Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரித்தாளா ..மரியா ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலை 7 மணி கைத்தொலைபேசியும் வீட்டு தொலைபேசியும் மாறி மாறி அடிக்க. . யார்ராது காலங்காத்தால என்று எரிச்சலோடு போனை எடுத்தால் .. மனிசி பதட்டதோடு " என்னங்கோ. மரியா வீட்டு பெல்லை கனநேரமா அடிக்கிறேன் நாய்கள். குலைக்கிற சத்தம் தான் கேட்கிது கதவு திறக்கேல்ல . எனக்கு பயமாயிருக்கு. கெதியா வாங்கோ" என்றார் . ஆறுதலாக சோம்பல் முறித்து கொட்டாவி விட்டபடி. 10 மணிக்கு எழும்பும் நான் அரக்கப்பரக்க. எழும்பி சப்பாத்தை கொழுவிக்கொண்டு ஓடிப்போனேன் . மழை வேறு 4 வது நாளாக. விடாமல் அழுதுகொண்டேயிருந்தது .மரியா வீட்டுக்கு போவ துக்கிடையில் அவரைப்பற்றி சொல்லி விடுகிறேன்.

மரியா வயது 78 .வீட்டுக்கு அருகிலிருக்கும் வசதியானவர்கள் வசிக்கும். அதி நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் 7 வது மாடிவது மாடியில்.. 3 ஆளுயர பெரிய நாய்களோடு குடியிருக்கிறார் . இருதய அறுவை சிகிச்சை செய்து பேஸ் மேக்கர் வேறு பொருத்தப்பட்டிருக்கிறது. அவரின் ஒரே மகன் இத்தாலியில் வசிப்பதால். அவர் கேட்டுக்கொண்டதுக்கிணங்க ஒவ்வொருநாளும் மரியாவுக்கு மனைவிதான் காலையுணவு கொடுத்து நாய்களுக்கும் உணவு வைத்து விட்டு வருவார். இது 3 வருசமாக நடக்கும் நிகழ்வு .. .இன்று அவர் கதவை திறக்கவில்லை .....

நான் அவசரமாக. ஓடிப்போய் லிப்டில் ஏறி. 7ம் மாடிக்கு போனதுமே பதற்றத்தில் இருந்த மனைவி அடக்கி வைத்திருந்த அழுகையை அவிழ்த்து விட. அவரைதேற்றிவிட்டு கதவை பலமாக தட்டினேன். நாய்கள் மட்டுமே குலைத்துக்கொண்டிருந்தது . அதற்கிடையில் மரியாவின் மகனுக்கு மனைவி செய்தியை சொல்லிவிட அவர் அவசரமாக அங்கிருந்து கிளம்பி விட்டிருந்தார் .அந்த அடை மழையில் இத்தாலியிலியிலிருந்து வந்து சேர நாலு மணி நேரமாவது எடுக்கும் .அப்போதான் பக்கத்துக்கு வீட்டு பெண்மணி ஒப்பனை முடிந்து மெதுவாக கதவை திறந்து என்ன பிரச்னை என்றார் . அவரும் தனியாக வசிக்கும் வயதானவர் . விடயத்தை சொன்னேன் . சரி என் பால்கனி வழியாக அவரது பால்கனிக்கு பாய்ந்து போகலாம் அப்படிப்போய் யன்னல் வழியாக உள்ளே பார்க்கிறாயா என்றார் ..

போகலாம் தான் ஆனால் இரண்டு விடயம் ஒன்று மழை வேறு விடாமல் பெய்து கொண்டிருந்தது .
இந்த பால்கனியிலிருந்து தாவும்போது சறுக்கினால் நாளைக்கு பால் ..அடுத்தது அப்படி தாவி போய் விட்டாலும் யன்னலை திறந்து உள்ளே போக முடியாது ஆளுயர மூன்று நாய்கள் .எனக்கு அவைகள் பழக்கமில்லை ..இல்லையில்லை அவைகளுக்கு என்னை பழக்கமில்லை ..அவை எங்கே பாய்ந்து எதை கவ்வும் என்று தெரியாது ..ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை .

போலிசுக்கு போனடிக்கலாமா முதலுதவிக்கு போனடிக்கலமா என்று யோசித்து முதலுதவி தீயணைப்பு படைக்கு போனடிதேன் .பத்து நிமிடத்தில் வருவதாக சொன்னவர்கள் இருபது நிமிடத்தில் வந்து சேர்ந்தார்கள் .தீயணைப்பு வண்டியின் சைரன் சத்தம் கேட்டு குடியிருப்பின் அனைத்து பல்கனிகளிலும் விடுப்பு பார்க்கும் தலைகள் முளைத்து விட்டிருந்தது .
வந்தவர்களிடம் விபரத்தை சொன்னேன் .முன் கதவை அவர்கள் உடைத்து உள்ளே போக சட்டமில்லை .அதுவும் அதியுயர் பாதுகாப்பான இரும்பு கதவு .அதுக்கு போலீசை அழைக்க வேண்டும் .அந்த கதவை அவர்களும் உடைக்க முடியாது அதுக்காக அதிரடி போலீசை அழைக்க வேண்டும் .சட்ட ஒழுங்கின் விதி முறைப்படி நடக்க அவையெல்லாம் நேரமெடுக்கும் .

அடுத்ததாக இன்னொரு தெரிவு கிரேன் கொண்டு வர வேண்டும் .அதுக்கும் நேரமெடுக்கும் .எனவே பக்கத்துக்கு வீட்டு காரியின் பால்கனியால் பாய்ந்து போகலாம் என்று நான் சொன்னதும் தீயணைப்பு படையினர் இருவர் முதலுதவி கருவிகள் யன்னலை உடைக்கும் சுத்தியல்.நாய்கள் பாய்ந்து வந்தால் அவற்றை அமைதியாக்க அடிக்கும் ஸ்பிரே.. என்பவற்றோடு அவர் வீட்டுள் புகுந்து செல்ல இன்னொருவர் எங்களோடு நின்றுகொண்டிருந்தார் .

யன்னலை உடைத்து உள்ளே செல்லும் சத்தமும்.குரைத்துக்கொண்டிருந்த நாய்களை அமைதியாக்கும் சத்தமும் கேட்டது .அவர்கள் வெளியே வந்து என்ன சொல்லப்போகிறார்கள் என்கிற பதட்டத்தோடு பிரசவ அறை வாசலில் நின்றவனைப்போல நான் நின்று கொண்டிருக்க . இத் தாலியிலிருந்து காரில் வேகமாக வந்து கொண்டிருக்கும் மரியாவின் மகனுக்கு மனைவி போனில் நேரடி வர்ணனை செய்து கொண்டிருந்தார் .வெளியே இடியுடன் கூடிய அடை மழை .. யன்னலை உடைத்து உள்ளே சென்றவர்கள் கதவை திறக்கவில்லை நிமிடங்கள் ஒன்று.. இரண்டென.. கடந்து கொண்டிருந்தது .என் இதயத் துடிப்பு பின்னணி இசையாக என் காதில் கேட்டுக்கொண்டிருந்தது .ஒரு திகில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கான அனைத்தும் அங்கேயிருந்தது .

பன்னிரெண்டாவது நிமிடத்தில் கதவை திறந்த தீயணைப்பு படையினர் ஒருவர் லேசாக சிரித்தபடி பயப்பிட ஒன்றுமில்லை என்றவர் மனைவியை மட்டும் உள்ளே அழைத்தார் ..உள்ளே போன மனைவி சிறிது நேரத்தில் என்னை அழைத்தார் ..உள்ளே போய் பார்த்தேன் .மரியாவை கட்டிலில் கிடத்தி போர்த்திருந்தர்கள் .அவர் எதோ முனகிக்கொண்டிருந்தார் .எனக்கு வேலைக்கு போகும் நேரமாகி விட்டது அங்கிருந்து கிழம்பி விட்டேன் .

சரி நடந்த விடயத்தை உங்களுக்கும் சொல்ல வேணுமெல்லோ ..நேற்றிரவு மரியாவுக்கு இளைமைக்கால நினைவு எதோ வந்து தொலைத்திருக்க வேண்டும் எண்டு நினைக்கிறன் ..அவர் ஒரு விலையுயர்ந்த மார்டினி குடி வகை ஒன்றை எடுத்துக்கொண்டு குளியலறைக்கு சென்றவர் தொட்டியில் இளம் சுடு நீரை திறந்து விட்டு ஆடைகளை அவிழ்த்து தொட்டியில் இறங்கியவர் .நீராடியபடி குடிக்கத் தொடங்கியிருக்கிறார் .

