Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘எமக்காக இந்தியா தொடரந்தும் குரல் கொடுக்க வேண்டும்’ -மாவை சேனாதிராஜா

Featured Replies

image_b3aebe4e78.jpg

இலங்கைத் தமிழர் பிரச்சினையில், இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில், நேற்று (28) மாலை நடைபெற்ற சிநேகபூர்வக் கலந்துரையாடலில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இக்கலந்துரையாடல், தமிழகப் பத்திரிகையாளர்கள், சட்டத்தரணி மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிகள் குழாமுக்கும் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர முதல்வர்கள், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஆகியோருக்கும் இடையே நடைபெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய மாவை சேனாதிராஜா எம்.பி,

“நாங்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றோம். எமது மக்களுடைய விடயங்களில் அரசாங்க நடவடிக்கைகள் மிகவும் தாமதமாகவே நகர்கின்றன.

“அன்று எம்மிடம் இரண்டு போராட்ட சக்திகள் இருந்தன. ஒன்று விடுதலைப் புலிகளின் ஆயுதபலம். மற்றையது எமது மக்களின் வாக்குப்பலம். அவற்றில் ஒன்றை நாம் இப்போது இழந்துள்ளோம்.

“எனவே, தற்போது எம்மிடம் உள்ள மக்களின் ஜனநாயக பலத்தை மட்டுமே நம்பியுள்ளோம்.

“எமது தேசத்தை இரண்டு காலகட்டங்களாகப் பிரித்தால் யுத்தத்துக்கு பின், யுத்தத்துக்கு முன் என இரண்டு காலகட்டங்களில் நோக்க முடியும். அவை இரண்டிலும் பிரிக்க முடியாதது. எம்மக்களின் கண்ணீர் நீடித்துக் கொண்டே உள்ளது.

“அவற்றைத் தீர்க்க எமது தமிழகத்தின் மூலமாக கொடுக்கப்படும் செய்தி மத்திய அரசாங்கத்துக்குச் சென்று, அது இலங்கை அரசாங்கத்துக்கு தமிழரின் தீர்வு தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவையுள்ளது” என்றார்.

http://www.tamilmirror.lk/திருகோணமலை/எமக்காக-இந்தியா-தொடரந்தும்-குரல்-கொடுக்க-வேண்டும்/75-222755

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்... மாவை,  குரல் கொடுக்க மாட்டாரோ....  ⛑️

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் இன்டியா குரல் கொடுத்து வடகிழக்கில் பாலும் தேனும் ஓடுது தொடர்ந்து குரல் கொடுக்கணுமாம் தலையிலை மூளையா இல்லை களிமண்ணா இந்தாளுக்கு ?

  • கருத்துக்கள உறவுகள்

இலவு காக்க வேண்டியான் இந்தக் கிளிகள். ?

1 minute ago, பெருமாள் said:

இவ்வளவு நாளும் இன்டியா குரல் கொடுத்து வடகிழக்கில் பாலும் தேனும் ஓடுது தொடர்ந்து குரல் கொடுக்கணுமாம் தலையிலை மூளையா இல்லை களிமண்ணா இந்தாளுக்கு ?

அது ஒன்றுமில்லை.. இவர்களின் கையாலாகாத்தனம் தெட்டத் தெளிவாக தெரிய ஆரம்பித்துவிட்டதன் தாக்கமே இந்தக் கூப்பாடு. அது ஹிந்தியன் காதில் எனி விழவே விழாது. இவர்களின் குரலை இவர்களே புலிகளை அழிக்கப் போய் அழித்துக் கொண்டார்கள். முட்டாள் தனமான இவர்களின் அரசியல் தான்.. இந்த நிலைக்கு முக்கிய காரணம். 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பெருமாள் said:

இவ்வளவு நாளும் இன்டியா குரல் கொடுத்து வடகிழக்கில் பாலும் தேனும் ஓடுது தொடர்ந்து குரல் கொடுக்கணுமாம் தலையிலை மூளையா இல்லை களிமண்ணா இந்தாளுக்கு ?

 

23 minutes ago, nedukkalapoovan said:

இலவு காக்க வேண்டியான் இந்தக் கிளிகள். ?

