Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மற்றும் வடக்கு முதல்வருக்கு இடையில் சந்திப்பு

Featured Replies

கொழும்பில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மற்றும் வடக்கு முதல்வருக்கு இடையில் சந்திப்பு

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பில் சீ.வி.விக்னேஸ்வரன் அவதானம் செலுத்தி வருவதாக அண்மைக்காலமாக தகவல் வெளியாகி வருகிறது.

எனினும், அவ்வாறான நடவடிக்கையில் தற்போது வரை ஈடுபடவில்லை என முதலமைச்சர் தெரிவித்து வருகின்றார்.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தோல்வி கண்டுவிட்டதாக தமிழ் மக்கள் பேரவையின் அலுவலக அங்குரார்ப்பண நிகழ்வில் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

அத்துடன், தலைமைத்துவம் ஏற்பது குறித்து ஆராய்ந்து விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். எவ்வாறிருப்பினும், இந்த விடயங்களுக்கு உரிய நேரத்தில் தீர்மானம் மேற்கொள்வதாக இரா.சம்பந்தன் தெரிவித்து வருகின்றார்.

இந்த நிலையில், இன்றைய தினம் இருவருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு அனைவர் மத்தியிலும், பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

https://www.tamilwin.com/politics/01/192768?ref=home-latest

  • தொடங்கியவர்

சம்பந்தன், விக்கி சந்திப்பு பிற்போடப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் இன்று இடம்பெறவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், இன்று வழக்கு நடவடிக்கைக்காக கொழும்புக்கு வருகை தந்திருந்தார்.

இந்த நிலையில், சம்பந்தனுக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவிருந்தது.

எனினும், சம்பந்தன் கொழும்பில் இல்லாத காரணத்தால், குறித்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

https://www.tamilwin.com/politics/01/192839?ref=home-latest

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நவீனன் said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் இன்று இடம்பெறவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.

சம்பந்தன் கிளம்புற நேரம் அபசகுனமாய் கறுத்த பூனை குறுக்காலை பாய்ந்துவிட்டது போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இருவரும் தமிழ் மக்களுக்கான அரசியலை வடக்குக் கிழக்கில் முன்னெடுக்கிறார்கள். ஆனால் எதற்கு கொழும்பில் சந்திக்கனும். தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் உள்ள இடத்தில் சந்தித்திருக்கனும். ஊடகங்களுக்கும் மக்களுக்கும் சந்திப்பின் பெறுதிகள் உடனுக்குடன் சொல்லப்பட்டிருக்க வேண்டும். இவர்கள் மக்கள் பிரதிநிதிகளா அல்லது..???! 

சம்மந்தன் திக்கித் திக்கி ஒருமணி நேரத்தில் தனக்கு மட்டும்தான் ஜனநாயகம் தெரியும் என்று உளறுவதை கேட்கும் தலைவிதி முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்டுள்ளது! 

அத்துடன் சம்மந்தன் நாட்டைவிட்டு கனடா போன்ற நாடுகளுக்கு ஓடிச் சென்ற ஒருசிலரிடம் தன்னைப் போலவே பெறவேண்டியத்தைப் பெற்று அவர்களது கனடிய குடியுரிமை கொண்ட பிள்ளைகளுக்கு இலங்கையிலுள்ள ஹிந்திய தூதுவராலயம் மூலம் இலங்கை குடியுரிமை பெற்றவர்களுக்கு இந்திய கல்லூரிகளில் வழங்கப்படும் இடங்களை தட்டிப்பறித்து இடமெடுத்து கொடுத்து ஈனப் பிழைப்பு நடத்தும்படி முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கோரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கு ஆதரவாக டிபிஸ் ஜெயராஜ் போன்றவர்கள் போலிச் செய்திகளை தயாரித்து ஆதரவு வழங்குவார்கள் என்றும் சம்மந்தன் கூற வாய்ப்புள்ளது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, பெருமாள் said:

சம்பந்தன் கிளம்புற நேரம் அபசகுனமாய் கறுத்த பூனை குறுக்காலை பாய்ந்துவிட்டது போல் உள்ளது .

கறுத்த பூனைக்கே இன்னொரு கறுத்த பூனை குறுக்காலை போவதா? நேவர்...... பிரச்சனை வேறை எங்கையோ உழுப்பி எடுக்குது 

சம்மந்தன் பத்திரிகைகள் வாயிலாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களை சந்திக்க இருப்பதாக கதையளந்ததைத் தொடர்ந்து அவருடன் கதைப்பதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கொழும்புக்கு வந்த போது சம்மந்தன் தலைதெறிக்க இரவோடு இரவாக கொழும்பைவிட்டு ஓடிவிட்டதாக தெரிகிறது! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.