Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடசென்னை - சினிமா விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடசென்னைபடத்தின் காப்புரிமை VadaChennai / Facebook
   
திரைப்படம் வடசென்னை
   
நடிகர்கள் தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, அமீர், கிஷோர், ராதாரவி.
   
கலை ஜாக்கி
   
இசை சந்தோஷ் நாராயணன்
   
இயக்கம் வெற்றிமாறன்
   
   

1980களின் பிற்பகுதியில் இருந்து 2000-களின் முற்பகுதிவரையில் விரிகிறது கதை.

உலகமயமாக்கலுக்கு முன்பாக வடசென்னைப் பகுதியில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்த ராஜனை (அமீர்), அவனுடன் இருக்கும் செந்தில் (கிஷோர்), குணா (சமுத்திரக்கனி)போன்றவர்கள் கொன்றுவிடுகின்றனர். இதற்குப் பிறகு, குணாவும் செந்திலும் அந்தப் பகுதியில் தாதாக்களாக உருவெடுக்கின்றனர்.

ஆனால், அவர்களுக்கிடையில் தொடர்ந்து மோதல் நடக்கிறது. ஒரு சிறிய குற்றத்திற்காக சிறைக்குள் வரும் அன்பு (தனுஷ்), சிறையில் உள்ள செந்திலை கொல்ல முயல்கிறார். நண்பர்களாக இருந்த குணாவும் செந்திலும் பகையாளிகளானது ஏன், அன்பு ஏன் செந்திலைக் கொல்ல முயல்கிறான், ராஜனின் மனைவி சந்திரா (ஆண்ட்ரியா) ஏன் குணாவைத் திருமணம் செய்கிறாள், அவளுக்கும் அன்புவுக்கும் என்ன தொடர்பு என்பது மீதிக் கதை

யாரையோ கொலைசெய்துவிட்டு, நான்கு நண்பர்கள் பேசுவதில் துவங்குகிறது படம். அதற்குப் பிறகு, அன்பு சிறைக்குள் வருவது, அவனது காதல் கதை, பிறகு சிறைக்குள் வந்ததற்கான காரணம் என படம் முன்னும் பின்னுமாக நான் - லீனியர் பாணியில் நகர்கிறது. படம் முடிவை நெருங்கும்போது பல முடிச்சுகள் அவிழ்ந்து, புதிர்கள் விடுபடுகின்றன. ஆனாலும், கதை முடிவை நெருங்காததால் வட சென்னை - இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்போடு படம் நிறைவடைகிறது.

VadaChennaiபடத்தின் காப்புரிமை VadaChennai / Facebook

படம் துவங்கி முக்கால் மணி நேரத்திற்குள் பல பாத்திரங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கிடையிலான உறவும் மோதலும் தொடர்ந்து சொல்லப்படுகிறது. இதனால், கதையைப் புரிந்துகொண்டு ஈடுபாட்டோடு படத்தை பார்க்க ஆரம்பிக்க சற்று நேரம் பிடிக்கிறது. தவிர, இடைவேளை வரை படம் எதை நோக்கி நகர்கிறது என்ற குழப்பமும் இருக்கிறது. படத்தின் பிற்பாதியில்தான் கதையில் ஒரு தெளிவு பிறக்கிறது.

எண்பதுகளின் பிற்பாதியில் நடக்கும் கதை என்பதால், அந்த காலகட்டத்தை திரையில் கொண்டுவர ரொம்பவுமே மெனக்கெட்டிருக்கிறார்கள். குறிப்பாக சென்னையின் பழைய மத்திய சிறைச்சாலையின் செட்.

இதுதவிர, எம்.ஜி.ஆர். மரணம், ராஜீவ் காந்தி கொலைசெய்யப்படுவது, அதை ஒட்டிய கலவரங்கள் என அந்த காலகட்டத்திற்கு இழுத்துச் செல்ல முயற்சிக்கிறார் இயக்குனர்.

VadaChennaiபடத்தின் காப்புரிமை VadaChennai / Facebook

ஆனால், ஜெயில் செட், அமீரின் உடை, ரேடியோ செய்திகளைத் தவிர வேறு எதுவும் அந்த காலகட்டத்திற்குரிய பாணியில் இல்லாததால், அதில் ஓரளவே வெற்றிகிடைக்கிறது.

தனுஷிற்கும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கும் இடையிலான காதல், ஆண்ட்ரியாவின் பாத்திரம் ஆகியவை இந்தப் படத்தில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை. அதிலும் படம் நெடுக, ஆண்ட்ரியாவின் பாத்திரம் குறித்த ஒரு புதிர்த் தன்மையை விட்டுக்கொண்டே வந்து, கடைசியில் அதனை விளக்குவது சிறப்பு.

படத்தின் ஒலிப்பதிவும் ஒளிப்பதிவும் சிறப்பாக இருப்பதாகச் சொல்ல முடியாது. பல இடங்களில் வசனங்களும் பின்னணியில் ஒலிக்கும் குரல்களும் மிக மோசமாக இருக்கின்றன.

படத்தில் நடித்திருக்கும் தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, கிஷோர் என எல்லோருமே தேர்ந்த நடிகர்கள் என்பதால் ஒரு காட்சிகூட நடிப்பு குறித்த உறுத்தல் இல்லாமல் நகர்கிறது. ஆனால், ராஜனாக வரும் இயக்குனர் அமீர், சிறிது நேரமே வந்தாலும் மனதில் நாற்காலிபோட்டு அமர்கிறார்.

