Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணத்தில் மாம்பழ உற்பத்தி வலயம்!

Featured Replies

யாழ்ப்பாணத்தில் மாம்பழ உற்பத்தி வலயம்!

 

5efc0f5ee1c454acf51f748d32f8887e_XL-720x450.jpg

இலங்கையில் முதலாவது மாம்பழ உற்பத்தி வலயங்களை யாழ்ப்பாணம் மற்றும் தம்புள்ளை ஆகிய பிரதேசங்களில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த மாம்பழ உற்பத்தி வலயங்கள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.

உலக வங்கியின் நிதியுதவியுடன், நடைமுறைப்படுத்தப்படும் நவீன விவசாய திட்டத்தின் கீழ் இந்த மாம்பழ உற்பத்தி வலயம் அமைக்கப்படவுள்ளது.

இதன்மூலம் ஒரு இலட்சம் சிறந்த ரக மாங்கன்றுகள் செய்கை பண்ணப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

http://athavannews.com/யாழ்ப்பாணத்தில்-மாம்பழ-உ/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, நவீனன் said:

உலக வங்கியின் நிதியுதவியுடன், நடைமுறைப்படுத்தப்படும் நவீன விவசாய திட்டத்தின் கீழ் இந்த மாம்பழ உற்பத்தி வலயம் அமைக்கப்படவுள்ளது.

எதுக்கெடுத்தாலும் உலக வங்கி நிதி....அவற்றை நிதி....இவற்றை நிதி எண்டால் நீங்க என்னதான் செய்யுறீங்க? :grin:

  • கருத்துக்கள உறவுகள்

தரமான மாம்பழம் உற்பத்தி என்றால் யாழ்தானே பிறகேன் தம்புள்ளைக்கு ஏற்கனவே தம்புள்ளை கீரைவகைகள் ரசாயனம் கலந்து கனடா லண்டன் பாரிஸ் என்று இறங்குவது காணாது என்று மாம்பலத்தில் நேரடி ஏற்றுமதியை தவிர்த்து சிங்கள தரகர் மூலமாக அனுப்ப யோசிக்கிணமாக்கும் .

யாழப்பாண கறுத்த கொழும்பான் மாம்பழம் தனிசுவை காரணம் சுண்ணக்கல் நிலத்தில் விளைவது போன்ற காரணம் கள் . நிலகுறியீடு பெறுவது நம்ம அரசியல்வாதிகளின் வேலை ஆனால் இங்கு ...............எல்லாத்தையும் தாரை வார்க்குதுகள் .

 

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணத்தில் மாம்பழ உற்பத்தி வலயம் – கறுத்தக்கொழும்பானுக்கு சவாலாகும் ரிஜேசி

 

Tom-JC-mango-variety-300x200.jpgசிறிலங்காவின் முதலாவது மாம்பழ உற்பத்தி வலயம், யாழ்ப்பாணம் மற்றும் தம்புள்ள ஆகிய இடங்களில் உருவாக்கப்படவுள்ளது. “நாமே வளர்த்து நாமே சாப்பிவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ், இந்த விவசாய அபிவிருத்தி திட்டம், முன்னெடுக்கப்படவுள்ளது என்று சிறிலங்காவின் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

“இந்த திட்டத்தின் கீழ் முதலாவது விவசாய அறுவடை வலயம், தம்புள்ள மற்றும் யாழ்ப்பாணத்தில் நிறுவப்படும்.

உலக வங்கியின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இந்த விவசாய நவீனமயப்படுத்தல் திட்டத்தின் கீழ், ரிஜேசி (Tom & JC mango) வகையைச் சேர்ந்த ஒரு இலட்சம் மாங்கன்றுகள் நடுகை செய்யப்படும்.

முதற்கட்டமாக, 12500 மாங்கன்றுகள், தம்புள்ளவில் நாட்டப்படவுள்ளன.

ரிஜேசி மாம்பழம், இலகுவாக பயிரிடக் கூடியது. உலர் மற்றும் ஈரவலயங்களில்  நன்றாக வளரக் கூடியது. ஆண்டு முழுவதும் காய்க்கக் கூடியது. இதற்கு உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் நல்ல கேள்வி உள்ளது.

ஏற்றுமதிச் சந்தையை இலக்கு வைத்து இந்த மாம்பழங்களை உற்பத்தி செய்யும் போது, விவசாயிகளால் அதிக வருவாயை பெற முடியும்.

எதிர்வரும் 28ஆம் நாள், யாழ்ப்பாணம், தம்புள்ளவில் முதலாவது மாம்பழ உற்பத்தி வலயத்தை உருவாக்கும், ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/09/25/news/33071

  • கருத்துக்கள உறவுகள்

ரிஜேசி  மரம் இடுப்பளவு உயரம் வந்ததுமே காய் பிடிக்க தொடங்கும் என்கிறார்கள் அப்படி பார்த்தால் கட்டாயம் மரபணு மாற்றம் செய்யபட்ட பயிர் என்பதில் சந்தேகம் இல்லை .அப்படியான Genetically modified மரங்கள் யாழ் பகுதியில் வளர்க்கும்போது பாரம்பரிய மாமரங்களில் பாரிய தாக்கத்தை உண்டுபண்ணும் எங்கள் தலைமுறையுடன் வில்லாட்டும் .கருத்தகொளும்பான் போன்ற மா வகைகள்  காணாமல் போய்விடும் .

