Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம் பெயர் தமிழர்கள் சிலர் ஆளுநரை சந்தித்துள்ளனர் (படங்கள் )

Featured Replies

புலம் பெயர் தமிழர்கள் சிலர் ஆளுநரை சந்தித்துள்ளனர் (படங்கள் )

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

diaspora-2-800x533.jpg
புலம்பெயர்ந்து வாழும் இலங்கையை சேர்ந்த சமூக ஆர்வலர்களில் ஒரு தொகுதியினர் வடமாகாண ஆளுநர் றெயினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பழைய பூங்காவில் அமைந்துள்ள ஆளுநர் பங்களாவில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

 

பிரான்ஸ், கனடா, ஜேர்மன், இலண்டன், அவுஸ்ரேலியா நாடுகளிலிருந்து தாய் நாட்டிற்கு வருகை தந்துள்ள இவர்கள் தாய் நாட்டின் தற்போதய அரசியல், பொருளாதார, சமூக முன்னேற்றங்கள் தொடர்பில் ஆளுநர் றெஜினோல்ட் குரே மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினர்.

குறிப்பாக வடமாகாணத்தில் போதைப் பொருள் பாவனை மற்றும் வன்முறைக் கலாச்சாரம் என்பனவற்றினை தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.

யுத்தத்திற்கு பின்னர் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்திகள் எதிர்கால அபிவிருத்திகள் தொடர்பாக ஆளுநரின் ஊடகப்பிரிவினால் விரிவான கானொளி புலம்பெயர் நாடுகளிலிருந்து வருகை தந்திருந்தவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் வடமாகாணத்தினை அபிவிருத்தி செய்வதற்காக புலம்பெயர் வாழ் உறவுகளின் உதவியினை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பில் ஆளுநர் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டதுடன் அதற்கான முயற்சிகளில் தனது முழு ஆதரவினையும் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

தற்போது இங்கே வாழ்கின்ற தமிழ் மக்கள் யுத்தம் காரணமாக மிகவும் மன அளவிலும் பொருளாதாரத்திலும் நலிவுற்று காணப்படுகின்றனர். அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்காக புலம்பெயர் உறவுகள் ஆக்கபூர்வமான பணிகளை ஆற்ற வேண்டும் என்றும். வேலையற்று நிர்க்கதியாக இருக்கின்ற இளைஞர் யுவதிகளுக்காக வட மாகாணத்தில் தொழிற்சாலைகளை உருவாக்கி அவர்களுக்கு வேலை வாய்பினை வழங்க புலம்பெயர்ந்து வாழும் செல்வந்தர்கள், தொழில் அதிபர்கள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த சந்திப்பில் ஆளுநரின் செயலாளர்;, இணைப்பு செயலாளர் சுந்தரம் டிவகல்லாலா வட மாகாணசபை உறுப்பினர் அகிலதாஸ் சிவக்கொழுந்து ஜனாதிபதியின் வடக்கு மற்றும் கிழக்குக்கான இணைப்பாளர் டொக்டர் கோல்டன் ஏஸ்எஸ்கே நிறுவனத்தின் தலைவர் எஸ்.எஸ்.குகநாதன், நண்பர்கள் நிறுவனத்தின் தலைவர் கே.செவ்வேள், நோத் லங்கா இன்சுட்ரூட் நிறுவனத்தின் பணிப்பாளர் பா.கோபாலகிருஸ்ணன் யாழ் வரவு லயன்ஸ் கழகத்தின் தலைவர் கிருபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

diaspora-3-800x533.jpgdiaspora-4-800x533.jpgdiaspora-8-800x533.jpgdiaspora.jpgdiaspora1-800x533.jpgdiaspora5-800x533.jpgdiaspora7-800x533.jpgDSC_0064-copy-800x533.jpg

http://globaltamilnews.net/2018/90336/

  • கருத்துக்கள உறவுகள்

பலநாடுகளைச் சேர்ந்தவர்கள் எப்படி ஒன்றாக போய் சந்தித்தனர்.ஒன்று சேர்த்து கூட்டிக் கொண்டு போனவர்கள் யார்?மர்மமாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ஈழப்பிரியன் said:

பலநாடுகளைச் சேர்ந்தவர்கள் எப்படி ஒன்றாக போய் சந்தித்தனர்.ஒன்று சேர்த்து கூட்டிக் கொண்டு போனவர்கள் யார்?மர்மமாக இருக்கிறது.

அதுக்குத்தான்  குகநாதன் இருக்கிறாரே??????

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் இச்செய்தியை அடிப்படையாக வைத்து ஒரு போட்டியை ஒழுங்குசெய்யலாம் 

இப்படத்தில் காணப்படும் புலம்பெயர் தமிழர்கள் யார். இவர்கள் எந்த நாட்டில் வாழ்கிரார்கள். புலம்பெயர் தேசங்களில் இவர்களது செயற்பாடு. தாயகத்தில் இவர்கள் எந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இவர்களுக்கு நேரடியாகவோ இல்லை தூரத்திலேயோ தொடர்பிலுள்ள அரசியல், வர்த்தக, ஊடகவியல் தொடர்புகள். புலம்பெயர்தேசங்களில் இவர்களது திருகுதாளங்கள், பிலிகளது காலத்தில் இவர்களது செயற்பாடுகள் புலிகளுக்குப்பின் புலிகளது சொத்துக்களை ஆட்டை போட்டவர்களில் இவர்களில் எவர்.

இவைபற்றித் தகவல் தருவோருக்கு ஆயிரம் பச்சைப்புள்ளிகள் வழங்கப்படும். விருப்பம் என்றால் தனிப்பட்ட வகையிலும் என்னுடன் தொடர்புகொள்ளலாம்.

