Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இந்தியா சீனா சிக்கல் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இந்தியா சீனா சிக்கல்
- வ.ஐ.ச.ஜெயபாலன்
.

சுவாமியின் வரவும் அதற்க்குப் பின் நிகழ்ந்த சந்திப்புக்களும் இலங்கையில் மகிந்த ஆதரவாளர்களர்களுக்கு கொண்டாடமாக இருந்ததை நான் தென்னிலங்கையில் நேரடியாக தரிசித்தேன். சிங்கள நண்பர்கள் மத்தியில் போர்க்காலம்போல இலங்கையில் அதிகரிக்கும் சீன செயல்பாடுகளையும் தமிழர்களின் அவல நிலையையும் இலங்கை தொடர்பான மேற்குலக நிலைபாடுகளையும் கண்டுகொள்ளாமலும் இந்தியா தொடர்ந்தும் இலங்கையை ஆதரிக்கும் என்று கருத ஆரம்பித்தார்கள். சுவாமியின் வரவை அதற்கான சமிக்ஞையாகவே அவர்கள் பார்த்தார்கள். . புதிய சூழல் சீனாவுக்கும் நல்லதருணமாக பட்டிருக்கலாம். இது காலமெல்லாம் இந்தியாவின் நண்பர்களாக இருந்த தமிழர்களையும் மேற்று நோக்கித் தள்ள ஆரம்பித்துள்ளது. 
. 
2005ல் ரணில் அமரிக்காவுக்கு நெருக்கம் என்பதும் மேற்குலகின் அழுத்தங்களுக்கு இணங்கி புலிகளோடு பெரும் யுத்தத்தை தவிர்க்கும் ரணிலின் மென் போக்கும் மகிந்த பதவிக்குவர உதவிய இந்திய அணுகுமுறைக்குக் காரணமாக இருந்தது என்கிற ஒர் வலுவான கருத்து இலங்கையில் நிலவுகிறது. இந்தியா இலங்கை அரசியலில் சீனாவைவிட மேற்க்கு நாடுகளையும் தமிழர்களையும்தான் ஆபத்தாக கருதுகிறது என சிங்கள தீவிரவாதிகள் விவாதிப்பதை நான் கேட்டிருக்கிறேன். இந்தியாவின் இலங்கைக் கொள்கை மீழாய்வு செய்யபட வேண்டும் எனபதையே இவை சுட்டி நிற்கின்றன. 
. . . புலிகள் இல்லாத இன்றைய நிலமையில் இந்தியா தனது முக்கியத்துவத்தை சிங்கள மக்கள் மத்தியில் இழந்துவிட்டது என்பதையே நான் தரிசித்தேன். புலிகளின் பின்னர் சிங்களவரது பார்வை சீனா அமரிக்கா இலங்கை என்பதாகவே உள்ளது. புலிகளுக்குப் பின்னான சூழலில் இலங்கையில் அமரிக்கா மேற்குலக ஆதரவின்றி இந்தியா தனித்து சீனாவை எதிர்கொள்ளுவது சாத்தியமா என்கிற புதிய கேழ்வி எழுந்துள்ளது 
. . .வடகிழக்கு மாகாணங்கள் மலையகம் தவிர இந்தியாவை நட்ப்பு சக்தியாக பார்க்கும் பிரதேசங்கள் எதுவும் இலங்கையில் இல்லை. ரணிலின் ஆதரவு பிரதேசமான தென் மேற்க்கு கரையோர சிங்களவர்கள் மத்தியில் அமரிக்கா மேற்க்கு நாடுகளுக்கு கணிசமான ஆதரவுள்ளபோதும் அங்கும்கூட இந்திய சார்பு இல்லை. தென்னிலங்கை சீனாவின் கோட்டையாகவே உள்ளது. . 
. ..இந்தியாவின் புதிய தலையிடி இலங்கையில் பலம்பெற்றுள்ள சீன பாகிஸ்தான் அணியின் இந்திய அணுகுமுறையில் ஏற்பட்டுவரும் புதிய போக்காகும். கிழக்கிலங்கையில் பாகிஸ்தானை நகர்த்த சீனா முனைவதாக சொல்லப்படுகிறது. மேலும் சீனா பாகிஸ்தான் அணி ஒட்டுமொத்த இதியாவையும் ஒரே இலக்காகப் பார்க்கும் பழைய போக்கில் இருந்து விடுபட்டுவருவதாகத் தெரிகிறது. வட மத்திய இந்தியாவிலும் பஞ்சாப்பிலும் சீனா பாகிஸ்தான் அணி அதிக கவனம் செலுத்துவதாக சொல்லப் படுகிறது. 
. 
இந்தியாவின் 2005-2010 காலக்கட்ட இலங்கைக் கொள்கையை தொடருவது நிச்சயம் இந்தியாவுக்கு சாதகமானதல்ல. ஈழப்போரின் முடிவின்பின்னர் உள்நாட்டு எதிரிகளற்று பலபட்ட இலங்கைக்கு சீன ஆதரவுடன் இந்தியாவைக் கையாளுவது இலகுவாகியுள்ளது, இலங்கையில் இந்தியாவின் நிலைபாடு தெளிவற்றதாகவே உள்ளது. இலங்கையில் சீனாவை எப்படி கையாளுவது? சீனாவுகு எதிர் இந்தியாவும் மேற்க்கு நாடுகளும் என்கிற இரண்டு அணிகளா அல்லது சீனா எதிர் இந்திய அணி மற்றும் மேற்குநாடுகள் அணி என்கிற மூன்று அணிகளா என்பதில் குருசேத்திரத்து கிருஸ்னன்போல இந்தியா தடுமாறுவது சீனாவுக்கே வாய்பானதாகும்.

