Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புத்தர் சிலைகள் உடைப்பும் வெடி பொருட்கள் மீட்பும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அது கடந்த 2018 டிசம்பர் 25 ஆம் திகதி. அதி­காலை நேரத்தில் குரு­நாகல் மாவட்டம் பொது­ஹர பொலிஸ் பிரிவின் கட்­டு­பிட்­டிய வீதியில் கோண்­வல பகு­தியில் அமை­யப்­பெற்­றுள்ள ஆலயம் ஒன்றில் இந்துக் கட­வுள்­களைக் குறிக்கும் உரு­வச்­சி­லைகள் அடை­யாளம் தெரி­யா­தோரால் அடித்து நொறுக்கி சேத­மாக்­கப்­பட்­டன. இந்த சம்­பவம் தொடர்பில் பொது­ஹர பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் அதா­வது, கடந்த 2018 டிசம்பர் 26 ஆம் திகதி இத­னை­யொத்த ஒரு சம்­பவம் யட்­டி­நு­வர - வெலம்­பட பொலிஸ் பிரிவில் பதி­வா­னது.

ds-2.jpg

  • எம்.எப்.எம்.பஸீர்

அது கடந்த 2018 டிசம்பர் 25 ஆம் திகதி. அதி­காலை நேரத்தில் குரு­நாகல் மாவட்டம் பொது­ஹர பொலிஸ் பிரிவின் கட்­டு­பிட்­டிய வீதியில் கோண்­வல பகு­தியில் அமை­யப்­பெற்­றுள்ள ஆலயம் ஒன்றில் இந்துக் கட­வுள்­களைக் குறிக்கும் உரு­வச்­சி­லைகள் அடை­யாளம் தெரி­யா­தோரால் அடித்து நொறுக்கி சேத­மாக்­கப்­பட்­டன. இந்த சம்­பவம் தொடர்பில் பொது­ஹர பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் அதா­வது, கடந்த 2018 டிசம்பர் 26 ஆம் திகதி இத­னை­யொத்த ஒரு சம்­பவம் யட்­டி­நு­வர – வெலம்­பட பொலிஸ் பிரிவில் பதி­வா­னது.

அதி­காலை 3.00 மணி­ய­ளவில் வெலம்­பட பொலிஸ் பிரிவின் லெயம்­க­ஹ­வல பகு­தியில் மூன்­றரை அடி உய­ர­மான புத்தர் சிலை அடை­யாளம் தெரி­யா­தோரின் தாக்­கு­த­லுக்­குள்­ளா­னது. அத்­துடன் அந்த மூன்­றரை அடி உய­ர­மான புத்தர் சிலை சேதப்­ப­டுத்­தப்­பட்ட அதே­நேரம் அதனை அண்­டிய பகு­தி­யி­லி­ருந்த மேலும் மூன்று சிறு சிலை­களும் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லையில் அதே­தினம் அதி­காலை 4.00 மணி­ய­ளவில் மாவ­னெல்லை – திது­ரு­வத்த சந்­தி­யி­லுள்ள புத்தர் சிலையும் தாக்கி சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதன்­போ­துதான் இந்த சிலை உடைப்பு சம்­ப­வங்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்க தட­யமும் கிடைத்­தது எனலாம்.

திது­ரு­வத்த சந்­தியில் புத்தர் சிலையை தாக்க மோட்டார் சைக்­கிளில் இருவர் வந்­துள்­ளனர். இவ்­வாறு வந்­த­தாகக் கூறப்­படும் இரு­வரில் ஒரு­வரை பிர­தே­ச­வா­சிகள் துரத்­திப்­பி­டித்து மாவ­னெல்லை பொலி­சா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர். இதுவே இந்த சிலை உடைப்பு சம்­ப­வங்கள் குறித்த மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­கான பிர­தான சான்­றா­னது.

இந்­நி­லையில் தான் இது­கு­றித்து சப்­ர­க­முவ மற்றும் தென் மாகா­ணங்­க­ளுக்குப் பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி விஜே­கு­ண­வர்­த­னவின் நேரடிக் கட்­டுப்­பாட்டில் கேகாலை பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித்த சிறி­வர்­த­னவின் மேற்­பார்­வையில், கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சாமிக்க பிரே­ம­சி­ரியின் ஆலோ­ச­னைக்­க­மைய, கேகாலை உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஓ.பி. அம­ர­பந்­துவின் கீழ் இயங்கும் கேகாலை மாவட்ட தீர்க்­கப்­ப­டாத குற்­றங்கள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் அபே­ரத்ன மற்றும் மாவ­னெல்லை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் தமித்த திலங்க ஆகியோர் அடங்­கிய சிறப்பு பொலிஸ் குழுக்கள் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தன.

