Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முல்லைத்தீவில் பற்றியெரிகிறது தீ! – மீனவர்கள் ஆக்ரோசம்!! – பெரும் பதற்ற நிலைமை!!

Featured Replies

முல்லைத்தீவில் பற்றியெரிகிறது தீ! – மீனவர்கள் ஆக்ரோசம்!! – பெரும் பதற்ற நிலைமை!!

 

முல்லைத்தீவு, நாயாற்றுப் பகுதியில் உள்ள தமிழ் மீனவர்களின் பல வாடிகள், படகுகள், வலைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பு நிலைமை ஏற்பட்டுள்ளது. இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட செயல் என்று மிகுந்த ஆக்ரோசம் அடைந்துள்ளனர் பிரதேச மீனவர்கள்.

திட்டமிட்டு இந்தச் செயல் செய்யபட்டுள்ளது என்று பிரதேச மீனவர்கள் கூறுகின்றனர். பெரும் பதற்ற நிலைமை தோன்றியுள்ளதால் அருகில் உள்ள பெரும்பான்மை இன மீனவர்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர்.

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடியை – சுருக்க வலைப் பயன்பாட்டைத் தடுக்க வேண்டும் என்று பிரதேச மீனவர்கள் வலியுறுத்தி வந்ததுடன், தொடர் போராட்டத்தையும் மேற்கொண்டிருந்தனர். நேற்று முல்லைத்தீவுக்கு வந்த அமைச்சர் விஜிதமுனி சொய்சா அது தொடர்பில் ஆராய்த்தார்.

பிரச்சினைகளை ஆராய்ந்த அமைச்சர் குழு ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அந்தக் குழுவின் அறிக்கை வரும்வரை சுருக்குவலைப் பயன்பாடு முற்றாகத் தடை செய்யப்படும் என்றும், முன்னர் வழங்கப்பட்ட அனுமதிளுக்கும் தடை விதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இன்று இரவு தமிழ் மீனவர்களின் வாடிகள், படகுகள், வலைகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது. அவற்றின் பெறுமதி பல லட்சங்கள் என்று தெரியவருகின்றது. இது திட்டமிட்டுச் செய்யப்பட்டுள்ளது என்று மீனவர்கள் கொதிப்படைந்துள்ளதுள்ளனர்.

பொலிஸாரும், படையினரும் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவருகின்றது. மேலதிக விவரங்கள் விரைவில்…

http://newuthayan.com/story/00/முல்லைத்தீவில்-பற்றியெரிகிறது-தீ-மீனவர்கள்-ஆக்ரோசம்-பெரும்-பதற்ற-நிலைமை.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சற்று முன்னர் முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களது வாடிக்கு தீ வைப்பு!! (வீடியோக்கள்)

 

 
 

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீன்பிடி அமைச்சர் வருகைதந்து மீனவர்களது பிரச்சனைகளை தீர்த்து சென்ற மறுநாளான இன்று(13) இரவு முல்லைத்தீவு நாயாறு பகுதியில் தமிழ் மீனவர்களது வாடிகளுக்கு இனம்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது

 

குறிப்பாக நாயாறு பகுதியில் தனி ஒருவர் 40 படகுகள் வைத்து தொழில் செய்வதால் தமது தொழில் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் மத்திய மீன்பிடி அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா அவர்களிடம் சுட்டிக்காட்டிய பகுதியில் உள்ள தமிழர்களது வாடிகளுக்கே தீ வைக்கப்பட்டுள்ளது

 

இதனால் வாடியில் இருந்த மீனவர்களது பல லட்சம் பெறுமதியான உபகரணங்கள் எரிந்து நாசமாகி உள்ளது

 

சம்பவ இடத்துக்கு வடமாகாண சபை உறுப்பினர் து ரவிகரன் அவர்களும் குறித்த பகுதி பிரதேச சபை உறுப்பினர் மற்றும் பொலிசாரும் சென்று நிலைமைகளை பார்வையிட்டு வருகின்றனர்

 

இதேவேளை இராணுவம் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை அணைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

 

 

 

https://www.ibctamil.com/crime/80/104691?ref=bre-news

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நவீனன் said:

சற்று முன்னர் முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களது வாடிக்கு தீ வைப்பு!! (வீடியோக்கள்)

 

 
 

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீன்பிடி அமைச்சர் வருகைதந்து மீனவர்களது பிரச்சனைகளை தீர்த்து சென்ற மறுநாளான இன்று(13) இரவு முல்லைத்தீவு நாயாறு பகுதியில் தமிழ் மீனவர்களது வாடிகளுக்கு இனம்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது

 

குறிப்பாக நாயாறு பகுதியில் தனி ஒருவர் 40 படகுகள் வைத்து தொழில் செய்வதால் தமது தொழில் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் மத்திய மீன்பிடி அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா அவர்களிடம் சுட்டிக்காட்டிய பகுதியில் உள்ள தமிழர்களது வாடிகளுக்கே தீ வைக்கப்பட்டுள்ளது

 

இதனால் வாடியில் இருந்த மீனவர்களது பல லட்சம் பெறுமதியான உபகரணங்கள் எரிந்து நாசமாகி உள்ளது

 

சம்பவ இடத்துக்கு வடமாகாண சபை உறுப்பினர் து ரவிகரன் அவர்களும் குறித்த பகுதி பிரதேச சபை உறுப்பினர் மற்றும் பொலிசாரும் சென்று நிலைமைகளை பார்வையிட்டு வருகின்றனர்

 

இதேவேளை இராணுவம் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை அணைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

 

 

 

https://www.ibctamil.com/crime/80/104691?ref=bre-news

சம்பந்தன் கோஷ்டி கொழும்பிலை ஏசிக்கை இருந்துகொண்டு இனியும் நல்லாட்சி நல்லிணக்கம் எண்டு புசத்திக்கொண்டு திரியட்டும்.
எவ்வளவு பாதுகாப்பாய் இருந்த சனத்தை எல்லாத்தையும் கெடுத்து பாதுகாப்பில்லாமல் அனாதரவாக்கிப்போட்டாங்கள்.
கருணாநிதிக்கு வக்காளத்து வாங்கிற கூட்டத்துக்கு இப்பிடியான சம்பவங்கள் கண்ணுக்கும் தெரியாது....காதுக்கும் கேட்காது.

