Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செம்மணிப் படுகொலை நினைவேந்தல்!!

Featured Replies

செம்மணிப் படுகொலை நினைவேந்தல்!!

 
20180907_092743-780x405.jpg

 

 

யாழ்ப்பாணம் செம்மணிப் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது.

செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிரிசாந்திக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

கிரிசாந்தியுடன் படுகொலை செய்யப்பட்ட ஏனைய மூன்று பேர் உட்பட,படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கபட்டவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில்  ஆரம்ப  பிரிவு மாணவர்கள்  பலருக்கு  கற்றல் உபகாரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், கிரிசாந்தினயின் உறவினர்கள், அயலவர்கள் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

20180907_092647.jpg20180907_092440.jpg20180907_092429.jpg20180907_092248.jpg

https://newuthayan.com/story/12/செம்மணிப்-படுகொலை-நினைவேந்தல்.html

  • தொடங்கியவர்

"படுகொலை இடம்பெற்றதற்கு கிருஷாந்தியின் கொலை சான்று"

 

 
 

(ரி.விரூஷன்)

இலங்கையில் இராணுவம் படுகொலைகளை செய்தது என்பதற்கு சான்றாக மாணவி கிருஷாந்தியின் கொலை காணப்படுகின்றது என வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

thavarasa2.jpg

இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு சர்வேதச பங்களிப்புடன் நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே வடக்கு மாகாண சபையும் உள்ளதென வடக்கு மாகாண சபையின் எதிர்கட்சி தலைவரான சி.தவராசா தெரிவித்துள்ளார்.

thavarasa1.jpg

இன்றைய தினம் இடம்பெற்ற , இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குழி பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுரையாற்றும் போதே அவர்கள் இதனை தெரிவித்தார்கள்.

http://www.virakesari.lk/article/39954

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி புதைகுழி புகழ் சந்திரிக்கா அம்மையாரும்.. சரத் பொன்சேகாவும்.. எந்தத் தண்டனைகளும் இன்றி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கேவலம் தமிழ் மக்கள் இந்த மனித இனக் கொடூரர்களுக்கு வாக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

செம்மணியில்.. இனவழிப்பின் பின் புதைக்கப்பட்ட எம் மக்களுக்கு.. நினைவஞ்சலிகள்.

6 hours ago, நவீனன் said:

இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு சர்வேதச பங்களிப்புடன் நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே வடக்கு மாகாண சபையும் உள்ளதென வடக்கு மாகாண சபையின் எதிர்கட்சி தலைவரான சி.தவராசா தெரிவித்துள்ளார்.

சாத்தான் வேதம் ஓதுகிறது! 

குமாரசாமி கிரிசாந்தியின் படுகொலை அடிப்படை மானிட உணர்வுள்ள அனைவரின் இரத்தத்தையும் கொதிக்கவைத்த ஒரு படுகொலை! 

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் மிக மோசமான மிலேச்சச் செயல்! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஞ்சலிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.