் நீங்களும் ஜெர்மனியில் ஒன்று திறவுங்கோ...வருமானத்திற்கு ஆட்களை சேர்ப்பது உங்கள் சாமர்த்தியம் 

ரதி உங்கள் யோசனைக்கு நன்றி. ஆனால் நீங்களே யோசித்து பாருங்கள் தனது சொந்த கடின உழைப்பில குடும்பத்தை நடத்தி விடுமுறை நாட்களை ஜாலியாக எனஜோய் பண்ணுவதில் உள்ள சுகம்,  கடவுளை வைத்து மக்களை ஏமாற்றி வடிகட்டின மூடப்பழக்கங்களை மக்களுக்கு பரப்பி  அயோக்கியத்தனமாக கோவில் பிஸினஸ் செய்வதால்  கிடைக்காது. மன நிம்மதியும் அமைதியும. கூடக்  கிடைக்காது.

Edited by tulpen

  • Replies 78
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Eppothum Thamizhan said:

மருது  நானும் வடமராச்சிதான்.  உங்களுக்கே தெரியும் யாழிலேயே மிகப்பெரிய கோவிலான வல்லிபுரக்கோவில் பரிபாலன சபையில் உள்ள பலர் மேல் சாதியினர் இல்லையென்று. இப்போ பொதுவாக பல கோவில்களில் சாதியப்பிரச்சனை மிகவும் குறைந்து விட்டது என்றே சொல்லலாம்.

இன்னும் குறையாமல் இருப்பது காதல் கல்யாண பிரச்சனைதான். புலம்பெயர்ந்தோர்களிடையே இது அடுத்த அடுத்த தலைமுறையுடன் இல்லாமல் போகக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. ஆனால் தாயகத்தில் இதை மாற்ற நெடுங்காலம் எடுக்கும்.

நீங்களே எழுதியுள்ளீர்கள் இப்போ கூடிய வாள் வெட்டுக்கள் திருட்டுக்காகத்தான் நடக்கிறதென்று. மற்றய முக்கிய காரணம் தொழில் போட்டி. இவைகளுடன் ஒப்பிடும்போது சாதிப்பிரச்சனை காரணமாக நடைபெறும் வன்முறைகள் மிக குறைவென்றே சொல்லலாம்.

முன்பு சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு பணமும்,படிப்பறிவுமே முக்கிய காரணிகளாக இருந்தது.இப்போ எல்லா ஜாதியினரும் வெளிநாடு சென்று உழைக்கத்தொடங்கியபின்னர் பணமும் படிப்பும் எல்லோரிடமும் உள்ளது.ஊரில் ஒரு சிறிய வேலை செய்யக்கூட ஆட்களை பிடிக்க முடியாத நிலை

 இன்று மிக பிரச்சனையாக இருப்பது வேலை வாய்ப்பின்மையும் சுய தொழில்களில் நாட்டமின்மையுமே. மக்கள் பலர் சோம்பேறிகள் ஆகி விட்டார்கள் அல்லது அதீதமான வெளி நாட்டு பண வரவினால் சோம்பேறிகளாக்கப்பட்டுவிட்டார்கள்.
பலருக்கு உடலை வருத்தி வேலை செய்ய இஷ்டமில்லை. 

நீங்கள் ஒன்றும் பொய் எழுத்துவதாகவோ 
நடைமுறையில் இல்லாததை எழுத்துவதாகவோ நான் சொல்ல வரவில்லை.

என்னுடைய மூல கருத்தை நீங்கள் விளங்கி கொள்ளவில்லை என்று எண்ணுகிறேன்.

சாதி என்பது இல்லாத ஒன்று 
இதை யாராலும் நீண்ட காலத்துக்கு கட்டி காக்க முடியாதது.

யாழ்ப்பாண தமிழரை பொறுத்தவரை விடுவதும் பிடிப்பதுமாக 
விளையாடிக்கொண்டே இருப்பார்கள் ... தேவை என்றால் பிடிப்பது 
தமக்கு சாதகம் இல்லாத தருணத்தில் விடுவதும் இப்போதான் முதன் முதலாக நடக்கவில்லை.

நான் முதலே சொன்னதுபோல் புலம்பெயர்ந்த யாரும் 
நாம் உயர்சாதியில் இருந்து வருகிறோம் வயல்தான் விதைப்போம் 
என்று வந்த நாடுகளில் இருக்கவில்லையே ........போலி  சாதியை விட்டுவிட்டு 
கோப்பை கரண்டியை கையில் எடுக்கவில்லையா? 

இந்துமதமும் சாதியும் ஒன்றோடு ஒன்று கலந்தது 
இதோடு கலந்த எவரும் போலி வேஷம் போட்டு போலியாகத்தான் 
வாழ்ந்துகொண்டு இருப்பார்கள். தம்மையும் ஏமாற்றி கடவுளையும் 
ஏமாத்திக்கொண்டு இருப்பதுதான் ஒரே வழி. 

இந்த போலி வாழ்க்கை அப்பப்போ இன்று மனிதனை புண்படுத்திக்கொண்டே 
இருக்கிறது ... தெரிந்தும் இவர்கள் பொன்படுத்துகிறார்கள் 
இதன் எதிர் தாக்கமும் தொடர்நதுகொண்டே இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

 

On 7/24/2018 at 1:02 PM, ragunathan said:

குறைந்த சாதி என்பதற்காக தேவாலயங்களின் சில பகுதிகளுக்கு செல்லவிடாமல் மறுக்கப்பட்டவர்கள், வருடாந்த சுற்றுப் பிரகாரங்களில் குறைந்த சாதியைச் சேர்ந்தவர்கள் சுருவங்களைத் தூக்குவதையோ, கிட்டே வருவதையோ கடுமையாகத் தடுத்த சந்தர்ப்பங்கள், ஒரு குருவானவர் கீழ்ச்சாதியைச் சேர்ந்தவர் என்பதற்காகவே பலர் முன்பாக அவரது சாதியைச் சொல்லி, "நீ சொல்லும் பிரசங்கத்தை நான் ஏன் கேட்கவேண்டும்?" என்று தேவாலயத்துக்கே வராமல் விட்ட பலர், உயர் சாதிப் பெண்ணை ஒரு கீழ்சாதி ஆண் முடித்தான் என்பதற்காகவே அவர்களது குடும்பத்தையே தேவாலயங்களுக்கு வரமுடியாமல்ப் பண்ணிய பலர்...இப்படி இந்துமதத்திற்கு எந்த விதத்திலும் சளைக்காது சாதிவெறியைக் காட்டியவர்கள் இங்கும் இருக்கிறார்கள்.

இந்த கிறிஸ்தவர்களிடம் இருக்கும் சாதிப் பிரச்சினை இன்னமும் யாழ்ப்பாணத்தில் அப்படியே தான் இருக்கிறது.

இந்துக்களிடம் பெருமளவு குறைந்தாலும் கிறிஸ்தவர்களிடம் இந்த சாதிப் பிரச்சினை இன்னமும் பெருமளவு மாற்றம் இல்லாமல் அப்படியே தான் இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.