Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த ராஜபக்ஷ முன்னைய ஆட்சியில் செயற்பட்டதை போன்று செயற்பட மாட்டார்: கமல்ஹாசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த ராஜபக்ஷ முன்னைய ஆட்சியில் செயற்பட்டதை போன்று செயற்பட மாட்டார்: கமல்ஹாசன்

kamal-720x450.png

இலங்கையில் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை நான் வரவேற்கவில்லை. ஆனால் அவர் முன்னைய ஆட்சியில் செயற்பட்டதை போன்று செயற்படமாட்டாரென நம்புகின்றேன் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த பிரதமராக வந்துள்ளமையால் அவர் தமிழர்களுக்கு நன்மை செய்யமாட்டார் என்று யாரும் எண்ண வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகளின் அரசியல் விவகாரத்தில் தலையீடு செய்வது சிறந்ததில்லையெனவும் கமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை  தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தால் நிச்சயம் போட்டியிடுவோமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://athavannews.com/மஹிந்த-ராஜபக்ஷ-முன்னைய-ஆ/

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

இலங்கையில் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை நான் வரவேற்கவில்லை. ஆனால் அவர் முன்னைய ஆட்சியில் செயற்பட்டதை போன்று செயற்படமாட்டாரென நம்புகின்றேன் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணம் என் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கிறது.பிரதமராக நீடிப்பாரேயானால் தமிழ் மக்களை கவரக் கூடிய விதமாக அவசர அவசரமாக ஏதாவது செய்ய முற்படலாம்.முன்னர் போல் நடக்க முற்படமாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

ஏற்கனவே கிடப்பில் உள்ள புதிய அரசியல் யாப்பையும் தானே முன்மொழியலாம்.

அழித்தலுக்கு எப்படிப்பட்டவரோ அதேமாதிரி ஆக்குதலுக்கும் அவரே சிறந்தவர்.

ரணிலால் ஒர போதும் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது.அவருக்கு வேலை தனிப்படை அமைத்து யார்யார் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று பார்த்து எப்படி பிரிப்பது என்பதோடு சரி.மைத்திரி எதுக்கு லாயக்கில்லாத ஆள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த எண்ணம் என் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கிறது.பிரதமராக நீடிப்பாரேயானால் தமிழ் மக்களை கவரக் கூடிய விதமாக அவசர அவசரமாக ஏதாவது செய்ய முற்படலாம்.முன்னர் போல் நடக்க முற்படமாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

ஏற்கனவே கிடப்பில் உள்ள புதிய அரசியல் யாப்பையும் தானே முன்மொழியலாம்.

அழித்தலுக்கு எப்படிப்பட்டவரோ அதேமாதிரி ஆக்குதலுக்கும் அவரே சிறந்தவர்.

ரணிலால் ஒர போதும் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது.அவருக்கு வேலை தனிப்படை அமைத்து யார்யார் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று பார்த்து எப்படி பிரிப்பது என்பதோடு சரி.மைத்திரி எதுக்கு லாயக்கில்லாத ஆள்.

சிங்கள அரசியல் தலைமைகள் எவருமே இதயசுத்தியோடு தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்கப்போவதில்லை. ஏனெனில் அவர்கள் மகாவம்ச மனநிலையில் இருந்தும் முள்ளிவாய்க்காலில் புலிகளை வெற்றிகொண்ட வெற்றிவாத மனநிலையிலிருந்தும் வெளியே வரப்போவதேயில்லை.

மறுபுறம் தமிழர்கள் பிளவுண்டு பல கட்சிகளை புற்றீசல்கள் போன்று தோற்றுவிப்பதும், சுயநல நோக்கங்களுக்கும், சுகபோகத்திற்கும் தமிழர்களின் அரசியலை ( எதிர்ப்பு அரசியல், இணக்க அரசியல், சரணாகதி அரசியல்) தலைமைதாங்கி நடாத்த முற்படுவதும் எதையும் தமிழர்களுக்கு தரப்போவதில்லை. அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கமுடியாத வெறும் எடுப்பார் கைப்பிள்ளைகளாக இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