அது ஒன்றுமில்லை.. இவர்களின் கையாலாகாத்தனம் தெட்டத் தெளிவாக தெரிய ஆரம்பித்துவிட்டதன் தாக்கமே இந்தக் கூப்பாடு. அது ஹிந்தியன் காதில் எனி விழவே விழாது. இவர்களின் குரலை இவர்களே புலிகளை அழிக்கப் போய் அழித்துக் கொண்டார்கள். முட்டாள் தனமான இவர்களின் அரசியல் தான்.. இந்த நிலைக்கு முக்கிய காரணம். 

 

image_b3aebe4e78.jpg

இப்படி, பிச்சை   எடுப்பது மாதிரி  இருப்பது  சரியா... மாவை?
உங்களது... தகுதி என்ன?  உலகத்தின்  ஒரு, மூத்த  குடி மக்களின், 
ஒரு   அரசியல் கட்சியின்  தலைவர் என்பதனை  மறந்து விட்டீர்களா? 

உலகத்தில் .....  எத்தனையோ தலைவர்கள் வாழ்ந்து, மறைந்து  இருக்கின்றார்கள்.
ஆனால்... ஒரு, பிச்சைக்கார  அரசியல்வாதியை, உங்கள் மூலம் கண்டு கொண்டேன்.

உங்களுக்கும்... அரசியலுக்கும், வெகு தூரம். 
எங்களது மானத்தை... இனியும், வாங்காமல்... ஒதுங்கி விடுங்கள்.

மாவை..... பென்ஷன் .  எடுப்பது, ஈழத்து  தமிழனுக்கு, செய்யும் நல்ல சேவை. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

மாவை... இது வரை,  சாதித்தமும்  இல்லை.
இனி... சாதிக்கப் போவதும்...  இல்லவே இல்லை....

வேள்விக்கு.... வளர்த், ஆட்டுக்  கிடாய் மாதிரி ....  இந்த ஆள், முன்னுக்கு வந்து நிற்கிறார். (விதி) 
செருப்படி விழும் என்று...  சம்பந்தன், சுமந்திரனே  பதுங்கி விட்டார்கள்.

மூளையை... பாவிக்கத் தெரியாத,  அகண்ட வாய்... மாவை.
இப்ப... எலிப் ? பொறியில்.... மாட்டிக் கி ட்டார் . ?

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளிடமிருந்த ஆயுதபலம் இழக்கப்பட்டுவிட்டவுடன் தமிழ் அரசியல் தலைவர்கள் புத்திசாலிகளாயிருந்தால்  என்ன செய்திருக்கவேண்டும்? எஞ்சி இருந்த அரசியல் பலத்தை இழக்கப்பட்ட ஆயுதபலத்திற்கு ஈடாக ஒன்றிணைத்து அதை இரண்டுமடங்காக கட்டியெழுப்பியிருக்க அல்லவா வேண்டும். அதைத்தான் நீங்கள் செய்யவில்லையே. தமிழர்களிடம் இருந்த சிறிய அரசியல் பலத்தையும் உங்கள் சுயநலத்திற்காக சிதறடித்துக்கொண்டல்லவா இருக்கிறீர்கள்.  

இனப்பிரச்சினைக்கு   தீர்வொன்றைப்பெறுவதற்கு தமிழ் அரசியல் கட்சிகள்  தமக்கிடையே ஒரு நேர்கோட்டைப்போட்டு அதில் நின்று  விட்டுக்கொடுப்புடனும் தொலைநோக்குடனும் செயல்பட தயாரில்லை. இந்தியாவின் அழுத்தத்திற்கு வழைந்து கொடுக்காமல் செயற்படும் தமிழ் அரசியல் தலைமை இன்று எவருமில்லை. அனைத்து அரசியல்வாதிகளும் ஏதோ ஒரு விதத்தில் இந்தியாவால் அடக்கியாளப்பட்டு கைப்பொம்மையாகி அவர்களின் தாளத்திற்கு ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தியாவில் குடும்பம் வீடு வாசல் அல்லது பிள்ளைகள் கல்விகற்றல் இன்னும் சிலரின் சேவகத்திற்கு மாதாமாதம்கைக்கூலி இப்படி பட்டியல் நீழும். 

இந்தியா தமிழருக்காக தொடர்ந்து குரல்கொடுக்கவேண்டும் என்கிறார் மாவை. இந்தியா முன்பு எப்போது தமிழருக்காக குரல்கொடுத்தது?. இந்தியா தனது பூகோள அரசியல் நலன்களைத் தக்கவைப்பதற்காகவே குரல்கொடுத்தது. எமது அரசியல்வாதிகளுக்கு வார்த்தை நீளம் காரியம் சிறிது.

Edited by vanangaamudi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.