இதன்­போது வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­க­ளுக்­க­மை­வாக அந்த பொலிஸ் குழு­வினர் பொது­மக்கள் பிடித்­துக்­கொ­டுத்த சந்­தேக நப­ருக்கு மேல­தி­க­மாக மேலும் ஆறு பேரைக் கைது செய்­தனர். விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்கள் மற்றும் அறி­வியல் ரீதி­யி­லான தட­யங்­களை மைய­ப்ப­டுத்தி இந்த கைதுகள் இடம்­பெற்­றி­ருந்­தன. இவ்­வா­றான ஒரு பின்­ன­ணி­யி­லேயே இந்த விட­யத்தின் பின்­னணி உள்­ளிட்­ட­வற்றைக் கண்­ட­றிய விசேட விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கு­மாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ர­வினால் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

அதன்­படி பொது­ஹர, வெலம்­பட, மாவ­னெல்லை என அனைத்து இடங்­க­ளிலும் இடம்­பெற்ற சிலை உடைப்­புக்கள் குறித்து சி.ஐ.டி. விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தது. சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுதத் நாக­ஹ­முல்ல ஆகி­யோரின் நேரடிக் கட்­டுப்­பாட்டில் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஷானி அபே­சே­க­ரவின் ஆலோ­ச­னைக்­க­மைய உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் விக்­ர­ம­சே­க­ரவின் கீழ் விஷேட விசா­ரணைப் பிரிவு – 2 இன் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் ஜனக மார­சிங்­கவை உள்­ள­டக்­கிய மூன்று சிறப்புக் குழுக்கள் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தன.

அதன்­போதும் மாவ­னெல்லை பொலி­ஸாரும் கேகாலை மாவட்ட தீர்க்­கப்­ப­டாத குற்­றங்­களை விசா­ரிக்கும் பிரிவும் பல்­வேறு தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்த நிலையில், சிலை­யொன்றை உடைக்­கும்­போது பொது­மக்­க­ளிடம் பிடி­பட்­ட­வ­ருடன் வந்த மற்­றைய நபர் இச்­சம்­ப­வங்­களின் பிர­தானி என்­பது கண்­ட­றி­யப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் அவ­ரது சகோ­த­ரரும் இந்த விட­யங்­க­ளுடன் தொடர்­பு­பட்­டுள்­ள­மையும், சகோ­த­ரர்கள் இரு­வ­ருமே இந்த விஷ­மத்­த­ன­மான செயற்­பா­டு­க­ளுக்கு தலைமை வகித்­துள்­ள­மையும் கண்­ட­றி­யப்­பட்­டது.

மொஹம்மட் இப்­ராஹிம் சாதிக் அப்­துல்லா, மொஹம்மட் இப்­ராஹிம் சாஹித் அப்­துல்லா என்ற இந்த சகோ­த­ரர்­களை கண்­டு­பி­டிக்க கேகாலை சிறப்பு பொலிஸ் பிரி­வி­ன­ருக்கு மேல­தி­க­மாக சி.ஐ.டி.யும் களத்தில் குதித்­தது.

எனினும், இச்­சம்­பவம் தொடங்­கி­யது முதல் இன்று வரை ஒரு மாத காலம் நிறை­வ­டைந்­துள்ள நிலை­யிலும் இது­வரை அந்த சகோ­த­ரர்­களைக் கைது செய்ய முடி­யாமல் போயுள்­ளது. அவர்கள் தமது இருப்­பி­டங்­க­ளை­விட்டு வெளி­யேறி தலை­ம­றை­வாக இருந்து வரு­கின்­றனர்.

இந் நிலையில் அவர்­களைக் கைது செய்ய பல்­வேறு விசா­ர­ணைகள் மற்றும் திட்­டங்­களை வகுத்த பொலிஸார் அதன் ஊடாக செயற்­பட்டு வரு­கின்­றனர்.

