Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’மாவையையே முதலமைச்சராக நியமிக்க வேண்டும்’

Featured Replies

’மாவையையே முதலமைச்சராக நியமிக்க வேண்டும்’
 
 

-டி.விஜிதா

வடமாகாண முதலமைச்சராக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவே நியமிக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்த வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், இது எனது தனிப்பட்ட விருப்பம் எனவும் குறிப்பிட்டார்.

வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் வீட்டில் இன்று (04) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளை கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றது. அந்தக் கலந்துரையாடலின் போது, யாழ். மாவட்ட கிளை கூடி ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கமைய, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின் போது, முதலமைச்சர் வேட்பாளராக இலங்கை தமிழரசு கட்சியின் நீண்ட கால உறுப்பினர் ஒருவரையே நிறுத்த வேண்டுமென ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

“கட்சி யாப்பின் அடிப்படையிலும், கட்சி அங்கத்துவ அடிப்படையிலும், தமிழரசுக் கட்சியின் சார்பாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாகவும், உறுப்பினர் ஒருவர் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும். அந்தவகையில், கூட்டமைப்பின் உறுப்பினரும், தமிழரசு கட்சியின் உறுப்பினர் நியமிக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

“அத்துடன், இது தொடர்பில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றார்.

தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் எனின், மாவை சேனாதிராஜாவையே முதலாவதாக ஆதரிப்பேன் என்று தெரிவித்த அவர், 2013ஆம் ஆண்டு தேர்தலின் போது, மாவை சேனாதிராஜாவின் பெயரையே தான் பரிந்துரைத்ததாகவும், மாவை சேனாதிராஜா தான் எனின் கட்டாயமாக தனது ஆதரவு அவருக்கே கொடுப்பேன் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, கட்சியின் தீர்மானம் என்ற ஒன்று இருப்பதால், எதிர்வரும் மாகாண சபை தேர்தலின் போது, கட்சி யாரைத் தீர்மானிக்கின்றதோ அவருக்கு ஆதரவு வழங்கவும், கட்சியின் முடிவுக்கு கட்டுப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மாவையையே-முதலமைச்சராக-நியமிக்க-வேண்டும்/71-218529

  • கருத்துக்கள உறவுகள்

"வடமாகாண முதலமைச்சராக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும்இ நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவே நியமிக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்த வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம்இ இது எனது தனிப்பட்ட விருப்பம் எனவும் குறிப்பிட்டார்."

இப்படி சிவஞானத்தார் குறிப்பிட்டிருந்தால் அவருக்கு ஞானம் தலைக்கேறிவிட்டது என்பது பொருள்.
அவர் உடனடியாக பதவி விலகவேண்டும். முதலமைச்சர்  பதவி மக்களால் தெரிவு செய்யப்படவேண்டியது அவரை நியமிக்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் மாவை கும்பல்.. தமிழ் மக்கள் தொந்தரவு அரசியலில் இருந்து முற்றாக ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது. மக்களுக்கு விமோசனமாக அமையும்.

50 வருசமா மக்களை ஏமாற்றி.. சிங்கள.. ஹிந்திய எஜமானர்களுக்கு குடுகுடுப்பை அடிச்சு.. சொந்த மக்களை.. மீண்டும் மீண்டும்... நடுத்தெருவில் அரசியல் அனாதைகளாக விட்டது போதும். ?

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.