Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆஸி.யில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள்

Featured Replies

ஆஸி.யில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள்

 

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா  சென்ற 18 இலங்கையரை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைத்துள்ளது.

5627768-3x2-340x227.jpg

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச்சென்ற 18 பேரையே அந்நாட்டு அரசாங்கம் தனி விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது.

குறித்த 18 பேரும் இன்று காலை கடுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்நனர்.

அவர்களோடு அவுஸ்திரேலிய நாட்டு அதிகாரிகள் அடங்கிய 36 பேர் கொண்ட குழுவும் வருகை தந்துள்ளது. 

குறித்த 18 பேரையும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/36702

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார புகலிடம் தேடுபவர்களாக இருக்குமோ..?

பாவம், செலவழித்த காசும், அலைச்சலும், முயற்சியும் வீணாக்கிபோட்டுது.

  • தொடங்கியவர்

குழந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார் இலங்கை தமிழர்

 

இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளரை அவரது பத்துமாத மகள் மற்றும் மனைவியிடமிருந்து பிரித்து அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கு 2012 ம் ஆண்டு படகுமூலம் சென்ற தீலிபன் என்ற  இலங்கை தமிழரை  திங்கட்கிழமை நள்ளிரவில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர்.

இவ்வருட ஆரம்பத்தில் குடியேற்றவாசிகளிற்கான தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட இவரை நாடு கடத்துவதற்கான அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியிருந்த நிலையில் அவர் தற்போது  நாடு கடத்தப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை தீலிபனின் மனைவிக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பான புகலிட தொழில் விசாவை வழங்கிய அதிகாரிகள் பின்னர் தந்தையை நாடு கடத்தியுள்ளனர்.

தீலிபன் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதால் அவர் தனது குடும்பத்தை நிரந்தரமாக பிரிந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

deport2.jpg

செவ் என அழைக்கப்படும் விசாவை தாய்க்கும் குழந்தைக்கும் அவுஸ்திரேலியா வழங்கியுள்ள போதிலும் இந்த விசா குடும்பங்கள் மீள்இணைவதற்கு அனுமதிக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீலிபனின் மனைவி தனது கணவரை அவுஸ்திரேலியாவிற்கு மீண்டும் அழைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ள மனித உரிமை ஆதரவாளர்கள் திலீபனின் மனைவிக்கு உயிராபத்து உள்ளது என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளதால் அவர் இலங்கை திரும்பிசெல்ல முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி யுத்தத்தில் தீலிபனின் அவரது தந்தையும் சகோதரரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தான் கடத்தப்பட்டு சித்திரவதை செய்ய்பபட்டதாக அவுஸ்திரேலிய  அதிகாரிகளிடம் திலீபன் தெரிவித்திருந்தார்.

http://www.virakesari.lk/article/36716

 

அகதிகளாகச் சென்று அடிமைப்பட்டு அவலப்படும் பெண்கள் அவுஸ்திரேலியாவுக்கு ஆருயிரை பணயம் வைத்து ஆழ்கடல் பயணம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, நவீனன் said:

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச்சென்ற 18 பேரையே அந்நாட்டு அரசாங்கம் தனி விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது.

குறித்த 18 பேரும் இன்று காலை கடுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்நனர்.

அவர்களோடு அவுஸ்திரேலிய நாட்டு அதிகாரிகள் அடங்கிய 36 பேர் கொண்ட குழுவும் வருகை தந்துள்ளது. 

"சுண்டங்காய் கால் பணம், சுமை கூலி முக்காற்பணம்"  எண்ட கதையாய்க்கிடக்கு :grin:

  • தொடங்கியவர்

இலங்கை குடும்பத்தை பிரித்தது அவுஸ்திரேலியா- ஐநா அமைப்பு கடும் கண்டனம்.

 

 
 

சிட்னியில் வசித்த இலங்கையை சேர்ந்த அகதிகள் குடும்பத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் பிரித்தமை குறித்து யுஎன்எச்சீஆர் கடும் அச்சம் வெளியிட்டுள்ளது.

தந்தையை இரவில் அவுஸ்திரேலியா நாடு கடத்தியதன் காரணமாக அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்ட தாய் 11 மாத குழந்தையுடன் தனித்து விடப்பட்டுள்ளார் என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.

இது நடவடிக்கை குடும்பஐக்கியம் என்ற அடிப்படை உரிமைக்கு முரணானது,குழந்தையின் நலன் குறித்த அடிப்படை கொள்கைகளிற்கும் முரணானது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.

தந்தை நாடு கடத்தப்படமாட்டார் குடும்பத்துடன் இருப்பதற்கு அனுமதிக்கப்படுவார் என்ற உத்தரவாதத்தை அவுஸ்திரேலியாவிடமிருந்து கோரியிருந்ததாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சருக்கு பல தனியார் சட்டத்துறையினர் வேண்டுகோள் விடுத்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.

கடல்வழியாக அவுஸ்திரேலியாவை சென்றடைபவர்கள்  அவுஸ்திரேலியாவில் உள்ள த ங்கள் குடும்பத்தவர்களுடன் சேரவிடாமல் தடுக்கப்படுகின்றனர் எனவும் யுஎன்எச்சீஆர் குறிப்பிட்டுள்ளது.

depo.jpg

நவ்றுவில் இவ்வாறு பல பெற்றோர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் கர்ப்பிணிகளான மனைவிமார்கள் பிரசவத்திற்காக அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பபட்டுள்ளனர்,நவ்று அல்லது பப்புவா நியுகினி அகதிகள் குடியேற்றத்திற்கான பொருத்தமான இடமில்லை என்ற போதிலும் குடும்பங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் இணையவிடவில்லை எனவும் ஐநா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சில சமயங்களில் பெற்றோர்கள் சிகிச்சைக்காக அவுஸ்திரேலியா செல்லும்வேளை குழந்தைகள் நவ்றுவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் இது குழந்தைகளின் உளநலத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இலங்கை அகதிகள் விவகாரம் வெறுமனே குடும்பங்களை ஒன்றுசேரவிடாமல் தடுப்பதற்கு அப்பாற்பட்டது எனவும் யுஎன்எச்சீஆர் தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk/article/36760

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.