இப்­படி இருக்­கை­யில்தான் கடந்த 16 ஆம் திகதி குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு ஒரு தகவல் கிடைத்­தி­ருந்­தது. அதா­வது, தேடப்­படும் சாதிக் அப்­துல்­லாவும், சாஹித் அப்­துல்­லாவும் புத்­தளம், வணாத்­த­வில்லு பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட புபு­து­கம – லெக்டோ ஹவுஸ், இலக்கம் 637/3 எனும் இடத்தில் அமைந்­துள்ள தென்னந் தோப்பில் மறைந்­துள்­ள­தாக அந்த தகவல் கிடைத்­தி­ருந்­தது. அதிலும் பாலாவி, புத்­தளம் – மன்னார் வீதியின் இரண்டாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த மொஹம்மட் முபீஸ் என்­ப­வ­ருடன் அவர்கள் இருப்­ப­தாக இதன்­போது தகவல் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

அதன்­ப­டியே சி.ஐ.டி. குழு­வினர் அங்கு செல்ல கடந்த 16 ஆம் திகதி நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருந்­தனர். புத்­தளம் – மன்னார் வீதி­யூ­டாக சென்ற சி.ஐ.டி. குழு­வினர் அங்கு சென். செபஸ்­டியன் கிறிஸ்­தவ ஆலயம் அமைந்­துள்ள இடத்­தி­லி­ருந்து இடது பக்­க­மாக உள்ள வீதியில் சுமார் 2.5 கிலோ மீற்­றர்கள் வரை செல்ல வேண்­டி­யேற்­பட்­டது. அப்­போதே அங்கு அந்த 80 ஏக்கர் வரை விஸ்­தீ­ரணம் கொண்ட தென்­னத்­தோப்பை சி.ஐ.டி.யினரால் அடைய முடி­யு­மாக இருந்­துள்­ளது. ஆள் நட­மாட்­ட­மில்­லாத ஒதுக்­குப்­பு­ற­மான அந்த தோட்­டத்தில் காடுகள் அடர்ந்­தி­ருந்­தன. போவ­தற்கு வழி மட்டும் செய்­யப்­பட்­டி­ருந்­தது. அங்கு சி.ஐ.டி.யினர் செல்­லும்­போது மாலை நேர­மாக இருந்­தது.

அந்த தோட்­டத்தில் ஒரு சிறு கட்­டிடம் இருந்த நிலையில் அக்­கட்­டி­டத்­துக்கு சூரி­ய­ஒளி ஊடாக மின்­சா­ரமும் பெறப்­பட்­டி­ருந்­தது. சாதிக் அப்­துல்லா, சாஹித் அப்­துல்­லாவை தேடி சி.ஐ.டி. சென்­ற­போதும் அவர்கள் அங்கு இருக்­க­வில்லை. எனினும், வேறு இளை­ஞர்கள் நால்வர் அங்கு இருந்­தனர். அவர்­களில் குறித்த தென்­னத்­தோப்பு உரி­மை­யா­ளரின் மக­னான மொஹம்மட் முபீஸும் ஒருவர். அந்த தென்­னத்­தோப்பு அபூ ஹனீபா என்­ப­வ­ருக்கு உரி­யது. அவர் மர­ணித்­தி­ருந்த நிலையில் அது அவ­ரது இரு மகள்மார் மற்றும் மகனால் பரா­ம­ரிக்­கப்­பட்­டுள்­ளது. மகள்மார் குறித்த காணி தொடர்பில் நேர­டி­யாக எத­னையும் முன்­னெ­டுக்­காத நிலையில் மக­னான மொஹம்மட் முபீஸே அக்­கா­ணியில் நடந்த நட­வ­டிக்­கை­களை கண்­கா­ணித்­துள்ளார்.

இந்­நி­லையில் சி.ஐ.டி. அங்கு சிலை உடைப்பு சந்­தேக நபர்­களைத் தேடி சென்­ற­போது, முபீஸும் அவ­ருடன் புத்­தளம் – மன்னார் வீதியைச் சேர்ந்த மொஹம்மட் பஸ்ரின், மொஹம்மட் பர்வீன் ஆகி­யோரும், புத்­தளம், வான் வீதியைச் சேர்ந்த மொஹம்மட் ஹமாசும் அத்­தோட்­டத்தின் சிறிய கட்­டிடப் பகு­தியில் இருந்­துள்­ளனர்.

இந்­நால்­வ­ரி­டமும் சி.ஐ.டி. விசா­ரித்­துக்­கொண்­டி­ருக்கும் போது, அங்­கி­ருந்த சி.ஐ.டி. அதி­காரி ஒரு­வரின் கண்ணில் சுமார் 20 மீற்றர் தூரத்தில் புதைத்து, அரை­வாசி நில­மட்­டத்­துக்கு மேல் தெரியும் பிளாஸ்ரிக் பீப்பாய் ஒன்று தென்­பட்­டுள்­ளது.

