Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆங்கிலத்துடன் ஒரு அக்கப்போர்! மொழிகளின் இயற்கை புரிந்துவிடு! மனிதர்க்குத் தமிழே ஆதிமொழி! -1

Featured Replies

ஆங்கிலத்துடன் ஒரு அக்கப்போர்!

மொழிகளின் இயற்கை புரிந்துவிடு! மனிதர்க்குத் தமிழே ஆதிமொழி!-1

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
- பாவேந்தர் பாரதிதாசன்

 

"இங்கிலீஸ்காரன் 26 எழுத்தை வைச்சுக்கிட்டு ஒலகத்தையே ஆட்டிப்படைக்கிறான்! தமிழ்-ல உயிர்-12; மெய்:1௮, உயிர்மெய்:216; ஆய்தம்:1 ன்னு ஆகமொத்தம் 247 வைச்சி ஒண்ணும் கிழிக்க முடியலே! தமிழ உருவாக்கின சிவபெருமான் short and sweet-ஆ யோசிக்கல போல", என்றார் நண்பர்.

"இருக்கலாம்!", என்றேன் நான்.

"என்னப்பா! ஏதாச்சும் சுவாரசியமாச் சொல்லுவேன்னு நெனச்சா பொசுக்குனு படுத்துட்டயே!", என்று உண்மையாகவே வருத்தப்பட்டார் நண்பர்.

"கேள்வி கேட்டால் விடை சொல்லலாம். நீயே முடிவும் சொல்லி, விரிவான கருத்தும் சொன்ன பிறகு, நான் சொல்ல என்ன இருக்கு?", என்றேன் நான்.

"அப்ப நான் சொன்னது சரியானது இல்லையா?", என்று படபடத்தார் நண்பர்.

"அப்படிச் சொல்லவில்லையே! உண்மையின் ஒரு பகுதியை மட்டுமே சொன்னாய்", என்றேன் நான்.

"மிச்சத்தை நீயே சொல்லேன்! கேட்டுக்கிறேன்", என்றார் நண்பர்.

தமிழ் - 'குறுங்கணக்கு'ம் 'நெடுங்கணக்கு'ம்

"தமிழில் vowels எனப்படும் உயிரெழுத்துக்கள் 12 தனியாகவும், Consonents எனப்படும் உயிரின்றி இயங்காத மெய்யெழுத்துக்கள் : 18 தனியாகவும், ஆக மொத்தம் 30 அடிப்படை எழுத்துக்கள்தாம் உண்டு!. ஆங்கிலத்தில் இப்படித் தனித்தனியே பிரிக்காமல், vowels எனப்படும் ஆங்கில உயிரெழுத்துக்கள் a, e, i,  o, u ஐந்தும், Consonents எனப்படும் ஏனைய மெய்யெழுத்துக்கள் 21-றுடன் விரவிக்கலந்து 26 எழுத்துக்கள் a-z எழுதப்படுகின்றன.", என்றேன் நான்.

"அப்படீன்னா ஆய்த எழுத்து 1, உயிர்மெய் 216 எழுத்துக்கள் ஆகியன தமிழ் எழுத்துக்கள் இல்லையா?", என்று கொதித்தார் நண்பர்.

"இல்லையென்று சொல்லவில்லை! உயிரும் மெய்யுமான அடிப்படை எழுத்துக்கள் தம்முள் புணர்வதால் உருவாகும் கூட்டு எழுத்துக்களின் மொத்தமே உயிர்மெய் 216. அனைத்தும் கூடிய 247 எழுத்துக்களுக்கு 'தமிழ் நெடுங்கணக்கு' என்றும், 30 அடிப்படை எழுத்துக்களுக்கு 'தமிழ் குறுங்கணக்கு' என்றும் பெயர். ஆங்கில மொழி 'Vowel:5+consonents:21 = 26 என்ற ஆங்கில குறுங்கணக்குடன் தன் எழுத்துக் கணக்கை முடித்துக்கொண்டது.", என்றேன் நான்.