1 hour ago, Elugnajiru said:

யாழ் களம் இச்செய்தியை அடிப்படையாக வைத்து ஒரு போட்டியை ஒழுங்குசெய்யலாம் 

இப்படத்தில் காணப்படும் புலம்பெயர் தமிழர்கள் யார். இவர்கள் எந்த நாட்டில் வாழ்கிரார்கள். புலம்பெயர் தேசங்களில் இவர்களது செயற்பாடு. தாயகத்தில் இவர்கள் எந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இவர்களுக்கு நேரடியாகவோ இல்லை தூரத்திலேயோ தொடர்பிலுள்ள அரசியல், வர்த்தக, ஊடகவியல் தொடர்புகள். புலம்பெயர்தேசங்களில் இவர்களது திருகுதாளங்கள், பிலிகளது காலத்தில் இவர்களது செயற்பாடுகள் புலிகளுக்குப்பின் புலிகளது சொத்துக்களை ஆட்டை போட்டவர்களில் இவர்களில் எவர்.

இவைபற்றித் தகவல் தருவோருக்கு ஆயிரம் பச்சைப்புள்ளிகள் வழங்கப்படும். விருப்பம் என்றால் தனிப்பட்ட வகையிலும் என்னுடன் தொடர்புகொள்ளலாம்.

ஏன் புலிகளின் சொத்துக்களை ஆட்டையைப் போட்டவர்கள் வெளிநாட்டில் மட்டும்தான் அவற்றை அனுபவிக்க வேண்டுமா ? கருப்புப் பணமானாலும் அங்கு எமது மக்களுக்குக் கொஞ்சமாவது உதவட்டுமே. இவர்கள் பேசியதாகக் குறிப்பிடப்பட்டவை யாவும் எமது மக்களுக்குப் பயனுள்ளவைதானே ? 

ஆனால் உறுத்தலான விடயம், புலம்பெயர்ந்த ஆர்வலர்கள் ஒரு பகுதியினர் என்பதற்குப் பதில் பதில் புலம்பெயர்ந்த ஆண்களில் ஒரு பகுதியினர் என்று சொல்லியிருக்கலாம். பெண்களுக்குச் சமூக ஆர்வம் இல்லை போலுள்ளது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

 

இணையவன்,

கறுப்புப்பணத்தைக்கொண்டு முன்னெடுக்கப்படும் உதவிகளால் புலத்தில் ஒருசாரர் தங்களை ஸ்திரப்படுத்தவோ அல்லது முன்னேற்றம் காண்பதுவோ அன்றேல் அண்றாட வாழ்க்கைக்கான உதவிகளைப் பெற்றுக்கொள்வதென்பதோ மிகவும் மகிழ்சியளிக்ககூடிய விடையமில்லை. ஒரு இனத்தின் பிறிதொரு பகுதி மாபியாக்களது தயவில் வாழ்வதுபோலாகும்.

அங்கு அவர்கள் எதுவெல்லாம் பேசினார்கள் என்பதை எம்மால் வெளிப்படியாக அறிந்துகொள்ளமுடியாது அது வெளிவரவும்போவதில்லை.

ஆனால் இனிமேல் இவர்கள் ஐரோப்பிய தெருக்களில் இன்னும் கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு திரிவினம் உண்மையான இனவிடுதலை விரும்பிகளும் அதற்குமாறான பொதுவான பிரச்சனை விரும்பாத புலம்பெயர் தமிழனும் இவர்களைகண்டால் பெட்டைநாய் வாலைக் கால்களுக்கிடையில் செருகியதுபோல்  கூனிக்குறுகி தெருவில் ஓரமாகப் போகப்பழகிக்கொள்வர் அதைப்பார்த்து இவர்களுக்கு மேலும் மிதப்பு வந்து மீண்டும் மீண்டும் ...... வேதாளம் முருங்கை மரங்களி ஏறத்தொடங்கிவிடும் ஒரு வித்தியாசம் விக்கிரமாதித்தன் கேள்வி கேட்டதால் அந்தவேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது ஆனால் இவர்களைக் கேள்விகெத ஆளில்லையென முருங்கை மரத்தில் ஏறுவார்கள்.

இவர்கள் யார் எப்படிப்பட்டவர்கள் கடந்தகாலத்தில் இவர்கள் என்னசெய்தார்கள் யாரது ஏற்றத்துக்கு உதவினார்கள் யாரிடம் ஆட்டையைப்போட்டார்கள் யாருடைய தாலியை அறுக்கத் துணைநின்றார்கள் இவைகளைப்பொதுவெளியில் கொண்டுவருவது ஊடகங்களினதும் அதனுடன் சேர்ந்திருப்பவர்களதும் கடமை. இதைக்கேட்பதற்கும் விமர்சனம் செய்வதற்கும் எனக்கும் கடமை இருக்கு காரணம் புலம்பெயர் தமிழ்க்கூடத்தில் நானும் ஒரு அங்கம். 

சரி அதைவிடுங்கோ 

இனிமேலும் நான் ஏமாளியாக இருக்கவிரும்பவில்லை புலம்பெயர் தேசங்களில் புலிகளது பணத்தைக் கொள்ளையடித்துவிட்டுப் எனக்குப் பங்கு தராமல் விட்டதுபோல் இதிலையும் ஏதாவது தேறினால் அதிலும் எனக்குரிய பங்கைத்தராமல் விட்டுடுவினம் எனும் ஆதங்கமும் எனக்கு இருக்கு.  
 

Edited by Elugnajiru

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.