அப்­போது அந்த அதி­காரி யதார்த்­த­மாக அந்த பீப்பாய் வரை சென்று அதனை சோதித்­துள்ளார். இதன்­போதே அதில் சி-4 ரகத்தை ஒத்­த­தென சந்­தே­கிக்­கத்­தக்க வெடி­பொ­ருள்கள், மேலும் சில அமில வகைகள் மறைத்து வைக்­கப்­பட்­டுள்­ள­மையை அவர் அவ­தா­னித்­துள்ளார். இத­னை­ய­டுத்து உட­ன­டி­யாக அந்த நால்­வ­ரையும் சி.ஐ.டி. தனது பொறுப்­பி­லெ­டுத்து அது­கு­றித்து விளக்கம் கோர ஆரம்­பித்­தது.

அப்­போது இருட்­டி­வி­டவே உட­ன­டி­யாக புத்­தளம் பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யினர் ஸ்தலத்­துக்கு வர­வ­ழைக்­கப்­பட்­ட­துடன், அந்த தோட்டம் அதி­ரடிப் படை பாது­காப்பின் கீழ் அடுத்த 24 மணி நேரத்­துக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

இந்­நி­லையில் மறுநாள் அதா­வது, கடந்த 17 ஆம் திகதி சி.ஐ.டி.யினரால் விரி­வான சோத­னைகள் நடாத்­தப்­பட்­டன. இதன்­போது சி.ஐ.டி. உய­ர­தி­கா­ரிகள் ஸ்தலத்­துக்கு விரைந்­தனர். வெடி­பொ­ருட்கள் தொடர்பில் விசேட பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்ட மோப்­பநாய் ரினாவும், லெசியும் ஸ்தலத்­துக்கு அழைத்­து­வ­ரப்­பட்டு சோத­னை­யி­டப்­பட்­டது. அரச இர­சா­யனப் பகுப்­பாய்­வா­ளர்கள், வெடி­பொருள் நிபு­ணர்கள் எனப் பலரும் அப்­போது அங்கு கூடினர்.

இந்­நி­லை­யில்தான் 17 ஆம் திகதி முழு­வதும் நடாத்­தப்­பட்ட சிறப்புத் தேடு­தலில் அந்த தென்னத் தோப்­பி­லி­ருந்து பல உப­க­ர­ணங்கள் கைப்­பற்­றப்­பட்­டன. அதன்­படி அவை தொடர்பில் அங்­கி­ருந்த அந்த நான்கு பேரையும் சி.ஐ.டி. கைது செய்­தது.

சுமார் 90 கிலோ வெடி­பொ­ருட்­க­ளுக்கு மேல­தி­க­மாக 100 இந்­திய தயா­ரிப்பு டெட­னே­டர்கள், வயர் கோர்ட் தொகு­திகள், இலங்­கைக்குள் தடை செய்­யப்­பட்­டுள்ள  நைட்­டிரேட் அமிலம் 20 லீட்டர் அடங்­கிய 6 கேன்கள், மின் குமிழ்கள், அதி­சக்­தி­வாய்ந்த வெடி­பொ­ருட்­க­ளுக்குப் பயன்­ப­டுத்தும் சி 4 வெடி மருந்து 75 கிலோ, குழல் 12 துப்­பாக்கி ஒன்று, அதற்குப் பயன்­ப­டுத்தும் தோட்­டாக்கள், எயா ரைபிள் ரக துப்­பாக்கி ஒன்று, பாது­காப்பு கூடா­ரங்கள் இரண்டு, 20 நாட்கள் வரை பயன்­ப­டுத்த முடி­யு­மான உல­ரு­ண­வுகள், கணினி ஒன்று, கமெ­ரா­வொன்று, தமிழ், அரபு மொழி­க­ளி­லான சமயப் புத்­தகங்கள், பெரும் தொகை பாய்கள் என அதன்­போது கைப்­பற்­றப்­பட்ட பொருட்­களின் பட்­டியல் நீள்­கின்­றது.

இந்­நி­லை­யி­லேயே அங்கு கைது செய்­யப்­பட்ட நால்­வ­ரையும் அந்தப் பொருட்­க­ளுடன் சி.ஐ.டி. தனது தலை­மை­ய­கத்­துக்கு அழைத்து வந்­தது. அவர்கள் கைது செய்­யப்­பட்டு 48 மணி நேரத்தில் அந்த நால்­வ­ரையும் பயங்­க­ர­வாத தடை சட்­ட­ விதிகள் பிர­காரம் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசா­ரிக்க பாது­காப்பு அமைச்­சிடம் விண்­ணப்­பித்த சி.ஐ.டி. அதற்­கான அனு­ம­தி­யையும் பெற்­றுக்­கொண்­டது.