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் தமிழின அழிப்பு தொடர்ந்தும் நடைபெற்று வருவதற்கு இது வெளிப்டையானதொரு ஆதாரமாகும்! 

சிங்கள-பௌத்த போலீஸ் பயங்கரவாதிகளின் மற்றும் சிங்கள-பௌத்த முப்படைப் பயங்கரவாதிகளின் பயங்கரவாதிகளின் ஆதரவுடன் தமிழ் மீனவர்களின் படகுகள் எரியூட்டப்பட்டுள்ளன. 

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தி  வந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லாமையே இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்கின்றன என அங்குள்ள பெருமளவு மக்கள் வெளிப்படையாகவே கதைத்து வருகின்றனர். 

  • தொடங்கியவர்

முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களின் வாடிகள் தீக்கிரை – முற்றுகிறது முறுகல்

 

nayaru-fire-1-300x200.jpgமுல்லைத்தீவு- நாயாறு பகுதியில்  நேற்றிரவு 11 மணியளவில் தமிழ் மீனவர்களின் எட்டு வாடிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு உள்ளிட்ட பகுதிகளில் கொழும்பு அமைச்சர்களின் ஆதரவுடன், சிங்கள மீனவர்கள் வாடிகளை அமைத்து சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் 10 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

நேற்று முன்தினம் முல்லைத்தீவுக்குச் சென்ற கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, மீனவர்களுடன் பேச்சு நடத்தி, சட்டத்துக்குப் புறம்பான மீன்பிடியை தடுத்து நிறுத்துவதாக உறுதியளித்தார்.

இதையடுத்து முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் போராட்டத்தை இடைநிறுத்தினர்.

இந்த நிலையில் நேற்று மாலை, நாயாறு பகுதியில் உள்ள சிங்கள மீனவர்கள் மீண்டும் சட்டத்துக்குப் புறம்பான வகையில் மீன்பிடிக்க முயன்ற போது, தமிழ் மீனவர்களின் குடும்பங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நேற்றிரவு 11 மணியளவில் நாயாறு பகுதியில் இருந்து தமிழ் மீனவர்களின் வாடிகள், படகுகள், வலைகள் திடீரென தீக்கிரையாக்கப்பட்டன.

இதனால் எட்டு வாடிகள், இரண்டு படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்ட மீனவர்களின் உடைமைகள் எரிந்து நாசமாகின.

nayaru-fire-1.jpg

nayaru-fire-2.jpgnayaru-fire-3.jpgnayaru-fire-4.jpgnayaru-fire-5.jpgஇந்தச் சம்பவத்தினால் மீனவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டதுடன், சிறிலங்கா காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு சென்ற நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் பலரும், மீனவர்களுடன் கலந்துரையாடி ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

http://www.puthinappalakai.net/2018/08/14/news/32311

  • தொடங்கியவர்

மீனவர் வாடிகள் எரிப்பு – முல்லையில் மூவர் கைது

 

முல்லைத்தீவு, நாயாற்றுப் பகுதியில் நேற்று இரவு தமிழ் மீனவரின் படகுகள் ,வலைகள், வாடிகள் என்பன எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் சற்று முன்னர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

http://newuthayan.com/story/13/மீனவர்-வாடிகள்-எரிப்பு-முல்லையில்-மூவர்-கைது.html

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நவீனன் said:

முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களின் வாடிகள் தீக்கிரை – முற்றுகிறது முறுகல்

இந்தச் சம்பவத்தினால் மீனவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டதுடன், சிறிலங்கா காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு யாருக்கு...... ????????????????????????

  • தொடங்கியவர்

முல்லைத்தீவு விவகாரத்தில் பொலிஸார் பக்கசார்பான வகையில் நடந்து கொண்டனரா?

 

mullai-fish-store-1-720x450.jpg

முல்லைத்தீவு – நாயாற்றுப் பகுதியில் கடற்றொழிலாளர்களின் வாடிகள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இன்று(செவ்வாய்கிழமை) மாலை கைது செய்யப்பட்டிருந்ததாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மூவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டிருந்த குறித்த சந்தேக நபர்களை விடுவிக்கும் வகையில் ஆரம்பத்தில் பொலிஸார் செயற்பட்டதாகவும், எனினும் மக்களின் கடும் எதிர்ப்பினை தொடர்ந்து அவர்களை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றிருந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸார் இவ்வாறு பக்சசார்பான முறையில் நடந்து கொள்ள முயற்சித்த சம்பவமானது அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றத்தினை ஏற்படுத்தியிருந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

நேற்றிரவு (திங்கட்கிழமை) 10 மணியளவில் உள்ளூர் மீனவர்களுக்கு சொந்தமான 8 வாடிகள் தீயிட்டு எரிக்கப்பட்டிருந்தன. கடும் பிரயத்தனத்திற்கு பின்னர் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும், 3 படகு இயந்திரங்கள், 2 இயந்திரங்கள், 27 வலைகள் உள்ளிட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கடற்றொழில் உபகரணங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளதாக உள்ளூர் மீனவர்கள் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/முல்லைத்தீவு-விவகாரத்தி/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.