 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für à®à¯à®ªà¯à®ªà®¿à®°à®®à®£à®¿à®¯  à®à¯à®µà®¾à®®à®¿.

இவரா... நீங்கள்  குறிப்பிட்ட,   சுவாமி.  எனப்படும்,  சுப்பிரமணிய  சுவாமி.  

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கவிஞர் உங்களது நெருங்கிய நண்பர்களான கக்கீம் நானாவும் ரிசார்ட் பதியுதீனும் இப்பவே துண்டைப்போட்டு இடம்பிடிச்சிட்டினம்போல இனி என்ன தமிழர் நிலங்களிலும் உங்களது நண்பர்கள் துண்டுபோட்டு உறுதி முடிப்பினம். 

இப்பவும் சொல்லிக்கொண்டு திரியுங்கோ இஸ்லாமியர்கள் எங்கள் சகோதரர்கள் என.

ஆனால் தமிழர் தரப்புக்கு இது நல்லதுக்கானதாவே இருக்கும் பலமாக சிங்களத்தை எதிர்த்து எமது உரிமைகளை மீட்டெடுக்க முனையாத கூட்டமைப்பையும் அதன் தலைவர்களான மாவை சம்சும் ஆகியோருக்குக் காயடிப்பு நடக்க நல்ல சந்தர்ப்பம். தவிர தமிழர்கள் மிகவும் உற்சாகமாக அரசியல் வேலைகளில் ஈடுபட மகிந்த காரணமாவார்.

ஆனால் என்ன சம்பந்தன் சுமந்திரன் மாவை ஆகியோருக்கு ரணில் மூலமாகப் பணப்பட்டுவாடா நடந்துமுடிந்து இப்போ மகிந்தவின்மூலமாகவும் பண மழை பெய்யப்போகுது.

7 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für à®à¯à®ªà¯à®ªà®¿à®°à®®à®£à®¿à®¯  à®à¯à®µà®¾à®®à®¿.

இவரா... நீங்கள்  குறிப்பிட்ட,   சுவாமி.  எனப்படும்,  சுப்பிரமணிய  சுவாமி.  

அபிஷ்டு அபிஷ்டு 

சுப்ரமணிய சுவாமிவாள்  இப்படி இருப்பார்.

Bilderesultat for à®à¯à®ªà¯à®ªà®¿à®°à®®à®£à®¿à®¯à®©à¯ à®à®à®µà¯à®³à¯

 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/27/2018 at 3:08 AM, poet said:

புலிகளுக்குப் பின்னான சூழலில் இலங்கையில் அமரிக்கா மேற்குலக ஆதரவின்றி இந்தியா தனித்து சீனாவை எதிர்கொள்ளுவது சாத்தியமா என்கிற புதிய கேழ்வி எழுந்துள்ளது

கிந்தியாவின் டோக்லாமிலேயே, அமெரிக்கா (இஸ்ரேல் ஊடக) உதவி கிடைக்கும் எனும் தோற்றத்தை காட்டியே, சீனாவை எதோ சாக்கு போக்காக சமாளித்து.

உணர்வு பூர்வமான உறவை, எமது வருங்கால சந்ததியிடம் திணிக்காதீர்கள். எமது பழமொழியானா, தாயும் பிள்ளையென்றாலும், வாயும் வயிறும் வேறு என்பதை உங்கள் வருங்கால சந்ததிக்கு சொல்லிக்கொடுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.