அதன்­படி அவர்­க­ளிடம் சி.ஐ.டி. தொடர் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் நிலையில், அங்கு சிறு குண்­டுகள் தயா­ரிக்­கப்­பட்டு புத்தர் சிலை­களை தகர்ப்­ப­தற்­கான திட்­டங்கள் தீட்­டப்­பட்­டதா என்­பது குறித்து சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் விசா­ரித்து வரு­கின்­றனர். அங்­கி­ருந்த பொருட்­களைப் பொறுத்­த­வரை சிறிய ரக குண்­டு­களைத் தயா­ரிக்க ஒரு சேர்வை மட்­டுமே குறை­பாடாக இருந்­த­தாக வெடி­குண்டு நிபு­ணர்கள் கூறுன்­றனர். அதன்­படி அந்தக் குறை­பா­டான பொருளை அவர்கள் அரு­கி­லுள்ள வெங்­காய விவ­சாய நிலங்கள் ஊடா­கவோ அல்­லது இறால் பண்­ணை­க­ளி­லுள்ள சில பொருட்கள் ஊடா­கவோ அல்­லது பழைய மின்­க­லங்­களை சேக­ரிப்போர் ஊடா­கவோ பெற்­றுக்­கொள்ள அதிக வாய்ப்­புகள் இருப்­ப­தாக அவர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.
-Vidivelli

 

  • கருத்துக்கள உறவுகள்

அதானப்பா, அஸ்ரப் சொன்னாரே....

அமீர் அண்ணா தமிழீழம் பெறாவிடில், நான் பெற்று தருவேன்...

அதுக்கு வேலை தன நடக்குது. யார் குத்தினாலும் அரசி ஆனா சரி தான். 😀

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நடந்து இருக்கு எங்கடை வடகிழக்கு இணையம்கள் சத்தம் சந்தடியில்லாமல் இருக்கினம் .

முஸ்லீம் இணையத்தை கொப்பி பண்ணுவதில்லை எனும் ரகசிய உடன்படிக்கை இருக்கோ தெரியலை .

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, colomban said:

அதன்­படி அவர்­க­ளிடம் சி.ஐ.டி. தொடர் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் நிலையில், அங்கு சிறு குண்­டுகள் தயா­ரிக்­கப்­பட்டு புத்தர் சிலை­களை தகர்ப்­ப­தற்­கான திட்­டங்கள் தீட்­டப்­பட்­டதா என்­பது குறித்து சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் விசா­ரித்து வரு­கின்­றனர். அங்­கி­ருந்த பொருட்­களைப் பொறுத்­த­வரை சிறிய ரக குண்­டு­களைத் தயா­ரிக்க ஒரு சேர்வை மட்­டுமே குறை­பாடாக இருந்­த­தாக வெடி­குண்டு நிபு­ணர்கள் கூறுன்­றனர். அதன்­படி அந்தக் குறை­பா­டான பொருளை அவர்கள் அரு­கி­லுள்ள வெங்­காய விவ­சாய நிலங்கள் ஊடா­கவோ அல்­லது இறால் பண்­ணை­க­ளி­லுள்ள சில பொருட்கள் ஊடா­கவோ அல்­லது பழைய மின்­க­லங்­களை சேக­ரிப்போர் ஊடா­கவோ பெற்­றுக்­கொள்ள அதிக வாய்ப்­புகள் இருப்­ப­தாக அவர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.
-Vidivelli

சடையுரதுக்கும் ஒரு அளவு வேணும் இவை திரிகோணமலையில் அமையபோகும் அமெரிக்க ராணுவத்தளத்தை தாக்குவதுக்கு கொண்டுவந்த வெடி பொருள்கள் நாங்களும் சடைவமில்லை 😂

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் முஸ்லிம் வாக்குகள் தமக்கு கிடைக்காது என்று தெரிந்த ஒருவர், அவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஒரு முரண்பாட்டை ஏற்படுத்தி தம்மை நல்ல பிள்ளைகளாக்கி வாக்கு சேகரிக்க காேல் பாேடுகிறார். என்ன சாென்னாலும் பெரும்பாலான இராணுவமும், காவற்துறையும் இன்னும் ராஜபக்சாக்களுக்கே விசுவாசமாய் இருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.