Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விஜயகலா மகேஷ்வரன், காவற்துறையினரால் கைது….

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகலா மகேஷ்வரன், காவற்துறையினரால் கைது….

October 8, 2018

ஐக்கியதேசியக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான, விஜயகலா மகேஷ்வரன்  காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

vijayakala-new.png?resize=800%2C530

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் எனவும், அவ்வாறு மேலோங்கினாலேயே சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

விஜயகலா மகேஸ்வரனின் இந்த கருத்தானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து அவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் வாக்குமூலம் ஒன்றை வழங்கச் சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/2018/98665/

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகலா பிணையில் விடுதலை | Virakesari.lk

கைதுசெய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

vijaya_kala.jpg

கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதிவான் அவரை 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்ய அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/41958

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் குள்ளநரி  ரணிலின் ராட்சியத்தில் உய்யலாலா  ..

 

எப்படியாச்சும் அமெரிக்கன் சுதந்திரதேவி சிலை ரேன்சுசுக்கு இவவை கொண்டு போக முயற்சிக்கினம் ஆனாலும் சுவிஸ்குமாரை கொழும்புக்கு கொண்டு போய் மாட்டுபட்டதில் பெரிய கருப்பு கோடா இருக்கு .

 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

எல்லாம் குள்ளநரி  ரணிலின் ராட்சியத்தில் உய்யலாலா  ..

 

எப்படியாச்சும் அமெரிக்கன் சுதந்திரதேவி சிலை ரேன்சுசுக்கு இவவை கொண்டு போக முயற்சிக்கினம் ஆனாலும் சுவிஸ்குமாரை கொழும்புக்கு கொண்டு போய் மாட்டுபட்டதில் பெரிய கருப்பு கோடா இருக்கு .

 

எலக்சன் வருகுது. இப்பவே தியாகி ஆக்கினால் தானே ரணிலுக்கு ஒரு சீட், வடககே வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

எலக்சன் வருகுது. இப்பவே தியாகி ஆக்கினால் தானே ரணிலுக்கு ஒரு சீட், வடககே வரும்.

ரணிலுக்கு நிச்சயம் சீட் கிடைக்கும், அந்தளவிற்கு அங்குள்ள மக்களை மட்டுமல்ல, தமிழ் அரசியல்வாதிகளையும் அவர் சமாளித்து விடுவார், ஒரே ஒருவரைத் தவிர...! அந்த ஒருவரையும் சமாளிக்க கோடரியும் தயாரித்துவிட்டு அதற்கேற்ற காம்பை இப்போது தேடிக்கொண்டிருக்கிறார். Bildergebnis für Handles+for+Axe

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜயகலா மகேஸ்வரன் கைதாகி பிணையில் விடுவிப்பு

OCT 08, 2018by கி.தவசீலன்in செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் இன்று காலை சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் இராஜாங்க அமைச்சராக இருந்த போது விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றியிருந்தார்.

அந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து, அவர் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு அரச உயர்மட்டத்தினால் பணிக்கப்பட்டார்.

அத்துடன், சிறிலங்கா காவல்துறையின் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவினர்,விஜயகலாவின் உரை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இன்று காலை அவர், திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவுக்கு வாக்குமூலம் பெறுவதற்கு அழைக்கப்பட்டார்.

இதையடுத்து, விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், கோட்டே நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்றும் சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், உடனடியாகவே கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட விஜயகலா மகேஸ்வரனை, 5 இலட்சம் ரூபா பிணையில் செல்ல நீதிவான் ரங்க திசநாயக்க அனுமதி அளித்தார்.

vijayakala-bail-1.jpgvijayakala-bail-2.jpg

 

 

 

http://www.puthinappalakai.net/2018/10/08/news/33308

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

vijayakala-bail-2.jpg

இனி வரும் காலங்களில் இவரும் தியாகியாக சித்தரிக்கப்படுவார்.

தமிழர்களுக்கு கிடைத்த சாபங்கள் பலவிதம்.

அதில் இதுவும் ஒன்று. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.