Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடவுள் எங்கே இருக்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அன்பர்  கோவில் கோவிலாக ஏறி இறங்குவார். அவரைப் போன்ற பக்தி மானை எங்கும் பார்க்க முடியாது.

பிரசாதம் கொடுப்பதற்காக தன் நண்பனின்  அலுவலகத்திற்கு வந்திருந்தார். பெற்றுக் கொண்ட அவர் நண்பர்  எப்படி இருந்தது கடவுள் தரிசனம் என்றார்.

யாரும் பக்கத்தில் இல்லையே என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு மனம் விட்டுப் பேசினார்.

"மனதிற்கு ஒரு ஆறுதல் அவ்வளவுதான். புது சூழ்நிலை, நம்பிக்கை வார்த்தைகள், இனி நல்ல காலம் என்று ஒரு ஆறுதல் அவ்வளவுதான். கடவுளைப் பார்த்தாயா என்றால் கடவுள் சிலைகளைத்தான் பார்த்தேன் என்றார். வேறு ஒன்றும் புது மாற்றம் ஒன்றுமில்லை. இலக்கில்லாத பயணம் போல் தோன்றுகிறது சில சமயம் " என்றார்

சரி ஒரு பொருளைத் தொலைத்து விட்டோம் என்றால் எங்கே தேடுவோம்? என்றார் நண்பர் .

தொலைத்த இடத்தில் தான்.வேறெங்கே என்றார்.
தொலைத்த இடம் இருட்டாக இருக்கிறது என்று வேறு இடத்தில் தேடுவோமா? இது நண்பர் 

என்ன இது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது., என்று கேட்டார்.

அதைத்தான் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றார் நண்பர் . புரியவில்லையே என்றார்.

நம்முள்ளே அறிவாக இயங்கிக் கொண்டிருக்கும் இறைவனை, எங்கெங்கோ தேடிக் கொண்டிருக்கிறாய்.

இது ஞான மார்க்கம். இதுதான் உண்மை. முதலில் புரிவது சிரமமாக இருக்கும்.ஞானிகள் காட்டிய வழி.மூழ்கினால் முத்தெடுக்கலாம்.

கண்ணதாசன் பாட்டு ஒன்று தெரியுமா?

இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே,, அவர் ஏதும்
அறியாரடி ஞானத் தங்கமே,,

ஞானிகளின் சில புத்தகங்கள், சித்தர் பாடல்கள் தொகுப்பு கொடுத்தார் நண்பர் . எந்த கட்டாயமும் இல்லாமல் சும்மா படித்துப் பார். தெளிவு பிறக்கும்.
இலக்கு புரியும். அப்புறம் வா இருவரும் இன்னும் ஆழமாக உரையாடுவோம்.

குழப்பமாக அவர்  நண்பன் தலையசைத்தான்.
ஆனால் அவன் பார்வையில் ஒரு தேடல்
தெரிந்தது.

இனி அவனுள் இருக்கும் இறையே அவனை வழி நடத்தும். ஒரு ஞானி தன்னை சுற்றியிருக்கும் மாயையை நீக்கி தன்னையும் தன் மூலத்தையும் உணரப்போகிறார்.

நன்றி ஞானக் களஞ்சியம் 

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் எப்படி ஆறாம் அறிவைப் பெற்றான் என்று ஆறாம் அறிவை வைத்துக் கண்டுபிடிக்க முடியாததால்தான் கண்டுபிடிக்காததைக் கடவுள் என்றான்?

கடவுளின் அணுத்துகள் என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் இருப்பதை உறுதி செய்ததுபோன்று நாம் எங்கிருந்து வந்தோம், எப்படி சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றோம் என்பதை இன்னொரு மனித குலம் போன்ற ஒன்றை உருவாக்கி விடைகளை கண்டடையும்போது கடவுள் காணாமல் போய்விடுவார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடைகளை கண்டடையும் போது கடவுளும் காணாமல் போவார்.

அப்போது இந்த உலகமும் காணாமல்  போகும்.

ஏனென்றால் இன்றைய தேதியில் உலக நடவடிக்கைகளை கண்கூடாக பார்க்கும் போது வருங்காலம் அழிவில் இருக்கின்றது  என்பது அப்பட்டமாக தெரிகின்றது.

இருக்கும் இயற்கையை பாதுகாக்க வக்கில்லை. கடவுளை தேடுகின்றார்களாம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

" தேனுக்குள் இன்பம் கறுப்போ சிவப்போ

வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்

தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்

ஊனுக்குள் ஈசன் ஒளிந்து இருந்தானே " என்றும்

" உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்" என்றும்

  திருமூலர் அருளிய பின் நான் சொல்ல என்ன இருக்கிறது?

 

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்

உலகில்....பலரது ...அடாத செயல்களை நியாயப் படுத்த..ஒரு கடவுள் எப்போதும் தேவைப்படுவார்!

சில வேளைகளில் சண்டைகளை நியாயப் படுத்தப் பல கடவுள்களும் தேவைப்படுவதுண்டு!

 

கடவுள்களை...உபயோகித்தே...ஆரியம்....தமிழகத்தை அழித்தது...இன்றும் அழிவு தொடர்கதையாகவே உள்ளது!

 

ராஜ ராஜன் என்ற ஒரு மாபெரும்....ஆழுமையை...அறிவு ஜீவியை....இந்தக் கடவுள்களைக் கொண்டே வசியப்படுத்தினார்கள்!

 

அல்லா...என்ற கடவுளின் பெயரால்....உலகம் முழுவதுமே....அழிவை நோக்கிப் பயணிக்கின்றது!

 

கிறிஸ்துவ மதத்தின் பெயரால் ...காவு கொள்ளப் பட்ட...உயிர்களின் எண்ணளவு....கணக்கிலடங்காதது என்று கூறப் படுகின்றது!

அழிக்கப் பட்ட கலாச்சாரங்களுக்கும் ...அளவு கிடையாது!

ஒரு மனிதனின்......பழி பாவங்களைச் சுமப்பதற்கும்....ஒரு கடவுள் இருந்தே ஆக வேண்டும்!

 

திருப்பதி உண்டியலில்....எவ்வளவுக்குப் பணம் சேருகின்றதோ...அவ்வளவுக்குப் பாவங்களை அவர் சுமக்கிறார்!

இலங்கையில்...நம்ம நல்லூர் முருகனும்....இந்த விசயத்தில் அவ்வளவு குறைந்தவரல்ல!

2 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

தேனுக்குள் இன்பம் கறுப்போ சிவப்போ

வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்

தேனுக்குள் இன்பம் செறிந்தாற் போல்

ஊனுக்குள் ஈசன் ஒளிந்து இருந்தானே 

           ---திருமூலர் அருளியது. இனி நான் சொல்ல என்ன இருக்கிறது?

 

பாலாழி மீனாளும்...பான்மைத்து...அருளுயிர்கள்...,

மாலாழி ஆழும் அறிந்து....!

 

தாயுமானவ சுவாமிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.