Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜய் மல்லையா: இந்தியாவிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்றம் ஒப்புதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  •  
விஜய் மல்லையாபடத்தின் காப்புரிமை Getty Images

விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

9,000 கோடி ரூபாய் வாராக்கடன் தொடர்பாக, மதுபான தொழிற்சாலை அதிபர் விஜய் மல்லையாவின் இந்திய பாஸ்போர்ட் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு நாட்டைவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

அவரை இந்தியாவுக்குக் கொண்டுவர இந்திய அரசு சட்டரீதியான பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.

விஜய் மல்லையாவை ஒப்படைப்பது தொடர்பாக லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.

அதில், விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மேற்கொண்டு பிரிட்டன் வெளியுறவுச் செயலரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மல்லையாபடத்தின் காப்புரிமை Getty Images

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அண்மையில் டிவிட்டரில் தெரிவித்திருந்தார் மல்லையா.

"நான் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கவில்லை. கடன் பெற்றது கிங் ஃபிஷர் விமான நிறுவனம்தான். உண்மையில் தொழிலில் நட்டம் ஏற்பட்டது எதிர்பாராமல் நிகழ்ந்தது. கடனுக்கு உத்தரவாதம் வழங்குவது என்பதற்காக, நான் ஏமாற்றினேன் என்று கூறக்கூடாது."

"நான் மூல கடன்தொகையை திருப்பிக் கொடுக்கிறேன் என்ற முன்மொழிவை கொடுத்திருக்கிறேன். அதை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று மல்லையா அந்த டிவிட்டர் செய்தியில் கூறியிருக்கிறார்.

இந்த தீர்ப்பு வெளியான 14 நாட்களுக்குள் விஜய் மல்லையா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.

அதற்குள் மேல்முறையீடு செய்யாவிட்டால், நீதிமன்ற தீர்ப்பை மல்லையா ஏற்றுக் கொள்வதாகக் கருதப்பட்டு அவர் 28 நாட்களுக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார்.

கிங்ஃபிஷர் பீர் உற்பத்தி ஆலையை நடத்திவந்த மல்லையா, பிறகு கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தை தொடங்கினார். போர்ஸ் இந்தியா பார்முலா ஒன் அணியின் இணை நிறுவனராகவும் தனது தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார் விஜய் மல்லையா.

கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் கடன் தொகை அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த 2012ஆம் ஆண்டு அந்நிறுவனத்தை நடத்துவதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவின் பணக்கார மனிதர்களில் ஒருவராக பெயர்பெற்ற விஜய் மல்லையாவின் மொத்த கடன் மதிப்பு 1பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேல்.

தனது இந்திய பாஸ்போர்ட் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 62 வயதாகும் விஜய் மல்லையா பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார்.

தனது ஆடம்பரமான வாழ்க்கைக்கு புகழ்பெற்ற விஜய் மல்லையா இந்தியாவின் "ரிசர்ட் பிரான்சன்" என்றும் அழைக்கப்பட்டார்.

https://www.bbc.com/tamil/india-46508961

  • கருத்துக்கள உறவுகள்

hqdefault.jpg

என்னை கொண்டுவந்து ஏன் இங்க அடச்சீங்க .. இங்க ஏசி இருக்கா .. ? 😊

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

hqdefault.jpg

என்னை கொண்டுவந்து ஏன் இங்க அடச்சீங்க .. இங்க ஏசி இருக்கா .. ? 😊

Ãhnliches Foto

ஏசி  இருக்கா  இருக்கா  என்று கேட்பதை விட...
எலித் தொல்லை இருக்கா... என்று கேளு மல்லையா... :grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

என்னை கொண்டுவந்து ஏன் இங்க அடச்சீங்க .. இங்க ஏசி இருக்கா .. ? 😊

 

1 hour ago, தமிழ் சிறி said:

Ãhnliches Foto

ஏசி  இருக்கா  இருக்கா  என்று கேட்பதை விட...
எலித் தொல்லை இருக்கா... என்று கேளு மல்லையா... :grin:

சாதாரண சசிகலா 2 ஸ்ரார் கொட்டலில் உள்ள வசதிகளுடன் இருக்கும் போது இவருக்கு எவ்வளவு வசதிகள் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

 

சாதாரண சசிகலா 2 ஸ்ரார் கொட்டலில் உள்ள வசதிகளுடன் இருக்கும் போது இவருக்கு எவ்வளவு வசதிகள் இருக்கும்.

தோழர் நான் நினைக்கிறேன் இவர் உள்ளே போக மாட்டார் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி எஸ்கேப் ஆகிவிடுவார் அல்லது இருக்கவே இருக்கு உடம்பு வருத்தம் என்று மருத்துவ மனையில் படுத்து கொள்வார் ..😊

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

சாதாரண சசிகலா 2 ஸ்ரார் கொட்டலில் உள்ள வசதிகளுடன் இருக்கும் போது இவருக்கு எவ்வளவு வசதிகள் இருக்கும்.

 

2 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் நான் நினைக்கிறேன் இவர் உள்ளே போக மாட்டார் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி எஸ்கேப் ஆகிவிடுவார் அல்லது இருக்கவே இருக்கு உடம்பு வருத்தம் என்று மருத்துவ மனையில் படுத்து கொள்வார் ..😊

Bildergebnis für arthur road jail

விஜய் மல்லையாவுக்கு  ஒதுக்கப் பட்ட  சிறை இதுதான். 
முன்னுக்கு உள்ள கட்டிடம் தான் சிறை வளாகம்.
முன் கட்டிட வழியால் உள்ளே போய்... பின்னுக்கு உள்ள உயரமான கட்டிடத்தில் தங்குவார் என நினைக்கின்றேன்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

 

Bildergebnis für arthur road jail

விஜய் மல்லையாவுக்கு  ஒதுக்கப் பட்ட  சிறை இதுதான். 
முன்னுக்கு உள்ள கட்டிடம் தான் சிறை வளாகம்.
முன் கட்டிட வழியால் உள்ளே போய்... பின்னுக்கு உள்ள உயரமான கட்டிடத்தில் தங்குவார் என நினைக்கின்றேன்.:grin:

hqdefault.jpg

'மச்சக்கார மல்லையா' உயரமான கட்டிடத்தின்  உள்ளே அவருக்கு வேண்டிய வசதி வாய்ப்புகள் செய்திருப்பார்கள் தானே ? 🤔

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.