அதிகாமாக குடித்து போதை தலைக்கேற சிறிய கோமா நிலைக்கு போய் விட்டார் .அவரின் நல்ல காலம் நவீன குளியல் தொட்டி என்பதால் அவரின் கழுத்தளவு தண்ணீர் மட்டுமே வழிந்தோடிக்கொண்டிருந்திருக்கின்றது . இல்லாவிட்டால் ஸ்ரீ தேவியை போலவே குடித்துக் கொண்டு குளித்த பெண் மரணம் என்கிற செய்தி வெளியாகியிருக்கும் .உள்ளே சென்ற தீ அணைப்பு வீரர் தொட்டியில் உறங்கிக்கொண்டிருந்தவரிடம் உயிர் இருக்கிறதா? ரத்த அழுத்தம் சரியாக இருக்கிறதா என பரிசோதித்து விட்டு கன்னத்தில் ஓன்று பளாரென போட்டிருக்கிறார்கள் .அப்போ தான் மரியா அசைந்திருக்கிறார் .அதன் பின்னர் மனைவியை அழைத்து கட்டிலில் கொண்டு போய் கிடத்தி போர்த்தி விட்டு சென்று விட்டார்கள் ..

வெளியே வரும்போது குளியலறையை எட்டிப்பார்த்தேன் .பாதிக்கு மேல் முடிந்த மார்டினி போத்தல் இருந்தது .மரியா மீண்டும் அந்த தவறை செய்து விடக் கூடாது என்பதுகாக அதனை கொண்டு வந்து விட்டேன் .இனி அந்த கறுமத்தை நானே குடித்து முடிக்க வேண்டும் ..

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, sathiri said:

வெளியே வரும்போது குளியலறையை எட்டிப்பார்த்தேன் .பாதிக்கு மேல் முடிந்த மார்டினி போத்தல் இருந்தது .மரியா மீண்டும் அந்த தவறை செய்து விடக் கூடாது என்பதுகாக அதனை கொண்டு வந்து விட்டேன் .இனி அந்த கறுமத்தை நானே குடித்து முடிக்க வேண்டும் ..

ஆகா.... நல்ல நகைச்சுவை கதை✍️. சாத்திரியார். :grin:
பொதுவாக... இப்போ.  எனக்கு கதை படிக்கும்..  ஆர்வம் இல்லை.
ஆனால்... "மரித்தாளா.. மரியா"  என்ற தலைப்புடன்.. கதையை... பிரசுரித்தவுடன்,  
படிக்கும் ஆவல் வந்து, ஓரே மூச்சில், ?  படித்து விட்டேன்.   

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அரசியலை விட்டு பார்த்தால்  இப்படியான கதைகள் உங்களை அடிக்க ஆள் கிடையாது நன்றி சாத்திரியார் உங்களின் ஆக்கத்துக்கு ஒரு டவுட் மார்ட்டில் வேறை மார்ட்டினி வேறையா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

உங்கள் அரசியலை விட்டு பார்த்தால்  இப்படியான கதைகள் உங்களை அடிக்க ஆள் கிடையாது நன்றி சாத்திரியார் உங்களின் ஆக்கத்துக்கு ஒரு டவுட் மார்ட்டில் வேறை மார்ட்டினி வேறையா ?

இரண்டும் ஒண்டுதான்

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் கறுமத்தை குடித்து தொலைத்தாகி விட்டதா ...... நல்லாய் இருக்கு கதை.......!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

உங்கள் அரசியலை விட்டு பார்த்தால்  இப்படியான கதைகள் உங்களை அடிக்க ஆள் கிடையாது நன்றி சாத்திரியார் உங்களின் ஆக்கத்துக்கு ஒரு டவுட் மார்ட்டில் வேறை மார்ட்டினி வேறையா ?

Martini

853px-Martini_Extra_Dry_7408.jpg

 

Martell

martell-vs-cognac-20cl_temp.jpg

 

இதில் எந்தக் கறுமத்தை மரியா குடிச்சு ரகளையை உண்டுபண்ணினார் என்பதை மிச்சக் கறுமத்தைக் கொண்டுபோன சாத்திரியார்தான் சொல்லவேண்டும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

Martini

853px-Martini_Extra_Dry_7408.jpg

 

Martell

martell-vs-cognac-20cl_temp.jpg

 

இதில் எந்தக் கறுமத்தை மரியா குடிச்சு ரகளையை உண்டுபண்ணினார் என்பதை மிச்சக் கறுமத்தைக் கொண்டுபோன சாத்திரியார்தான் சொல்லவேண்டும்?

இரண்டுமில்லை  இது

remy-martin-louis-xiii-cognac-grande-champagne.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.