18-19ம் நூற்றாண்டுவரை உயிர்மெய் இல்லாத ஆங்கில ஐரோப்பிய மொழிகள்

'உயிர்மெய் இல்லாமலா ஆங்கிலம் இயங்குகின்றது? நம்புறமாதி இல்லையே!", என்று சந்தேகப்பட்டார் நண்பர்.

"ஆங்கிலம் மட்டுமல்ல, ஜேர்மன், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகள் பலவும் உயிர்மெய் இல்லாமலேதான் 19வது நூற்றாண்டுவரை இயங்கிவந்தன என்பதை அறியவும்.", என்றேன் நான்.

"மற்றது கிடக்கட்டும்! ஆங்கிலத்தின் உயிர்மெய் எழுத்துக்கள் எத்தனை? எப்படி எழுதுகிறார்கள்?", என்றார் நண்பர் ஆர்வம் பொங்க.

"சொல்கிறேன்! அதற்கு முன், உயிர்மெய் என்றால் என்ன? என்று நீ சொல்", என்றேன் நான்.

"உயிர்மெய் என்றால் 216 உயிர்மெய் எழுத்துக்களின் வரிவடிவங்கள்.", என்றார் நண்பர்.

தமிழ் எழுத்துக்கள் ஒலிவடிவைக் குறிப்பன!

"இல்லை! உயிர்மெய் 216ம் வரிவடிவ எழுத்துக்கள் அன்று! அவை 216 உயிர்மெய் ஒலிவடிவக் குறியீடுகள். உயிரெழுத்து 12ம் மெய்யெழுத்து 18ம் வெறும் எழுத்துக்களின் வரிவடிவங்கள் அன்று. அவையும் ஒலிவடிவக் குறியீடுகளே!", என்றேன் நான்.

"இரண்டுக்கும் என்ன வேறுபாடு?", என்றார் நண்பர்.

ஆங்கில ஐரோப்பிய  எழுத்துக்கள் வரிவடிவைக் குறிப்பன!

"ஆங்கிலத்தில், அடிப்படை எழுத்துக்களின் வரிவடிவங்களே 26 எழுத்துக்களாக இருப்பதால்தான் எழுதுவதுபோல் படிக்க முடிவதில்லை. 'அ' 'ம்' 'மா' என்ற தனித்தனி எழுத்துக்களின் சேர்ந்த ஒலிகளும், 'அம்மா' என்ற சொல்லின் ஒலியும் ஒத்துப்போகிறது இல்லையா? ஆனால், 'P' 'U' 'T' என்ற தனி எழுத்துக்களின் ஒலிகளும், 'PUT' என்ற சொல்லின் ஒலியும் ஒத்தே போகவில்லையே! ஆங்கில எழுத்துக்கள் வரிவடிவத்தை மட்டுமே குறிப்பதால், ஆங்கிலச் சொல்லில் வரும் தனிச்சொற்களை உச்சரித்து, அச்சொல்லின் ஒலியைப் பெற இயலாது.  'BUT' மற்றும் 'PUT' வரிவடிவில் ஒரே ஒலிவடிவு இருப்பதுபோல் எழுத்தால் காணப்பட்டாலும், ஒலி வடிவில் முதலாவது 'பட்' என்றும் இரண்டாவது 'புட்' என்றும் ஒலிக்கப்படுகின்றன. ஆங்கிலம் கற்பவர் இவ்வொலி வடிவங்களை செவி வழியாக ஆங்கில ஆசிரியரின் வாய் உச்சரிப்பைக் கேட்டுக் கேட்டு, மனதில் மீண்டும் மீண்டும் 'மக்கு உரு'ப் போட்டுதான் நுனிநாக்கு ஆங்கிலம் பேச முடியும்!", என்றேன் நான்.

"நமக்குச் சரி! ஆங்கிலேயனுக்கு எப்படி இம்முறை சரிப்படும்? குழம்புகிறதே!", என்று சோர்வானார் நண்பர்.

"சரி! உன் வழிக்கே வருகிறேன். நாம தமிழ் எழுத்துக்களை எப்போ கத்துக்கிட்டோம்?", என்றேன் நான்.