5 hours ago, நவீனன் said:

ரிஜேசி மாம்பழம், இலகுவாக பயிரிடக் கூடியது. உலர் மற்றும் ஈரவலயங்களில்  நன்றாக வளரக் கூடியது. ஆண்டு முழுவதும் காய்க்கக் கூடியது. இதற்கு உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் நல்ல கேள்வி உள்ளது.

இப்பத்தான் அலிபாபாவில் கூவிக்கொண்டு இருக்கினம் .

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழில் இளநீர் வாங்கி குடித்தேன், ஒன்று 150 ரூபாயில் தொடங்கி கூடிக்கொண்டு போகும். ஆனால் ஒரு ருசி கிடையாது.எல்லா சந்திகளிலும் கிடைக்கும். இதை நான் எனது உறவினர் வீட்டில் இருக்கும்போது கதைத்தேன். அவர் உடனே வீட்டின் பிளேட்டில் ஏறி கொக்கத்தடியால் சில காய்களை பிடுங்கிப் போட்டார். மிக நல்ல ருசி ,மரமும் நல்ல உயரம். அதுபோல் மாமரமும் யாழ்ப்பாணத்தில் நல்ல உயரமாகவும் பருத்தும் வளர்ந்திருக்கும். ஒவ்வொரு மாம்பழமும் ஒவ்வொரு விதமான ருசி. சாப்பிட்டால்  அன்று முழுதும் கையும் வாயும் மணந்து கொண்டிருக்கும். பாப்பாவும் கூட அப்படியே.

இவர்கள் வியாபாரத்துக்காக எல்லா மரங்களையும் செம்மறி ஆடுகள் கணக்கா முழங்காலுக்கு கீழ வளர்த்து அறுவடை செய்தால் அதில இராசயனத்தை தவிர்த்து வேறென்ன இருக்கும்.  ? 

Edited by suvy
எழுத்து திருத்தம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, suvy said:

நான் யாழில் இளநீர் வாங்கி குடித்தேன், ஒன்று 150 ரூபாயில் தொடங்கி கூடிக்கொண்டு போகும். ஆனால் ஒரு ருசி கிடையாது.எல்லா சந்திகளிலும் கிடைக்கும். இதை நான் எனது உறவினர் வீட்டில் இருக்கும்போது கதைத்தேன். அவர் உடனே வீட்டின் பிளேட்டில் ஏறி கொக்கத்தடியால் சில காய்களை பிடுங்கிப் போட்டார். மிக நல்ல ருசி ,மரமும் நல்ல உயரம். அதுபோல் மாமரமும் யாழ்ப்பாணத்தில் நல்ல உயரமாகவும் பருத்தும் வளர்ந்திருக்கும். ஒவ்வொரு மாம்பழமும் ஒவ்வொரு விதமான ருசி. சாப்பிட்டால்  அன்று முழுதும் கையும் வாயும் மணந்து கொண்டிருக்கும். பாப்பாவும் கூட அப்படியே.

இவர்கள் வியாபாரத்துக்காக எல்லா மரங்களையும் செம்மறி ஆடுகள் கணக்கா முழங்காலுக்கு கீழ வளர்த்து அறுவடை செய்தால் அதில இராசயனத்தை தவிர்த்து வேறென்ன இருக்கும்.  ? 

முந்தியெல்லாம் ஒராளுக்கு கான்சர் எண்டால் அந்த ஊரே நடுங்கும்...... இப்பவெல்லாம் வீட்டுக்கு வீடு கான்சராமெல்லே..........

தலையிடி மாதிரி கான்சரும் வந்துட்டுதெண்டு இப்பிடியே கதைச்சுக்கொண்டு................அப்பிடியே நாமளும் நம்ம வேலையை பாத்துக்கொண்டு போவம்

16 hours ago, suvy said:

நான் யாழில் இளநீர் வாங்கி குடித்தேன், ஒன்று 150 ரூபாயில் தொடங்கி கூடிக்கொண்டு போகும். ஆனால் ஒரு ருசி கிடையாது.எல்லா சந்திகளிலும் கிடைக்கும். இதை நான் எனது உறவினர் வீட்டில் இருக்கும்போது கதைத்தேன். அவர் உடனே வீட்டின் பிளேட்டில் ஏறி கொக்கத்தடியால் சில காய்களை பிடுங்கிப் போட்டார். மிக நல்ல ருசி ,மரமும் நல்ல உயரம். அதுபோல் மாமரமும் யாழ்ப்பாணத்தில் நல்ல உயரமாகவும் பருத்தும் வளர்ந்திருக்கும். ஒவ்வொரு மாம்பழமும் ஒவ்வொரு விதமான ருசி. சாப்பிட்டால்  அன்று முழுதும் கையும் வாயும் மணந்து கொண்டிருக்கும். பாப்பாவும் கூட அப்படியே.

இவர்கள் வியாபாரத்துக்காக எல்லா மரங்களையும் செம்மறி ஆடுகள் கணக்கா முழங்காலுக்கு கீழ வளர்த்து அறுவடை செய்தால் அதில இராசயனத்தை தவிர்த்து வேறென்ன இருக்கும்.  ? 

தலைவரே எனக்கு ஒன்டு தெரிஞ்சாகனும் யார் அந்த பாப்பா ?

  • கருத்துக்கள உறவுகள்

Image associée

இவர்தான்.....!  tw_blush:

6 hours ago, அபராஜிதன் said:

தலைவரே எனக்கு ஒன்டு தெரிஞ்சாகனும் யார் அந்த பாப்பா ?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.