VadaChennaiபடத்தின் காப்புரிமை VadaChennai / Facebook

தேவையில்லாத நகைச்சுவை, பாடல்கள் போன்றவை இல்லாததும் படத்தின் பலம்தான். சந்தோஷ் நாராயணனின் திறமை பின்னணி இசையில் மட்டும் தெரிகிறது.

படம் துவங்கும்போது முக்கிய பாத்திரங்களாகத் தென்படும் பலர், படம் நகர நகர மங்கிப்போக, ஆண்ட்ரியாவும் தனுஷும் மேலெழுவது ரசிக்கும்படி இருக்கிறது. அடுத்த பாகமான "வட சென்னை 2 - அன்புவின் எழுச்சி" குறித்து ஒரு எதிர்பார்ப்பையும் எற்படுத்துகிறது.

ஆனால், ஒரு முழுமையான திரைப்படத்தை எதிர்பார்த்து வரும் சாதாரண ரசிகர்கள் இந்தப் படத்தை எப்படி எதிர்கொள்வார்கள் என்பது கேள்விக்குறிதான்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-45885815

கன காலத்துக்கு பிறகு மனுசி பிள்ளைகளை விட்டு விட்டு தனியாக படம் பார்க்க வெளிக்கிடும் போது மனம் "கட்டாயமாக தியேட்டர் போய் பார்க்க வேண்டுமா...டிவிடியில் தரமான பிரதி கிடைக்கும் போது ஆறுதலாக இருந்து கையில் ஒரு கிளாசை ஏந்திக் கொண்டு பார்க்கலாம் தானே" என மறுகிக் கொண்டு இருந்தது. மனசை ஆறுதல் படுத்தி விட்டு 4 மணி ஷோவுக்கு பார்க்க சென்றேன்

நல்ல வேளை இப் படத்தை தியேட்டருக்கு போய் பார்த்தேன்.. இல்லாவிட்டால் இந்தளவுக்கு Detail ஆக செதுக்கிய ஒரு சினிமாவை தவற விட்டிருப்பேன் என படம் பார்த்த பின் உணர்ந்து கொண்டேன்.

முதல் 45 நிமிடங்கள் நிறைய நிறைய கதாப்பதிரங்களை, அவர்களின் கதையை Nonlinear முறையில் சொல்லிக் கொண்டு இருந்தமையால் அவர்களை ஞாபகத்தில் வைத்து காட்சிகளை கடப்பது கடினமாக இருந்தது. அத்துடன் 'இது என்ன கதை..பிடிபடுகுது இல்லையே' என குழப்பமாகவும் இருந்தது. (வீட்டில் டிவிடியில் பார்த்து இருந்தால் படத்தை Off பண்ணி விட்டு எழுந்து போயிருப்பேன்.)

ஆனால் அதன் பின் வரும் அத்தனை காட்சிகளும், முக்கியமாக இடைவேளைக்கு பிறகான அத்தனை காட்சிகளும் Nonlinear கதையை நேர் கோட்டில் புரிய வைக்கின்றன.

தனுஷ், ஆன்ரியா, அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரகனி, கிஷோர் என்று வரும் முக்கியமான நடிக நடிகைகள் மட்டுமில்லாம் படத்தில் சின்ன சின்ன role இல் வருகின்றவர்கள் கூட அருமையாகக நடிக்கின்றனர். (அந்த குறி சொல்லும் ஆச்சியை எங்கே தேடிப் பிடித்து இருப்பார்கள்..?)

ஒவ்வொரு காட்சிக்கும் மிக நேர்த்தியான பின்னனி இசை.

இரத்தமும் சதையும் தெறித்து விழும் வன்முறையை வாழ்க்கையாக கொண்ட ஒரு பகுதியினரின் வாழ்வின் ஒரு பகுதியை வட சென்னையில் அவ்வளவு detail ஆக காட்டியிருக்கின்றார் வெற்றிமாறன்.
எனினும் வட சென்னை என்றாலே வெறும் ரவுடிகள் தான் என்ற பார்வையும் மீனவ சமூகம் என்றால் கெட்ட வார்த்தைகளை அள்ளி அள்ளி வீசுவார்கள் என்பதையும் காட்டும் வழக்கமான பாணி இதிலும் இருக்கின்றது.

ஆயினும் ஒரு Gangster(s) சின் வாழ்க்கையை மிக நெருக்கமாக, கச்சிதமாக, வழக்கமான சினிமாவுக்குரிய சமரசங்கள் அதிகம் இன்றி ஒரு பெரும் நாவலின் முதல் பாகத்தை வாசித்த திருப்தியை வடசென்னையீன் மூலம் தருகின்றார் வெற்றிமாறன்.

இரண்டாம் பாகத்துக்காக காத்திருக்கின்றேன்.

------------------------------------
இப்படத்தை கண்டிப்பாக பிள்ளைகளுடன் பார்க்க முடியாது. Mute செய்யப்படாத கெட்ட வார்த்தைகள், வாள் வெட்டுக்கள், அதி வன்முறை காட்சிகள் என்று படம் முழுக்க பரவிக் கிடக்கு. வீட்டில் கூட டிவிடி யில் பிள்ளைகளுடன் பார்ப்பதை தவிர்ப்பது நல்லம்.

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிமாறன் !!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.