"என்னப்பா! நம்ம காலத்துல இந்த LKG கருமாந்திரம்லா வரலன்றதால அஞ்சு வயசு முடிஞ்சுதான் ஒன்றாம் வகுப்புக்கு ஆனா, ஆவன்னா கத்துக்கப் போனோம். அதுக்கு இப்போ என்ன?", என்றார் சலிப்புடன்.

"ஒன்னாம் வகுப்பு போறதுக்கு முன்னாலேயே தமிழ் பேசுனியா இல்லையா?", என்றேன் நான்.

"இதென்னப்பா வம்பாப் போச்சு! நான் பத்து மாசத்திலேயே பேச ஆரம்பிச்சுட்டேன்னு எங்கம்மா சொல்லுவாங்க! பொறவு அஞ்சு வயசாகும்போது எப்படிப் பேசிருப்பேன்?", என்றார் நக்கலாக.

"அதேதான்! தமிழ், ஒலிவடிவத்தில் தாய்-தந்தை உள்ளிட்ட உற்றார்-உறவினரால் நாமறியாமலேயே நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டுவிட்டது! அதனால்தான், 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!' என்று முதலில் அறிவித்த முதல் ஆசிரியர்களாக தாய்-தந்தை வருகின்றார்கள்.", என்றேன் நான்.

"தெரிஞ்ச விசயம்தானே!", என்றார் நண்பர் சலிப்புடன்.

"ஆமாம், இதேபோலத்தான், ஆங்கிலேயன் வீட்டுக் குழந்தை, ஒலிவடிவ ஆங்கிலத்தைத் அதனுடைய Dady-Mummy உள்ளிட்ட Near and Dear மூலம் வீட்டிலேயே கற்றுக் கொண்டுவிடுகின்றது. School-ல் வரிவடிவ எழுத்தைக் கூட்டி, சொல்லைக் கற்பிக்கும்போது, ஒலிவடிவம் மறைமுகமாகப் பயிற்றுவிக்கப்படுகின்றது. "BUT'-ஐயும் 'PUT'ஐயும் வரிவடிவ உச்சரிப்பில் 'பியுடி' என்று  தனித்தனி எழுத்துக்களாகப் படித்தாலும், 'BUT' என்ற சொல்லை ஒலிவடிவில் மட்டுமே உள்வாங்கிக் கொள்ளப் பயிற்றுவிக்கப்படுகின்றது. வேற்றுமொழியினருக்கு ஆங்கிலம் பயிற்றுவித்தலில் இந்த தனியெழுத்து வரிவடிவம், சொல்-ஒலிவடிவம் முரண்பாடுகள் பெரும் தடைக்கற்களாக உருவெடுக்கின்றன!" என்றேன் நான்.

"ஆங்கிலேயனே ஒலிவடிவை மக்கு-உருப் போடணும்னா நம்ம கதையக் கேக்கவே வேண்டாம்!", என்ற நண்பர், '18-19ம் நூற்றாண்டில் ஆங்கிலத்துல உயிர்மெய் எழுத்துக்கள் உருவாக்கியவர் யார்? ஆங்கில உயிர்மெய் எழுத்துக்கள் எப்படி எழுதப்படுகின்றன? நான் அவற்றை இதுவரை பார்த்ததில்லையே! அதப்பத்தி கொஞ்சம் சொல்லேன்", என்றார் அப்பாவியாக.

"அது ஒரு தனிக்கதை! இப்போ வெளியூருக்குப் போறேன்! நாளை மறுநாள் வந்து சொல்றேனே!", என்றவாறு விடைபெற்றேன்!

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்! அன்னார்
உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலினால் பலராய்க் காண்பார்!
கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

 

மொழிகளின் இயற்கை அறிவோம்!

  • கருத்துக்கள உறவுகள்

 ஆசிரியரே , வெளியூரில் இருந்து வந்து கொண்டிருக்கிறீர்களா, நான் இன்னும் ஆலமரத்தடியை விட்டு அகலவேயில்லை......!  😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.