Jump to content

இலங்கை குறித்து முக்கிய உப குழுக்கூட்டம் இன்று


Recommended Posts

இலங்கை குறித்து முக்கிய உப குழுக்கூட்டம் இன்று

 

(ரொபட் அன்­டனி)

ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 39 ஆவது கூட்டத் தொடர்  ஜெனி­வாவில் நடை­பெற்­று­வ­ரு­கின்ற  நிலையில்  இலங்கை விவ­காரம் தொடர்பில் இன்று 24 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை  "பசு­மைத்­தா­யகம்" அமைப்­பினால்    உப­கு­ழுக்­ கூட்டம்  ஒன்று நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 

UNHRC-.jpg

இலங்கை மனித உரிமை தொடர்­பான இந்த உப­கு­ழுக்­ கூட்டம் மனித உரி­மைப்­பே­ரவை வளா­கத்தில் 25 ஆம் இலக்க அறையில் பிற்பகல் 2 மணி­யி­லி­ருந்து  3 மணி­வரை  நடை­பெ­ற­வுள்­ளது.

இந்த உப­கு­ழுக்­ கூட்­டங்­களில்  பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நிதிகள், தமிழ் அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள்,  சர்­வ­தேச நாடு­களின்   பிர­தி­நி­திகள், சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பினர் கலந்­து­கொண்டு  இலங்­கையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­ட­வேண்டும் என்ற விட­யத்தை   வலி­யு­றுத்­த­வுள்­ளனர். 

அத்­துடன் தென்­னி­லங்­கையிலிருந்து கலந்­து­கொள்­ள­வுள்ள அமைப்­புக்கள்   ஜெனிவா பிரே­ர­ணைக்கு எதி­ராக   அக்­க­ருத்­துக்­களை முன்­வைக்­க­வுள்­ளன.    ஜெனிவா நோக்கி பய­ணித்­துள்ள  முன்னாள் பிர­தி­ய­மைச்சர் சரத் வீர­சே­கர  இக் கூட்­டத்தில் பங்­கேற்று இலங்கை குறித்த  ஜெனிவா பிரே­ர­ணைக்கு  எதி­ராக  உரை­யாற்­றவுள்ளார் என்று  தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.  

இதே­வேளை "தமிழ் உலகம்" என்ற அமைப்­பினால் நாளை 25 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் இலங்கை தொடர்­பான உப­கு­ழுக் கூட்டம் ஒன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

"இலங்­கையின் மனித உரிமை நிலைமை" என்ற தலைப்பில் மனித உரிமைப் பேர வையின் 15 ஆவது இலக்க அறையில் பிற்பகல் 3 மணியிலிருந்து 4 மணி வரை இந்த உபகுழுக் கூட்டம் நடத்தப்படவுள் ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/41064

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நவீனன் said:

நிலையில்  இலங்கை விவ­காரம் தொடர்பில் இன்று 24 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை  "பசு­மைத்­தா­யகம்" அமைப்­பினால்    உப­கு­ழுக்­ கூட்டம்  ஒன்று நடத்­தப்­ப­ட­வுள்­ளது.  

அன்புமணி கதற விடுவாரா ? இல்லை செஞ்சி முன்னாள் எம். எல் .ஏ  கணேஸ் குமாரோடு முடிந்து விடுமா ? ரெல் மீ ..?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.