சிங்கள அரசியல் தலைமைகள் எவருமே இதயசுத்தியோடு தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்கப்போவதில்லை. ஏனெனில் அவர்கள் மகாவம்ச மனநிலையில் இருந்தும் முள்ளிவாய்க்காலில் புலிகளை வெற்றிகொண்ட வெற்றிவாத மனநிலையிலிருந்தும் வெளியே வரப்போவதேயில்லை

நிச்சயம் தமிழர்கள் மனதில் இடம் பிடிப்பதற்காக அவசர அவசரமாக ஏதாவது செய்ய வேண்டியவராக இருக்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஈழப்பிரியன் said:

நிச்சயம் தமிழர்கள் மனதில் இடம் பிடிப்பதற்காக அவசர அவசரமாக ஏதாவது செய்ய வேண்டியவராக இருக்கிறார்.

கைதிகளை விடுவிப்பாராக இருந்தால் ஏதோ செய்ய முற்படுகின்றார் என்று சொல்லலாம். ஆனால் மேற்கு உலகம் மகிந்த மீதான விசாரணைகளை வைத்து அழுத்தம் கொடுக்காவிட்டால் பழைய பல்லவியைக் காட்டுவார். 

மகிந்த சிங்களவர்களுக்குத்தான் தலைவர்! தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அல்ல!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நிச்சயம் தமிழர்கள் மனதில் இடம் பிடிப்பதற்காக அவசர அவசரமாக ஏதாவது செய்ய வேண்டியவராக இருக்கிறார்.

உங்கள் நம்பிக்கைக்கு வாழ்த்துக்கள் சொறிலங்கா  சுதத்திரம் பெற்ற நாள் முதல் தமிழருக்கு சிங்கள அரசியல் வாதிகளால் எந்த ஒரு நன்மையும் பெற்றதில்லை தமிழர்கள் உங்களை போல் ஓராயிரம் முறை எதிர்பார்த்து ஏமாந்துவிட்டும் இன்னும் சிங்களவரையும் ஹிந்தியர்களையும் நம்புவதை எப்படி சொல்வது .

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

நிச்சயம் தமிழர்கள் மனதில் இடம் பிடிப்பதற்காக அவசர அவசரமாக ஏதாவது செய்ய வேண்டியவராக இருக்கிறார்.

தமிழல் தேசியகீதம் பாடுவதை குடும்பமா எதிர்கிறார்கள்.

வரும் மாவீரர் விழாவிலே தெரிந்துவிடும், மகிந்தா, பழையவரா இல்லையா என.

Edited by Nathamuni

முன்னய ஆட்சியில் செயற்பட்டதைப்போன்று செயற்படுவதற்கு என்ன இருக்கின்றது ? உரிமைக்கான போராட்டத்தையும் அது சார்ந்த மக்களையும் அழித்தாகிவிட்டது. எஞ்சியது மிஞ்சியது எல்லாம்   உடலாலும் உளவியாலாலும் பொருளாதராம் உடமைகள் என அனைத்திலும் ஊனப்பட்ட மக்கள். என்னுமொருபக்கம் தேரிழுத்து திருவிழா கொண்டாடி பேரினவதத்தை அண்டிப்பழைக்கும் கூட்டம்.  என்ன செய்வது எப்படி போராடுவது மக்களோடு எப்படி இணைவது என்ற எந்த முடிவுக்கும் வரமுடியாத அரசியல் தலமைகள். இவற்றுக்குள் மகிந்த தனது அதிகாரத்தைப் பிரயோகிக்க எதுவும் இல்லை. போர்க்குற்றங்களை கடந்து மகிந்த  திரும்ப அதிகாரத்துக்கு வருவதே பேரினவாதத்திற்கு பெரும் வெற்றி. 

சிங்களவர்கள் மத்தியில் செல்வாக்கைப் பெறவும் பேரினவாதத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் புலிவருகின்றது இருக்கின்றது என்று சில நாடகங்கள் நடத்தலாம் அல்லது இஸலாமியர்களின் பரவலைத் தடுக்கலாம். மகிந்த மைத்திரி ரணில் சந்திரிக்க எல்லாம் தமிழர்களை கொன்றதின் எண்ணிக்கையில் கூடிக்குறையலாம் தவிர அடிப்படையில் சிங்களப் பேரினவாதிகள். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.